ஞாயிறு, 24 மே, 2020

இறகசைவு,,,,,

இறகு போல லேசாகவும் பூப்போல மிருதுவாகவும் இருந்தால்தான் இப்படியாய் பேசவும் சிரித்து விடவுமாய் முடியும் போலிருக்கிறது,

இறகு என்பது ஒரு உயிர்,உயிர் என்பது உடலின் மையம்,மையமாய் உருக் கொண்ட உடல் உயரப் பறக்கிறது,தாழ்கிறது,அமர்கிறது,கைகோர்க்கிறது, கோர்த்த கைகளும், மனமுமாய் சேர்ந்து செய்விக்கிற வித்தை ஒன்றாய் பத்தாய் நூறாய் முளைத்துக் கிளைத்து பூவும் பிஞ்சும் காயும் கனியுமாய் காட்சிகொண்டு படர்கிறதுதான்.

பூ என்பது மொட்டு,விரிவு,மலர்வு,மணம்,,,என எல்லாம் தாங்கியதுதான் , என்கிற நண்பனிடம் இவனால் ஒன்றும் பேசி விட முடியவில்லை,

சிரிப்பு வாய்க்கப் பெறுகிற வரம் தான், தினங்களின் வழக்கத்தில் காலை யில் டீக்குடிக்கச்செல்கிற கடைக்கு வருகிறவர்களில் அவர் மட்டுமே சற்று வித்தி யாசம் காட்டி சிரிக்கிறார், பேசுகிறார், பழகுகிறார், ஓரு வார்த்தை பேசும் முன்னதாய் ஓராயிரம் தடவைகள் சிரிக்கிறார், வேண்டுமென்றோ வலியப் புனைந்ததாகவோ, ஒட்டவைக்கப்பட்டதாகவோ, பட்டுத்தெரிந்து விடவில்லை அவரது சிரிப்பு, உண்மையும் யதார்த்தமுமாய் பட்டு பிரதி பலிக்கிற பெருஞ் சிரிப்பாய் அது.அவர் சிரிக்கச்சிரிக்க சிரிப்பு வருகிறது, அவர் பேசப் பேச பேச்சும் கூடவே நெய்த சிரிப்பும் கலந்து வருகிறது,

இதில் பேச்சிற்கு தனி ட்ராக், சிரிப்பிற்கு தனி ட்ராக் என்பதெல்லாம் இல்லை, இரண்டும் கலந்து விட்ட மகாத்மியமாய் இருக்கும்,அவர் கடைக்கு வந்து விட்டாலே அவரைச் சுற்றி இறகு முளைக்காது பறந்து வந்தமர்கிற கூட்டமாய் மனிதங்கள், அவரது பேச்சிற்கோ இல்லை சிரிப்பிற்கோ மட்டும் கூடுகிற கூட்டமாய் இருக்காது அது, மாறாக அவரிடமிருக்கிற உண்மைக்காய் கூடுகிற கூட்டமாய் இருக்குமேயன்றி வேறில்லை,

பாய் கடைக்கு போவோம் என்பது இவன் எதிர்பாராத ஒன்று.பாய் கடை இவனுக்கு பல் முளைத்த காலத்திலுருந்து பழக்கம்,வாடகைக்கு சைக்கிள் இத்தனை மணி,இந்த இடம் எனச் சொல்லி விட்டுப்போவான் லீவு நாட்களில்,

ஒரு மணி அல்லது இரண்டு மணி நேரம் என்பது இவனுக்கு விடுமுறை தினங்களில் வாடிக்கை,பாய் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு நேரமும் கடை திறந்திருக்கும்,

அவரது கடை இருக்கிற ரோடே காலியாகிக்கிடக்கிற இரவு வேளைகளில் ஏழு அல்லது எட்டு மணிவரை கூட இவரது சைக்கிள் கடை பள்ளிப்பிள்ளைகளால் நிரம்பியிருக்கும்,

ஞாயிறுகளில் நடமாட்டம் குறைவாக இருக்கிற சாலையில் சைக்கிள் கற்றுக் கொள்வது ஈஸியாக இருக்கும் என்பது சைக்கிளை வாடகைக்கு எடுக்கிற பிள்ளைகளின் நம்பிக்கை,

அவரது கடையிலேயே எடுத்து அருகில் இருக்கிற ரயில்வே ஸ்டேஷன் சாலை யில் சைக்கிள் பழகிக்கொள்வது ஈஸியாக இருக்கும் உடன் வந்து பழகிக் கொடுப்பவருக்கும் தொந்தரவு இல்லாமல் இருக்கும்.இதற்காகவே பள்ளிப் பிள்ளைகள் சனி ஞாயிறின் விடுமுறைக்கு ,பாய் கடையில் வாடகை சைக்கி ளையும் ரயில்வே பீடர் ரோட்டையும் குத்தகைக்கு எடுத்துக்கொள்வது ண்டு,  அதற்காக அவர்கள் வீடுகளில் பிடிக்கிற அடம் கண் கூடு,

பாய் கடை யாரை நம்பி ஓடியது என்கிற வாதம் இங்கு தேவயற்றது என்ற போதிலும் கூட சனி ஞாயிறின் விடுமுறை தினங்களில் அவரது சைக்கிள் கடை யின் ஓட்டம் பள்ளிப்பிள்ளை களை நம்பியே என தெளிவுறச் சொல்லி விடலாம்,

இதில் நம்மாழ்வாரின் பிள்ளைகளுக்கு பாய் சைக்கிளை தனியே எடுத்து வைத்து விடுவார்,

அந்தப் பிள்ளைகள் மற்ற பிள்ளைகளைப்போல என்னா பாய் சைக்கிள் இருக்கா என காசை எடுத்து கையில் வைத்து நீட்டுக் கொண்டு அதிகாரம் பண்ணுவதில்லை.அந்தப் பிள்ளைகளுக்கு அந்தப் பழக்கம் சுட்டுப்போட்டா லும் வராது,

தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும்.நல்ல வேளை நம்மாழ்வாரின் பிள்ளைக ளுக்கு அது வாய்க்கவில்லை,வாய்க்கவும் வாய்க்காது என நினைக்கிறார், தொட்டில் பழக்கத்தை இப்பொழுதெல்லாம் சூழலும் கொஞ்சம் மாற்றி விடுகிறதுதானே?

வளர்ப்பு, படிப்பு, குடும்பம், பழக்கம், சூழல், எல்லாவற்றின் கூட்டிசைவில் பிள்ளைகள் பிசைந்து உருவாக்கப்பட்ட உருவம் நடப்பு சாட்சியாய் நிற்கிற போது நம்மாழ்வாரின் பிள்ளைகள் மட்டும் சற்று விலகியே,,,/

அண்ணனும் தங்கையுமாய்த்தான் வருவார்கள்,காலை பதினோரு மணி தாண்டி வருகிறவர்கள் சைக்கிள் கடையின் ஓரமாக கைகட்டிக்கொண்டு நின்று கொள்வார்கள், பாய் பார்த்து சைக்கிள் ஒதுக்கிக்கொடுக்கும் வரை அவர்களது பள்ளிப்பாடங்கள்,வீட்டு வேலைகள் பற்றி பேசிக்கொண்டிருப் பார்கள்,

“அம்மாவுக்கு மருந்து வாங்கிக்கொண்டு போக வேண்டும் போகும் பொழுது” என்பது அவர்களது பேச்சின் முடிவாய் இருக்கும்,ரெண்டு பேரும் வந்து இப்பிடி கையக் கட்டிக்கிட்டு செவத்தோரமா நின்னுக்கிட்டா எங்களுக்கு எப்பிடித் தெரியும்நீங்க வந்துருக்கீங்கன்னு,சொல்ல வேணாமா,என கடைக் காரர் கேட்கிற கேள்விக்கு மௌனமே அவர்களது பதிலாய் இருக்கும்,அல்லது ஒரு மென் சிரிப்பு,

“இப்பிடியே சிரிப்பையும் மௌனத்தையும் மட்டுமே வச்சிக்கிட்டு வண்டிய ஓட்டீற முடியாது தெரிஞ்சிக்கங்க,,,,,” என சொல்கிற பாய் ”கொஞ்சம் சீக்கிர மா வரக்கூடாது ,இந்நேரம் வந்தீங்கன்னா இப்பிடித்தான் ஆகிப் போகும், சைக்கிள் வெளியில போயிரும்,காத்துக்கிட்டில்ல கெடக்கணும்,

”அம்மாவுக்கு மருந்து வாங்கணுமுன்னு சொன்னீங்கல்ல,போயி வாங்கிக் குடுத்துட்டுக்கூட வாங்க, சைக்கிள் வந்தா நிறுத்தி வைக்கிறேன்,என்பவர் பாவம் இந்த வயசுல ஒங்கம்மாவுக்கு வந்த சுர நோயி வேற யாருக்கும் வரக்கூடாது , அவ பண்ணுன பாவமோ ,ஒங்கப்பாவும் நீங்களும் செஞ்ச புண் ணியமோ அவள இன்னும் கொண்டு போகாம உசுரோட வச்சிருக்கு, ஒங்கம் மாவ காப்பாத்த ஒங்கப்பன் கொஞ்ச நஞ்ச பாடா பட்டான், கௌவர் மெண்டு ஆஸ்பத்திரியே கதின்னு கெடந்தான்,இங்க இருக்க ஆஸ்பத்திரியில இதுக்கு மருந்து இல்லைன்னு மதுரை ஆஸ்பத்திரிக்கு கொண்டு போகச் சொல்லீ ட்டாங்க,

“இப்ப இருக்குற மாதிரி அப்பயெல்லாம் மதுரைக்கு நெனைச்ச ஒடனே போயிட்டு வந்துர்ற வசதியெல்லாம் கெடையாது,ரெண்டாவது இத்தனை பஸ்ஸீ ங்களும், நால்வழிச் சாலையும் கெடையாது,இருந்துகூட எல்லாம் ரெடி பண்ணி யாச்சி, மதுரை ஆஸ்பத்திரிக்கி போறதுக்கு /

ஒங்கப்பன் ஏங்கூட படிச்சவங்குறது ஓங்களுக்கு நல்லாத்தெரியும்,அது போல இன்னும் பத்துப்பேரு இந்த ஊர்லதான்இருக்கோம்.

நாங்களெல்லாம் பெரிசா ஆகா,ஓகோன்னு பொழச்சிறல, நான் எப்பிடி சைக் கிள் கடை வச்சிருக்கேனோ அது போல அவுங்கெல்லாம் ஒவ்வொரு வேலை யில இருக்காங்க,ஒரு தொழில் பண்றாங்க,,,,நாங்க எல்லாம் ஏதாவது குடும்ப விஷேங் களப்ப மட்டும் இல்ல,ஏதாவது அவசரம் ஆத்திரம், ஆஸ்பத்திரின்னா ஒண்ணு கூடிருவோம்,

எங்கள்ல நல்ல காரியங்கள்ல ஒண்ணு சேராம போனவுங்க கூட ஏதாவது துக்க நிகழ்வுகன்னா,இல்ல ஏதாவது நாங்க வந்தாத்தான் ஆகணுமுன்னு ஒரு சூழ்நிலை இருந்தா வந்து கைகோர்த்துருவோம்.

அப்பிடித்தான் ஒங்க அம்மாவ ஆஸ்பத்திரிக்கு கூட்டிக்கிட்டு கூட்டிக்கிட்டுப் போகும் போது நடந்துச்சி,ஒங்க அம்மா விஷயத்துல மட்டும் இல்ல,நாங்க பத்துப் பேரும் பத்து பேரு வீட்டுல ஏதாவது நல்லது கெட்டது நடந்தாலும் ஒண்ணுக் கொண்ணு கைதூக்கி விட்டுக்குருவம்.பண விஷயத்துல இருந்து மத்த எல்லாத்துலயுமா ஒண்ணுக்கொண்ணு கைதூக்கி விட்டுக்கிட்டது போல அன்னைக்கும் எல்லாருமா சேந்துதான் ஒங்க அம்மாவை மதுரை ஆஸ்பத் திரிக்கு அனுப்பி வைச்சோம்,

“அப்ப ஏறிட்டுப்பாத்த ஒங்கப்பனோட பார்வைய புரிஞ்சிக்கிட்ட நானு இப்ப என்ன கொழந்தைகளப்பத்திதான யோசிக்கிற ,அதுக ரெண்டையும் ஏங் கிட்ட விட்டுப்போ,ஏங்புள்ளைகளோட புள்ளைங்களா அதுகளும் இருந்துட்டு ப் போகட்டும். இருக்குறப்ப அள்ளித்திங்கட்டும்,இல்லாதப்ப கரைச்சிக் குடிக் கட்டும், அவ்வ ளவுதான,விடு கவலைப்பாடாம போயிட்டு வா, கூடிருக்கு தாங்கிக்கிற,வீடிருக்கு பொங்கிக்கிற,பள்ளிக்கூடம் இருக்கு படிச்சிக்கிற நாங்கெல்லாம் அப்புறம் எதுக்கு இருக்கோமுன்னு நெனைக்கிற,இந்த மாதிரி பொழுதுகள்ல கூட ஒருத்தருக்கொருத்தரு தோள்குடுக்காட்டி அப்பறம் நம்ம பழகுன பழக்கத்துல சூத்த விழுந்துரும்டான்னு,,,” சொன்ன மறு நாளே ஒங்கள கூப்பிட்டுக்கிட்டு வந்து எங்க வீட்ல விட்டுட்டு மதுரை ஆஸ்பத்தி ரிக்கி கெளம்பீட்டாங்க,அன்னைக்கி ஒங்க அம்மா அழுத அழுகைக்கும், வடிச்ச கண்ணீருக்கும் அளவில்லைப்பா, விட்டா வீதியில ஆறா ஓடிருக்கும் கண்ணீரு,

”நான் என்ன புண்ணியம் பண்ணுனேன்னு தெரியல,இது போல நண்பர்கள கொண்ட புருசன் அமைஞ்சதுக்குன்னு சொல்லி கண்ண கசக்கீட்டே நின்னது இன்னைக்கி வரைக்கும் கண்ணுலநிக்குதுப்பா” என்றார்.

அன்னைக்கி போயிட்டு பத்து நா கழிச்சித் தான் வந்தாங்க ,அப்பிடி வரும் போது ஒங்கம்மா ஓரளவுக்கு கொஞ்சம் கொணமாகி வந்தாங்க,அப்பிடி வந்தவுங்க இன்னைக்கி வரைக்கும் மருந்து மாத்திரைகதான் தாங்கிப் புடிச் சிக்கிட்டு இருக்கு,என்றவர் வீட்டிற்கு போய் வந்த பிள்ளை களுக்கு சைக்கிள் கொடுத்தார்.

இரு சக்கர வாகனத்தின் முன் சக்கரத்தில் சற்று காற்று குறைந்திருந்தது, வண்டி ஓடுகிற ஓட்டத்திலேயே வண்டியின் உலட்டல் தெரிந்தது.சரி சமாளித் துக் கொள்ளலாம்,

ஐந்து கிலோ மீட்டர் தூரம்தானே ஓட்டுக்கொண்டு போவோம் இடையில் ஏதாவது ஒர்க் ஷாப் அல்லது காற்று அடிக்கும் கடை திறந்திருந்தால் செக் பண்ணிக்கொண்டு போவோம் என நினைத்தவனாய் வண்டியை ஸ்டார்ட் செய்தான்,

தெரு முனையில் திரும்பும் போது மூட்டப்பட்டுக்கிடந்த காம்ப்ளக்ஸ் கடை வாசலில் நான்கைந்து பேர் அமர்ந்திருந்தார்கள்,அறிமுகமற்ற நபர்கள்,இந்த நெருக்கடி கால வேளையில் நிறையப்பேரை இப்படியெல்லாம் பார்த்து விட முடிகிறது, அறிமுகமற்றமுகங்கள், அறிமுகமற்றவர்களின் பேச்சுக்கள் அறிமுகமற்றவர்களின் உரையாடல்கள் என கேட்டு விடவும் பார்த்து விடவு மாய் முடிகிறது,

செல்கிற வழியில் சிறிது நின்று பையில் இருக்கிற தண்ணீர் பாட்டிலை எடுத்து தண்ணீர் குடிக்கவோ இல்லை வேறேதற்கோ நின்றால் பரிதாபம் காட்டிய பார்வையுடன் யாராவது வந்து உதவி என கைநீட்டுகிறார்,

சங்கடமாய் இருக்கிறது,நேற்று வரை அவர் நிச்சமாய் கை நிறைய சம்பாதித் தவராய் இருக்கவேண்டும்,சூழல் இன்று அவரை கையேந்த வைத்திருக் கிறது, இவர் ஒருவருக்கு இவன் செய்கிற உதவி போதலாம் ,அல்லது காணா மல் போகலாம், வீட்டில் இருக்கிற அவரது பெண்டாட்டி பிள்ளைகளுக்கு,,,?

இப்படி உதவி கேட்பவர்களில் உண்மையில் கேட்பவர்கள் யார், பொய் சொல்லி வாங்கியவர் யார் எனத்தெரியவில்லை,நேற்றைக்கு முந்தினம் புது பஸ்டாண்டு க்கு சமீபமாய் போய்க்கொண்டிருந்த வேளையாய் வண்டியை மறித்த பெரியவர் ”ஐயா வீட்டுல அரிசி பருப்பு ஒண்ணும் இல்லையா உதவுங் கய்யா,,” என்றவரிடம் ”அரிசி வாங்கித்தர்றேன் கொண்டு போறீங்களா,, ” எனக்கேட்க இல்லை பணமாக் குடுங்க என்றார்,

இவனும் இறக்கம் பார்த்து குடுத்து விட்டு வர மாலை அலுவலகம் முடிந்து திரும்பும் போது போதையில் தள்ளாடிக்கொண்டிருந்தார் தன் நிலையற்று,

உதவி எனக்கேட்டு வருகிறவர்களில் நல்லவர் யார் கெட்டவர் யார் என பிரித்துப் பார்க்கமுடியவில்லை.

அது போல் காம்ப்ளெக்ஸ் கடைகளின் வாசலில்களிலும், இன்னபிற இடங்க ளிலுமாய் அமர்ந்திருப்பவர்களை பார்க்கிற பொழுது சிறிதளவில் மனக் கிலேசம் ஏற்பட்டு விடுகிறதுதான்,

இது அப்படியே வளர்வது சமூகத்திற்கும் நமக்கும் நல்லதில்லைதான். கெஞ் சிக் கேட்டவைகள் எத்தனை நாள்வரை கையை ஏந்திக் கொண்டிருப்பார் கள், பிழைக்க ஏதும் கதியற்ற போது ,ஏந்திய கைகள் ஓங்க ஆரம்பித்தால்,,,,? அல்லது தட்டிப்பறிக்க ஆரம்பித்தால் ,,,,,,நிலைமை மிகவும் மோசமாகி கரடு தட்டிப் போகும் சமூகம்,வலுத்தவன் கை ஓங்கும், இளைத்தவனின் கை இறங்கும், என்கிற நினைப்பூடே சென்று கொண்டிருந்தவன் இப்பொழுதெல் லாம் அலுவலகத்தில் உடன் பணிபுரிகிற எல்லோரிடமும் சொல்கிறான், தனியா வண்டியில போகும் போது செயின், மோதிரம்,பிரேஸ்லெட்டுன் னு போட்டுக் கிட்டு வராதீங்க,ஓத்தையில் டூ வீலர்ல வர்றீங்க அம்பது அறுபது கிலோ மீட்டர்ன்னு,,கொஞ்சம் நாம தான் பாதுகாப்பா இருந்துக்கிறனும்” என்றான்,

காலை நேரத்திற்கு இந்த வெயில் அதிகம்தான்,சுள்ளிட்டுச்சுட்டது. அலுவல கத்தின் முன்னால் நின்ற வேப்ப,மர நிழலில்தான் வண்டியை நிறுத்தினான், வேப்பமர நிழலும் அதிலிருந்து வீசிய காற்றும் இதமளிப்பதாகவே/

இசைவாகிப் போகிற இதங்கள் சற்று ஆறுதலாகவே/ரோட்டில் பட்டுச்சுட்ட வெயில் மர நிழலில் நின்று கொண்டிருந்தவனுக்கு தெரியவில்லை.

அண்ணாந்து பார்க்கிறான் மரத்தை.கூடு கட்டி குஞ்சு பொரித்த பறவைகள் இரண்டு காதல் பாஷை பரிமாறிக்கொண்டதாய்.பேசிக்கொண்ட பாஷை யின் தேவபாவங்கள் இழைந் தோடிய மென் ராகங்களாய்/

கிளை படர்ந்த இலைகளினூடாய் பூவும் பிஞ்சும் காயும் கனியுமாய் கட்டித் தெரிந்தவைகளினூடே நாங்களும் இருக்கிறோம்தானே உயிர்ப்புடன் ஒன்று சேர்ந்து என்பதாய் சேதி சொன்ன பறவைகள் காதல் ஜோடி என அறியப் பட்டது,

மர நிழலிலிருந்து வெளி வருகிறான்,எதிர்பட்ட காற்று முகத்தில் மோதி இதமளிக்கிறதாய்,,/

லேசாகிப்போகிறதுதான் மனமும்,உடலும்,,,,/

2 கருத்துகள்:

  1. கெஞ் சிக் கேட்டவைகள் எத்தனை நாள்வரை கையை ஏந்திக் கொண்டிருப்பார் கள், பிழைக்க ஏதும் கதியற்ற போது ,ஏந்திய கைகள் ஓங்க ஆரம்பித்தால்,,,,? அல்லது தட்டிப்பறிக்க ஆரம்பித்தால் ,,,,,,

    உண்மைதான்

    பதிலளிநீக்கு