ஞாயிறு, 13 அக்டோபர், 2019

சப்தங்களின் நகர்வுகளில்,,,,

”என்னகீரைக்காரம்மாநல்லாயிருக்கீங்களா”என்பதேஅன்றாடங்களில்அவரைப் பார்க்கநேர்கிறபொழுதெல்லாம்சபாபதியினுள்சுழியிடுகிறமுதல் கேள்வியாய் இருக்கிறது.

சபாபதியின்உலகம் மிகவும்சிறியது,ஓட்டை போட்ட கையடக்க தீப்பெட்டி யினுள் கருவேலை இலைகளுடன் குடிகொண்டிருக்கிற பொண்வண்டின் லாவகம் பட்டுத் தெரிவதான வாழ்க்கை/

பத்து டூ ஐந்தின் அலுவலகத்தனமும்,லோனில் கட்டிய வீடும் காலை எழுந்து ஒன்பதுமணிக்குள்ளாய் சாப்பாடு நிறைந்த டிபன் பாக்ஸீடன் பஸ்ஸை பிடிக்க விரைகிறதுமான அவசர வாழ்க்கை,

குடும்பம்,பிள்ளைவளர்ப்புஅவர்களதுபடிப்புமாதச்சம்பளம்,பலசரக்கு, மளிகை, தவணைப்பாக்கி வார இறுதி நாளில் சிக்கன் அல்லது மட்டன் செவ்வாய் வெள்ளி கோயில் என்பதே வீட்டில் பிரேமிட்டு மாட்டப்படாத விதி,

அதை சிறியதாக நீங்கள் எடுத்துக்கொண்டாலும் சரி அல்லது கொஞ்சம் விரிவாக்கம் செய்து பார்த்தாலும் சரி,

அவன் வேலை பார்க்கிற அலுவலகத்தில் மத்தாயூ அண்ணன் தொழிற்சங்க ஈடுபாடு கொண்டவராய் இருந்தார், தொழிற்சங்கம் ,தொழிற் சங்கம்,தொழிற் சங்கம் என்பதுவே அவரது பெரும்பான்மை நேரத்தின் பேச்சாய் இருந்தது.

ஊழியர் நலன் ,அவர்களதுஉரிமை,அவர்கள் பணி,பணியிடப் பாதுகாப்பு, பெண் ஊழியர் உரிமை,அவர்களது நலன் என இன்னும் இன்னுமாய் பேசிக் கொண்டு ம் செயல் பட்டுகொண்டுமாய் இருப்பார்.

அதுவே அவரது வாழ்நாளின் கடப்பாடு என்பது போல் பட்டுத்தெரிவார்,

வெளிக்கலர் பேண்ட்டும்,அடர்கலர் சட்டையும் ,மெலிந்து சலித்த உருவமும் அவருக்கு பொருந்திதான் இருந்தது சபாபதி பார்த்தவரை/

ஆனால் சிகரெட் குடிப்பது மட்டும் அவரிலிருந்து அவருக்கே அந்நியப்பட்ட செயலாய்த் தெரிந்தது.

அவர்தான் தொழிற்சங்கத்தின் பிராஞ்ச் செகரெட்டரியாய் இருந்தார்,

கதிரேசன் அண்ணன் இலக்கியம் பற்றி தனது அன்றாடங்களில் பேசத் தவறிய தில்லை,வேலை நேரத்தில் எதுவும் பேசுவதில்லை,மூச்சு விடுகிறாரா இல் லையா என்பதுவே சந்தேகமாகிப்போகிற அளவிற்கு இருப்பவர் மதியம் சாப் பிட உட்கார்ந்து விட்டாரானால் சாப்பாட்டை சாப்புடுகிறாரே இல்லையோ கண்டிப்பாய்வம்பு பண்ணியாவது அந்த சாப்பாட்டு மேஜையில் ஒரு கதையை கொட்டு விடுவார்,தேவையானவர்கள் எடுத்துக் கொள்ளட்டும் என./

கதை பேசுவதும் அதை படிப்பதும் பகிர்ந்து கொள்வதும் அவரது உள்ளுணர் வின் நகர்வாய் இருக்கும்.

இன்னும் சொல்லப்போனால் அதுவே அவரை நகர்த்திக்கொண்டு செல்கிற உந்து சக்தியாய் இருக்கும்,

லலிதா அக்கா மறந்தும் கூட சினிமா பற்றி பேசாமல் இருந்ததில்லை, சினி மாவை பொழுது போக்கு எனச்சொல்வதை அவர் ஏற்றுக்கொள்வதில்லை, ”ஜஸ்ட் லைக தட் பொழுது போகலை அதுனால சினிமாவுக்கு போறோம், வந்துடுறோம், அவ்வளவுதான் என்பவர்களிடம் அவர் கடுமையாக தர்க்கிப் பார்,

”சரி நீங்க என்னைக்காவது ”ஜஸ்ட் லைக் தட்டாவோ”இல்ல பொழுது போக்கா வோகோயிலுக்குப்போயிருக்கீங்களா,இல்லை,அப்பிடி போறது பத்தி நெனைச் சாவது பாத்துருக்கீங்களா ,ஏன் அப்பிடி,,,,?

ஏன்னா கோயில் ஒரு புனிதஸ்தலம், அங்கயிருக்குற சாமி நம்ம வாழ்க்கைய காக்குறவர், நமக்கு வரம் கொடுக்குறவர் நம்மவாழ்க்கைய மகோன்னதமா ஆக்குறவர்,,,,ங்குற இன்னும் இன்னுமான நம்பிக்கையோடவும் அந்த நம்பிக் கைக்குஎந்த பங்கமும்சின்ன கீறலும்விழுந்துறக்கூடாங்குறகவனத்தோடயும் பய பக்தியோடயும்தான போறம்,

”ஆனா நம்ம வாழுற வாழ்கையோட கலாச்சாரத்தை பிரதிபலிக்கிற சினிமா வை,  நாம ஏன் ஜஸ்ட் லைக்தட்டா எடுத்துக்கணும்,?

”சினிமாவுலசொல்லப்படாத ,எடுத்து கையாளப்படாத,காண்பிக்கப்படாத விஷ யம் ஏதாவது இருக்கா சொல்லுங்க,,,?”

”ஆனா அத நாம ஜஸ்ட் லைக் தட்ன்னு ஒதுக்கி வைச்சிறோம்,”

”கலாச்சாரம்நம்மமுகம்மாதிரிஇல்லையா,முகம்இல்லாமஅலைஞ்சாநல்லாவா இருக்கும்,,,,?”என்கிற கேள்வியுடன் முடிப்பாள்.

அவளது அந்த முடிப்பில் தவறு இருப்பதாய் அந்த நேரத்திற்கு சொல்லி விட முடியாது.

இப்படியாய்பொழுதெல்லாம் சினிமா பற்றியும் அரசியல் பற்றியும்இலக்கியம் பற்றியுமாய் பேசிக் கொண்டிருப்பவர்களுக்கு குடும்பம் என ஒன்று இருக்கா தா?அது பற்றி அக்கறை கிடையாதா அவர்களுக்கு,,,?அது பற்றி பேச்சே எடுக்க மாட்டேன் என்கிறார்களே என்கிற கேள்வியை இவன் மனம் கொண்ட ஒரு நாளில் ”எல்லாத்தோட எல்லாத்தையும் சேதாரமில்லாம இழுத்துட்டுப் போற ரசவாத வித்தைய அவுங்க கத்து வச்சிருக்காங்க,நமக்கு அது கைவரலைன்னு வச்சிக்கவேன்,,,” என்றார் அருகாமை சீட்டுக்காரர்.

தனது அன்றாடங்களில் தன்னை கடந்து செல்கிற அனைத்திற்குள்ளுமாய் எதிலும் பட்டுக்கொள்வத்தில்லை சபாபதி.

வீடு பிள்ளைகள் மனைவி டிபன் பாக்ஸ் சாப்பாடு,ஒன்பது மணி பஸ் ஒரு மணி நேர பிரயாண தூரத்தில் அலுவலகம் அங்கு தலை நிறைந்த வேலை,,, அது முடிந்து திரும்பவுமாய் வீடு, டீ,வி மெகாத்தொடர் சாப்பாடு தூக்கம் என்பதாய் உருக்கொண்ட வாழ்க்கையை வார்த்துக்கொண்டவன் தன்னியல்பா கவே அப்படியே இருக்க பழகிக்கொண்டான்.

முந்தா நாள் வீட்டில் செப்டிக் டேங்க் கிளீன் பண்ண வண்டி கூப்பிட மிகவும் சிரமப்பட்டுப் போனான்,

செல்லில் போய் கூகுளில் சர்ச் செய்து பார்த்தான்,கிடைக்கவில்லை,”இவ்வ ளவு பெரிய ஊரில் இதற்கென ஆட்கள் இல்லையா என தெரு ஓரம் ரோட் டோரம் யாராவது வண்டியுடன் நிற்கிறார்களா பார்ப்போம்” என இரு சக்கர வாகனமெடுத்து தேடிய பொழுது கிடைக்காமல் சுற்றிய அலுப்புப்போக ஒரு டீக்கடையோரம் வண்டியை ஓரம் கட்டி விட்டுநின்ற பொழுதுஆச்சரியப்பட்ட டீக்கடைக்காரர் சபாபதியிடம் ”என்ன சார் ,டீக்கடை பக்கமே எட்டிக்கூட பாக்க மாட்டீங்க,ஆனா இன்னைக்கி கடைப்பக்கம் வந்திருக்கீங்க,என்ன சார் எதுனா விஷேசமா என்றவாறே டீக்கிளாஸை நீட்டியவரிடம் தயங்கித் தயங்கி விஷயத்தைசொன்னபொழுதுஅட இதுதானா?இதுக்குப்போய்தானாஇவ்வளவு அலைச்சல்அலைஞ்சிக்கிட்டுவந்துருக்கீங்க,இந்த வெயில்ல,நீங்க வண்டியில போகும்போதுபாத்தேன்,அப்பயே ஒரு வார்த்தைசொல்லீருந்தீங்கன்னா நானே சொல்லீருப்பேனே என விசிட்டிங் கார்டை எடுத்துக் கொடுத்தார்,

”கார்ட்ல இருக்குற நம்பருக்கு போன் பண்ணீட்டு நான் சொன்னேன்னு சொல் லுங்க,பணம் கொஞ்சம் கொறைச்சி வாங்கிக்கிருவான்,தெரிஞ்ச பையந்தான்/

இது போல எதுனா வேணுமுன்னா சொல்லுங்க சார்,எங்களால முடிஞ்சா செஞ்சி குடுக்கப் போறோம்,இல்லைன்னா அதுக்கான வழிய காண்பிக்கப் போ றோம் அவ்வளவுதான”என டீக்கடைக்காரர் சொன்ன வார்த்தையின் கடைசிப் புள்ளியுடன்தீப்பெட்டிப்பொண்வண்டாய்அடைகொண்டசபாபதியின்அன்றாடங் களில் கீரைக்காரம்மா அவன் பஸ்ஸீற்கு செல்கிற காலை வேளையாய் குறுக் கிடுகிறார்.

கீரைக்காரம்மாவை பார்க்க நேர்கிற பொழுதெல்லாம் சபாபதிக்கு அம்மாவின் ஞாபகம் வருவது தவிர்க்க இயலவில்லை.

இன்னும்கொஞ்சம்சரியாக வைத்துப்பார்ந்திந்திருக்கலாம் என்றும் அவர்களது அந்திம காலத்தில் அவர்களை சரியாக பார்த்துக்கொள்ளாமல் விட்டு விட்டோ மோ என்கிற மன நடுக்கம் அவ்வப்பொழுது முள்ளாய்தைத்துக்கிழிக்கும்தான், அதிலும் கீரைக்காரம்மாவை பார்க்கிற பொழுது இன்னும் கொஞ்சம் அதிக மாகவே கிழிபடுவதுண்டு மனது.

”நல்லாயிருக்கேன்தம்பி,நீங்களும்என்னையப்பாக்குறபோதெல்லாம்கேக்குறீங்க, நானும் நல்லாயிருக்கேன்னுதான் சொல்லிக்கிறேன், ஆனா உண்மையில் நல்லாயிருக்கேனா இல்லையாங்குறது தெரியாட்டிகூட ஒங்க வார்த்தைக கொஞ்சம் தெம்பா இருக்குது தம்பி” என்பார்.

”நான் யேவாரத்துக்கு வந்த இத்தனை வருஷங்கள்ல இது நா வரைக்கும் என்னையப்பாத்து யாரும் இப்பிடி கேட்டதில்லை தம்பி,

”இப்பிடியெல்லாம் கேக்குறதுக்கு ஒரு தனிமனசு வேணும் தம்பி,

”இது வெறுமனே நலம் விசாரிகிற சொல் மட்டும் இல்லை தம்பி,கொஞ்சம் உள்ளின் உள்ளுக்குள்ள போயிப்பாத்தா ஒரு கல்மிஷமில்லாத மனசாலதான் இப்பிடியெல்லாம் கேக்க முடியும் தம்பி,

”ஏந்தம்பியும்இதேபோலத்தான்,அப்பிடியேஒங்கவாய்தான்,ஆனாஅவன்ஒங்கள்லயும் ஒரு படி மேல போயிருவான்,”

”கொஞ்சம் தெரிஞ்சவுஞ்கன்னா போதும் ,என்ன எப்பிடியிருக்கீங்க,வீட்ல அக்கா புள்ளகுட்டிங்கள்லாம் சொகமா,புள்ளைங்க படிப்பு எப்பிடியிருக்கு, இங்கி லீஸ் மீடியத்துல படிச்ச புள்ளைக்கு சரியா படிப்பு வரலைன்னு தமிழ் மீடியத் துல சேக்கணுமின்னீங்களே சேத்தாச்சா,மூத்த பொண்ணடெலிவரிக்கு கூட்டிக்கிட்டுவந்துருந்தீங்களே,கொழந்தபொறந்துருச்சா,நார்மலா,சிஷேரியனா, ஏன்னா இப்பயெல்லாம்சிஷேரியந்தான வழக்கமாகிப்போச்சி,நேரம் குறிச்சி இந்த நேரந் தான்புள்ளவேணுமுன்னு சொன்னா வேறென்னதான்செய்வாங்க அவுங்களும் .,,,, ங்குறது வரை போயிடுவான்,அது போலதான் தம்பி ஒங்க பேச்சும் இருக்கு,அது வரைக்கும் கொஞ்சம் ஆறுதல் தம்பி.

”இது நா வரைக்கும் இந்த ஏரியாவுல ஏங்கிட்ட பல பேரு பேசிருக்காங்க, அவுங்கெல்லாம் ஊரு பேரு ,சொந்தம் ஜாதி ஜனம் எல்லாம் கேப்பாங்க,ஆனா அதுல ஒண்ணுலகூடஎன்னையப்பத்துன அக்கறையான கேள்வியோ விசாரிப் போ இருக்காது தம்பி,

“எல்லாம் அவுங்களுக்கு வேண்டிய தகவலோ இல்லை நான் என்ன ஜாதி ஆளு,ஏங்குடும்பப்பிண்ணனி என்ன,,,இன்னும் இன்னுமானது பத்தியெல்லாம் தெரிஞ்சிக்கிறது தவிர்த்து வேறெண்ணும் பெரிசா இருக்காது தம்பி.

“நானும் இவுங்க இதுக்காகத்தான் கேக்குறாங்குறது தெரியாதது மாதிரி அப்பு ராணியா அவுங்களுக்கு ஏத்த மாதிரி பேசீட்டு வந்துருவேன் சமாளிச்சி/ என்ன அப்பிடிச்சொல்லும் போது அவுங்க உள்ளொ ண்ணு வச்சி புறமொண்ணு கேக்குற மாதிரி நானும் அவுங்க போக்குலயே போயி பேச வேண்டியதாத் தான் போகும்,சூழ்நிலைதான தம்பி எதையும் தீர்மானுக்குதுன்னு சொல்லு வாங்க,

”கீரைப்பாத்தி போட குத்தைகைக்கு நெலம் கொடுத்தவரு திடீர்ன்னு போன வாரம் வந்து நெலம் வேணும் எனக்கு,நாளையில இருந்து வெளியேறிக்க, நாளைக்கிநீ அறுக்குற கீரைகடைசிக்கீரையாஇருக்கட்டும்முன்னு படக்குன்னு போயிட்டாரு,

’அவரு சொன்னது போல மறு நா கீரையவும் அறுத்துட்டு அவர் வருவாரு ,ரெண்டு வார்த்த பேசலாமுன்னு நிக்கிறேன் ,டவுன் பஸ்ஸீ வர்ற வரைக்கும் அவரக் காணம், என்ன செய்ய பின்ன பஸ்ஸீ வரவும் ஏறி யேவாரத்துக்கு வந்துட்டேன்,

“அந்த பஸ்ஸ விட்டா அடுத்து ஒரு மணி நேரத்துக்கு பஸ்ஸீ கெடையாது. ஒரு மணி கழிச்சி வர்ற பஸ்ஸீல போனாஏங் யேவாரம் வம்பாப் போயிரும், அதுக்காகத்தான்அவரசாய்ங்காலம் வந்து பாத்துக்கிருவோமுன்னு நெனைச்சி வண்டி ஏறி வந்துட்டேன்,

”அதுஅவருக்கு மனசுவாதிச்சிருச்சி,என்னா ஒரு பொம்பள நான் வருவேன்னு மதி இல்லாம இப்பிடிபொறப்புட்டுப் போயிட்டாளே கொஞ்சமாவது கூறுவாரு வேணாம்பொட்டச்சிறுக்கிக்குன்னுகூடவந்தவர்ட்டவருத்தப்பட்டவர்நாளைக்கு ஒழவுக்கு மேல வீட்டுக்காரங்கிட்ட டிராக்டருக்குச்சொல்லீரு, அப்பிடியே கூலிக்குஆள்களும்சொல்லீரு,கீரைபோட்டுருக்கிறபாத்திகளதாண்டிஅங்கிட்டு கொணத்து மேட்டுப் பக்கமா கரடு தட்டிப் போயி பொதரா கெடக் குறத வெட்டி சுத்தம் பண்ணச்சொல்லீட்டு மொத்தமா உழுது போட்டமுன்னா என்னத்தை யாவதுரெண்டுதானியம்தவசியை வெதச்சி விடலாம்,இப்பிடியே போட்டுருந்த முன்னாநெலம் வீணாப்போகும்ன்னவரு அந்த பொம்பள வந்தா ஏங் வீட்டுக்கு வரச்சொல்லுன்னு சொல்லீட்டு போயிட்டாராம்”

”நான் யேவாரம்முடிஞ்சி அப்பத்தான் வீட்ல போயிநிக்கிறேன் இன்னும் சாப்பாடு கூடச்சாப்புடல,பச்சத்தண்ணிபல்லுலபடல,வந்துட்டாங்க,தூதுசொல்லி என்ன செய்ய பின்ன,கீரைக்கூடைய யெறக்கி வச்சிட்டு அப்பிடியே போறேன் அவரு வீட்டுக்கு,

”அவரு கறாரா சேர்ல கால் மேல கால் போட்டு ஒக்காந்துக்கிட்டு நாளைக்கி நீ நெலத்துல யெறங்கக்கூடாதுன்னாரு,

”ஐயா அதுபத்திப்பேசத்தான் காலையில கீரை அறுத்தப்பெறகு அவ்வளவு நேரம்காத்திருந்தேன்,வர்ரேன்னுசொன்ன நீங்க வர்ற வழியக்காணோம், வேற வழியில்ல,எனக்குகண்ணுக்குமுன்னாலகீரைக்கட்டும்காத்திருக்குறயேவாரமும் படமா விரிஞ்சி நிக்குது,என்ன செய்வேன் நானு.,கெளம்பீட்டேன், கீரைக் கட்ட தூக்கீட்டு,

“எனக்கு அன்னாட பொழப்புக்கும் சோத்துக்கும் அதுதான வழி, அத அடைச் சிட்டுதிடுதிப்புன்னு வந்து நெலத்த விட்டு வெளியேறுன்னு சொல்லுறீங்களே, எங்க போவேன் நானு,வேறபொழப்பு என்ன தெரியும் எனக்கு, நான் கீரைப் பாத்தி போட்டுருக்குறதால நெலம் வீணாப்போகுதுன்னு நெனைச்சிங்ன்னா, பாத்திபோடுருக்குறயெடத்தமட்டும்விட்டுட்டுமிச்சயெடத்துலநீங்கவிவசாயம் பாருங்க,அத விட்டுட்டு ஏங் பொழப்புல கை வக்கிறீங்களேன் னதும் ”ஏம்மா இன்னும் குத்தகை முடியாம ஓங்கிட்ட நெலம் கேக்குறது தப்புதான். ஏங் நெலத்த விட்டு ஒதுங்கிக்கிற கூடுதலா பணம் வேணுமுன்னா லும் தர்றேன், வெலகிக்க,இப்பிடியே கெடந்தா நெலம் பாலாப்போயிருமோன்னு நினைக்கத் தோனுதுமா அதான் குத்தகை முடியாம கேக்குறேன்,ஆம்பள தொணை இல்லாத வீடுன்னுதான் ஒனக்கு நெலம் குடுத்தேன், இத்தனைக்கும் ஓங்கிட்ட சொல்லித்தான் குடுத்தேன்,குத்தகை இத்தனை வருஷம் ,அதுக்கான பேப்பரு கையெழுத்து பத்திரமெல்லாம் சும்மா ஒரு தோதுக்குத்தான்,நான் எப்ப நெலம் வேணுமுன்னு கேக்குறேனோ அப்ப குடுத்துறனும்ன்னுதான குடுத்தேன்,இப்ப கேட்ட ஒடனே நெலத்தக்குடுக்க சொணக்கம் காட்டுறயேன்னு சொன்னவரு நாளைக்கி காலையில விடியக் கருகல்ல டிராக்டரோட வந்து நிக்கிறேன் நெலத்த உழுகுறதுக்குன்னு சொல்லீட்டு என்னைய அனுப்பீட்டாரு, அவரு சொன்ன சொல்லும் நெலத்த உழுக ட்ராக்டரும்மறுநாள்மட்டுமில்ல இன்னை க்கி வரைக்கும் நெலத்துப் பக்கம் வரவே இல்லை,

“நான் குத்தகைப்பணத்த மட்டும் கரெட்டாதேதி பிசகாம குடுத்துட்டு இருக் கேன் தம்பி, எப்பவாவது கீரைக் கூடையோட பஸ்ஸீ ஏற காத்துக்கிட்டு இருக் கும் போது அந்தப்பக்கமா போற நெலத்துக்காரரு ”என்ன கீரைக்காரம்மா நல்லாயிருக்கையான்னு” கேட்டுட்டுப் போவாரு,

”இப்பிடி விசால மனசு உள்ளவுங்க இருக்குற வரைக்கும் நலத்துக்கென்ன கொறைச்சல்லுன்னு நானும் ஓடிக்கிட்டு இருக்கேன் தம்பி,,,” எனச்சொன்ன கீரைக்காரம்மாவை எறிட்டான் சபாபதி/

கீரை,கீரை,கீரை,கீரை.,கீரை,கீரை,காற்றின்திசைகளெங்கும்கீரைக்காரம்மாவின்  சப்தம்/