திங்கள், 13 ஜூலை, 2020

மண்ணிசைந்து,,,,,

இரு சக்கர வாகனத்தை எடுக்கையில் மணி மாலை ஐந்து முப்பதிலிருந்து ஆறு மணிக்குள்ளாக இருக்கலாம்.

உத்தேசம்தாம்தான், உத்தேசங்கள் உலகை ஆள்வதில்லை என்பது எவ்வளவு உண்மையோ அது போல் எதுவும் அறுதியிட்டுச்சொல்வதில்லை,

கைக்கடிகாரத்தைப்பார்த்து மணியை உறுதி செய்து கொள்ளலாம் என்றாலும் கையில் கடிகாரம் கட்டி பல வருடங்கள் பலவாகிவிட்டது,

எப்பொழுதிலிருந்து இந்த எளிமை என்பது இவனுக்கு அரிதாகக் கூட ஞாபகம் இல்லை.,இப்படி இருப்பதே பிடித்துப்போக அப்படியே விட்டும் விட்டான்,

அது ஒன்றும் பெரும் உறுத்தலாய் தெரியவில்லை,”ஊருக்குள்ள அதது எப்பிடி எப்பிடி திரியுது?கஞ்சிக்குச்செத்தது கூட வெளுப்பு மாறாம தேய்ப்பு மடங்காம போட்டுக்கிட்டுத்திரியுதுங்க,இவரு என்னமோ எளிமையா இருக்கு றேன்,,,,,,,,,( நல்லா வந்துறப்போகுது வாயில,) அது இதுன்னு கஞ்சிக்குச் செத்தவரு போல அலையுறாரு.

“முன்னயெல்லாம் ஒரு கல்யாணம் காய்ச்சி,நல்லது பொல்லதுன்னா வலது கையில பிரேஸ்லெட்டும், யெடது கையில தங்கக்கலர் செயின் போட்ட வாட்சுமாமடிப்புகலையாத லக்கி பேண்ட்டும் ,சட்டையுமாத்தான் இருப்பாரு, எப்ப யாரு கண்ணுபட்டுச்சுச்சோ,இல்ல யாரும் அவரு மனசக் கெடுத்து விட்டுட்டாங்களான்னு தெரியல. பழைய பழக்கமெல்லாம் சின்னப் புள்ளைங்க ஒழப்பி விட்ட மண்ணு வீடாட்டம் சரிஞ்சி போச்சி/,

”சரிஞ்சது அதல பாதாளம் காட்டி நிக்காட்டிக்கூட லேசா பள்ளம் பறிச்சிப் போட்டுருச்சி இவரு மனசுல. அன்னையிலயிருந்து இன்னைக்கு வரைக்கும் இப்பிடி விட்டேத்தியா நேந்துவிட்ட சாமியாரு போலத் திரியிறாரு”என இவன் மனைவி அன்றாடங்களில் புலம்புவது இப்பொழுது எப்பொழுதுதாவதான வாடிக்கையாகிப் போனது,

“என்ன சார் வண்டி எடுக்க உதவி பண்ணணுமா,,,? அருகில் வருகிறார் வாசு அண்ணன், இந்த வயசான காலத்துல ஓங்களுக்கு தக்கன வண்டி வாங்காம இவ்வளவு பெரிய வண்டிய வாங்கி வச்சிருக்கீங்களே என்றார்,

அலுவலத்தின் வெளி வாசல் தாண்டி இடதுபக்கமாய் கடை வைத்திருப்பவர், சேவு மிக்சர்,பக்கோடா,நிலக் கடலைப் பருப்பு,ஊறுகாய் மற்றும் சிகரெட், பீடி, வெற்றிலை,,, இவைகள்தான் அவரது வியாபாரமாய் இருந்தது,என்ன வாசுண்ணேநல்லாயிருக்கீங்களா,நான் தள்ளிக்கிர்றேன் வண்டிய ,என்றதும்  ”நல்லாயிருக்கேம்பா” என்றார்,

அது என்னவெனத் தெரியவில்லை,சிறிது காலமாய் அப்படித்தான் அழைக்கி றார் அல்லது சொல்கிறார்,

சென்ற மாதத்தின் ஒரு நாளின் மதியமாய் அலுவலகத்திற்கு வேலையாய் வந்த பெண்ணுக்கு இவனது இரண்டாவது மகளின் வயதிருக்கும், வேலையெ ல்லாம்முடித்துப்போகும்போது”போயிட்டுவர்றேன்ப்பா”எனச்சொல்லிவிட்டுப் போனாள்.அது போல் இப்பொழுது இவரும்,

”அப்புறம் வாசுண்ணே யேவாரம் எப்பிடி இருக்கு ,வீட்ல புள்ளைங்க என்ன செய்யிறாங்க என்கிற கேள்விக்கு சின்னவ ரெண்டாவது போறா,பெரிவன் மூணாம் வகுப்பு படிக்கிறான்,அந்த வகையில பரவாயில்லை சார்,ஆணு ஒண்ணு பொண்ணு ஒண்ணு,ரெண்டும் ஆணாவும், பொறக்கல,ரெண்டும் பொண்ணாவும் பொறக்கல,செலவு ஒருபக்கம் இருந்தாலும் கூட ஆண் பெண் புரிதல் வீட்ல இருந்தே ஆரம்பிக்க ஒரு வாய்ப்புக் கெடச்சிருதுள்ள பையனுக்கு .இல்லைன்னா ஆணப்பத்தி பொண்ணு என்னமோன்னு நெனை க்க, பொண்ணப்பத்தி ஆணு என்னமோன்னு நெனைக்க.அது கட்டாகிருதுல்ல சார், அது வரைக்கும் நான் குடுத்துவச்ச ஆளு என்ற வாசு அண்ணன் மத்தபடி எனக்கும் ஏங் வீட்டம்மாவுக்கும் இந்த கடையேவாரம் போதும்ண்ணே, புள்ளைங்கள வளர வளர இது போதாதுன்னு தோணுது,வேற ஏதாவது ஒண்ணு செஞ்சுதான் ஆகணும் சார்,”என்கிறார்,

மழைபெய்து முடித்திருந்ததில் மண் கொஞ்சம் மகிழ்ந்திருந்தது, சமீபத்தில் ரோட்டை அகலப்படுத்துவதற்காய் தோண்டப்பட்ட மண்ணை சாலையின் இரு புறமுமாய் விரித்து விட்டிருந்தார்கள்.பரப்பப்பட்டிருந்த மண் சமமாய் இல்லாமல் மேடு பள்ளமாய் இருந்தது,

அலுவலகத்தில் வண்டி நிறுத்த இடமில்லை,அலுவலகத்தின் முன் ஒரு செட் கூடப்போட்டுக் கொடுத்திருக்கலாம்.கட்டிடத்தின் உரிமையாளர்., இப்பொ ழுது ரோட்டியில்தான் நிறுத்தவேண்டியதிருக்கிறது வண்டியை. மழைக்கும் வெயிலுக் கும் காற்றுக்கும் தூசிக்குமான அனைத்தையும் தன்னில் தாங்கி நின்று கொண் டிருக்கிறது.

”போடுமண்ணாய்இருந்தாலும்மண்நல்ல வண்டலாய்த் தெரிந்தது, கொஞ்சம் சிரத்தையெடுத்து சிரமப்பட்டால் இம்மண்ணில் எதையும் விளைய வைக்கலாம் தானே? கொஞ்சம் உரமும், கொஞ்சம் உழைப்பும்,கூடவே சிறிது ஆட்டாம் புழுக்கையும்,நம்பிக் கையும் இருந்தால் போதும்.எல்லாம் சாத்தியமே/”

காலடிகளை நின்ற இடத்திலிருந்து சற்று மாற்றி வைத்துக்  கொள்கிறான், நின்ற இடத்திலேயே நின்றால் பாதத்தின் அடியில் வேர் விட்டுவிடக்கூடாது,

விடாதுதான்,அப்படியெல்லாம் நமது மண் நமது மண் ,நமது மனிதர்கள்,நமது வீடு நமது அலுவலகம்,நமது சாலை மற்றும் நமது ,மனிதர்கள் எல்லாம் சேர்ந்து வேர்விட்டு விட விட மாட்டார்கள்,

மண் மீது நம் கவனம் இருப்பது போல் மண்ணும் நம் மீது கவனம் வைக்கும்,என நம்பிக்கை சொன்னாலும் கூட பாதங்கள் கேட்கிற வழியைக் காணோம்,

காலை மாற்றி வைக்கிற போது வேப்ப மரத்தின் அடியில் ஊர்ந்த எறும்புகள் ஒன்றன் பின் ஒன்றாக வரிசை கட்டியும் இரை தேடியுமாய்/

தேடிய வையும் தேடிச் சென்றவையுமாய் செல்கிறது வாழ்க்கை, எனச் சொன்ன எறும்பு ஓன்று வரிசை உடைத்து விலகி வந்து சொல்கிறதாய்/

நானும் எனது நட்புகளும் ஒட்டிய வயிறுடன் தேவைக்காய் இரை தேடிச் செல்கிற வழியில்தான் தாங்கள் இரு சக்கர வாகனத்தை நிறுத்தி வைத்திருக் கிறீர்கள், ஒன்று அதன் பாகங்களின் மீதேறி நாங்கள் பயணிக்க வேண்டிய திருக்கிறது, இல்லை அதன் அடியில் பாதை அமைத்து ஊர்ந்து செல்ல வேண்டியதாகிப் போகிறது,

அவ்வாறு செல்கிற பல சமயங்களில் இடைஞ்சலாகிப்போகிறது,அல்லது பாதையில் சென்ற திருப்தி இல்லாமல் எங்கோ கண்ணை கட்டிவிட்ட நிலையில் தட்டுத்தடுமாறி செல்கிறது போல் இருக்கிறது.அதில் எங்களுக்கு திருப்தி இல்லை,

”நாங்கள் ஒன்றும் இழிவாய் கிடக்கிற இனம் இல்லை,எங்களுக்கென ஒரு கூட்டம் இருக்கிறது, வசிப்பிடம் உண்டு,எங்களுக்கானப் பொறுப்புகள் தனி,அன்றாடம் உணவு தேடி எவ்வளவு தூரம் சென்று மிகவும் கஷ்டப்பட்டு சேகரித்து வருகி றோமோ அவ்வளவு தூரம் அதை பாதுகாத்தும் வருகிறோம், உங்களைப் போல் சாக்கிலும் பாத்திரங்களிலும் இன்ன பிறவற்றிலுமாய் உணவை போட்டு வைத்து பாதுகாக்கிற பழக்கம் எங்களில் இல்லை. அதற்கென மண்ணில் அடியில் நாங்கள் தோண்டி சீராககட்டி வைத்துள்ள புற்றுக்குள்ளாய்இருக்கிறஅறைகளில் பாதுகாக்கிறோம் எந்த மழையாலும் ,வெயிலிலாலும்,இயற்கை சேதத்தாலும் உணவு பறிபோய் விடுமோ என்கிற பயமில்லை எங்களுக்கு,மாறாக மனிதர்கள் வேட்டையாட வருகிற சமயங் களில் எங்களது வசிப்பிடத்தை தோண்டி நாங்கள் சேகரித்து வைத்துள்ள உணவை எடுத்துச்சென்று விடுகிறார்கள், காக்க வேண்டியகைகள் களவு செய்யும் போது நாங்கள் விதியை நோவது தவிர்த்து வேறென்ன செய்து விட முடியும் பெரிதாய்,,,?

அதற்காகத்தான் கேட்கிறோம்,எங்களுக்கென நாங்கள் தனியாய் வசிப்பிடம் அமைத்துக்கொண்டதைப்போல நாங்கள் உணவு தேடி போய் வர தனி ஒரு பாதை வேண்டும் ,எங்களுக்கென ஒரு சிக்னலும் அதை ஒழுங்கு செய்ய காவலர்களும் இருக்க ஆசைப்படலாம்தானே,,?என எறும்பு பேசிச்சென்ற நேரத்தில் வேப்பமரத்தின் உச்சியிலிருந்து குரலொன்று கிளம்பி வந்து இவன் கவனம் கிளறுவதாய்/

”கத்துவதும், கீதமிசைப்பதுமாய் மாறி மாறி தென்படுகிறதான எங்களது அடையாளம் குயிலாயும்,காக்கையாயும் அடைகொண்டு கூடு கட்டு குஞ்சு பொரித்து வாழ்க்கை நடத்தி அன்பும் காதலும் மிக வாழ்கிறதாய் இருக்கிறது தான். விளைச் சலற்ற வெற்று நிலங்களின் மீது அத்துவானம் காட்டிப் பறக்கையில் கண்ணுக்கு எட்டிய தூரத்தில் தென்படாத இரையை அரிதாக காண்கிற போது கொத்திக் கொண்டு வந்து நாங்கள் தின்றது போக எங்களை எதிர்பார்த்து காத்திருக்கிற குஞ்சுகளுக்காய் கொடுத்து விட்டு மிச்சமிருந்தால் நாங்கள் உண்டு ஜீவிக்கிற பாக்கியம் மட்டுமே கிடைத்திருக்கிறது/”

அதைக் கொண்டு வாழ்கிறோம் திருப்தியாய் அவ்வளவே எனச் சொல்லிய பறவையின் பேச்சு மீறி தெரிந்த வேப்ப மரத்தின் வளர்ச்சியும் ஆகுருதியும் பார்க்க பிரமிப்பாய் தெரிந்தது,

ஐம்பது வருடத்திற்கு மேலான சரித்திரம் இருக்கலாம் இந்த மரத்திற்கு என்றவாறே சாப்பிடச்சென்ற திருமூர்த்தி கடையில் அமர்ந்திருந்தவர் சொல்கி றார்,

“சார் நீங்க சொல்றது போல இல்ல,இந்த மரத்துக்கு வயசு ஐம்பதுக்கும் கூடவே இருக்கும் என்கிறார்.

எனக்குத் தெரிய ஏங் பிராயத்துல இந்தப்பக்கம் போகையில சின்னதா இதப்பாத் துருக்கேன்,இப்ப முண்டும் முடிச்சும் யெலையும், காயும், கனியுமா நிக்குது என்றார்,

”இப்ப ஒரு கனிப்புல அந்த மரத்துல எத்தனை கொப்புக எத்தனை முடிச்சுக, எவ்வளவு காய்க காய்ச்சிருக்கும் ,அதுல எவ்வளவு பழுத்து நிக்குமுன்னு சொல் லீற முடியும்,மரம் நிக்கிற மண்ணு ,அதோட தன்மை,பரப்பு மரத்தோட உறுதி ,அதோட வயசு எல்லாம் வச்சி அது இன்னும் எத்தனை நாளைக்கு தாங்குமுன்னு என்னால சொல்லீற முடியும்.ஆனா ஒங்கள் மாதிரி ஆள்களால அது வெறும் வேப்ப மரம்ன்னு மட்டும் சொல்லீற முடியும் அவ்வளவுதான், வித்தியாசம் ஒங்க பார்வைக்கும் ஏங் பார்வைக்கும்,

“அதுக்குத்தான் எந்த ஒண்ணுக்கும் பெரிய ஆள்கள கலந்தாலோசனை பண்ணுங்கண்ணு சொல்றாங்க,இப்ப தலை முறை என்ன பண்ணுறீங்கன்னா கையகலம் இருக்குற செல்போன்ல சமைச்சி சாப்புடுறது தவிர்த்து மத்த தெல்லாம் பண்ணீக்கிறீங்க,வாழ்க்கையே அதுதான்னு ஆகிப்போச்சி, பெத்த வுங்கள்ல இருந்து மத்தவுங்க வரைக்கும் அவுங்க கிட்ட பேசுறத மறந்து ட்டு செல்போன பாக்குறது மட்டுமே வாழ்க்கையின்னு நெனைச்சிக்கிட்டு இருக்குறீங்க,எங்க காலங்கள்லயெல்லாம் புதுசா கல்யாணம் ஆன ஜோடிக பஸ்ஸீல போனா பஸ்ஸே குலுங்கும்,கூட பிரயாணம் பண்ணுறவுங்கள்ல இருந்து டிரைவர், கண்டக்டர் வரைக்கும் ஒரே வெக்கமாகிப்போகும்,ஆனா இப்ப அப்பிடியா புருசனும் ,பொண்டாட்டியும் பக்கத்துல பக்கத்துல ஒக்காந் துருந்தாலும் கூட ஆளுக்கு ஒரு செல்போன கையில வச்சிக்கிட்டு ஊர் வந்து சேர்ற ஐம்பது கிலோ மீட்டர் தூரமும் ஒண்ணுமே பேசிக்கிறாம வர்றாங்களே, சரி பஸ்ஸீலதான் அப்பிடின்னா வீடு போயி சேர்ற வரைக்கும் கூடவும் இப்பிடித்தான் பேசாம போறாங்க,

”இப்பிடித்தான் புதுசா கல்யாணம் ஆன ஜோடிக ஒரு ஊருக்கு விருந்துக்கு போயிருக்குறாங்க,அது கிராமம், வழக்கம் போல ரெண்டு மூணு மணி நேரத்துக்குஒருபஸ்ஸீதான்,பஸ்ஸீக்காக காத்திருக்குறநேரத்துலசெல்போன பாப்பமுன்னு பாத்துக்கிட்டே இருந்துருக்காக, அந்த நேரத்துல பஸ்ஸீ போயிருச்சி, அதக்கவனிக்காத அவுங்க பஸ்டாண்டு ஹோட்டல்லேயே சாப்பு ட்டுட்டு சொந்த ஊருக்கு திரும்பி வந்துட்டாங்க,மறு நாளு பாத்தா இவுங்கள விருந்துக் குக் கூப்புட்ட சொந்தக்காரங்க வீட்டுக்கு வந்து சண்டை போட ஆரம்பிச் சிட்டாங்க,அப்புறம் பெரியவங்க பேசி சமாதானம் பண்ணி நடந்த ச்சொல்ல ஒரே சிரிப்பு,நல்ல வேளை திரும்பி வந்ததாவது சொந்த ஊருக்கு வந்தாங்க, செல்போனபாத்துக்கிட்டே வேற எந்த ஊரு பஸ்ஸீலயாவது ஏறாம போனா ங்கன்னு,

“இப்ப அது போலதான் ஆகிப்போச்சி எல்லாம்,பெரியவங்க அருமை தெரியி றதில்ல, பெரியவுங்கள மதிக்கிறதில்ல,பெரியவுங்கள முன்னாடி விட்டு பின்னாடி பேசுறதுன்னு எல்லாம் நடக்குது,சொல்லுல பேச்சுல நடத்தை யில நிதானம் இல்லை,படக்கு படக்குன்னு என்னத்தையாவது ஒண்ண பேசீற்றா ங்க,படக்கு படக்குன்னு நிதானமிழந்து நடந்துக்குறாங்க,படக்கு அதுஏதாவது ஒரு நேரத்துல வந்து கசந்து நின்னுக்கிருது. அந்தக் கசப்புக பின்னாள்ல விரிசல் கண்டு பெரிய சுவரா தடிச்சி நிக்குது, என்ற பெரியவர் தான் சாப்பிட்ட இரண்டு பூரிக்கும் வடைக்குமாய் காசு கொடுத்து விட்டு நகர்கிறார்,

பெரியவர் எழுந்து சென்ற சீட்டுக்கு எதிர் சீட்டில் அமர்ந்தவன் இரண்டு பூரிகளும் ஒரு வடையும் கொண்டு வரச்சொல்கிறான்,

நினைவுகளில் கிளறலில் மனம்வழியாய் இறங்கி பாதங்களில் வேர் விட ஆரம்பி த்திருந்தது,

படர்ந்தடர்ந்த மர இலைகளின் ஊடறுத்து மாலை நேர மஞ்சள் நிற சூரிய வெளிச்சம்.

மரத்திலிருந்து எழும்பிப்பறந்த பறவைகள் கத்தலுடனும்,கீதமிசைத்துமாய்,,,/

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக