திங்கள், 30 டிசம்பர், 2019

வெளிக்காத்து,,,,



திருமண மண்டபம் இருக்கிற இடம் பிடிபடவில்லை சரியாக,,,/ அருப்புக் கோட்டைக்கு செல்லும் சாலைக்கு அருகாமை காட்டி இருப்பதாய் அழைக்க வந்தவர் சொன்னதாய் ஞாபகம்,

போய் விட்டார்கள் இவனும் மனைவியுமாய் இரு சக்கர வாகனத்தில்/ சென்ற வாரம் பழுது பட்டு நின்ற இரு சக்கர வாகனத்தை சரி செய்து ஓட்டிக்கொண்டு வந்தான்,

ஒர்க்‌ஷாப்க்காரர் கூடசொல்லிவிட்டார்,”என்ன சார் இது,நானும் ஒங்க கிட்ட சொல்லிச்சொல்லிஅலுத்துப்போயிட்டேன்.வண்டியமாத்துங்கசார்,வண்டிய மாத்துங்கசார்ன்னு,,,நீங்களும் மாத்துற வழியக்காணம் ,இதுக்கு ரிப்பேருக்கு செலவழிக்கிற பணத்துக்கு நீங்க புது வண்டியில போட்டாலாவது பிரயோ ஜனம், இப்ப ஒரு தொகைய ஆத்தமாட்டாம ரிப்பேருக்குன்னு செலவழிக் கிறீங்க, அது செலவை இழுத்து வாங்கிக்கிட்டு திரும்பவும் ரெண்டு இல்ல மூணு மாசத்துல ஏதாவது மேஜரான செலவக்கொண்டு வந்து காமிக்கும் அப்பப்போட்டு மனசு சங்கடப்பட்டு இதுக்கு அழுவுறதுக்கு பேசாம புது வண்டிய வாங்கிட்டுப்போயிலாமுல்ல,,,,,,?

நீங்களும் அப்பப்ப நடு ரோட்டுல நின்னுக்கிட்டு எனக்கு போன் பண்ணி வண்டி நடு ரோட்டுல நிக்குது ரிப்பேராகி வாங்கன்னு கூப்புடுறீங்க,நானும் வர்றேன், ரிப்பேர் பண்ணித்தர்றேன்,இதுல பஞ்சர் தவிர்த்து ஒங்கள தர்ம சங்கடமான நெலையில தர்மசங்கடமான யெடத்துல நிக்க வச்சிருக்குது இந்த வண்டி. இல்லையா,”

ஒரு தடவை கே ஜி ஏ ஸூகூல் கிட்ட வந்துக்கிட்டு இருக்கும் போது ஆக்ஸி லேட்டர் வயர் கட்டாகிருச்சின்னு கூப்புடீங்களே ஞாபகம் இருக்கா,அப்ப மணி என்னன்னு தெரியுமா,ராத்திரி பதினோரு மணி,பையன்க எல்லாம் கடிஅய மூடிக்கிட்டு போயிட்டாங்க,நனும் வீட்டுக்குப்போயி அப்பத்தான் கையக்காலக் கழுவீட்டு இருக்கேன்,கூட்டூட்டீங்க, நல்லபசி, அன்னைக்கி மதியம் வேற சாப்புடல,நாலு ஒர்க ஷாப்புல வேலைக்கி இருந்தப்பத்தான் நேரத்துக்கு சாப்புட முடியாமப்போச்சின்னா,ஒருவொர்க்‌ஷாப்புக்கு ஓனரான ப்பொறகும் சாப்புட முடியாமப்போறதுஅதவிடகொடுமையிலும்கொடுமைதான் போன்னு நெனைச்சிக்கிட்டு கூட வேலை பாக்குற பையனையும் கூட்டிக்கிட்டு வேகு வேகுன்னு வந்தா நீங்க பாவம் அந்த அத்துவான வேளையில வண்டிய உருட்டிக்கிட்டு அந்துக்கிட்டு இருக்கீங்க பாவம்,,,,,

வண்டிய டோ பண்ணிட்டிட்டு வரும்போது திக்குதிக்குன்னுதான் நடந்து வந்தேன்னுசொன்னீங்க,எதுக்குப்பாவம் அப்பிடியெல்லாம கஷ்டப்பட்டுக் கிட்டு,பாம்பு நெளிய பயப்படுற நேரத்துல ஒத்தையா அந்த அத்துவான ரோட்டுலயெல்லாம் வந்துக்கிட்டு,,,,

அது போல இன்னொரு தடவை நடந்துரக்கூடாதுன்னுதான் சொல்றேன் சார்,புது வண்டி வாங்குங்கன்னு,இனி இந்த வண்டியில தாங்குறதுக்கு இதுக்கு மேல பெரிசா ஒண்ணும் யெசக்கு இல்ல,

இவ்வளவு சொன்னதுக்கு அப்புறமும் கூடசரிசரின்னு தலையத்தலைய ஆடிக் கிட்டு பேசாம போனிங்கன்னு வையிங்க ,திரும்பவும் ஒருக்க ஆக்ஸிலேட்டர் வயர் கட்டாகி எங்காவது நடு காட்டுல நின்னுக்கிட்டு இருப்பீங்க பாத்துக்கங்க ஆமாம்எனஅன்று சொன்னஒர்க்க்ஷாப்க்காரரின் பேச்சு இன்றும் மனம் கொண்டு நிற்பதாக,,/

சின்னமகளுக்குஸூகூட்டிவாங்க வேண்டும் என ஆசை,பெரிய வண்டிதான் தனக்கு ஏற்றது என இவன் நினைக்கிறான்,

பெரிவயவனும் ஸ்கூட்டியே வாங்கிக்கொள்ளுங்கள் அதுதான் உங்களுக்கு ஏற்றது,இனிமேல்பெரியவண்டிஓட்டுகிறவயதில்லை உங்களுக்கு என்கிறான், அப்படி என்ன வயதாகிவிட்டது இவனுக்கு எனத்தெரியவில் லை.ஐம்பத்தி ஆறு ஒரு வயதா,,அறுபது வயதிற்கு மேலானாவர்கள் காற்றில் இருசக்கர வாகனம்ஓட்டிச்செல்பவர்களைநிறையதடவைபார்த்திருக்கிறான்,பார்த்திருக்கிறான் என்ன பார்த்து வியந்திருக்கிறான்.

அந்த வியப்பு பொய்யில்லை நிஜமே,அதைச்செய்ய நம்மால் என்ன இயலா தா என்கிற எண்ணம் மேலோங்க பழைய மாடல் இரு சக்கர வாகனம் ஒன்றை வாங்கி ஓட்டிக்கொண்டு திரிந்தான் சிறிது நாள்,சரிவரவில்லை அது என அதை விற்ற தினத்திலிருந்து இன்று வரை பெரிய வண்டியை ஓட்டிப் பார்த்ததில்லை.

சொந்தமாக வாங்கு பொழுது ஒட்டிக்கொள்ளலாம் என இருந்துவிட்டான்.

ஒயின் ஷாப்பிற்கு எதிர்த்தாற் போல் இருக்கிற திருமண மண்டபத்தின் பின்னால் என்றார்கள்,

இப்பொழுது வேறு எதையும் விட ஒயின் ஷாப் நல்ல அடையாளமாக ஆகித்தெரிகிறது,

பின்னால் இருந்த மூன்று மண்டபங்களில் எது எனச் சரியாகச் சொல்ல வில்லை,ஒரு வேளை அவர்கள் சொல்லி இவன் கவனிக்கவில்லையோ என்னவோ,,,?

வேறு வழி ஒவ்வொரு மண்டபமாய் ஏறி இறங்க வேண்டியதுதான்,

அருப்புக்கோட்டைரோடு இவனது வீட்டிலிருந்து மூன்றுகிலோமீட்டர்கள் இருக்கலாம்,

இருசக்கரவாகனம் இருந்தால் போய் வருவது ஈஸி,பஸ்ஸிற்காய்க் காத்திருந் தால் காலம் போய் விடும்.

இங்கிருந்துபஸ்டாண்ட் சென்று அங்கிருந்து அருப்புக்கோட்டை ரோடு வழியாக செல்கிற பஸ்ஸாய் பார்த்து விழி கழண்டு விழ காத்துக் கிடக்க வேண்டும்.கழண்டவிழிதற்செயலாய் எங்காவதுபார்த்துக்கொண்டிருந்தால் வந்த பஸ் விருட்டென காணாமல் போய் விடும் வந்த வேகத்தில் /

இங்கிருந்து கால் மணி நேரம் பஸ்டாண்ட் செல்ல,அங்கிருந்து கால் மணி அருப்புக்கோட்டைசாலைசெல்ல,,,,இவைஇரண்டிற்குமாய்செல்லபஸ்ஸிற்காய் காத்திருக்கிற நேரம் பத்தும் பத்துமாய் இருபது நிமிடங்கள் வைத்தால் கூட ஐம்பதுநிமிடம்,ஆகிப்போகிறதுதான்,அதில்ஐந்துநிமிடம்குறைத்தால் முக்கால் மணி நேரம்,அந்த முக்கால் மணியின் பாதியை கையில்பிடித்துக் கொண்டு இரு சக்கர வாகனத்தில் சென்று வந்து விடலாம்,

அதிலும் பஜார் வழியாக போய் வந்தால் தேவையானதை வாங்கிக் கொள்ள லாம்.

தேவையானது என பஜாரில் இவன் வாங்குவது காய்கறிகள் மட்டுமே,,/ பேஜார் இல்லாத பஜாராய் அதை பார்க்க முடிந்ததால் அங்கு காய்கறி வாங்கிக்கொள்ள இவனுக்குப்பிடிக்கிறது,

நேற்றைக்கு முன் தினம் அந்த அக்காதான் அழைப்புச்சொல்ல வந்திருந்தார் கள் வீட்டிற்கு, அவர்கள் வரும் போது காலையில் மணி ஏழு இருக்கும்,

ஏழு மணியைஎட்டிப்பிடிக்க இன்னும் ஐந்துநிமிடம் இருந்தது, ஒரு ஞாபக த்திற்காய் அப்படி வைத்துக் கொள்ளலாம்.என்றாள், கடிகாரத்தைப்பார்த்து விட்டும் மனக் கணக்காயும்.,,/

ஏன் வாசலோட நின்னுட்டீங்க,உள்ள வரவேண்டியதுதான இதுக்கு எதுக்கு அனுமதியெல்லாம் கேட்டுக்கிட்டு,ஒங்க வீடு போல இல்லையா இது என்ற இவனது பேச்சிற்க்கு பலமெடுத்துசிரித்தவள் ”சும்மா கெடடா கிறுக்கா,,, கிறுக்கன்மாதிரிபேசிக்கிட்டு,,,வாடா,போடான்னுகூப்புடலாமுல்லாப்பா,,அதுக்கு அனுமதி உண்டா இல்லை அதுவும் கெடையாதா சொல்லீரு என அவள் கேட்ட நேரம் கொஞ்சம் அமைதியானவன் சுதாரித்து அட போங்கக்கா, நீங்க கூப்புடாமயாருஎன்னய,கூப்புடப்போறா,,,எங்கஅம்மாவுக்கு அடுத்து நீங்கதான அப்பிடி கூப்புட வாய்ச்ச மனுசியா தென்படுறீங்க,இந்த விஷயத்துல நான் குடுத்துவச்சிருக்கணுமுக்கா,இது போல உரிமையோட கூப்புட, பேச, கோவிச்சிக்கிற, மனசுக்குள்ள இல்ல,வெளிபடையா வையிற துக்கு யாரு இருக்கா சொல்லுங்க,,,என்றவனாய் சரி வாங்க வீட்டுக்குள்ள வாசல்லயே நின்னுபேசிக்கிட்டுஇருந்தாஎப்பிடி,,,?பாக்குறவுங்கஎன்னையதப்பாநெனைக்கப் போறாங்க, என்னடா இவன் வீட்டுக் வந்தவுங்கள வாசல்லயே நிக்கவச்சி பேசிக் கிட்டுஇருக்கான்னு,,,,/”

”எதுக்குடா அப்பிடியெல்லாம் பேசப் போறாங்க,நீ என்ன எனக்கு அந்நியமான ஆளா,இல்ல நான் என்ன ஒனக்கு அந்நியமான ஆளா சொல்லு,,,,,,எனக்கு ஒரு டம்பளர் பச்சை தண்ணி குடுத்து இப்பிடியே வாசலோட அனுப்புனாக் கூட சந்தோசம்தான்,

“தெரியும்இந்நேரம்வந்தாபுள்ளைங்கஎந்திரிச்சிருக்கக்கூடமாட்டாங்காங்குற சந்தேகத்துலதான் வந்தேன், நீயே இன்னைக்கு என்னமோ அதிசியமா எந்திரிச்சி வந்து வாசல்ல நிக்கிற/ இந்த அக்காவ கூப்புட,,

“கேள்விப்பட்டேன், ராத்திரிக்கி சீக்கிரம் தூங்குறதில்லையாம், காலையில லேட்டாத்தான்எந்திக்கிறயாம்,சொல்றாங்க,,,அப்பிடிஎன்ன தேவை இருக்கு ஒனக்கு,ராத்திரிக்கு முழிக்கிற அளவுக்கு பகல்ல தூங்கிப்போற அளவுக்கு, ஒடம்பத்துக்க,அத விட்டுறாத ,சொவரு இருந்தாத்தானன்னு சொல்லாட்டிக் கூட நம்ம தெம்பா இருந்தாத்தான மத்தவுங்கள இழுக்க முடியும், ஊருக்கா கவும், பொதுவுக்காவும் ஓடிக்கிட்டுத்திரியிறது கொஞ்சம் இனிக்கும்தான், கொஞ்சம் சந்தோஷமாகூட இருக்கும்தான். ஒன்னைய யாரும் அதெல்லாம் செய்ய வேணாமுன்னு சொல்லல,செஞ்சிக்க ஒனக்கு சந்தோஷமாவும் ஞாயமுன்னு படுறத தவிர்த்து நீ ஒண்ணும் தப்ப பண்ணீறப்போறதில்ல, என்ன பொதுவுங்குறது நாலுபேரு சேந்ததுதான,நாலுல ஒருத்தரு கொஞ்சம் யெசக்கேட்டுக்குஉட்பட்டுட்டருன்னாக்கூட அதுக்கு நீயும் ஒரு ஆளா சப்போடபண்ணிநிக்கணும்.போயிமனசாட்சிஉறுத்தித்திங்கும் போதுகூட,,,/

“எப்பயும் நிக்கிற தரை முக்கியமில்லையா, காலுக்குக்கீழ நழுவிக்கிட்டு இருந்தா அது தரை கெடையாதுதான,அலித்தரைதான,அத நம்பி இருந்துறக் கூடாதுன்னுதான்சொல்றேன்,ஆனாநீஅப்பியெல்லாம்போறஆளு கெடையாது தெரியும்,இருந்தாலும் சொன்னேன் என்றவள் ஆனா நீ இது போல ஊரு பொதுவுன்னு ஓடிக்கிட்டு திரியிறதுன்னு ஆனதுக்கு அப்புறம்தான் நெறைய கத்துவச்சிருக்குற ,அது சரி அனுபவமும்,காலமும் கத்துக்குடுக்குற அளவுக்கு இங்கயாருசொல்லிக்குடுக்கப்போறா,காலம்ஒருசிறந்தஆசிரியன்,கணக்கீட்டாளன், நல்ல மருந்துன்னு ,,இன்னும் இன்னும் நெறைய சொல்வாங்கப்பா,,,,இந்த அக்காசொல்றதவிடகாலம்ஒனக்குநெறைய சொல்லித்தரும்,நீயும் காலத்தின் நூலப்புடிச்சிமேலஏறிவந்துகத்துக்குருவ,ஒன்னையபுனரமைச்சிக்கிறுவன்னுதா இவ்வளவும் பேசுறேன்,புனரமைச்சிக்கிறுவ நீ,கண்டிப்பா,,,/,

”இவ்வளவுதூரம்ஓங்கிட்டபேசுறதுக்குவிஷயம்இருந்தாலும்கூடஒன்னையப் பாக்குறதுக்குக்கொஞ்சம் பொறாமையா இருக்குடா,குடியிருக்க சின்னதா ஒரு வீடு, அளவான குடும்பம்,பெரிய அளவுலான சண்ட சச்சரவுன்னு இது நா வரைக்கும்ஒங்களுக்குள்ள பெரிசா விரிசல் விழுந்துறாத தாம்பத்தியம். சின்ன சின்ன சச்சரவுகளத்தவிர்த்து,,,,அது இல்லைன்னா குடும்பம் இனிப்பு இல்லையில்ல,,,,வாசல்ல போடுற கோலத்துக்கு வைக்கிற புள்ளிகளப் போல அதெல்லாம்இருக்கும்தான்.என்னவச்சபுள்ளிகளோட அர்த்தமும் அடர்த்தியும் கொளஞ்சிறாம பாத்துக்கிட்டு வர்ற பாத்தியா அதுக்கும் சேத்து இந்த அக்கா தலை வணங்குறேன்டா,,,,/,

”என்னயப்பாக்குறவுங்களெல்லாம்கேக்குறாங்கடா,ஏங்கிட்டபேசுறபத்துலஎட்டுப் பேராவது ஒங் கல்யாணம் ல்வ் மேராஜான்னு கேக்குறாங்க, அவங்க கிட்டயெ ல்லாம் சொல்றேன் அவுங்களது லவ் மேரேஜ் இல்லை,மேரேஜ் லவ்வுன்னு, கல்யாணத்துக்கு அப்புறமும் அன்பு கொறையாம காதலிக்க வாச்சிருக்குற அன்பு ஜோடிக அவுங்கன்னு சொல்வேன்,,,,,” என்றவாறு வீட்டுக்குள் நுழைந்தவள் இவன் மனைவி கொண்டு வந்த டீ டம்ப்ளரை வாங்கியவாறே ”என்னதிது டீயா,டீன்னா எனக்குப்பிடிக்கும்,ஆனா எங்க வீட்டுல காபிதான் போடுவோம்,

“காபி,காபி,,காபி,,,ஒரே காபிதான்,நின்னா காபி,உக்காந்தா காபி படுத்தா காபின்னுஆகிப்போனகாபி ஒலகம்,,வீட்டுக்காரருக்குப் புடிக்கும்ங்குறதால நானும் காபி குடிக்க பழகிக்கிட்டேன், கட்டாயத்துக்குட்பட்டுதான்னாலும் கூட அப்பிடித்தான் பழகிக்கிற வேண்டியதாகிப் போனேன்,

”கல்யாணம் ஆன மறு நாளையில இருந்து எங்களோட ஆசை பாசங்கள மூட்டகட்டிவச்சோகுழிதோண்டிபொதைச்சோதான் ஆக வேண்டியதிருக்கு. இல்லை அது முடியாதுன்னு மல்லுக்கு நின்னா குடும்பம்பத்துகாக இது கூடவாகாம்ப்ரமைஸ்பண்ணிக்கிறகூடாதுன்னுஒரு அசரீரி கனமா ஒலிக்குது ஆண்கள் ஒலகத்துல இருந்து,என்ன செய்ய சரின்னு அடங்கிப் போயிருறவு ங்களா ஆகிப்போறம், அதுல நானும் ஒருத்தியா இப்ப ஓங் முன்னாடி நிக்கிறேன்,,,,” என்றவள் இன்னும் கொஞ்சம் டீக்கெடைக்குமா என்கிற உரிமையுடன் சமையலறைக்குள் நுழைந்தாள்,,,,,,/

”யப்பா எதுன்னா வித்தை எதும் கத்து வச்சிருக்கையாப்பா,”என்றாள் இவன் மனைவியைப் பார்த்து,,,,,எடுத்தது எடுத்த எடுத்துல,வச்சது வச்ச எடுத்துல அப்பிடியேஅச்சுப்பெசகாமஇருக்கேப்பா,.,,,,பாத்திரமெல்லாம்இப்பத்தான் வாங்குனபுதுப்பாத்திரம் போல இருக்கேப்பா, எப்பிடியும் காலையில எந்திரிச்சி அடுப்பப்பத்தவச்சிருப்ப,இந்தாடீப்போட்டுஎனக்குகுடுத்துருக்குற, நீங்களும் குடிச்சிருப்பீங்க,ஏங் தம்பி வழக்கம் போல ரெண்டு டம்ப்ளர் டீ வாங்கிக் குடிச்சிருப்பான்.அவன்கடைக்கிப்போனாலேடீக்கிடிக்கிறதுக்கு முன்னாடி ஒரு டீ, டீக்குடிக்கும் போது ஒரு டீ,டீக்குடிச்சப் பின்னாடி ஒரு டீன்னு குடிக்கிற ஆளு,,,கேட்டாஅதுக்குஒருவிளக்கம்சொல்லுவான்,நாவோடசுவைறும்புகள்ல பட்டு ஒவ்வொரு மிடறா உள்ள போற டீ ஒடம்பையும் மனசையும் இணைக்கிற பாலம்ன்னுவான்.அப்படியாப்பட்ட ஆளு அவனுக்கு டீபோடும் போது  நீங்க ரெண்டு பேருக்கும் புள்ளைங் களுக்காவும் டீ ஆத்தும் போது சிந்தி செதறி அடுக்கள மேடை முழுசுமா அடையாளம் காத்துக்கெடக்காம இப்பிடி நீட்டா தொடச்சி வச்சிட்டு ஏதோ அந்தரத்துல இருந்து எல்லாம் வந்தது போலவும் மந்துரத்துல பழுத்த மாங்கா போலவுமா இருக்கே,,இதுக்கே ஒன்னையப்பாராட்டணுப்பா,,,,,,மனசாரவும்வயாரவுமா,,,,,,” எனச் சொல்லியள் அடுத்துக்குடுத்த டீயை க்குடித்து விட்டு டப்ளரை கீழே வைத்தாள்,

அப்புறம் காலையில என்ன டிபனா வழக்கம் போல சாப்பாடா எனக் கேட்டவள் புள்ளைங்க இன்னும் தூங்குதுக போல,,,/

”காலகாலத்துலஎழுப்பிவிடுங்க,நம்மஇன்னும் சோம்பிப்போகலாம் ,ஆனா புள்ளைங்க சோம்பி திரியக்கூடாது, மொட்டா இருக்குறதுங்க பூவா மலர காத்துக்கிட்டுஇருக்காங்க,அவுங்களமலரவிடுவோம்,தாராளமா,,,”என்றவள் பிசைந்து வைத்திந்த மாவைப்பார்த்து விட்டு என்ன பூரிக்குப் போடப் போறீங்களா,,,,,என்றவளாய் மருமகளுக்கு வலைகாப்பு வச்சிருக்கேன்,என தேதி, இடம்,நேரம் எனச் சொல்லி விட்டு பூரி சுட்டு முடிச்சவுடனேயே அக்காவுக்கு ரெண்டு பூரிகொண்டாடா என்றவளாய் வெளியேறினாள். வீட்டை விட்டு/

கண்களில் நிறைகொண்ட நீருடன் அவள் சென்றதையே பார்த்துக் கொண்டி ருக்கிறான் இவன்,,,/

புதன், 25 டிசம்பர், 2019

தாமதங்களின் முன்னறிவிப்பாய்,,,,,

கொஞ்சம்தாமதமாகிப்போகிறதுமன்னிக்கவும்.மன்னிப்புக்கேட்கவும்மன்னிப்புக் கொடுக்கவும் ஒரு தனி மனது வேண்டும் போலும்,அது தேவையான அளவி ற்கு இருப்பு இருக்கிறதுதான்,

சடுதி எடுத்த மனதுடன் காலை நேரம் சிறிதே அவசரம் காட்டி எழுகிற போது செய்துவைக்கப்பட்டிருந்தசின்னமுள்ளும்,பெரியமுள்ளும்கூடவே ஸ்நேகிதச் சிரிப்புடனாய் இணை சேர்ந்துக்கொண்ட விநாடி முள்ளும்,மணி ஏழே கால் என முன்னறிவிக்கிறது,

ஒரு கூட்டு பறவையின் குஞ்சுகள் அடைகொண்டதை போல இப்படி ஒரு கடிகாரத்த எங்க வாங்குனீங்க,என்ன வெலைக்கு வாங்குனீங்க,இது போலான கடிகாரத்த வாங்க ஒங்களாலத்தான் முடியும்,எதுக்கெடுத்தாலும் எங்க போனா லும் மாடர்ன் மாடர்ன் மாடர்ன்தான்,என கடிகாரம் வாங்கி வந்த தினத்தன்று முன் மொழிந்தாள் மனைவி/

கடிகாரத்தை பார்த்துக்கொண்டே மனமில்லாமல் எழுந்து முகம் கழுவுகிற போது கண்கள் எறிந்து சோம்பல் அகலா தூக்கம் பிடித்த முகம் முன் நிழலா டியதாய்,,,,,/

ஆடியநிழலுக்கு அர்த்தம்ஏதாகினும்உண்டா என்றால் இப்போதைக்கு இல்லை என்றே சொல்லலாம். நிறையவற்றிக்கு அப்படித்தானே இருக்கிறது.

நாலுபுள்ளியும் ,எட்டுப் புள்ளியும் போய் இப்பொழுது வந்து விட்ட வரை கோலங்கள் வாசலை அலங்கரிப்பதை பார்க்க முடியவில்லைதான் இன்று/

இட்டுவைக்கப்பட்டபுள்ளிகளும்,இழுத்துவரையப்பட்டகோடுகளுமாய்அலங்க ரிக்கப்படுகிற வாசல்கள் எப்பொழுதும் கண்ணுக்கு இதமாகவே,,,,/

ஊர்ந்து திரிந்த எறும்புகளும்,பறந்து திரிந்த பறவைகளும் கோலம் வரைந்த வாசல் தாண்டிச் செல்கையில் சில விநாடி நின்று கண்ணுற்றுச்செல்வதாய் அறிந்து கொள்கிறான் தினங்களில் அவளிடமிருந்து.

இருக்கட்டும் இருக்கட்டும் என்னதான் வரைந்தாலும் என்னதான் இட்டாலும் கோலம்தானே,,,,என்கிற இவனது வம்பிழுப்பிற்கு,,என்ன அப்படிச்சொல்லி விட்டீர்கள்,,?இதுவும் ஒரு வரை கலைதானே,,,.கண்ணுற்றுப்பார்ப்பதற்கும் காதுற்று விமர்சனம் செய்வதற்கும் ஏற்ற ஒன்றாய் இருந்தால் மட்டும்தானா அது வரைகலை,பின் இதெல்லாம் எந்த விதத்தில் சேர்த்தி கூறுங்கள் மறுக் காமலும் மனம் திறந்துமாய்,,,/ என்கிற அவளது பேச்சிற்கு என்ன சொல்லி மனச்சமாதானம் செய்வது அப்போதைக்கு என்பது தெரியாமல் சொல்லற்று நின்ற போது சரி சிரமம் கொள்ளவேண்டாம் என அவளே பின் வாங்கிக் கொள்கிறாள்,சொல்லிலும் பேச்சிலிருந்துமாய்,,,/

ஆகா சரியான செயல் உன்னது,இப்படித்தான் இருக்க வேண்டும்,ஏதாவது ஒன்றிற்கு ஏதாவது ஒன்றை ஈடு கொடுக்கும் விதமாய் பேச்சும்,சமாதானமும் அமைந்து போவதுதான் நல்லது என்ற போது வாய் கொள்ளாது சிரித்தாள்,

சமாதானம்ஆகாமல் எங்கு போய்விடப்போகிறேன்,போனாலும்விட்டு விடவா போகிறீர்கள்,,?எப்பொழுதும் இறங்கி வந்து சமாதானமாகிப் போகிறவர்களும், சமரசம்பேசுகிறவர்களுமாய்குடும்பத்தில்பெண்களாகத் தானே இருக்கி றோம் என்றபடி போய் விடுகிறாள் பேசிக்கொண்டிருந்த பேச்சிற்கு முற்றுப் புள்ளி வைத்துவிட்டும் கோலப்பொடிடப்பாவைஓரம் கட்டிவைத்து விட்டுமாய்,,,/

முன் காலையில் யாரும் எழுப்பாமல் எழுந்து வீட்டில் முகம் கழுவி விட்டு கடையில் போய் டீ சாப்பிட்டு விட்டு செல்கிற வழியில் மாட்ட விடுபட்டுப் போன சட்டை பட்டனை மாட்டிக்கொண்டு வாக்கிங் செல்லலாம் எனவாய் அன்றாடங்களில் மனம் முளைக்கிற எண்ணம் முளையிலேயே கருகி விடுகிறதாக அல்லது கிள்ளி எறியப்படுகிறதாக/

கருகி விட்ட எண்ணமும் கிள்ளி எறியப்பட்ட துண்டுகளின் சிதறல்களும் நடையின் பாதையெங்கும் அங்கங்கே சிதறிக்கிடப்பதாய் ,,,,,/

நல்லதுதான் ,தினமும் வாக்கிங்க் இல்லை ரன்னிங்,இல்லை சைக்கிளிங்,, இப்படி ஏதாவது ஒன்று,,,,,,ஆசை பூண்ட மனம் செயல் என வரும் போது கொஞ்சம் பின் வாங்கித்தெரிவதாய்,,,/

காரணம் என்ன சொன்ன போதிலும் சமாதானப் பட்டுக் கொள்ள முடியாது தான். முதல் நாள் இரவு படுப்பதற்கு கொஞ்சம் தாமதம் ஏற்பட்டுப்போகிறது வாஸ்தவம்தான்.

தாமதப்படுகிற செயலைச்செய்து விட்டு தாமத்தின் மீது பழி போட்டால்,,,,,,,,,?

மூன்று சினிமாக்கள் மூன்று சேனல்களில்,,,,இடைவெளி விட்டும் பின் தொடர் ச்சியாயும் பார்த்தான்.

மூன்றும் மூணு மாதிரியாய் கதை சொன்ன படங்கள்,முதலாவது ஆறு மாதங்களுக்கு முன்னாய் ரிலீஸ் ஆன படம்,மற்றொன்று மூன்று வருடங்க ளுக்குமுன்னானபடம்,மூன்றாவதுஇருபத்தைந்துவருடங்களுக்குமுந்தையது,

மூன்று படங்களின் கதைகள்,படத்தின் நாயக நாயகிகள்,அவர்களொஇன் நடிப்பு,படத்தின்இசை,பாடல்டைரக்‌ஷன்,எனஇதரஇதரவாய்எல்லாவற்றையும் அசை போட்டு விட வாய்க்கிறது.

மூன்றும் மூன்று விதமான தளங்களில் கதை சொன்ன படங்கள் என்கிற திருப்தியுடன் படுக்கப்போன இரவு தாமதம் காட்டியதில் என்ன தவறு இருந்து விட முடியும் பெரிதாக,,/

தாமதப்பட்டுப்படுக்கிற போது வர மறுக்கிற தூக்கத்தை இமைகள் திரை கட்டி இழுத்து மூடுகிற போது படுக்கிற வேளைக்கும் தூங்கிப் போகிற வேளைக்கு மான கால இடைவெளி சற்று அதிகமாகவே ஆகித் தெரிகிறதுதான்.

படுத்தவுடனாய்தூங்கிப்போகிறவர்கள்வெகு பாக்கியவான்களே,,,/

எத்தனையோ முறை பார்த்திருக்கிறான்,கடை வீதியின் நெரிசல் மிகுந்த ஜன நடமாட்டத்திற்கும் பெருங்கொண்ட இரைச்சலுக்கும் நடுவில் பூட்டப்பட்ட கடையின்வாசலில்துண்டைவிரித்துப்படுத்திருக்கிறமூட்டைதூக்கும்தொழிலாளி யையும், கடினம் காட்டுகிற உடல் உழைப்பாளியையும்/

அதில் உள்ளடக்கம் கொண்ட காளியப்பண்ணனை இவனுக்குத்தெரியும்,என்ன தம்பி நல்லாயிருகையா என்பார் பார்க்கும் ஒவ்வொரு தடவையும்,,,,/

நல்லாயிருக்கேண்ணே என்கிற என் பதிலுக்கு இடிசிரிப்பு ஒன்றை உதிர்ப்பவர் சரி போ,காய்கறி மார்க்கெட்டுக்குத்தான வந்த அந்த வேலைய கவனி,என மார்கெட்டுக்குள்ளாய் இருக்கிற குறிப்பிட்ட கடையின் பெயர் சொல்லி அனுப் புவார்,

காளியப்பண்ணன் சொல்லிவிட்டார் என்றால் அவர்கள் கடையையே எழுதி வைத்து விடுவார்கள் போலும்.

வழக்கமாய் காய்கறி லோடுகளை மார்க்கெட்டின் அனைத்துக்கடைகளுக்கும் இறக்குபவர் காளியப்பண்ணன்,

சென்றமாதத்தின் ஒரு நாளில் காலைவேளையாய் காளியப்பண்ணன் காய்கறி லோடு இறக்கிக் கொண்டிருக்கும்போதுமுதல்மூடையைஇறக்கிக் கொண்டிருக்கையில்கொஞ்சம்சுணங்கிஇருந்தவர்மறு மூட்டை இறக்கையில் நெஞ்சைப் பிடித்துக் கொண்டு உட்கார்ந்து விட்டார்,

இறக்க வந்த மூட்டையை நின்ற நிலையிலிருந்தே அப்படியே போட்டவர் ஐயா என அவரை இருகைகளால் அள்ளி அப்படியே மூட்டையை தூக்குவது போல் தூக்கிகொண்டு இடைஞ்சலான மார்க்கெட்டின் வாசல் வரை சென்று அங்கு நின்ற ஆட்டோவில் ஏற்றி ஆஸ்பத்திரிக்கு கொண்டு போயிருக்கிறார்.

பின்னாளில் பேசிக்கொண்டிருந்த ஒரு நாளில் கடைக்காரர் சொன்னார், அன் னைக்கி ஆஸ்பத்திரிக்கு கூட்டிக்கிட்டு ஓடுன அன்னைக்கி நான் பொழைச் சதே மறு பொழப்புன்னு டாக்டர் சொன்னாரு என்றார்,

ஒங்களுக்கு அது மறு பொழப்போ என்னவோ தெரியாது மொதலாளி,எனக்கு ஒரு உபகாரம் செய்ய வாச்சிருக்கு அவ்வளவுதான்,

அப்பிடியே சாவு வந்தாலும் நாம என்ன அணைகட்டியா தடுக்க முடியு மொதலாளி,என்ன கோடி வருசத்துக்கு வரம் வாங்கியா வந்துருக்கம்,இருக்குர வரைக்கும் இருக்க வேண்டியதுதான்,நேரம் காலம் வந்தா போயி சேர வேண்டியதுதா மொதலாளி,,,,படுத்துக்கிட்டு இழுத்துக்கிட்டு பாக்குறதுக்கு ஆள் இல்லாம நாறிப்போயி படுத்த படுக்கையா கெடக்குறதுக்கு பொட்டுன்னு போய்ட்டா அது நல்ல சாவு லிஸ்ட்டுல சேந்துரும் மொதலாளி என்பவர் இப்ப என்ன மொதலாளி கொற ஒங்களுக்கு,பேரன் பேத்தி எடுத்துடீங்க,வயசும் எழுபதஎட்டப்போக்குது,இனிஎன்ன மொதலாளி,என்னயக்கேட்டா அன்னைக்கி நீங்க செத்துப்போயிருந்தாக்கூட பாக்கியந்தான்,என்பார் காளியப்பண்ணன்,

காளியப்பண்ணனைப்போன்ற உடல் உழைப்பாளிகள்,,,,,அவர்கள் வாழ்க்கை ,அவர்கள் உழைப்பு,அவர்கள் சாப்பாடு,,எல்லாமேதனிதான்,

ஜவுளிக்கடையில் கூட அவர்களுக்கென தனியாக துண்டு வைத்திருந்தார்கள் கொஞ்சம் முரடு காட்டியும் பெரியதாகவும்/ போர்வையின் நீளத்திலும் அகலத் திலும் பாதியளவாவது இருக்கும்.

காளியப்பண்ணன் துண்டு எடுக்கப்போனால் ஜவுளிக்கடைக்குப்போன அடுத்த நிமிடம் அவர் கையில் அந்தத்துண்டு இருக்கும்.

இவனைப் போலானவர்கள் போய் துண்டெடுக்கும் போது வேண்டாம் இது அதெல்லாம்காளியண்ணன்களுக்கானது.சரிப்பட்டுவராதுஉங்களுக்கு,,,என்கிற சொல் உத்திரவாதத்துடன் வேறு விதமான துண்டைஎடுத்துப் போடுவார்கள், கொஞ்சம் மிருதுவாகவும் ரகங்களில் நிறைந்து போயுமாய் இருக்கும் துண்டு களில் ஏதாவது ஒன்றை எடுத்து வருவான்.ஆனால் விலை என்னவோ அந்தத் துண்டின் விலையை அனுசரித்துத்தான் இருக்கும்,துண்டு மட்டும்தான் அப்படியா, மற்ற மற்ற விஷயங்கள் எல்லாம் அப்படித்தானா என்பது தெரிய வில்லைஎனகாளியப்பண்ணனிடம்கேட்கிறபோது,,மத்தவிஷயங்கள்ல,,, எங்க சாப்பாடு இங்க ரொம்ப முக்கியம் காட்டுது என்பார்,

இவனைப் போலவோ இல்லை இன்னும் சிலரைப்போலவோ கொஞ்சம் சிறுத்துச் சாப்பிட்டு விட இயலாது.காளியண்ணன் போன்றவர்களால், அவர்க ளுக்கு அது காணாது, சொளப்பொரியாகிப்போகும்,

வேலை செய்கிற உடல் மூளை இடுகிற கட்டளையை உடலின் சகல பாகங்களுக்குமாய் அனுப்பி உடலின் சகல பாகங்களையும் கூட்டிணைத்து வேலை செய்ய வைப்பதை உறுதி செய்யும் போதும்,ரத்தத்தை வியர்வை யாக்கி உடலெங்குமாய் வரி காட்டி வடிய வைக்கிற போதிலும் தேவைப் படுகிற உடலின் தேவைக்கு சாதாரண சாப்பாடெல்லாம் அவர்களுக்கு காணாமல் போய் விடுகிறதுதான்,

அதற்காய் அவர்கள் தினமுமாய் சிக்கன் மட்டன் என எடுத்துச்சாப்பிட்டு விட முடியாது,வேறு என்னதான் செய்வது உடலுக்கு உறமூட்ட சத்தாய் ஏதாவது உணவு சாப்பிடத்தான் வேண்டும்,இழந்துபோன கலோரிகளை ஈடு செய்ய அவர்களுக்குக்கிடைத்த எளிய சத்தான உணவு மொச்சைதான்,

மொச்சை மற்றும் சுண்டல் பாசிப்பயறு மற்றும் பூரி வடை எனவரிசைகட்டி அடுக்கிவைக்கப்பட்டிருக்கும்உணவுவகைகளைதேர்ந்தெடுத்துதினசரி மாலை வேளைகளில் சாப்பிட்டுக்கொள்கிறார்கள்.

இவனுக்குத் தெரிந்து மதுரை ரோட்டின் இறக்கத்தில்தான் அந்தக்கடை இருந்தது,

இறக்கத்தின்வலது பக்கம் காட்டி வீற்றிருக்கிறகடையில்தான்இவை எல்லாம் கிடைக்கும். அந்தக் கடைக்கும் அவர்களுக்கு எப்பொழுதும் மிகப்பெரிய பந்தம் இருந்தது.

தினசரி மாலை குறிப்பிட்ட நேரத்திற்கு அந்த இடத்தில் ட்ராபிக் ஜாம் ஆகி விடுகிற அளவிற்காய் மூடை தூக்கும் தொழிலாளர்களின் கூட்டம் இருக்கும், காளியப்பண்ணனை உள்ளடக்கி,,,/

கையகலதட்டு ஒன்றில் ஆளுக்கு இரண்டு மொச்சையை வாங்கி உடன் பருப்பு வடை ஒன்றை எடுத்து பிச்சிப்போடுவார்கள்,போட்ட கணத்தில் பின்னாடியே அவற்றின் தலை நனைக்கிற சட்னியையும் சாம்பாரையும் சேர்த்துப் பிசைத்து சாப்பிட்ட பின் ஆளுக்கு இரண்டு அல்லது நான்கு பூரிகள் கூடவே துணைக்கு இன்னொரு மொச்சை அல்லது தட்டாம் பயறு,அதற்கும் இருக்கவே இருக்கிற சட்னியும் சாம்பாரும்/ இதுதான் அவர்களது மாலை நேரத்து டிபன்.இரவு வீடு போவது வரை தாங்கும் அது.

அவர்களது அன்றாடங்களின் கடுமையான உடல் உழைப்பிற்கும், அவர்களு க்குக் கிடைக்கிற கூலிக்கும் தினம் அவர்கள் மட்டனும் சிக்கனுமா சாப்பிட்டு உடம்பை தேற்றிக்கொள்ள முடியும்,

அதற்கான மாற்று வழியாய் அம்புக்குறியிடப்பட்ட அது போலான மூன்று கடைகள் நகரின் வேறுவேறான இடங்களில் இருந்தன, அந்த மூன்றிலுமாய் குறைந்த விலைக்கு கிடைத்த புரதச்சத்தை தேடிப்போய் வாங்கி உண்டது அவர்களாய்த்தான் இருந்தார்கள்.

அவர்கள் தவிர்த்து வாங்கி உண்டவர்கள் மிகவும் குறைவுதான் காளியப்பண் ணனை சேர்த்து./

அது போலான ஓர் நாளில் இவனும் அந்தக்கடையின் எதிர் திசையில் இருக்கிற டீக்கடையில் டீக்குடித்துக் கொண்டே கடையை உற்று நோக்கி விட்டு அவர்களது வாடிக்கையாளர்கள் சென்றவுடன் இவன் சென்று கடைக் காரரிடம் கேட்கிறான்.

அவர்களுக்கு யாருக்காவது கொடுத்த பண்டத்தை அப்படியே எனக்கும் பார்சல் கட்டிக் கொடுங்கள். வீட்டில்போய் சாப்பிட்டுக்கொள்கிறேன் என்ற போது கடைக்காரர் சொல்கிறார்.

“அண்ணே இது நீங்க நெனைக்கிறது போல செரிக்காது. அவுங்க சாப்புட்டது போல சாப்புடணுமுன்னா ஒண்ணு கனமான வேலை செய்யணும்,இல்ல கொஞ்சம் ஓடியாடியாவது திரியணும்,ஒங்க வயசுக்கு சும்மா ஒக்காந்துக் கிட்டு சாப்புடணுமுன்னு நெனைச்சா ஒடம்புல ஏதாவது ஒரு பக்கம் வீங்கிப் போயி நிக்கும்ண்ணே பாத்துக்கங்க,

அது தவிர தின்னது செரிக்காம வயித்துக்கும் நெஞ்சிக்கும் ஒரு பஸ்ஸீ போல ஒடிக்கிட்டு இருக்கும் பாத்துக்கங்க,ஆட்களே இல்லாத வெத்து பஸ்ஸா ஓடிக்கிட்டு இருக்குறதுல என்ன பெருமை இருந்துற முடியும்,தவிர அப்பிடி ஓடுறதுல வர்ற உடல் யெடைஞ்சல் எவ்வளவு சொல்லுங்க,,,,,?என அவர் கேட்ட ஐந்து வருடங்களின் கடைசியில் இப்பொழுதுமொச்சையும் வடையும் வாங்கிச்சாப்பிட்ட காளியப்பண்ணன்கள் அரிதாகிப் போனார்கள், மொச்சை யும் வடையும் விற்ற கடையும் இப்பொழுது காணக் கிடைக்கவில்லை, இன்று போய் பார்க்க வேண்டும்.