புதன், 15 ஜனவரி, 2020

எறும்பூர,,,,,



எறும்பு ஒன்று ஊர்ந்து சென்று கொண்டிருக்கிறது தனிமைகாட்டியும் அப்பாவி -யாகவும்,,,/ 

எங்கு செல்கிறது அது,?எங்கிருந்து அதன் வருகை,?அதற்கிட்ட பணிகள் என்ன எதுவுமறிந்திருக்கவில்லைஅவன்,வாசல்விட்டுஇறங்கியவன் அப்பாவியுடன் அப்பாவியாய்எறும்பிடம்நலம்விசாரித்துவிட்டு,,,,என்னஅவலம்இது,,?தனியாகவும் கவலை சுமந்தும் செல்கிறாயே என்கிறான்,

தனியாகச் செல்கிறேன் என்பது வாஸ்தவம்தான் ,ஆனால் கவலை சுமந்தெல் லாம்செல்லவில்லை,தனியாகச்செல்கிறேன்,வெயில்வேளை,வயதாகிப்போன உடல்,இரைதேடிச்செல்கிறபதட்டம்,இரை கிடைக்குமோ கிடைக்காதோ என மனம் சுமந்த எண்ணமெல்லாம் ஒரு சேரவும் எனது குழுவில் வந்து விடுகிற அவ்வப்பொழுதான மனப்பிணக்கின் காரணமாகவும் தனித்துச்சென்று கொண் -டிருக்கிற என் குறுக்கே வந்து மூடப்பட்ட ரயில்வே கேட்டாய் கேள்வி யை இடைநிறுத்தினால் எப்படி,,,,,,?எனச் சொன்ன எறும்பு மேற்க் கூறிய இத்தனை யையும் மனமும் உடலும்தாங்கி சென்று கொண்டிருக்கிற நான் கொஞ்சம் சோர்வுற்றும் தளர்ந்துமாய் போவதில் ஆச்சரியமென்ன இருந்து விடமுடியும் சொல்லுங்கள்,போக உங்களுக்கென ஊராட்சிகளிலிருந்து நகராட்சிகள், மாநகராட்சிகள் அமைத்து தருகிற ஒற்றைச்சாலையிலிருந்து நாற்கரச்சாலை வரை வசதி இருக்கிறது, அதற்கென பாதுகாப்பு வசதியும் போக்குவரத்து சிக்னலும் அமைத்துக்கொடுக்கப்பட்டிருக்கிறது, மீறி நடக்கிற விபத்துக்கள் விதிவசத்துக்குள்ளும் கவனக் குறைபாடுக்குள்ளுமாய்/

எங்களுக்குஅப்படி என்ன இருக்கிறது சொல்லுங்கள், நீங்கள் நடந்து செல்கிற சாலையில்தான் நாங்களும் நடந்து செல்லவேண்டும்,அதுவும் உங்களிடமி ருந்து தப்பியும் பாதுகாப்பாகவுமாய்,கரணம் தப்பினால்மரணம் என்பது தானே எங்களது வாழ்க்கைக்கு விதிக்கபட்டிருக்கிற சாபமாயும் மெய்ப் பிக்கப்படாத வாக்காயும் ஆகித்தெரிகிறது இல்லையா,,,,?

இதோஇன்றுகாலைஎங்களது கூட்டிலிருந்து வெளியேறியஅத்தனை பேரில் எத்தனை பேர் திரும்பி உயிருடன் போய் சேருவோம் என்பது உறுதியில்லை _தானே,நீங்கள் நடக்கிற இடம், நீங்கள்புழகுங்குகிறவெளி,நீங்கள் உறை கொள்கிற வீடு இன்னும் இன்னுமாய் நீங்கள் குடிகொண்டிருக்கிற இடங்களி லும்அதற்கு இடையிலும் தானே எங்களது இருப்பும்,பயணமும் இல்லையா,,,?

“அப்படிருக்கிற போது எப்படி தப்பி உறை கொள்வது நாங்கள் ,நீங்கள் எடுத்து வைக்கிற காலடி ஒவ்வொன்றுக்கும்,நீங்கள் காறி உமிழ்கிற எச்சில்த் துளிகளு க்கும் தப்பித்,தப்பி தற்காத்து,தற்காத்து,,,,,,எங்கே நீங்கள் எடுத்து வைக்கிற ஒவ்வொருஎட்டுக்குள்ளும்மிதிபட்டுமரித்துப்போய்விடுவோமோ,அல்லதுநீங்கள் காறி உமிழும் எச்சிலில் நாங்கள் காணாமல் போய் விடுவோமோ என்கிற பயத்துடன் ஜாக்கிரதையுடனுமாய் பயணித்தும் வாழ்க்கையை கொண்டு சென்றுமாய் இருக்கிறோம்,

“இதில் நாளெல்லாம் உணவு தேடி அலைய விதிக்கப்பட்டிருக்கிற வாழ்க் கை வேறு,பயிர்கள் விளைந்த நிலமெ ல்லாம் இப்பொழுது கட்டாந் தரைகளாயும் கட்டங்களாயும் ஆகிப்போன பிறகு எங்களுக்கென உணவு தரவும் தேடி உறை கொள்ளவும் இடமில்லாமால் போனது,

“தன் மார்மீது விளைந்தவைகளை ஒரு தாயின் உயர் வாஞ்சையுடன் எங்க ளுக்குத்தந்துமகிழ்ந்தவிளைச்சல்கொண்டநிலங்கள்காணாமலும் களவாடப் பட்டுமாய் ஆகிப்போன பின்னாய்பஞ்சடைந்த கண்களுடனும் பசித்து ஒட்டிய வயிறுகளுடனுமாய் பரந்து விரிந்த நிலத்தின் வெளியெங்கும் ஊர்ந்து திரிந்து அலுத்துக்களைத்துஉணவெனஏதோதேடிக்கொண்டுவருகிறோம்,

நாங்கள் பரவாயில்லை, நிலங்களில் இல்லா விட்டால் கூட உங்களைப் போல் வீட்டுக்கார்கள் கழுவி ஊற்றுகிறவற்றிலிருந்து என்களுக்குத் தேவை யானதைஎடுத்துக்கொள்கிறோம்,

ஆனால்விளைச்சலற்ற வெற்று நிலங்களின் மேல் பறந்து திரிந்து தின்ன ஏதும் கிடைக்காமல் ஒட்டிய வயிறும் பஞ்சடைந்த கண்களுமாய் ஊருக்குள் பறந்து திரிந்து கரண்ட் கம்ப வயர்கள் மீதும், வீடுகளின் மொட்டைமாடி மீதுமாய் பறந்து திரிகிற அவலத்தை எந்த வரையறைக்குள்ளாய் அடைத்து விட முடியும் சொல்லுங்கள்.,,,,,?

ஒரு காலத்தில் இதோ நீங்களும் நானுமாய் நின்று பேசிக்கொண்டிருக்கி றோமே அந்த நிலம் நிறை கொண்ட விளைச்சல்க்காடாய் இருந்துக்கக் கூடும், அதிலிருந்து எங்களது மூதாதயர்களும் இதர பறவை இனங்களும் வயிறாறிக் கொண்டிருந்தன,

இப்பொழுது அவைகளை பறித்து தூர எறிந்து விட்டு அதை காணாமல் போய் விட்டுச்செய்துவிட்ட பின் நாங்கள் இப்படித்தான் உணவு தேடி பயணம் மேற் கொள்ள வேண்டியிருக்கிறது சோர்ந்து போன உடலுடனும் மனதுடனுமாய்/

“மனதும் உடலும் சோர்ந்து போனால் வாழ்க்கையே அஸ்தமித்துப்போய் விட்டது என அர்த்தமா என்ன,,,?ஏதோ கொஞ்சம் சோர்ந்து போனோம் அவ்வளவுதானே தவிர்த்து வேறொன்றுமில்லை என அறுதியிட்டுச்சொல்லிக் கொள்கிறேன்”எனச் சொன்ன எறும்பை ஏறிட்டவன் வாஸ்தவம்தான் மறுப் பதற்கில்லை. ஆனால் நீங்கள் இரை தேடச்செல்வதும்,இரைகளை கைக் கொண்டு எடுத்துச் செல்வதும் அதை சேமிப்பதும் நீங்கள் குழுவாய் ஒன்றி ணைந்தும் தோளோடு தோள் நின்றுமாய் செய்கிற வேலையாயிற்றே,பின் ஏன் விடுத்துதனியாகபோய்க்கொண்டிருக்கிறாய்,,,?எனக்கேட்டவனிடம்சுரத்தற்றுச் சொல்லிச் செல்கிறது எறும்பு,

“வேறொன்றுமில்லை,பெரிதாய்,வேகம் கொண்ட நாட்களின் நகர்வின் ஊடாய் என்னைப் பார்ப்பதையும் என்னிடம் பேசுவதையும் எனக்கு தூது அனுப்புவ -தையும் மறந்து போகிறாள் எனது அருமைக் காதலி,

நேற்றைக்கு முன் தினம்தான் பத்து பக்கத்துக்குக்குறையாமல் உயிரை உருக்கி கடிதம் ஒன்றை எழுதி அனுப்பினேன் அவளுக்கு,சென்ற வேகத் தில் கடிதத்தை கொண்டு சென்றவன் திரும்பக்கொண்டு வந்து விட்டான், ஏன் எனக்கேட்டபோது,,”அவளுக்கு தாங்கள் கடிதம் கொடுத்து விடுவது விடுத்து நேரில் வந்து பேசினால் நன்றாக இருக்கும் என்கிறாள்,ஆகவே நீங்கள் போய் நேரடியாகபேசுங்கள்”, என்கிறான் அவன்,

நான் நேரில் போய் பேசச்சென்றால் அதை நடக்க விடாமல் செய்வதற்காய் அங்கே கால் கடுக்கக் காத்திருக்கிற கூட்டம் தனியாய் தவமிருக்கிறது, அவர்களை தாண்டிப் போய் ஒன்றும் செய்து விட முடியவில்லை, சரி நடப்பது நடக்கட்டும் என அவளிடம் கொஞ்சம் கவனமாயிருக்கச் சொல்லி விட்டும், நமது காதலுக்கு தடைச்சுவாராய் எழும்பி நிற்பவர்கள் யாரும் நாளை நம்மை சேர்த்து வைக்கப்போவதில்லை கவனம் கொள் என எச்சரிக்கை செய்து விட்டுமாய் வந்தேன்,

அவளென்றால் எனக்கு உயிர், அவளென்றால் எனது உடலின் சரி பாதி, அவளென்றால் நான்,நானென்றால் அவள்.அது தவிர்த்து அவள் மீது எனக்கு ”சாலப்பிரேமம்”.

இது தெரியாமல் எப்பொழுதும் எங்கும் இயங்குற வில்லன்கூட்டம் போல அங்கும்இயங்கியவர்கள் குயுக்தியுடனும்,குறுக்குப் புத்தியடனுமாய் எங்களை பிரிக்க முனைகிறார்கள்,

நானும் சொல்லிப் பார்த்து விட்டேன் ,கெஞ்சிப்பார்த்து விட்டேன்,காலில் விழாக்குறையாய் முறையிட்டும் பார்த்துவிட்டேன்.

நான் முறையிடும் போது மட்டும் அவர்களது காது கேளாக்காதுகளாகிப் போகிறது, அல்லது காதுகளை கழட்டி வேறெங்காவது வைத்து விட்டு பூட்டி சாவியை தொலைத்தும் விடுகிறார்கள்.காதுகளை வைத்த இடத்தையும் சாவிகளை தொலைத்த திசையையும் கேட்டால் மறந்து போனது என மரத்துப்போய் சொல்கிறார்கள்,

எங்களுக்குள் பல்வேறு வகைகள் உண்டே தவிர இனங்களோ ,இனக் குழுக்க ளோ கிடையாது,எங்களுக்குள் வேறுபாடென்ற ஒன்று முளைத்ததில்லை, எட்டுக் கூடப்பார்த்ததில்லை இதுநாள் வரை,

உங்களைப் போல பாகுபாடு பர்ப்பது,இருப்பவன் இல்லாதவன் என்கிற தார தரமெல்லாம் இருந்ததில்லை எங்களுள்/பின் எப்படி வந்தது இந்தப் பிளவு,,,,? என்றெண்ணிய போது துப்பாய் வந்தது ஒரு செய்தி.

துப்பு சொல்வதற்கும் பற்றவைப்பதற்கும் ஆட்களா குறை இவ்வுலகில்/ உங்களில் அப்படியெல்லாம் நடக்கும் சரி,அது சர்வ சாதாரணம்,ஆனால் எங்களில் இப்படி ஒரு விஷவித்து எங்களுடனே இருந்து வாழ்ந்து உண்டு உறங்கி திரிந்து கொண்டிருந்திருந்திருக்கிறது,

உழைப்பின் முக்கியத்துவத்தில்,தேடலின் தெரிவில் அதை மறந்தோம். மறந்தால்தான்என்ன இப்பொழுது குறைந்து போனது.மறப்பது ஒரு பெரும் குற்றமா, அல்லது குறையா,,?இல்லையே எங்களுள் இருக்கும் மற்ற குணங் களைப் போல மறப்பதும் ஒன்றுதான்,அதற்காகப்போய் இல்லாத ஒன்றை இருந்ததாய் சித்தரித்தது எப்படி சரியாகும்,,,?

அவளை சரியான நேரத்தில் சரியாகக் கண்டு கொண்டு கூட்டத் தலைவனி டத்தில் கொண்டு போய் நிறுத்திய போது கூட்டத்தின் தலைவன் சொன்னது தான் மிகவும் ஆச்சரியமாய் இருந்தது அந்த நேரத்தில்,,,/

அவள் இவ்வாறு செய்யக்காரணம் அவள் உன்னை காதலிக்கிறாளாம்,நீ எங்கே அவள் பக்கம் சாய்ந்து விடுவாயோ என்றெண்ணியும்,அவளிடமிருந்து உன்னைப்பிரித்துதன்வயப்படுத்திக்கொள்ளவும்உன்னைப்பற்றியாய் உனது காதலி அறிவதை தடுத்திருக்கிறாள், நீயும் உனது காதலியுமாய் சந்திப்பதை எந்த வகையிலாவது தடுத்திருக்கிறாள்.உன் மீது அவள் கொண்ட ஆவல் உனது காதலியின் மீதும்,உனது காதலின் மீதுமாய் அவளை பொறாமை கொள்ளச்செய்திருக்கிறது சத்தியமாக, அதனால்தான் அப்படிச்செய்தேன் என மானசீகமாகவும் வெளிப் படையாகவும் ஒத்துக்கொண்டாள்.

பின்என்ன செய்யசொல்,எந்த இ.பி.கோ வில் அவளுக்கு தண்டனை வழங்கச் சொல்,நாங்கள் எல்லோரும் கூடி ஒன்று செய்கிறோம்,அது தலைவனான என்னால் மட்டும் தனித்துச்செய்யக்கூடிய காரியமில்லை,எல்லோரும் கை யும் மனதும் கலந்து கொடுத்தீர்களானால் நான் அறிவிக்கிறேன், உனக்கும் உனது காதலிக்கும் திருமணம் நடக்கும் உறுதியாக,அதை நமது குழு ஒரு சேர இங்கேயே நடத்தி வைக்கும்.என்ன அதற்கு சிறிது காலம் ஆகும் ,அது வரை நீ கொஞ்சம் பொறுமை காக்க வேண்டும்.நம்பிக்கையுடன் இருக்க வேண்டும், கடுகளவு பொறுமையும் ,மலையளவு நம்பிக்கையும் உன்னை உயர்த்தி கண்டிப்பாக வாழ்கையில் ஒன்று சேர வைக்கும்,எனதலைவன் அறிவித்த போது என்னுடனிருந்து எனக்கு துரோகம் இழைத்தவன் ஒப்புக் கொண்டாள்,

என்னதான் உடனிருந்த போதும் கூட்டத்தில் ஒருவளாய் நடமாடித் திரிந்த போதும் கூட அவள் என்னை விரோதியாகவே நினைத்தாள், விரோ தியாகவே பாவித்தாள்,என்னதான் அவள் என்மீது தூசனை அள்ளி வீசிய போதும் கூட எனது நட்பு வட்டம் என்னை சரியாகவே புரிந்து கொண்டது,

புரிதலின் வரைபடத்தை எடுத்துக்கொண்டு ஓடோடிப் போய் எனது காதலி -யிடம் போட்டுக்காட்ட நட்பு வட்டம் நெருங்கிய கணம் அவள் எனது காதலியிடம் என்னைப்பற்றியாய் வாரி வீசியிருந்த விஷ விதைகள் கொஞ்சமாய் அரும்பு காட்ட ஆரம்பித்திருந்ததாய்,,/

அரும்பிய விதைகள் வேறெதையும் விட வேகம் கொண்டு முளைக்கிற தாய்,,/

உண்மையை விடபொய்க்கு அதிகம் வலுதானே,,,? ஆழ ஊன்றப்பட்ட பொய் திரும்பத் திருப்ப பதியனிடப்படுகிற போது எனது காதலியும்தான் என்ன செய்வாள் பாவம்,,,? நம்பி விட்டாள்,நம்பி விட்டவள் என் மீது கோபமும் கொண்டு விட்டாள்.

இனி நீயின்றி நானுண்டு,ஆனால் நானின்றி நீயிருப்பாயோ என்னவோ,அது உனது சாமர்த்தியம் என முன்னறிவித்து விட்டாள்.எனக்கு துரோகித்தவளை முன் வைத்தே,,/

பொய்மைக்கு எவ்வளவு சக்தியிருக்கிறது என அன்றைக்குத்தான் புரிந்து கொண்டேன்.

ஆழகாலுன்றிய பொய்மையின் விதைகள் வீரியம் கொண்டு வேறெதையும் விட பன்மடங்கு வேகம் காட்டி வளர்ந்து புதர்க் காடாய் மண்டி கீறிச்செல்ல வழியில்லாமலுமாய் செய்து விடுகிறது.

இது தெரியாத எனது காதலி ஊரெல்லாம் புலம்பிக்கொண்டும் உன்மத்தம் கொண்டும் அலைகிறாள்,அவள் எந்த அளவிற்கு என் மீது பிரியம் வைத்தி ருந்தால் இந்தளவிற்கு புலம்பியிருப்பாள்,,,?என என்னை எண்ண வைத்த அன்று வேண்டாம் இது ஆகாது,வேண்டாம் இது அடுக்காது,நம்மின் நேசம் நம்மை பிரிவு கொள்வதற்கா நம்மை அறிமுகம் செய்து வைத்தது,,,,? வேண்டாம் அன்பே வந்து விடு என் திசைக்கு ,அம்புக்குறியிட்டு விடு என் பாதைக்கு,,,நீ காலால் சொல்வதை நான் தலையால் ஏற்கிறேன்,என எத்தனை சொன்ன போதும் ஏற்காத அவள் அங்கு அப்படியே,நான் இங்கு இப்படியே எனச்சொன்ன எறும்பை ஏறிட்டவன் அதுசொன்ன சுயபச்சாதாப வார்த்தைக ளை தாங்காதவனாய் எறும்பை உள்ளைங்கையில் அள்ளி ஊற விட்டுக் கொண்டு அதன் காதலியிடம் கொண்டு போய் சேர்க்கிறான் ,

ஜீ பூம்பா வித்தை ஏதும் செய்யாமல்/

ஞாயிறு, 12 ஜனவரி, 2020

நீர் நாத்து,,,,,

கிளம்பும் போது காலை மணி பதினொன்று இருக்கலாம்.

பதினொன்று,,,என்பதுபத்துக்குப்பின்னால் வருவதுதானே என நீங்கள் கேட்பது புரிகிறதுதான்,

முன்னதில் வேர் விட்டு பின்னதில் படர்வு கொண்டு இலக்கை எட்டிப் பிடித்த தாய் காட்சி கொள்கிறது பதினொன்று,,,,,/

யாருடைய அனுமதியும் இல்லாமல் யாரையும் எட்டித்தொட்டுக்கேட்கா மல், யாருடைய முன்னிசைவும்இல்லாமல் தானாய் ஆகித்தெரிகிற பதினொன்று க்கு யாரின் முன் மொழிவும் தேவையாய் இருந்திருக்கவில்லைதான்இது நாள் வரை யிலுமாய்,/

”ரொம்ப எளிதான விஷயம்,என்ன கயிறு போட்டா ஏறி வரப்போற, பண்ணி ரெண்டு அடி தொங்குற கயித்துல பத்தடி ஏறுனதுக்கு அப்புறமா கொஞ்சம் களைப்பாறிக்கிட்டு பதினோறாவது அடி ஏறி வரணுங்குற கட்டாயம் ஏதும் இல்லாம நீ வாட்டுக்கு கடகடன்னு வந்துர வேண்டியது தான,,,, எனச்சொல்லி மௌனிக்கப்போகிறநேரமாய்சத்தமில்லாமல்பதினொன்றைகாட்டிவிடுகிறதுதான் மணிக்கூடு,

மண் கீறி துளிர்த்த தளிர் கிளை வைத்து நெடித்து வளர்ந்து நிலைகொள்கிற போது பூத்து வளர்கிற பூக்கள் ஒவ்வொரு இதழாய்அடுக்கிச்சேர்ப்பது போல ஒன்றிலிருந்து மெல்ல மெல்ல மேலேறி வந்து ஒன்றொன்றாய் கூட்டி வருகிற மணித் துளிகள் இப்படி பதினொன்றில் கால் பதித்து நிற்கிறது,

”கைவீசம்மாகைவீசு,கடைக்குப்போகலாம் கை வீசுமிட்டாய் வாங்கலாம் கை வீசு மெதுவாய்தின்னலாம்கைவீசு,,”என பாடல் இழையசிவாஜிகணேசன் நடித்த ”பாசமலர்” திரைபடத்தை நேற்று இரவு பார்த்த போது கண்களும் மன மும் நிறைந்து போனதுதான்/

ஆகா என்ன ஒரு நடிப்பு ,என்ன ஒரு நடிப்பு என திரும்பத்திரும்பவுமாய் வாயாரவும் மனதாரவும் பாரட்டிக்கொண்டே இருக்கத்தோணுகிறதுதான்.

அங்கமெல்லாம் நடிப்பை வைத்துத்தைத்துக் கொண்ட ஓரு மனிதரின் படத்தை எத்தனை தடவை பார்த்தாலும் தகும்.

இரண்டுநேரத்திற்கும்குறையாமல்ஓடுகின்றஒட்டுமொத்ததிரைப்படத்தையும் தனது கம்பீர நடிப்பால் மட்டுமே தூக்கி நிறுத்திய அந்த நடிக மேதையும் உடன் நடித்த நடிகையர் திலகமும் இப்பொழுதும் கண் முன்னே நின்று கொண்டிருக் _கிறவர்களாக,,,/

உடம்பில்சட்டைகூடஇல்லாமல் எலும்புக்குள்குளிர் துளைக்கிறஇந்த மார்கழி மாதஇரவில் மேலில்போர்த்திய ஒற்றைதுண்டுடனும் இடுப்பில் கட்டிய லுங்கியுடனுமாய் திறந்த வாய் மூடாமல் மனம் இயைந்து இப்படியான தொரு படம் பார்த்து நீண்டநாட்களாகிப் போனது,

கண்களும் மனமுமாய் நிறைந்து அந்த குளிர் கால இரவில் யாருக்கும் தெரியா மல் அழுகிற திருப்தியை அந்தப்படம் தந்தது,,,,/

அதனாலேயே காலை எழ தாமதமாகிப்போனது,

பின்தூங்கிமுன்னெழுகிறபாக்கியத்தைசெல்போனும்தொலைக்காட்சிச்சேனல்க ளும்இண்டர்நெட்டும்தந்துவிட்டுபோயிருக்கிறதுதான்மனம்அகலாப்பரிசாய்,,,/

பரவாயில்லை,இதுவும்நன்றாகவேஇருக்கிறது,சில அன்பின் தொல்லைகளை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.

சில விஷயங்கள் தருகிற நல்லனவற்றை சுவீகரித்துக்கொள்ளத்தான் வேண் டியதிருக்கிறது. சுவீகரித்துக்கொள்வோம்,

பஜாருக்குச்செல்லவேண்டும்காய்கறிகள்வாங்க,கத்திரிக்காய் வெண்டை க்காய், புடலங்காய் ,முட்டைக்கோஸ்,உருளைக்கிழங்கு உடன் நூறு பச்சை மிளகாய் மற்றும் கறிவேப்பிலை ,மல்லி இலை,,,/
 
மனைவிகூட சத்தம் போடுவாள்,இத விட்டா ஒங்களுக்கு வேற காய்கறியே கிடைக் காதா,இல்ல தெரியதா,ஏன் இப்பிடி சத்தியப்பிரமாணம் எடுத்த மாதிரி வாங்குன காய்கறியே வாங்கீட்டு வராட்டி வேற ஏதாவது ஒண்ணு புதுசா வாங்கீட்டு வரவேண்டியதுதான?என்ன காய் கறியா அத்துப்போச்சி மார்க்கெட் டுல , அப்பிடியே குதிரைக்கு சேனைகட்டுன மாதிரி பாத்துக்கிட்டுத் திரிஞ்சா அப்பிடித்தான்,

எங்கஎன்னஇருக்குதுண்ணுபாக்கணும்,என்னஇருக்குதுன்னுகேக்கணும்,என்ன இருக்குமுன்னு உணரனும்,,,நாலையும் சீர் தூக்கிப்பாத்தாத்தான தெரியும் உண்மை நெலமை,அதவிட்டுட்டு,,,,,,

அன்னைக்கிகடைக்கிப்போனப்பகடைக்காரர்கூடசொல்றாரு என்னம்மா ஒங்க வீட்டுக்காரருக்கு இத விட்டா வேற காய்கறி வாங்கத் தெரியாதான்னு, எனக்கு ன்னா ஒரே அவமானமா போச்சி,

ஊரெல்லாம் போயி அது இதுன்னு பேசிக்கிட்டு திரியிற மனுசனுக்கு ஒரு காய்கறிவாங்கீட்டுவரத்தெரியலையான்னா,,,இந்தக்கொடுமையஎங்ககொண்டு போயி அழுகுறதுன்னு தெரியலை,

என்னஇப்பரொம்பத்தான பொலம்பாத ,வாங்குனது வாங்கீட்டு வந்துட்டேன், வச்சிசமாளிப்பையா,அதவிட்டுஆயிரம்காலமானியம்ன்னுபேசிக்கிட்டு இருக்க எதுக்கு,,,,,,?

”ஆமா,,,,,எதுக்காமில்ல எதுக்கு,இத ஒண்ண கேட்டுக்கங்க ,நீங்க போயி நிக்கிற யெடம்தான் சரியானது,ஒங்க நடப்புதான் ஞாயம்,ஒங்க பேச்சு தான் பேச்சு, எதுத்து நாங்க ஒண்ணு சொல்லீறவோ பேசிறவோ கூடாது, ரொம்ப நாகரீகமா வும் காரிய சாத்தியமாவும் அத மறுத்துருவீங்க, அப்பிடித்தான் போயிக்கிட்டு இருக்குவாழ்க்கை.,”என்றவளை ஏறிட்டபோது ரொம்ப வீடுகள்ல இன்னைக்கி நெலம இப்படித்தான் இருக்கு, இதுல நான் வச்சதுதான் ,நான் வாங்குனதுதான் எல்லாமுன்னுசட்டம்பேசிக்கிட்டெல்லாம்திரியக்கூடாதுஇங்கஆமாம்சொல்லிப் புட்டேன்,, என்றவளை அருகிழைத்து தலை கோதிய போது ,,,,,,எதாவது ஒண்ணு பேசுனா இப்பிடி மனச நீவி விட்டுருங்க,,,,என அங்காலாய்த்தவளாய் சமையலைறைக்குள் சென்று விடுகிறாள்,

முன் சென்ற அவளின் பின்னே கேட்ட லேசான சிரிப்புச்சத்தம் கசிந்து வருவதாய்,,,,/
 
விசாலபட்டுத் தெரிகிறது வீடு.பிள்ளைகள் இல்லா வீடு அப்படியாய் காட்சிப் படுவதில் ஆச்சரியம் இருக்க முடியாதுதான்.

பெரியவள் பொங்கல் விடுமுறைக்கு வருகிறேன் என போன் பண்ணியிருந்தா ள்.

என்னிடம் பேசும் போது அளவாகத்தான் பேசுகிறாள், எனது மனைவி யிடம் நீண்ட நேரம் பேசுவாள், பெண்பிள்ளைகள் வளர்ந்து ஆளாகி விட்டால் அம்மா வுடன் அதிக ஒட்டுதலாய் இருப்பார்கள் என்பது உண்மை தான் போலும்,

மனம் மற்றும் உடல் சார்ந்தவைகளை பகிர்ந்து கொள்ள தாயன்றி வேறு யார் சரியாக இருப்பார்கள்,

அதற்காக ஹாஸ்டல்,கல்லூரி ,படிப்புச்சுமை,,இது பற்றிக்கூடவா பகிர்ந்து கொள்ளக்கூடாது,,,,,? என மனைவியிடம் ஆதங்கப்பட்ட போது அப்பிடித் தான் பொம்பளப்புள்ளைங்க,,,,,தலைக்குமேலஒசந்த புள்ள ,இனி போயி ஒங்க கிட்ட சமமா ஒக்காந்து பேசுவான்னு எதிர்பாக்குறது தப்பு, இல்லையா,,,, என்றவள் பரவாயில்ல இவளாவது இந்தளவுக்கு பேசுறா,சொல்றா,,,, மத்த புள்ளைங்க மாதிரி இல்லாம,,,என்ற போது இவனுக்குக்கொஞ்சம் பெருமையா கவும் கொஞ்சம் நெஞ்சு நிமிர்வாகவும் இருந்தது,,,,

அதே வேளை நெருடலாய் மனதுக்குப்பட்டது கேட்டுவிட்டான் மனைவி யிடம்/

இவன் வாய் திறக்கும் போதே யூகித்தவளாய் நீங்க என்ன கேக்க வர்றீங்கன்னு புரியுது,

ஏன் நம்ம செய்யாததையா புள்ளைங்க செஞ்சிருச்சி,ஒங்களுக்கு ஒரு ஞாயம், அவுங்களுக்கு ஓரு ஞாயமா,நம்ம காலம் வேற இப்பக்காலம் வேற,அப்ப புள்ளைங்கள வீடு வளத்து ச்சி,இப்ப சூழல் வளக்குது,

வீட்டுக்குக்கட்டுப்பட்டு அப்பிடியெல்லாம் இருந்த நேரத்துலயும் கூட ஒங்களு க்கு என்னைய தர சம்மதிக்காத எங்கஅப்பாவை எதுத்துக்கிட்டு சேவல் கூவாத ஒரு விடியல்ல சைக்கிளோட முன் புறத்துல உக்கார வச்சி கூட்டிக்கிட்டு வந்து ரிஜிஸ்டர் ஆபீஸ்ல வச்சி தாலிகட்டுனர்ல நீங்க,,,

ரிஜிஸ்ட்ரார் மாலை கொண்டு வரலையான்னு கேட்டப்ப இல்லன்னு சொன்ன கையோட முஷ்டி உயர்த்தி காண்பிச்சிட்டு ரிஜிஸ்டர் ஆபீஸ் வாசல்லயே உக்காந்து தாலிகட்டுனவரில்லையா நீங்க,,,,

ஒங்களுக்கு ஒரு ஞாயம் ,அவுங்களூக்கு ஒரு ஞாயமா, சொல்லுங்க,,,, அப்பிடி யெல்லாம் எனக்குத்தெரிஞ்சி ஒண்ணும் இல்லை,அப்பிடியே இருந்தாலும் ஏங் தடுக்கணும்,அது ஒண்ணூம் பெரிய தப்பு இல்லையே,

மலர்ந்து நிக்கிற பூவோட இதழ்கள ஏங் ஒவ்வொண்ணா பிச்சி கீழ போட ணும் ,விடுங்க மணம் வீசட்டும் பல பக்கமா எனச்சொன்னவளை ஏறிட்ட போது தெளிந்து ஓடிய நீராய் தெரிந்தாள் தீர்க்கம் கொண்டு,,,,/

இன்று எதிர் பார்த்த விடுமுறை கிடைக்கவில்லை ,ஆகவே வருகிறேன் நாளை என பேச்சை முடித்திருந்தாள் என்னிடம்,,/

சின்னவள்சொல்கிறாள்அவள்ட்ரெயினில் வந்து இறங்கமதியம்ஆகிப் போகும், நான்போயிகூட்டீக்கிட்டு வந்துர்றேன்அவளை,நீங்க அவளைப்பத்தின கவலை இல்லாமபோற வேலைக்கு போயிட்டு வாங்க என இருவரையும் வழியுனுப்பி வைத்தாள்,

பாக்கியசாலிகள் பெண்பிள்ளைபெற்றவர்கள் எனச் சொன்ன சிறு மூளையின் சொல்லை அடிபணிந்தும் கைகட்டியும் ஏற்றுக்கொண்டு சமையலைறை மேடையை எட்டிப் பார்க்கிறேன்,

வாய்அகன்றசில்வர்தட்டில்தோசைகள் இரண்டும்அருகிலிருந்த கிண்ணத்தில் சட்னியும் மூடி வைக்கப்பட்டி ருந்தன,நீங்க சாப்பிடுங்கப்பா ,ஏங் தேவைக்கு நானே சுட்டுக்கிறேன், என்றாள்,

காலையில் சாப்பிட்டு வருடக் கணக்காகி விட்டது,எப்படி வந்திந்தப் பழக்கம் எனத் தெரியவில்லை. வேலைக்குக்கிளம்புகிற அவரசம், பேருந்தை எட்டிப் பிடிக்கிற எத்தனம் எல்லாம் கைகோர்க்க சாப்பாட்டை துறந்து விட்டு ஓடி விடுகிறான்,

அது ஒன்றும் பெரிய பாதிப்பை உண்டாக்கினதாய் தெரியவில்லை இது நாள் வரை.ஆனாலும் அவ்வப் பொழுதான பசியடக்க முடியா காலை வேளைகளில் சாப்பிட்டுக் கொள்வதுண்டு கொஞ்சமாக/

பொதுவாக காலை வேளைகளில் சாப்பிடாமல் இருக்காதீர்கள். உடலுக்கும் குடலுக்கும்நல்லதில்லை. என இவனிடம் மருத்துவர் சொன்ன கூற்றை மீறியே வந்திருக்கிறான் இது நாள் வரை/

மீறல்கள் எப்பொழுது இவனில் சுழியிடுகிறது எனப் புரியவில்லை,நல்லதாய் நாலு கேட்டும்,படித்தும் பகிர்ந்துமாய் கொள்கிற சமயங்களில் மனம் பாவி விளைகிற விளைச்சல்களில் இது மாதிரியான மீறல்களும் முளைத்து கிளை விட்டது போலும்,

அது எப்பொழுது தீங்காகி என்ன மாதிரியான உடல் கேடில் வந்து முடியப் போகிறது எனத் தெரியவில்லை,

“சொன்னப்பேச்சக்கேக்குறபழக்கம்சின்னப்புள்ளையிலதான்இல்லையின்னா நாளைக்கிபுள்ளைக்கிகல்யாணம்ஆகிபேரன்பேத்தி எடுக்கப் போற வயசுலயும் இப்பிடி இருந்தா எப்பிடி,,?இதுநாள் வரைக்கும் புள்ளைங்க பின்னாடி ஓடுனது பத்தாதுன்னுஒங்கபின்னாடிஓடிக்கிட்டுத்திரியச்சொல்றீங்க,,”என்கிறமனைவியின் ஆதங்கத்தை மறுக்காமல் ஏற்றவனாய் நிலை கொள்வான்,

தோசைசாப்பிடப்பிடிக்கவில்லை,இப்பொழுது என இல்லை ,எப்பொழுதுமே அப்படித்தான்,

”அடக்கிறுக்கா,அவுங்கவுங்க வீட்டுல புள்ளைங்க அம்மாமார்கள நச்சரி ச்சி இட்லிக்கிப்போடலையா தோசைக்கிப்போடலையான்னு தூங்க விடமாட்டே ங்குறாங்க,நீ என்னடான்னா பழைய சோறு இருந்தா போதுங்குற,,,,என சின்ன வயதில் அம்மா சொன்னது ஞாபகத்திற்கு வருகிறது,
 
தஞ்சாவூரில் இருந்த தினங்களில் அறையில் உடன் தங்கியிருந்தவர்கள் எல்லோரும்தேடித்தேடிப்போய்டிபன்வகையாறாக்களைவேட்டையாடிக்கொண்
டிருக்கும் போது இவன் மட்டும் போய் ரூம் இருந்த தெருவிலிருந்த மெஸ் ஸில் போய் சொல்லி வைத்த சாப்பாட்டை சாப்பிட்டுக் கொண்டிருப்பான், அதிலும் காலை வேளையில் பழைய சாப்பாடு கிடைத்தால் அமிர்தமாய் நினைத்து சாப்பிடுவான்,

அங்கு மட்டும்இல்லை, சங்கரபாண்டியபுரத்தில்வேலை செய்து கொண்டிருந்த நாட்களில் அலுலகாத்திற்கு எதிர்த்தாற்போல் இருக்கிற வீட்டில் சொல்லி வைத்துகாலையில் பழையசோறும் மதியம் சூடானதோசையும்சாப்பிடுவான்,

அந்த உணவுதான் அவனது உடலையும் உயிரையும் வளர்த்தது, அந்த நாட்க ளில்/

மீறிச் சாப்பிட்டால் தோசையைச்சாப்பிட்டால் வயிறு காற்றடைத்த பலூன் போல உணர வைக்கும், நீண்ட நேரம் வரை குறையாமல் இருக்கிற உணர்வால் பல நாட்களில் மதிய உணவு சாப்பிடுவதை தவிர்த்திருக்கிறேன்,

காலை உணவாய் இரண்டு டம்ளர் கஞ்சி,உடன் ஒரு ஆம்ளேட் என பிளான் பண்ணி வைத்திருந்தான்,சிறிது நாட்களுக்கு முன்னால்,

இதை மனைவியிடம் சொன்ன போது ”ஆமா நீங்களும் ஒங்க பிளானும், இதெ ல்லாம் செய்யிறதுக்கு பேசாமா ஒரு வாய் சாப்புட்டுட்டுப் போயிருலாமுல்ல, என்றாள்,

பிளான் இன்னும் வரைவளவிலாகவே இருக்கிறது,அமல் படுத்த நேரமற்று இருக்கிறான், சமையலைறை விட்டு வந்ததும் மணியைப் பார்க்கிறான்,

பதினைந்துவருடங்களாய்பெரியதானபழுதேதும்இல்லாமல்ஓடிக்கொண்டிருக்கிற கடிகாரம்.

சின்னதுடனும்,பெரியதுடனுமாய் ஸ்னேகம் சேர்ந்து கைகோர்த்துக் கொள்கிற விநாடி முள்ளின் நகர்வு இவனுக்கு மிகவும் பிடித்ததாகவே/

விநாடி முள்ளின் அசைவுகளும் ஓட்டங்களும் எங்கும் எப்பொழுதும் முக்கிய மானதாகவே/

வாகனத்தைக் கிளப்பிக் கொண்டு வெளியில் வரும் பொழுது நல்ல வெயில் காய்ந்து கொண்டிருந்தது,

உடல்இப்படியாய்வெயில்குடித்துமிகவும்நாட்களாகிப்போனது,பரவாயில்லை இதுவும் நன்றாகவே இருக்கிறது,