சனி, 25 ஏப்ரல், 2020

வெட்ட வெளிப்பொட்டலிலே,,,,

அப்பொழுதுதான் கடையிலிருந்து வெளி வருகிறான்.

பாத்திரக்கடையது, செய்து வைத்த சிற்பமும்,செதுக்கி வைத்த ஓவியமும் ஒன்றாய் கைகோர்த்திருக்கிற வித்தை வெளீப்படும் கடையில்,,,,,/

வெளீயீடுகளும்,உள்ளிருப்புமான வாழ்க்கை பிடித்துப்போகிறதுதான்,

சமயங்களில் சொல்வாள் அவள்.அவளென்றால் இந்த நேரத்தில் வேறு யாராக இருந்து விட முடியும், மனைவி தவிர்த்து,,,,,?

”எட்ட இருந்து பார்த்து பரிமாறிய பார்வையும்,பரிவிசும் காதலர்களுக்கு மட்டுமே கைவரக்கூடியதா,எங்களுக்கு வராதா,,,?”ஏன் மனைவின்னா ஒரு படிக்கும் கீழயா,,,?எட்டி வைக்க வேண்டியவளா,,,? கீழ் படியில உக்காத்தி வைச்சி அதுக்கு மேல வரவிடாத படியா கிங்கரர்கள நிறுத்திவைச்சிகாக்க வேண்டியவளா,,,?நீளமான பல்லும், ஜடாமுடியும் முரட்டுத் தோற்றமுமா காமிச்சி பயமுறுத்தப்படவேண்டியவளா,,,,,?

”இச்சைக்கும்,இன்னதுக்குமாய்மட்டும்பயனாககடமைப்பட்டவளா,,,?கூட்டவும் தெளிக்கவும், கோலமிட்டு போர்த்திக்கிட்டு திரியவும் மட்டும்தானா,பொத்தி வச்ச மனசுக்குள்ள சின்னதாய் சுடர்விடுற விளக்கை கையிலேந்தி நேர் பாதையில நடந்து நேர்பாதையில போயி அதே கோடு தப்பாம வா,தப்புனா கற்பிக்கப்படுற களங்கத்துக்கு ஆளாகிருவ,,,,,,

”பொங்கிப்போட்டது நல்லாருக்கு.பொடவை கட்டுன நறுவிசுல நீ அழகு. உன் னைய மாதிரி நெத்திக்கு இட்டுக்குற இன்னொருத்தி பொறந்துதான் வரணுமா க்கும். நீ நடந்து வர்ற அழகுல இந்த ஊரு கோயில் தேரு தோத்துப் போகும்” ங்குற பேச்செல்லாம் கூட ஒருகட்டுக்குள்ள வைச்சிருக்குற சூட்சுமமில்லாம வேறென்ன,மனசும் மந்திரமும் சொல்லும் செயலும் எழுத்தும் ,பேச்சும் 
வசப்பட்டுத் திக்கிற மாதிரி வீட்டு மனுசாளையும் வசப்படுத்தி  வைச்சிருக்கீ ங்க,  அதுல கட்டுனவன்னா சக்கரைப்பாகு,,,/

இருபது வருஷம் அம்மா அப்பாவோடயும்,சொந்த பந்தத்தோடயும், பள்ளிக் கூட ஸ்நேகித்தோடயும் அக்கம் பக்கத்தோடயுமா வளந்து வேர் ஊனிப்போன பழக்கத்துலஇருந்து புடுங்கிக்கொண்டு வந்து புதுசா ஒண்ணு காமிச்சி இனிம இதுதான் ஓங் சொந்தம்,பந்தம் ,உறவு,,,இங்கதான் இனி நீ காலூனனும், வேர் விடணும்,இலை வச்சி,பூப்பூத்து காய்காய்ச்சி, கிளைபரப்பி அடர்த்து காட்டி விழுது விட்டு குஞ்சு குழுவான்கள தங்க வைச்சி கூடு கட்டிக்காட்டணும், ங்குற பேச்சுக்குப்பின்னாலதான் எங்க அடையாளம் இருத்தி வைக்கப்படுறதா தெரியுது, இதுல ஊனுற நெலத்தையும் மனசுல இருத்திக்க வேண்டியதிருக்கு.

“கேள்வி கேக்கவும் பதில் சொல்லவும் விவாதிக்கவுமா இருக்குற நாக்க நாலா மடிச்சி ரிவிட் அடிக்கணுமுன்னு தோணுதுல்ல.கட்டமைச்சி வைச்சிருக் குற எண்ணங்களை மீறி அது தாண்டி யோசிக்கிற மனசும் மூளையும் இருக்கக்கூடாதுங்குற நெனைப்பு எங்கள பிரேம் அடிச்சி உள்ளுக்குள்ள கட்டி வச்சிருதாம.

”சாப்புட்ட தட்டும்,குடிச்ச டீக்கிளாஸீம் வச்சது வச்ச யெடத்துலயே இருக்க அடுத்த வேளைய பாக்க நகர்ற கெட்டி தட்டுப்போன ஆம்பளத்தனம்.என்ன தான் படிப்பு,எழுத்து,மேடை,பேச்சின்னு,,,,,இருக்குற ஒங்ககிட்ட இருந்தும் படிதாண்ட மாட்டேங்குதுல்ல,,,,,

”கட்டுனவளுக்கு புவும் பொட்டு பொடவையும் மட்டும் குடுத்தா போதுமுங்குற நெனைப்பு மனசு பூராம் கொடி படர்ந்து நிக்கிறப்ப என்னோட உடல் நலன்ல இருந்து மத்தது மத்ததெல்லாம் பேச மறந்துர்றீங்க,

”தலைவலின்னா நெத்திய புடிச்சி விட ,ஒடம்பு சரியில்லைன்னா பக்கத்துல உக்காந்து நாலு பேசி ஆத்திவிட,பீரியட் டயத்துலநாப்கின் வாங்கீட்டு வரன்னு, ஒங்க கிட்ட ஆறுதல் தேடுறது பொய்யாப்போயி ஒங்களோட ஆம்பளைத் தனம் மீசை முறுக்கி நிக்கிதுதானே அது சமயத்துல.

கட்டுனவனே கதின்னு வந்துட்ட நாங்க வேற எங்க போயி என்ன பேசீற, மடக்கி அடிக்கப்படுற பந்து போல சொவத்துகுள்ளயே சுத்திச் சுத்தி வர்ற வாழ்க்கை வழமைதான எங்களது,/

கடையிலிருந்து இறங்கினான்,

வச்சதையும்,வாய்ச்சதையும் வச்சி சமாளிச்சி குடும்பம் நடத்த கத்துக்க என்கிறபரிந்துரை,,,,இல்லாதும் அல்லாதுமாய் அற்ற தினமொன்றின் நகர்வில் பொய்த்துப்போகிறது.

குக்கரும் மிக்ஸியும் மட்டுமில்லை சமையலறை,அதோட இணைஞ்சி ஒடுற நானும்தான்,வறுக்குறது,பொறிக்கிறது,தாளிக்கிறதுலஎன்னோடமனசும்கலந்து ருக்குதான,

அந்த கலத்தலுக்கு ருசி கூட்டணுமுன்னா சமையலுக்கான சாதனங்களும் கொஞ்சம் நல்லா இருக்கணும் என எழுந்த பேச்சின் கீழ் படர்ந்த மென் உணர் வாய் கிரைண்டர் எடுக்க வந்திருந்தார்கள்,

டேபிள் டாப் கிரண்டர்,ஆறாயிரத்து ஐநூறு விலை, பழையதை போட்டது போக நான்காயிரத்து ஐநூறு ரூபாய் என்றார்கள்,

கிரண்டைரை எடுத்துக்காட்டிய கடை வேலையாளுக்கு வலது கை கொஞ்சம் திருகியிருந்தது,

“அம்மா சொல்வா அடிக்கடி, ஜாக்ரதடா அடி,கிடி பட்டுறாம வெளையாடு” என/

”அம்மா சொன்னப்ப எனக்கு பதினைஞ்சி வயசு,ஒன்பதாவது படிக்கிறேன், வீட்லயிருந்து ரெண்டு கிலோ மீட்டர் தூரம் இருக்குற பள்ளிக்கூடத்துக்கு நடந்துதான் போவேன். பள்ளி வாசல் தெருவழியாத்தான் போவேன், அந்தத் தெருவில இருக்குற கூடப் படிக்கிற பசங்க எனக்கு நல்லா ஸ்நேகிதகாரங் களாயிட்டாங்க,

”அதுலஇப்ப தேர் முட்டிக்கிட்ட புரோட்டாக்கடை வச்சிருக்கானே,சலீமு அவன் தான் ஏங்கூட அடிக்கடி நொரண்டு இழுப்பான்,

எவ்வளவுக்கெவ்வளவு நொரண்டுக்குச் சொந்தக்காரனோ அவ்வளவுக்கவளவு உசிரா இருப்பான் ஏங் மேல/எனக்கு ஒன்னுன்னா அவனுக்கு அடிச்சிக்கிரும் மனசு.

”ஏண்டா நீயி மட்டும் பி,டி பீரியடுல நல்ல வெளையாடி நல்ல பேரு எடுத்துருவ வாத்தியாருகிட்ட,நாங்க மட்டும் என்ன அவத்தப்பையலுகளா, ஆளாளுக்கு ரெண்டு மூணுன்னு மட்டும் புல்லப்ஸ் எடுத்துட்டு முடியாம யெறங்கீட்டப்ப நீ மட்டும் மயிறு பத்துவரைக்கும் எடுத்தா எப்பிடி,,,?

அப்ப ஒனக்கும் நாங்க மட்டம்தான காட்டீட்ட,வாடா இப்ப தைரியமிருந்த ஒத்தைக்கு ஒத்தை நின்னு பாப்போம் வாடா என அவன் விடாமல் பேசிய சொல்லின் சூடு எட்டிப்பட்டுவிட சட்டென பாய்ந்து அவனை தரையில் வீழ்த்து கிறான்,

வெட்டுக்கால் கொடுத்து விட்டான்,அவன் கற்றுக்கொடுத்த டெக்னிக்தான், இவனது வகுப்பில் முன் டெஸ்க் மகேஷை கேலி பண்ணிய அடுத்த கிளாஸ்க்காரனை இண்டர்வெல் பீரியடில் அடிக்கப்போகும் போது சலீம்தான் வந்து அருகில் வந்து சொன்னான்,”டேய் வெட்டுக்கால் குடுத்து மடக்கிப்போடு” என,,,/

இவனுக்கு ஒன்ரென்றால் விட மாட்டான் அவன்,பள்ளிக்கூடத்தில் மட்டுமி ல்லை,அவன் தெருவை கடக்கிறது வரை அவன்தான் இவனுக்கு பாதுகாப்பு,

உடல் காத்து உயிர்வரை ஊடுருவுவான்.அவனின் மனது இவனிடமும் இவனின் மனது அவனிடமும் கட்டுகொண்டிருந்த ரம்மியப்பொழுதுகள்,அது கல்கோணா வாங்கினாலும்,சேமியா ஐஸ் வாங்கினாலும் பாதிகடித்து பகிர்ந்து கொள்கிற மனம் இருவரிலுமாய் உரை கொண்டிருந்த நேரம்.

எந்த அளவிற்கு உறை கொண்டிருந்தார்களோ அந்த அளவிற்கு நொரண்டும் இழுப்பான் சலீம் இவனிடம்,

சமயங்களில் சலித்துக்கொள்கிற அளவிற்காய் ஊடாடி விடுகிற நொரண்டில் இன்று கொஞ்சம் விரிசல் விட்டுப்போனதாய்,புல்லப்ஸ் அதற்கு காரணியாய்/

இரண்டுபேரும் கிரவுண்ட் முழுவதுமாய் அரை வட்டம் காட்டி உருண்டு வந்த போது இருவரிலுமாய் எறிப்போன மூர்க்கத்திற்கு முற்றுப்புள்ளி வைப்பது போல் அப்பொழுதுதான் இவர்கள் முன் வந்து நின்றார் பி.டி வாத்தியார்/

”டேய் எந்திருங்கடா ரெண்டு பையலுகளும் என இரண்டு பேரின் தலை முடியை பிடித்துத் தூக்கியவர்,,,”என்னடா நெனைச்சிக்கிட்டு இருக்கீங்க ரெண்டு பேரும் என்றவராய் இருவரையும் பி.டி ரூமுக்குள் செல்கிறார்,

ஏண்டா என்னடா ஆச்சி ஒங்களுக்கு,,,,,?என்றவர் எப்பயும் ஒட்டிக்கிட்டும் ஒரசிக்கிட்டும் திரியிரவுங்கதான நீங்க,,,?

”டேய் இவனே இங்க பாரு இவனை அருகில் அழைத்து சலீம் இருக்கானே நீயி பத்து புல்லப்ஸ் எடுக்க னுங்குறதுக்காக அவன் நாலோட யெறங்கீருவான், அவன் ஒரே நேரத்துல நிக்காம இருபது புல்லப்ஸ் வரைக்கும் எடுக்கக் கூடிய வன்னு எனக்குத்தான் தெரியும்.என்றவர் நீ கெட்டிக்காரன்னு காமிக்க அவன தன் நிலையிலயிருந்து தாழ்த்திக்கிட்டவண்டா, அவனோடப்போயி கிறுக்கா,, போடா இனிம இது போல அடிச்சிக்கிறாதீங்கடா,,,

”என்ன சலீமு அவனோட உசுரு அரணா இருக்குற நீ கூட இப்பிடியா பண்ணு வ,,,?  என்றவர் பிளாஸ்கிலிருந்து டீ ஊற்றி கொடுத்தார் இருவருக்கும்,

”இன்னைக்கி சாய்ங்காலம் ஸ்கூல்விட்டுப்போகும் போது ரெண்டு பேரும் ஒண்ணா போகணும்,போங்கடா,,,,,,”என அன்று அவர் அனுப்பிய நாளில் இறை வன் ஆசீர்வாதத்தோட நல்லாயிருக்கணும் என்றார்,

சலீமை பார்க்கிற நாட்களில் அதே பதினைந்தின் பகிர்வு,

பையன்களுடன் கபடி விளையாடுகையில் கீழே விழுந்து கை ஒடிந்து வந்த நாளில் அம்மாவின் பேச்சை உதாசீனப்படுத்தி விட்டோமா எனத் தோனியது,

கையை சரியாகக்கட்டவில்லை நாட்டுவைத்தியத்தில்.எலும்பு முறிவிற்காய் எடுத்த வைத்தியம் சரியாகிப்போன பின் கை அப்படியே நின்று விட்டது, திருகிக்கொண்டு,

”அன்னைக்கி தட்டி விட்ட அம்மா சொல்லு இப்ப வெனையா வந்து நிக்குது என்றார்.இனிம ஒண்ணும் செய்யிறதுக்கு இல்ல,இத்தனை வயசுக்கு மேல போயி,,,அப்பிடியேவிட்டுட்டேன்,இருக்கட்டுமுன்னு,,,,பழகிப்போச்சி,ஒங்களப் போலஉள்ளவுங்க பேசும் போதுதான்ஞாபகத்துக்கு வருது,எனக்குகை ஒடிஞ்சி  போனது,

வாங்கிய கிரண்டரை அட்டைப்பெட்டிக்குள்ளாய் வைத்து பார்சல் பண்ணும் போது கூட நின்றான்.

ஊனம் என்கிற சொல் உருப்பட்டுத்தெரிவது உங்களைப் போன்றவர்களின் செய்கையால்தான்,மற்றபடி எங்களுக்கு பெரிதாக உறுத்துவதில்லை.

பெட்டியைக்கொண்டு வந்து இருசக்கர வாகனத்தின் கடையின் வாசலில் வைத்து விட்டு வண்டியை எடுத்துட்டு வாங்க,நான் வச்சி கயிறு கட்டி விடுறேன் எனச்சொன்னவரை கை அமர்த்தி விட்டு இல்லை பார்த்துக்கொள் கிறேன் நான் என்றவனாய் எடுத்து கொண்டு வந்தான் பணம் கட்டி விட்டு.

சித்திரையின் உக்கிரம் வெயிலாய் போர்த்தியிருந்தது சாலையை/

வெயில் பிடித்துப்போகிறதுதான் சமயங்களில்/
அத்துவான வெளியில் சோவென அடித்துப்பெய்கிற வெயில் உடல் முழுவ தையும் சடுதியில் நனைத்துச் சென்று விடுகிற முரட்டு உக்கிரம் பிடித்துப் போகிறதுதான் மனதிற்கு/

வெப்பப்பிரதேச மனிதர்களிடம் வேறைதை எதிர்பார்க்க,,,,,

பார்த்துப்பார்த்து பண்ணிப்பண்ணி வளர்த்த உடம்பு,இன்ன நாளில் சைவம் ,இன்ன நாளில் அசைவம்,இன்ன நாளில் சேர்க்கை இன்ன நாளில் விலக்கம் என்கிற கட்டுடலில் இருந்தவர், நீங்க யோகாவெல்லாம் பண்ணுவீங்களா மே,,,,? அப்ப பஸ்கி தண்டாலெல்லாம் எடுப்பீங்களா,,,,?மனைவி கேட்ட போது எல்லாந்தான் செஞ்சேன்,அப்ப பிராயம் அது,அதுக்காக மெனக்கெட்ட மனசு, அதுக்காக மெனக்கெட்ட ஒடம்பு,அதுக்காக இருந்த பிடிவாதம்,,எல்லாம் வாய்ச்சிச்சி, கூடவே கட்டி வைச்சிருந்த கட்டுப்பாடு கொஞ்சம்,தண்ணி வெந்நி, பீடி சிகரெட்,எல்லாம் தள்ளியே,,,,,,டீகூட அளவோடுதான்,

இப்ப அதெல்லாம் இல்லைன்னு ஆகிப்போச்சி.தூக்கம் முழிக்கிற மறு நாள் யோகாவுக்கு பகைன்றாங்க.என்னைக்கி கல்யாணம் கட்டுனேனோ ,அன்னை க்கே தூக்கத்த கட்டி எட்ட வைச்சாச்சி.காதோரமா முடிய தொங்க விட்டுட்டு அதத் தளையத்தளைய சுழிகொண்டு ஓட விட்டா மனசு திக்கிப் போகுதுதா னே,,,?

”திக்குற மனசுக்கு திக்கேது ,திசையேது,வரப்பேது வாய்க்கா ஏது,திக்கட்டும், திக்கெட்டுமாய்,,,,” என அடைவு கொண்டு ஓடிவந்தான்,

அதுவும் கட்டுனவனுக்கு கூடுதலா கொஞ்சம் திக்கும்தானே,,,?என்றவனின் காதருகில் சென்ற பொழுது”ம் சும்மாயிருங்க,தலைக்கு மேல வளந்த புள்ளை ங்க வீட்டுக்குள்ள நிக்கிது. என்றவளை ஏறிட்டவன்……எத்தனை வீடுகள்ல ”தலைக்கு மேல”தடுத்து நிக்குதுன்னு தெரியலையே,,,,,,/

கண்ணைஎரித்தது வெயில்/ வைத்த கண்வாங்காமல் பார்த்துத் திரிய சாலை யோர காட்சிகளும் நிறைந்து தெரிகிற பிம்பங்களும் கொண்ட நகர்வின் அடர் த்தி நன்றாகவே/

தோத்துப்போற மனசு என்னது,ஜெயிச்சி நிக்கிற மனசு உங்களது,ஒட்டி ஒப்பிவிச்சி உறவாடி சிலாகிக்கிற சமயங்கள்ல தோத்துப்போயி நிக்கிறது நீங்களாவும் தெரியிறீங்கதானே,,,?

இரு சக்கரவாகனம் கடை நடையிலிருந்து வெகுதூரம் விலகி நின்றது,

விலகி நிற்பதும் அருகாமையாய் அணைப்பதும் சமயம் பொறுத்துத்தானா,,,,,? எட்ட நிறுத்தி,தள்ளி வைத்து, புண்படுத்தி புறக்கணித்து,,,,,எல்லாமையும் சேர் த்துக் கூட்டி என்னில் ஏற்றி வைக்கிற சூட்சுமம் உங்களிலும் சேர்ந்திருக்கிறது தானே,,,?

நேர்எதிர் வரிசையில் இரு சக்கர வாகனம் நின்றது. ஒரு பிரிண்ட்டிங் பிரஸ் முன்னால், அந்த வரிசைக்கடைகளின் முன் எல்லாவற்றிலும் ”வாகனங்களை நிறுத்தாதீர்கள்” என எழுதிய தொங்கிய அட்டை அந்த பிரஸ் முன் மட்டும் இல்லை.

வண்டியை எடுக்கும் போது பிரஸ் முதலாளியிட கேட்கிறான்.

“சார் உதவி செய்யிறவன் உபகாரியும் இல்ல,செய்யாதவன் கஞ்சப்பிசுனா ரியும் இல்லை, என்னைய உதவி செய்யிறவனா வச்சிருக்குற சமூகம் அவன செய்யாதன்னு சொல்லுது,அவ்வளவுதான் என்றவரை வியந்து நோக்கியவன் வண்டியின் இருக்கை மீது கொஞ்சம் தண்ணீரை ஊற்றி துடைத்து விட்டு நகர்கிற விநாடியில் எதிரே திருநங்கைகள் சிலர் பாட்டுப்பாடி கடையாய் காசு வாங்கிக்கொண்டு வந்து கொண்டிருந்தார்கள்,

3 கருத்துகள்:

  1. விலகி நிற்பதும் அருகாமையாய் அணைப்பதும் சமயம் பொறுத்துத்தானா,,,,,? எட்ட நிறுத்தி,தள்ளி வைத்து, புண்படுத்தி புறக்கணித்து,,,,,எல்லாமையும் சேர் த்துக் கூட்டி என்னில் ஏற்றி வைக்கிற சூட்சுமம் உங்களிலும் சேர்ந்திருக்கிறது தானே,,,?

    அருமை

    பதிலளிநீக்கு
  2. வழக்கம் போல ஒரு நினைவோடை
    அருமை

    பதிலளிநீக்கு