திங்கள், 11 நவம்பர், 2019

பூப்பூவாய்,,,,

”பஜாருக்கா போறீங்க,”என மனைவி கேட்ட பொழுது மணியைப் பார்க்கிறான். மணி ஒன்பது ஐம்பது,/

சின்னதும் பெரியதுமான முட்கள்இரண்டும் ஸ்னேத்துச் சிரித்து அன்பான பார்வையால் அரவணைத்து விநாடி முள்ளை துணைக்குஅழைத்துக் கொண்டு காட்டிய நேரம் சரிதானா என தொலைக்காட்சியில் மணியை சரி பார்த்துக் கொண்டேபதில்ச்சொன்னான் மனைவிக்கு,/

”நீங்கதான் காலையில வெள்ளன எந்திரிக்கிற ஆளா,காலையில அஞ்சரை மணிக்கெல்லாம் எந்திரிச்சி வாக்கிங்க் போகணும் ,கூடவே ரன்னிங்க், சைக்கி ளிங்,அது இதுன்னு,,,,கதை பேசீட்டு இப்பிடி ஒன்பது மணி வரைக்கும் கவுந்த டிச்சிட்டுப் படுத்துருந்தா எப்பிடி,,,/?”

”தப்புதாம்மா,அது ஒரு மந்தமான சொகமாகிப்போச்சி,அதுக்கு ஒடம்பு பழகிப் போச்சா இல்ல நான் அப்பிடி மனச ஆக்கி வச்சிருக்கேனான்னு தெரியல, சீக்கிரம் எந்திரிக்கணும்,,,,எந்திரிக்கணுமுன்னு நெனைக்கிற அன்னைக்கித் தான் கூடுதலா தூக்கம் வருது.என்ன செய்ய அத மீறி எந்திரிச்சா அன்னைக்கி பகல்பொழுது கெட்டுப்போகுது, அதுனாலத்தான் அப்பிடியா இருக்க வேண்டியிருக்கு, மாத்திக்கணுந்தான்,இந்தப் பழக்கத்த, சில பேரப்பாத்தா தினமும் காலை யில தவறாம ஐஞ்சரை ஆறுமணிக்கெ ல்லா ம் எந்திரிச்சி வாக்கிங் போக ஆரம்பிச்சிருறாங்க, இன்னும் சில பேர பாக்குறேன்,மொத நாளு நைட்டு லேட்டா தூங்குறவுங்க மறு நா எட்டு மணி ஏழு மணிக்குகூட வாக்கிங்க் போறத பாத்துருக்கேன்,அது மாதிரி கூட போகலாமுன்னு பாத்தா நேரம் வாய்க்கமாட்டேங்குது,அப்ப வாக்கிங் போயிக்கிட்டு இருந்தோமுன்னா வேலை க்குபோறதுக்குபஸ்ஸேற முடியாது,பஸ்ஸ விட்டுட்டு நிக்க வேண்டியதுதான், அப்புறம் டூ வீலர எடுத்துக்கிட்டு ஓடணும்,அது எதுக்கு அவ்வளவு தூரத்துக்கு டூ வீலர் ஓட்டிக்கிட்டு செரமப்பட்டுக்கிட்டு,,,?அதுக்கு பேசாம பஸ்ஸீல போயிக்கிறது உத்தமம்,

பஸ்ஸீல போனா இருபதும் இருபதும் நாப்பது ரூபாயோட முடிஞ்சி போச்சி, அதேது டூவீலர்ல போனா நித்தம் நூறு ரூபாக்கு பெட்ரொல் உத்த வேண்டியி ருக்கு ,அது போக வண்டிக்கு தேய்மானச் செலவு வேற,டீ காப்பி செலவு எப்பயும் போலதா,,,,”

”டீக்கடைன்னு சொல்லும் போதுதான் ஞாபகம் வருது,நம்ம ஊர்லயி ருந்துதான் அங்க இருக்குற டீக்கடைக்கி வேலைக்கி வர்றாரு நல்ல சாம்யண்ணன். அந்தக்கடைக்கு டீ மாஸ்டரும் அவருதான்,சமயத்துல ஆளு இல்லாத நேரத் துல வடை மாஸ்டராவும் மாறி நிப்பாரு,காலையில நாலு மணிக்கு மொத பஸ் ஏறுவாராம்,இங்க வர அரைஅல்லது முக்கா மணிநேரம், வந்ததுலயிருந்து டீ ஆத்துறவரு அவரு சிப்ட்டுமுடியிற நேரம்ந்தான் டீ ஆத்துற கப்ப கீழ வைப்பாரு.

’நானும் கடந்த ரெண்டு நாளா பாக்குறேன், காலையிலயும் சாய்ங்காலமும் நமக்கு அந்தக் கடையில தான ரெகுலரா டீ/’

’ஒரு நாள் ஆளக்காணமுன்ன ஒடனே எங்கயாவது போயிருப்பாருன்னு நெனைச்சேன்,ஆனாரெண்டாவதுநாளும்ஆளக்காணோம்,வேற மாஸ்டர்தான் நின்னாரு, எனக்குன்னா டீக்குடிக்கக்கூட மனசு ஒப்பல,’

’அவரோடடீப்போடுறடேஸ்ட்நல்லாயிருக்கும்,அதுனாலயே அவரு கடையில் நிக்கும் போதும்,வேற மாஸ்டர் கடையில நிக்கும் போதும் டீக்குடிக்க வர்ற ஆள்களோட எண்ணிக்கை வித்தியாசம் இருக்கும்,அது போக அவரோட பேச்சு நடவடிக்கை,அணுகுமுறை எல்லாத்துலயும் வித்தியாசம் இருக்கும், அதுக்காக வே ஆள்கள் கொஞ்சம் பேரு விரும்பி டீக்குடிக்க வருவாங்க,”

”எனக்கும் அவரு இல்லாத கடையில டீக்குடிக்கிறதுக்கு ஒரு மாதிரிதா இருந் துச்சி, சரி என்ன செய்யிறது,காசு குடுத்தாச்சி ,டோக்கன் வாங்கியாச்சின்னு மனசப் பொத்திக்கிட்டு டீக்குடிச்சிட்டு வர வேண்டியதா ஆகிப்போச்சி/”

”அவரில்லாத கடைக்கி எதுக்குன்னு ஒரு ரெண்டு நாளு போனா அவருதான் டீ ஆத்திக்குடுத்தாரு,என்ன மாஸ்டர் லீவா,ஆளையே காணமே ரெண்டு மூணு நாளான்னு கேட்டப்ப ஆமா சார்,நெலைம ஒன்னும் சீரா இல்ல,அதுதான் லீவு போட்டுட்டு போயிட்டேன்”என்றார்.

அதற்கப்புறம்தான் தெரிந்தது,உடன் வேலை பார்க்கிற மற்ற இரண்டு மாஸ் டர்கள் இவரைப்பற்றி கடை முதலாளியிடம் வைத்த வத்தி புகைய ஆரம்பித் திருக்கிறது.புகையின்விரிவு பறந்து பறந்து நாசி கண் இமை எல்லாம் உறுத்த கடைமுதலாளிஉடனடிகமிஷன்ஒன்றைநியமனம்செய்து விசாரணையையும் ஆரம்பித்து விட்டார் தானே விசாரணையாளராய் இருந்து/

கடைமுதலாளிக்குநன்றாய் தெரியும்.மாஸ்டர்கள் மூன்று பேரில் யார் எப்படிப் பட்டவர் என ,

ஆனாலும் அவர் கடையின் தற்போதைய நிலையை அனுசரிக்க வேண்டிய திருக்கிறது.அதனால்தான் அவர்கள் முன் வைபவர் போல் வைது விட்டு அவர்கள் போனதும் மாஸ்டர் வீட்டுக்குக்கிளம்பும் ஒரு நாள் இரவாய் கூப்பிட்டுப்பேசியிருக்கிறார்,

“இந்தா பாருப்பா,நீ ஒண்ணும் எனக்கு ஆகாத ஆளுமில்ல, அவுங்க ரெண்டு பேரும்எனக்கு பெரிய ஆள்களும் கெடையாது, எனக்கும்தெரியத்தா செய்யிது, யாரோட வேலையில கள்ளம் இருக்கு, யாரோட வேலைநல்லாயிருக்கு, நீ டீஆத்தும்போது எவ்வளவு கூட்டம் வருது, அவுங்க டீ ஆத்தும் போது வர்ற ஆட்களோட எண்ணிக்கை எவ்வளவுன்னு ஒரு கணக்கு எனக்கும் தெரியத் தான் செய்யிது,அது போக அவுங்க ரெண்டு பேரும் ஈர பேனாக்கி பேன பெருமாளாக்கி அவருகூட சம்பந்தமும் பேசுற ஆள்க,அதுனால அவுங்க அப்பிடித்தான் இருப்பாங்க.அது போக அவுங்க மனசும் புத்தி ஓட்டமும் வேற ,ஓங் மனசும் புத்தி ஓட்டமும் வேற,அதுனாலத்தான் அவுங்க கையில எடுக்குறகாரியம்தோத்துப்போகுது,நீகையிலஎடுக்குறகாரியம்ஜெயிக்குது,மனசு நல்லாயிருந்தா எல்லாம் நல்லாயிருக்கும், அது குப்பையாகி போச்சின்னா எல்லாம் குப்பைதான இல்லையா,

இல்லண்ணாச்சி ,நீங்க சொல்றது எனக்கு தெரியத்தான் செய்யுது,ஆனா ரொம்பத்தான போட்டு புண் படுத்துறாங்க அண்ணாச்சி,

என்னமோ இவிங்கதான் எல்லாம் தெரிஞ்ச மாதிரியும் எனக்கு எதுவும் தெரியாதது போலவுமா காட்டிக்கிறாங்க,

அவுங்க பேசுறது,நடந்துக்குறது,ஒங்ககிட்ட வந்து வத்தி வைக்கிறது எல்லாம் பாத்துக்கிட்டும்,கேட்டுக்கிட்டும்,உணர்ந்துக்கிட்டும்தான் இருக்கேன்.

இருந்தாலும் நானும் அவுங்களப்போல யெறங்குனா பின்ன அவுங்களுக்கும் எனக்கும் வித்தியாசமில்லாம போயிருமுங்குறதுக்காகத்தான் அதச்செய்யிற தில்ல,,,,,,,எனச் சொன்ன டீ மாஸ்டரை ஆற்றுப்படுத்திய முதலாளி,,,,நீ ஒண்ணும் கவலைப்படாத இனிமே அவுங்க ரெண்டு பேரையும் ஓங் விஷயத் துல தலையிட விடாம நான் பாத்துக்கிறேன்,,என்றவர்

”நீ இந்தக் கடைக்கு டீ மாஸ்டரா மட்டும் இல்லாம கொஞ்சம் எல்லாமாவும் மாறி நிக்கிற/போன வாரத்துல மாசக் கணக்குல டீ பாக்கி வச்சிருந்த ஒருத்தன்கிட்ட நாங்களே வாங்க முடியாத ஒரு மாச பழைய டீ பாக்கிய நீ பேசி வாங்கிக்குடுத்துட்ட,இது மாதிரி விஷயத்துக்காகவாவது நீ எங்களோட இருக்கணும்,என்ன மத்த ரெண்டு பேர திடுதிப்புன்னு இப்ப நிறுத்து னேன்னு வையி,எனக்கு அடுத்து ஆளு கிடைக்கிற வரைக்கும் கடைய நடத்துறது கஷ்டமாகிப்போகும்.

அதுலயும் கிடைக்கிற ஆளு நல்ல ஆளா கெடைச்சாத்தான் போச்சி ,இல்ல எங்க பாடு திண்டாட்டம்தான்.அதான் அப்பிடியே இழுத்துக்கிட்டும் தாக்காட்டி வைச்சிக்கிட்டுமா இருக்கோம். அது அப்பிடித்தான் இருக்கும் பத்துப்பேரு இருக்குற யெடத்துல இது போல ஒழப்பல் எல்லாம் இருக்கும்தான்,நீ அதெல் லாம் ஒண்ணும் கண்டுக்காத,நீ வாட்டுக்கு ஓன் வேலை உண்டு நீ உண்டு ன்னு இரு ,ரொம்ப முத்தி ஒன்னைய பாதிக்கிறது மாதிரி வந்துச்சின்னா ரெண்டு பேரையும் கூப்புட்டு சத்தம் போட்டு வைச்சமுன்னா சரியா போகும்,” என்றதும் அரை மனதினாய் ஏற்றுக்கொண்டு கடைக்கு வந்து போய்க் கொண் டிருக்கிறார்,

’காலையில எட்டு மணிக்கும் ஏழரை மணிக்கும் லேட்டா ப் போற வாக்கிங்க அந்தசெவத்தக்கண்டக்டரப்பாத்துதான்தெரிஞ்சிக்கிட்டேன்,அவர மாதிரிக் கூட போகலாம்,வாக்குங்குக்கு, ஆனா என்ன ஆனாலும் எட்டரை மணிக்கு பஸ்ஸ எட்டிப்புடிச்சி ஆகணும், அததான் அத விட்டாச்சி,கூழு,மீசை ஏதாவது ஒண்ணு தான ,,,,ஆனா மீசையும் வச்சிக்கிட்டு கூழையும் குடிக்கிற பக்கத்தக் கொண்டு வரணும் கூடிய சீக்கிரம்.அதை கொண்டு வர்றது மட்டுமில்ல ,அத விடாம கடைபிடிச்சிட்டேன்னுவையி,கொஞ்சம் பழக்கத்துக்கு உள்ளாயிரு வேன்,  எனச் சொன்ன போது சிரித்தாள் மனைவி.

”ஆமாம் பஜாருக்குப் போகணுந்தான்,அவசியம்,காலையில ஆபீஸீக்குப்போக சாய்ங்காலம் ஆனா வீடு வரவே நேரம் சரியா இருக்கு,யெடையில எங்கயும் போக முடியல,தவிர நான் பஸ்ஸீல போறதும் வர்றதும் நம்ம குடியிருக்குற ஏரியா வழியாத்தாங்குறதால பஜாருக்குப்போக வாய்யிப்பில்லாம போச்சி, ஏதோ ஒரு படத்துல சொன்னது மாதிரி நான் அந்தப்பக்கம் போகாததுனால டீக்கடை பாய் என்ன சார் ஆளையே காணம் ,நீங்கஇந்தப்பக்கம் வராததுனால நித்தம்ஒங்களுக்காக குடுக்க வச்சிருக்குற வடையும் டீயும் அப்பிடியே இருக்கு சார், வச்சிப்பாத்திருந்த வடைபூஞ்சனம் பூத்துப்போச்சி,ஆத்தி வச்சிரு ந்த டீ ஆடை மூடிப்போச்சி, நீங்க வந்த நாள்கள்ல டீகொஞ்சம் நல்லா போட்டுருக்கலாம்,வடையில உப்பு கொஞ்சம் ஜாஸ்தின்னு சொல்லுவீங்க, எங்க மனசு புண்படாமயும்,நாங்க ஏத்துக்கிற மாதிரியுமா,,,,/

‘நாங்களும் நீங்க சொல்றத தப்பா நெனைக்காம அப்பிடியேஏத்துக்கிட்டு சரி பண்ணிக்கிறுவோம். ஏன்னா நீங்க ஒங்க அதிகாரத்த காண்பிக்கிறதுக்காக பேசுற பேச்சில்ல அது, எங்க மேல இருக்குற அக்கறையிலசொல்ற விஷயமா அதப் புரிஞ்சிக்கிருவோம்,இப்ப அதெல்லாம் இல்லாம ஒரு வடையும் ,டீயும் எங்களுக்கு நஷ்டம்ங்குறாரு,அவர தாண்டிப்போனா புத்தகம் விக்கிற ”அம்மா கடை”க்காரருநீங்க வராம வாராவாரம் ஒங்ககிட்ட விக்கிற புத்தகம் அப்பிடியே கெடக்கு சார்,நீங்க அந்தப்புத்தகத்த வாங்காததுனால புத்தகத்துக்குள்ள இருக்குற எழுத்துக்களும் படைப்புகளும் படிக்காம அப்பிடியே கெடக்கு சார்”, என்பார்,

”வாஸ்தவம்தானே சொல்லாத சொல்லுக்கு விலையேதும் இல்லை என்பது போலத்தானே இதுவும்”.பதிலுக்கு சிரித்து விட்டு வந்து விடுகிறான் இப்பொ ழுதைக்கு இப்பொழுது அப்பக்கம் செல்கிற தினங்களில்/

”ஆமாம் போன ஞாயித்துக்கெழமையும் போகல, இந்த ஞாயித்துக்கெழமை யும் இப்பிடியே விட்டுட்டா எப்பிடி,,,,,,?வா அப்பிடியே போயிட்டு வருவோம், கெளம்பு, சீக்கிரம், நாம வர்ற வரைக்கும் புள்ளைங்க வீட்டப் பாத்துக்கிறட்டும் என்றவனாய் துண்டெடுத்துக்கொண்டு பாத்ரூம் நோக்கிக் கிளம்பினான்,

“எந்திரிக்கக் கொஞ்சம் லேட்டாகிருச்சி ,நீயாவது எழுப்பி விட்டுருக்கக் கூடா தா,,,? என்றவனை ஏறிட்டவள் எங்கிட்டு சீக்கிரம் எழுப்ப”,,,,ஒரு நாளைக்கு ரெண்டு மணிக்கு படுக்குறீங்க,ஒரு நாளைக்கு நாலு மணியாகுங்குறீங்க கேட்டா தூக்கம் வரலைன்றீங்க,மொதல்ல பதினோரு மணி பணிரெண்டு மணியா தாமதமாகிப்போயி நின்ன தூக்கம் இப்ப ரெண்டு மணி மூணு மணி நாலு மணின்னு நீளுது,கேட்டா தூக்கம் வரலைன்றீங்க,அதுலயும் சனி ஞாயிறு லீவுன்னா போதும் மொத நா ராத்திரி சிவ ராத்திரிதான் ஒங்களுக்கு, டீக் கடைக்காரரு கேக்குறா, என்னக்கா ஒங்க வீட்டுக்காரரு ராத்திரி பூராம் தூங்காம அப்பிடி என்னதான் செய்வாருன்னு,என்னதான் இருக்கட்டும், அதுக் காக விடிய விடிய முளிச்சிட்டு விடிஞ்தும் அப்பிடியே டீக்கடைக்கு விடியக் காலை நாலு மணிக்கு வந்து நிக்கிறாருக்கான்னு/

”என்ன வரலையோ என்ன யெழவோ,ஒரு மனுசன் இப்பிடியெல்லாமா முளிச் சிக்கிட்டு இருக்கக்கண்டம்,கேட்டா அதுக்கு ஆயிரம் காரணம் ,ஆயிரம் சாக்கு, என்ன சாக்கோ,என்ன காரணமோ,,,,,,,?

”சமையலறைக்குள் இருந்தாள்,கேஸ்டவ்வும் பண்டமும் பாத்திரமும் மிக்ஸி யும் கிரைண்டரும் குக்கரும் மட்டுமே அவளது உலகமாய் வரையறை பட்டுத் தெரிகிறது.காலைடிபன்,மதியம்சாப்பாடு இரவு டிபன் அல்லது அதே சாப்பாடு,,, என்கிற சட்டகத்துக்குள் அடை பட்டுப் போன அவளது வாழ்க்கை,

”சரி இப்பிடி என்னைய சீக்கிரம் கெளம்புன்னு சொல்லீட்டு நீங்க பாத்ரூமுக் குள்ள போயிட்டீங்கின்னா எப்பக்குளிச்சிட்டு வந்து கெளம்பி எப்ப போறது, இன்னும் நீங்க கறிக்கடைக்கு வேற போகணுமுன்னுவீங்க,ஒரு வாரம் கேப்பு விடுங்கன்னாக் கூட கேக்க மாட்டேங்கிறீங்க,என்னமோ கறியிலயிருந்து நேரடியா அப்பிடியே சத்து ஒடம்புக்குள்ள புகுந்துக்குறது போல இல்ல பேசுவீங்க, எதுக்கு வம்புன்னு நானும் சொல்றத கொறச்சிக்கிட்டேன்,“எடுத்துக் கொண்டாந்து குடுக்குறத ஆக்கிப்போடுறதோட நிறுத்திக்கிறேன் அவ்வளவு தான்,” என்ற மனைவியைபார்த்து புன் முறுவலித்தவனாய் இல்லல்ல குளிச்சிட்டு வந்ததும் போயி கறி எடுத்துட்டு வந்துர்றேன்,நீ அந்த கேப்புல கெளம்பீற மாட்ட, என்றவனை ஏறிட்டவள் இன்னைக்கி மட்டன் எடுக்க வேணாம் சிக்கன் எடுங்க,பெரியவ அதுதான் கேட்டா போன வாரம் மட்டன் எடுத்ததுக்கே மொனங்குனா, அவளுக்கு கொஞ்சம் பல்லுக்கு மெதுவா இருக்கணுமுன்னு நெனைக்கிறா,நீங்க குளிச்சிட்டு வாங்க நானும் அதுக்குள்ள கெளம்பீருவேன், ரெண்டு பேருமா பஜாருக்குப்போயிட்டு வரும் போது சிக்கன் எடுத்துட்டு வருவோம்,சிக்கன்தான,சீக்கிரம் சமைச்சிறலாம்,ஒரு மணி நேரத்துக்குள்ள வேலைமுடிஞ்சிரும்,என்றவளை சரி சீக்கிரம் கெளம்பு ,போயிட்டு வருவோம், காலாகாலத்துல என்றான்.போறதெல்லாம் சரிதான் நானும் ஒரு ரெண்டு வாரம சொல்லிக்கிட்டு இருக்கேன் நெலக்கடலை வாங்கணுமின்னு, நீங்களும் வாங்குன பாட்டக்காணோம், நானும் ஒங்களுக்கு அவிச்சிக்குடுத்த பாட்டக் காணோம் என்றாள்.

சரி வாங்கீருவோம் இன்னைக்கி என்றவனாய் பஜாருக்குகிளம்ப ஆயத்தமா னான்.

வாசலில் மண் கீறி நட்டிருந்த பூச்செடியில் மொட்டு விட்டிருந்த பூ மலர்ந்து சிரித்தது,

6 கருத்துகள்: