சனி, 26 அக்டோபர், 2019

நகர்வுகளினூடாய்,,,

பட்டாசு வெடிக்கிறது.
தூரத்து புறாக்கள் கைகோர்த்துப்பறக்கின்றன.
பட்டாசு சப்தம் அடங்கி விடுகிறது.
புறாக்கள் திரும்பவுமாய் வந்து அமர்கின்றன
அதே இடம் தேடி!

திரும்பவும் வெடி சப்தம்.
திரும்பவும் பறக்கிற புறாக்கள்!


நின்று போன வெடி சப்தம் திரும்பவுமாய்
திரும்பவுமாய் இடம் தேடி புறாக்கள்.
சப்தம் காட்டி வெடித்தது வெடியாகவும் 

கைகோர்த்து அமர்ந்தது புறாகவும் காட்சிப்படுகிறது 
அவ்விடத்தில்,,,,/


                                   ______________________


பேசிக்கொண்டேயிருக்கிறார்
எதிரில் இருக்கும் நண்பர்.
பார்த்துக்கொண்டும் கேட்டுக்கொண்டுமாய் இருக்கிறேன்
நானும் இன்னவர்களுமாய்!

எதிரிலிருந்த மேஜையின்
உட்புறதளத்திலிந்த தீப்பெட்டியும்
அதன் உள்ளடக்கமும்
என் மனம் பற்றிக்கொள்வதாக!


தீப்பெட்டியை கையெலெடுத்துப்பார்த்த நான்

அதிலிருந்த குச்சிகளை எடுப்பதும்
பின் அதை பெட்டிக்குள்
வைப்பதுமாய் இருக்கிறேன்!


நான் மற்றும் இன்னவர்கள்
நண்பரின் பேச்சு ,திறவு கொண்டிருந்த
அறையின் சுகந்தம் என எல்லாமுமாய்
உருக்கொண்ட இடத்தில்
தீக்குச்சி ஒன்று என்
முன் உரசிச்செல்வதாக!

ஞாயிறு, 13 அக்டோபர், 2019

சப்தங்களின் நகர்வுகளில்,,,,

”என்னகீரைக்காரம்மாநல்லாயிருக்கீங்களா”என்பதேஅன்றாடங்களில்அவரைப் பார்க்கநேர்கிறபொழுதெல்லாம்சபாபதியினுள்சுழியிடுகிறமுதல் கேள்வியாய் இருக்கிறது.

சபாபதியின்உலகம் மிகவும்சிறியது,ஓட்டை போட்ட கையடக்க தீப்பெட்டி யினுள் கருவேலை இலைகளுடன் குடிகொண்டிருக்கிற பொண்வண்டின் லாவகம் பட்டுத் தெரிவதான வாழ்க்கை/

பத்து டூ ஐந்தின் அலுவலகத்தனமும்,லோனில் கட்டிய வீடும் காலை எழுந்து ஒன்பதுமணிக்குள்ளாய் சாப்பாடு நிறைந்த டிபன் பாக்ஸீடன் பஸ்ஸை பிடிக்க விரைகிறதுமான அவசர வாழ்க்கை,

குடும்பம்,பிள்ளைவளர்ப்புஅவர்களதுபடிப்புமாதச்சம்பளம்,பலசரக்கு, மளிகை, தவணைப்பாக்கி வார இறுதி நாளில் சிக்கன் அல்லது மட்டன் செவ்வாய் வெள்ளி கோயில் என்பதே வீட்டில் பிரேமிட்டு மாட்டப்படாத விதி,

அதை சிறியதாக நீங்கள் எடுத்துக்கொண்டாலும் சரி அல்லது கொஞ்சம் விரிவாக்கம் செய்து பார்த்தாலும் சரி,

அவன் வேலை பார்க்கிற அலுவலகத்தில் மத்தாயூ அண்ணன் தொழிற்சங்க ஈடுபாடு கொண்டவராய் இருந்தார், தொழிற்சங்கம் ,தொழிற் சங்கம்,தொழிற் சங்கம் என்பதுவே அவரது பெரும்பான்மை நேரத்தின் பேச்சாய் இருந்தது.

ஊழியர் நலன் ,அவர்களதுஉரிமை,அவர்கள் பணி,பணியிடப் பாதுகாப்பு, பெண் ஊழியர் உரிமை,அவர்களது நலன் என இன்னும் இன்னுமாய் பேசிக் கொண்டு ம் செயல் பட்டுகொண்டுமாய் இருப்பார்.

அதுவே அவரது வாழ்நாளின் கடப்பாடு என்பது போல் பட்டுத்தெரிவார்,

வெளிக்கலர் பேண்ட்டும்,அடர்கலர் சட்டையும் ,மெலிந்து சலித்த உருவமும் அவருக்கு பொருந்திதான் இருந்தது சபாபதி பார்த்தவரை/

ஆனால் சிகரெட் குடிப்பது மட்டும் அவரிலிருந்து அவருக்கே அந்நியப்பட்ட செயலாய்த் தெரிந்தது.

அவர்தான் தொழிற்சங்கத்தின் பிராஞ்ச் செகரெட்டரியாய் இருந்தார்,

கதிரேசன் அண்ணன் இலக்கியம் பற்றி தனது அன்றாடங்களில் பேசத் தவறிய தில்லை,வேலை நேரத்தில் எதுவும் பேசுவதில்லை,மூச்சு விடுகிறாரா இல் லையா என்பதுவே சந்தேகமாகிப்போகிற அளவிற்கு இருப்பவர் மதியம் சாப் பிட உட்கார்ந்து விட்டாரானால் சாப்பாட்டை சாப்புடுகிறாரே இல்லையோ கண்டிப்பாய்வம்பு பண்ணியாவது அந்த சாப்பாட்டு மேஜையில் ஒரு கதையை கொட்டு விடுவார்,தேவையானவர்கள் எடுத்துக் கொள்ளட்டும் என./

கதை பேசுவதும் அதை படிப்பதும் பகிர்ந்து கொள்வதும் அவரது உள்ளுணர் வின் நகர்வாய் இருக்கும்.

இன்னும் சொல்லப்போனால் அதுவே அவரை நகர்த்திக்கொண்டு செல்கிற உந்து சக்தியாய் இருக்கும்,

லலிதா அக்கா மறந்தும் கூட சினிமா பற்றி பேசாமல் இருந்ததில்லை, சினி மாவை பொழுது போக்கு எனச்சொல்வதை அவர் ஏற்றுக்கொள்வதில்லை, ”ஜஸ்ட் லைக தட் பொழுது போகலை அதுனால சினிமாவுக்கு போறோம், வந்துடுறோம், அவ்வளவுதான் என்பவர்களிடம் அவர் கடுமையாக தர்க்கிப் பார்,

”சரி நீங்க என்னைக்காவது ”ஜஸ்ட் லைக் தட்டாவோ”இல்ல பொழுது போக்கா வோகோயிலுக்குப்போயிருக்கீங்களா,இல்லை,அப்பிடி போறது பத்தி நெனைச் சாவது பாத்துருக்கீங்களா ,ஏன் அப்பிடி,,,,?

ஏன்னா கோயில் ஒரு புனிதஸ்தலம், அங்கயிருக்குற சாமி நம்ம வாழ்க்கைய காக்குறவர், நமக்கு வரம் கொடுக்குறவர் நம்மவாழ்க்கைய மகோன்னதமா ஆக்குறவர்,,,,ங்குற இன்னும் இன்னுமான நம்பிக்கையோடவும் அந்த நம்பிக் கைக்குஎந்த பங்கமும்சின்ன கீறலும்விழுந்துறக்கூடாங்குறகவனத்தோடயும் பய பக்தியோடயும்தான போறம்,

”ஆனா நம்ம வாழுற வாழ்கையோட கலாச்சாரத்தை பிரதிபலிக்கிற சினிமா வை,  நாம ஏன் ஜஸ்ட் லைக்தட்டா எடுத்துக்கணும்,?

”சினிமாவுலசொல்லப்படாத ,எடுத்து கையாளப்படாத,காண்பிக்கப்படாத விஷ யம் ஏதாவது இருக்கா சொல்லுங்க,,,?”

”ஆனா அத நாம ஜஸ்ட் லைக் தட்ன்னு ஒதுக்கி வைச்சிறோம்,”

”கலாச்சாரம்நம்மமுகம்மாதிரிஇல்லையா,முகம்இல்லாமஅலைஞ்சாநல்லாவா இருக்கும்,,,,?”என்கிற கேள்வியுடன் முடிப்பாள்.

அவளது அந்த முடிப்பில் தவறு இருப்பதாய் அந்த நேரத்திற்கு சொல்லி விட முடியாது.

இப்படியாய்பொழுதெல்லாம் சினிமா பற்றியும் அரசியல் பற்றியும்இலக்கியம் பற்றியுமாய் பேசிக் கொண்டிருப்பவர்களுக்கு குடும்பம் என ஒன்று இருக்கா தா?அது பற்றி அக்கறை கிடையாதா அவர்களுக்கு,,,?அது பற்றி பேச்சே எடுக்க மாட்டேன் என்கிறார்களே என்கிற கேள்வியை இவன் மனம் கொண்ட ஒரு நாளில் ”எல்லாத்தோட எல்லாத்தையும் சேதாரமில்லாம இழுத்துட்டுப் போற ரசவாத வித்தைய அவுங்க கத்து வச்சிருக்காங்க,நமக்கு அது கைவரலைன்னு வச்சிக்கவேன்,,,” என்றார் அருகாமை சீட்டுக்காரர்.

தனது அன்றாடங்களில் தன்னை கடந்து செல்கிற அனைத்திற்குள்ளுமாய் எதிலும் பட்டுக்கொள்வத்தில்லை சபாபதி.

வீடு பிள்ளைகள் மனைவி டிபன் பாக்ஸ் சாப்பாடு,ஒன்பது மணி பஸ் ஒரு மணி நேர பிரயாண தூரத்தில் அலுவலகம் அங்கு தலை நிறைந்த வேலை,,, அது முடிந்து திரும்பவுமாய் வீடு, டீ,வி மெகாத்தொடர் சாப்பாடு தூக்கம் என்பதாய் உருக்கொண்ட வாழ்க்கையை வார்த்துக்கொண்டவன் தன்னியல்பா கவே அப்படியே இருக்க பழகிக்கொண்டான்.

முந்தா நாள் வீட்டில் செப்டிக் டேங்க் கிளீன் பண்ண வண்டி கூப்பிட மிகவும் சிரமப்பட்டுப் போனான்,

செல்லில் போய் கூகுளில் சர்ச் செய்து பார்த்தான்,கிடைக்கவில்லை,”இவ்வ ளவு பெரிய ஊரில் இதற்கென ஆட்கள் இல்லையா என தெரு ஓரம் ரோட் டோரம் யாராவது வண்டியுடன் நிற்கிறார்களா பார்ப்போம்” என இரு சக்கர வாகனமெடுத்து தேடிய பொழுது கிடைக்காமல் சுற்றிய அலுப்புப்போக ஒரு டீக்கடையோரம் வண்டியை ஓரம் கட்டி விட்டுநின்ற பொழுதுஆச்சரியப்பட்ட டீக்கடைக்காரர் சபாபதியிடம் ”என்ன சார் ,டீக்கடை பக்கமே எட்டிக்கூட பாக்க மாட்டீங்க,ஆனா இன்னைக்கி கடைப்பக்கம் வந்திருக்கீங்க,என்ன சார் எதுனா விஷேசமா என்றவாறே டீக்கிளாஸை நீட்டியவரிடம் தயங்கித் தயங்கி விஷயத்தைசொன்னபொழுதுஅட இதுதானா?இதுக்குப்போய்தானாஇவ்வளவு அலைச்சல்அலைஞ்சிக்கிட்டுவந்துருக்கீங்க,இந்த வெயில்ல,நீங்க வண்டியில போகும்போதுபாத்தேன்,அப்பயே ஒரு வார்த்தைசொல்லீருந்தீங்கன்னா நானே சொல்லீருப்பேனே என விசிட்டிங் கார்டை எடுத்துக் கொடுத்தார்,

”கார்ட்ல இருக்குற நம்பருக்கு போன் பண்ணீட்டு நான் சொன்னேன்னு சொல் லுங்க,பணம் கொஞ்சம் கொறைச்சி வாங்கிக்கிருவான்,தெரிஞ்ச பையந்தான்/

இது போல எதுனா வேணுமுன்னா சொல்லுங்க சார்,எங்களால முடிஞ்சா செஞ்சி குடுக்கப் போறோம்,இல்லைன்னா அதுக்கான வழிய காண்பிக்கப் போ றோம் அவ்வளவுதான”என டீக்கடைக்காரர் சொன்ன வார்த்தையின் கடைசிப் புள்ளியுடன்தீப்பெட்டிப்பொண்வண்டாய்அடைகொண்டசபாபதியின்அன்றாடங் களில் கீரைக்காரம்மா அவன் பஸ்ஸீற்கு செல்கிற காலை வேளையாய் குறுக் கிடுகிறார்.

கீரைக்காரம்மாவை பார்க்க நேர்கிற பொழுதெல்லாம் சபாபதிக்கு அம்மாவின் ஞாபகம் வருவது தவிர்க்க இயலவில்லை.

இன்னும்கொஞ்சம்சரியாக வைத்துப்பார்ந்திந்திருக்கலாம் என்றும் அவர்களது அந்திம காலத்தில் அவர்களை சரியாக பார்த்துக்கொள்ளாமல் விட்டு விட்டோ மோ என்கிற மன நடுக்கம் அவ்வப்பொழுது முள்ளாய்தைத்துக்கிழிக்கும்தான், அதிலும் கீரைக்காரம்மாவை பார்க்கிற பொழுது இன்னும் கொஞ்சம் அதிக மாகவே கிழிபடுவதுண்டு மனது.

”நல்லாயிருக்கேன்தம்பி,நீங்களும்என்னையப்பாக்குறபோதெல்லாம்கேக்குறீங்க, நானும் நல்லாயிருக்கேன்னுதான் சொல்லிக்கிறேன், ஆனா உண்மையில் நல்லாயிருக்கேனா இல்லையாங்குறது தெரியாட்டிகூட ஒங்க வார்த்தைக கொஞ்சம் தெம்பா இருக்குது தம்பி” என்பார்.

”நான் யேவாரத்துக்கு வந்த இத்தனை வருஷங்கள்ல இது நா வரைக்கும் என்னையப்பாத்து யாரும் இப்பிடி கேட்டதில்லை தம்பி,

”இப்பிடியெல்லாம் கேக்குறதுக்கு ஒரு தனிமனசு வேணும் தம்பி,

”இது வெறுமனே நலம் விசாரிகிற சொல் மட்டும் இல்லை தம்பி,கொஞ்சம் உள்ளின் உள்ளுக்குள்ள போயிப்பாத்தா ஒரு கல்மிஷமில்லாத மனசாலதான் இப்பிடியெல்லாம் கேக்க முடியும் தம்பி,

”ஏந்தம்பியும்இதேபோலத்தான்,அப்பிடியேஒங்கவாய்தான்,ஆனாஅவன்ஒங்கள்லயும் ஒரு படி மேல போயிருவான்,”

”கொஞ்சம் தெரிஞ்சவுஞ்கன்னா போதும் ,என்ன எப்பிடியிருக்கீங்க,வீட்ல அக்கா புள்ளகுட்டிங்கள்லாம் சொகமா,புள்ளைங்க படிப்பு எப்பிடியிருக்கு, இங்கி லீஸ் மீடியத்துல படிச்ச புள்ளைக்கு சரியா படிப்பு வரலைன்னு தமிழ் மீடியத் துல சேக்கணுமின்னீங்களே சேத்தாச்சா,மூத்த பொண்ணடெலிவரிக்கு கூட்டிக்கிட்டுவந்துருந்தீங்களே,கொழந்தபொறந்துருச்சா,நார்மலா,சிஷேரியனா, ஏன்னா இப்பயெல்லாம்சிஷேரியந்தான வழக்கமாகிப்போச்சி,நேரம் குறிச்சி இந்த நேரந் தான்புள்ளவேணுமுன்னு சொன்னா வேறென்னதான்செய்வாங்க அவுங்களும் .,,,, ங்குறது வரை போயிடுவான்,அது போலதான் தம்பி ஒங்க பேச்சும் இருக்கு,அது வரைக்கும் கொஞ்சம் ஆறுதல் தம்பி.

”இது நா வரைக்கும் இந்த ஏரியாவுல ஏங்கிட்ட பல பேரு பேசிருக்காங்க, அவுங்கெல்லாம் ஊரு பேரு ,சொந்தம் ஜாதி ஜனம் எல்லாம் கேப்பாங்க,ஆனா அதுல ஒண்ணுலகூடஎன்னையப்பத்துன அக்கறையான கேள்வியோ விசாரிப் போ இருக்காது தம்பி,

“எல்லாம் அவுங்களுக்கு வேண்டிய தகவலோ இல்லை நான் என்ன ஜாதி ஆளு,ஏங்குடும்பப்பிண்ணனி என்ன,,,இன்னும் இன்னுமானது பத்தியெல்லாம் தெரிஞ்சிக்கிறது தவிர்த்து வேறெண்ணும் பெரிசா இருக்காது தம்பி.

“நானும் இவுங்க இதுக்காகத்தான் கேக்குறாங்குறது தெரியாதது மாதிரி அப்பு ராணியா அவுங்களுக்கு ஏத்த மாதிரி பேசீட்டு வந்துருவேன் சமாளிச்சி/ என்ன அப்பிடிச்சொல்லும் போது அவுங்க உள்ளொ ண்ணு வச்சி புறமொண்ணு கேக்குற மாதிரி நானும் அவுங்க போக்குலயே போயி பேச வேண்டியதாத் தான் போகும்,சூழ்நிலைதான தம்பி எதையும் தீர்மானுக்குதுன்னு சொல்லு வாங்க,

”கீரைப்பாத்தி போட குத்தைகைக்கு நெலம் கொடுத்தவரு திடீர்ன்னு போன வாரம் வந்து நெலம் வேணும் எனக்கு,நாளையில இருந்து வெளியேறிக்க, நாளைக்கிநீ அறுக்குற கீரைகடைசிக்கீரையாஇருக்கட்டும்முன்னு படக்குன்னு போயிட்டாரு,

’அவரு சொன்னது போல மறு நா கீரையவும் அறுத்துட்டு அவர் வருவாரு ,ரெண்டு வார்த்த பேசலாமுன்னு நிக்கிறேன் ,டவுன் பஸ்ஸீ வர்ற வரைக்கும் அவரக் காணம், என்ன செய்ய பின்ன பஸ்ஸீ வரவும் ஏறி யேவாரத்துக்கு வந்துட்டேன்,

“அந்த பஸ்ஸ விட்டா அடுத்து ஒரு மணி நேரத்துக்கு பஸ்ஸீ கெடையாது. ஒரு மணி கழிச்சி வர்ற பஸ்ஸீல போனாஏங் யேவாரம் வம்பாப் போயிரும், அதுக்காகத்தான்அவரசாய்ங்காலம் வந்து பாத்துக்கிருவோமுன்னு நெனைச்சி வண்டி ஏறி வந்துட்டேன்,

”அதுஅவருக்கு மனசுவாதிச்சிருச்சி,என்னா ஒரு பொம்பள நான் வருவேன்னு மதி இல்லாம இப்பிடிபொறப்புட்டுப் போயிட்டாளே கொஞ்சமாவது கூறுவாரு வேணாம்பொட்டச்சிறுக்கிக்குன்னுகூடவந்தவர்ட்டவருத்தப்பட்டவர்நாளைக்கு ஒழவுக்கு மேல வீட்டுக்காரங்கிட்ட டிராக்டருக்குச்சொல்லீரு, அப்பிடியே கூலிக்குஆள்களும்சொல்லீரு,கீரைபோட்டுருக்கிறபாத்திகளதாண்டிஅங்கிட்டு கொணத்து மேட்டுப் பக்கமா கரடு தட்டிப் போயி பொதரா கெடக் குறத வெட்டி சுத்தம் பண்ணச்சொல்லீட்டு மொத்தமா உழுது போட்டமுன்னா என்னத்தை யாவதுரெண்டுதானியம்தவசியை வெதச்சி விடலாம்,இப்பிடியே போட்டுருந்த முன்னாநெலம் வீணாப்போகும்ன்னவரு அந்த பொம்பள வந்தா ஏங் வீட்டுக்கு வரச்சொல்லுன்னு சொல்லீட்டு போயிட்டாராம்”

”நான் யேவாரம்முடிஞ்சி அப்பத்தான் வீட்ல போயிநிக்கிறேன் இன்னும் சாப்பாடு கூடச்சாப்புடல,பச்சத்தண்ணிபல்லுலபடல,வந்துட்டாங்க,தூதுசொல்லி என்ன செய்ய பின்ன,கீரைக்கூடைய யெறக்கி வச்சிட்டு அப்பிடியே போறேன் அவரு வீட்டுக்கு,

”அவரு கறாரா சேர்ல கால் மேல கால் போட்டு ஒக்காந்துக்கிட்டு நாளைக்கி நீ நெலத்துல யெறங்கக்கூடாதுன்னாரு,

”ஐயா அதுபத்திப்பேசத்தான் காலையில கீரை அறுத்தப்பெறகு அவ்வளவு நேரம்காத்திருந்தேன்,வர்ரேன்னுசொன்ன நீங்க வர்ற வழியக்காணோம், வேற வழியில்ல,எனக்குகண்ணுக்குமுன்னாலகீரைக்கட்டும்காத்திருக்குறயேவாரமும் படமா விரிஞ்சி நிக்குது,என்ன செய்வேன் நானு.,கெளம்பீட்டேன், கீரைக் கட்ட தூக்கீட்டு,

“எனக்கு அன்னாட பொழப்புக்கும் சோத்துக்கும் அதுதான வழி, அத அடைச் சிட்டுதிடுதிப்புன்னு வந்து நெலத்த விட்டு வெளியேறுன்னு சொல்லுறீங்களே, எங்க போவேன் நானு,வேறபொழப்பு என்ன தெரியும் எனக்கு, நான் கீரைப் பாத்தி போட்டுருக்குறதால நெலம் வீணாப்போகுதுன்னு நெனைச்சிங்ன்னா, பாத்திபோடுருக்குறயெடத்தமட்டும்விட்டுட்டுமிச்சயெடத்துலநீங்கவிவசாயம் பாருங்க,அத விட்டுட்டு ஏங் பொழப்புல கை வக்கிறீங்களேன் னதும் ”ஏம்மா இன்னும் குத்தகை முடியாம ஓங்கிட்ட நெலம் கேக்குறது தப்புதான். ஏங் நெலத்த விட்டு ஒதுங்கிக்கிற கூடுதலா பணம் வேணுமுன்னா லும் தர்றேன், வெலகிக்க,இப்பிடியே கெடந்தா நெலம் பாலாப்போயிருமோன்னு நினைக்கத் தோனுதுமா அதான் குத்தகை முடியாம கேக்குறேன்,ஆம்பள தொணை இல்லாத வீடுன்னுதான் ஒனக்கு நெலம் குடுத்தேன், இத்தனைக்கும் ஓங்கிட்ட சொல்லித்தான் குடுத்தேன்,குத்தகை இத்தனை வருஷம் ,அதுக்கான பேப்பரு கையெழுத்து பத்திரமெல்லாம் சும்மா ஒரு தோதுக்குத்தான்,நான் எப்ப நெலம் வேணுமுன்னு கேக்குறேனோ அப்ப குடுத்துறனும்ன்னுதான குடுத்தேன்,இப்ப கேட்ட ஒடனே நெலத்தக்குடுக்க சொணக்கம் காட்டுறயேன்னு சொன்னவரு நாளைக்கி காலையில விடியக் கருகல்ல டிராக்டரோட வந்து நிக்கிறேன் நெலத்த உழுகுறதுக்குன்னு சொல்லீட்டு என்னைய அனுப்பீட்டாரு, அவரு சொன்ன சொல்லும் நெலத்த உழுக ட்ராக்டரும்மறுநாள்மட்டுமில்ல இன்னை க்கி வரைக்கும் நெலத்துப் பக்கம் வரவே இல்லை,

“நான் குத்தகைப்பணத்த மட்டும் கரெட்டாதேதி பிசகாம குடுத்துட்டு இருக் கேன் தம்பி, எப்பவாவது கீரைக் கூடையோட பஸ்ஸீ ஏற காத்துக்கிட்டு இருக் கும் போது அந்தப்பக்கமா போற நெலத்துக்காரரு ”என்ன கீரைக்காரம்மா நல்லாயிருக்கையான்னு” கேட்டுட்டுப் போவாரு,

”இப்பிடி விசால மனசு உள்ளவுங்க இருக்குற வரைக்கும் நலத்துக்கென்ன கொறைச்சல்லுன்னு நானும் ஓடிக்கிட்டு இருக்கேன் தம்பி,,,” எனச்சொன்ன கீரைக்காரம்மாவை எறிட்டான் சபாபதி/

கீரை,கீரை,கீரை,கீரை.,கீரை,கீரை,காற்றின்திசைகளெங்கும்கீரைக்காரம்மாவின்  சப்தம்/

சனி, 12 அக்டோபர், 2019

கடலைத்தோலு,,,


 சமையலறையிலிருந்து வேர்க்கடலை அவிக்கும் வாசனை வருகிறது,நாசி நிறைந்த வாசனையாகவும், நன்றாகவும் இருக்கிறது.

”யப்பா நல்லாயிருக்குப்பா,வாசனை மட்டும் இல்லை,வாசனையை கொண்டு வந்தவளையும் பாராட்டனுந்தான் இந்நேரம்.”என்கிற இவனது பேச்சிற்கு செவி மடுத்துச் சிரித்தவள் சமையலறையை குலுக்கித்தான் போட்டாள் கொ ஞ்சமாக/

”ஏன் எதுக்கு இந்த அதிர் சிரிப்பு,என்ன சொல்லிப்புட்டேன் இப்ப,ஓடோடி வந்து ஒட்டிக்கொண்ட வாசனையும்,அதை செய்வித்த ரசவாத வித்தைக்காரிக்கும் பாராட்டின்னுதானே சொன்னேன்,எப்பவும் சொல்ற வார்த்தைதான அது , அது க்குப் போயி இப்பிடி சமையலறை வெடிச்சிப்போற அளவுக்கு சிரிக்காட்டி என்னவாம்,”,?என்கிற இவனது கேள்வி சுமந்த பேச்சிற்கு,,,,,,,,

இன்னொரு அதிர் சிரிப்பை உதிர்த்து விட்டவள் அதன் நீட்சியாய் “இருக்கட்டு மே சிரிப்புத்தான என்ன கொறைஞ்சி போச்சி இப்ப,நீங்க என்ன கொறையா வா சிரிக்கிறீங்க,எதையும்உள்ளடக்கமாவச்சிபொறுமிக்கிட்டுஇருக்காம,சிறுமைத் தனம் காட்டிக்கிட்டு இருக்காம வெள்ளந்தியா வெறும் மனசோட நின்னா இந்த சிரிப்பு என்ன,எதுவேணுமுன்னாலும் வரும்,

”அதுவும் நம்ம மனசுக்குப்புடிச்சவுங்க நாலு நல்ல வார்த்தை பேசும் போது தன்னியல்பாவே பூரிச்சிப்போகுதான மனசு,அப்ப இந்த சிரிப்பு என்ன எல்லாம் சாத்தியமாகிப் போகுது நல்லபடியா” என்றவள் ”பொண்டாட்டி சமைச்சிப் போட்டசாப்பாட்டக்கூட பாரட்டத்தோணாம சும்மா வெறுமனே மண்ணு போல உக்காந்துட்டுசாப்புட்டுப்போறஆம்பளைங்கஎத்தனைபேருஇருக்குறாங்க, அவுங்களுக்கு மத்தியில ஒங்களப்போல ஒருத்தரு கெடச்சது நான் செஞ்ச பாக்கியந்தான” என்றாள்.

”வாஸ்தவம்தான் நீ சொல்லுறது,அதுக்காக நான் வாச்சது நீ செஞ்ச பாக்கியம் அதுஇதுன்னு கதை வுட்டுக்கிட்டும், பொய்யா நம்பிக்கிட்டும் இருக்காத ஆமா, எனக்கு மேலயெல்லாம் வீட்ட அட்ஜஸ்ட் பண்ணிக்கிட்டுப்பாத்துக்கிர்ற ஆம்ப ளைங்க இருக்காங்க,வீட்டு வேலைகள்ல கையையும் ,மனசையும் கலந்து விடுறதுல இருந்து அந்த வீட்டுக்கே பாரம் தாங்கியா நிப்பாங்க,,,/ நானு அதுல பாதி அல்லது கால்வாசின்னு வச்சிக்கவேன்/

பழுப்புக்கலரில்பூப்போட்ட டிசைன் போட்ட சேலை அவளுக்கு நன்றாகத்தான் இருந்தது,கண்ணுக்கு உறுத்தலாக மிகை காட்டியும் இல்லாமல்,டல்லாக அமுங்கிப்போய் இல்லாமலும் பூக்களுடன் சிரித்தது.

பூக்களின்ஊடாக நீளமாகவும் சற்றே சின்னதாயும் ஓடிய கோடுகள் இரண்டை உருவி எடுத்து அப்படியே பின்னி வளைத்து ஜடை போட்டு புடவைலிருந்து கழண்டுவிழுந்தபூவை எடுத்து பின்னல் வைத்த ஜடையில் சொருகி விடலாம் போலிருந்தது.

எட்டி மணியைப் பார்க்கிறான்.சின்னதும் பெரியதுமான முட்கள் விநாடி முள் ளுடன் கைகோர்த்துக்கொண்டு ஆறாகப்போகிறேன் என்றவித்தது.

இரவு கொஞ்சம் தாமதமாகத்தான் தூங்கினான்,

”தாமதமுங்குறது சரி,அதுக்காக இவ்வளவு தாமதமா,காலையில ஆறுமணி வரைக்குமாதாமதத்தஇழுத்து நீட்டிக்கிறது.அப்பறம்ஒடம்புஅப்பிடிப் பண்ணுது இப்பிடிப் பண்ணுதுன்னுகத்திகூப்பாடு போட்டுக்கிட்டு ஆஸ்பத்திரி மருந்து மாத்திரன்னு அலைய வேண்டியது,

“இதுலசெலவு மட்டுமா,எவ்வளவு மன ஒளைச்சலு எவ்வளவு சங்கடம் எவ்வ ளவு மெனக்கெடலு,,”என்பவளை ஏறிடுகிறவன்”,சரிதான் நீசொல்றது, ஆனா நேரத்துக்கு எந்திரிச்சிநேரத்துக்குப்படுத்து நேரத்துக்குச்சாப்புட்டுங்குற நேர் கோடான விஷயத்துல இருந்து கொஞ்சம் வெலகி நிக்கத்தான் வேண்டி இருக்கு சமயங்கள்ல,,,,/

”சமயங்கள்ல இருந்த அது உருப்பெருகி கொஞ்சம்,கொஞ்சமா சமயா சமயங் கள்லன்னு ஆகிப் போச்சி. அன்னைக்கி உள்ளபடிக்கும் என்னாச்சின்னா நீங்க ளெல்லாம் படுத்து தூங்கீட்டீங்க,நான் கொஞ்ச நேரம் லேப்டாப்புல டைப் அடிச்சிக்கிட்டு இருந்தவன் அது முடிஞ்சதும் தூக்கம் வராம டீவிய போட் டேன், லோக்கல் சேனல்ல அடுத்தடுத்து ரெண்டு படம்,ரெண்டும் நல்ல படம். நல்ல படம் பாத்து நாளாச்சி.அப்பிடியே ஒக்காந்துட்டேன்.

“படம் பாக்க ஆரம்பிக்கும் போது மணி பணிரெண்டரை இருக்கும்,ரெண்டு படத்தையும் பாத்து முடிக்கும் போது அது ஆகிப்போச்சி அஞ்சரை மணி, சரின்னு எந்திரிச்சிப்போயி மொகத்தக்கழுவீட்டு வந்து படுத்து தூங்கும் போது மணி ஆறாகிப்போச்சி,அதுதான் விஷயமே தவிர்த்து வேறொன்னுமில்லை, ஆமா” என்றவனை எறிட்டவள் ”என்னமோ போங்க,பதினோரு மணி பண்ணெ ண்டு மணி ஒரு மணின்னு இருந்தது மாறி ஆறு மணிவரைக்கும் நீண்டிருக் குன்னாகொஞ்சம்ஆபத்துஇல்லையா,நீங்க என்ன இன்னும் எளந்தாரிப் புள்ளை யா,ஒங்களநம்பி குடும்பம் இருக்கு,புள்ளகுட்டிக நாங்க இருக்கம் பாத்துக்கங்க, என்றவளின் வார்த்தையில் தெரிந்தஅக்கறை அவ்விடம் பட்டுத் தெரித்ததாய்,,,/

வெந்து கொண்டிருக்கிறதா,இல்லை அவித்து அடுப்பிலிருந்து எடுத்தவுடன் வந்த வாசனையா,,,,?பிடிபடவில்லை,

நேற்றைக்கு முன் தினம் பஜார் போகும் போது வாங்கியது,வீட்டில் சுத்தமாக மளிகை இல்லை,வாங்க வேண்டும் என்றாள்,

மாதம் முதல் மூன்று தேதிக்குள்ளாய் போய் விட்டால் கொஞ்சம் கூட்டம் மத்துவமாய் இருக்கும் பலசரக்குக்கடைகளில்,

பலசரக்கு வாங்கிக்கொண்டு அப்படியே தவணைப்பணம் கொடுக்க வேண்டிய ஜவுளிக்கடைக்கும்பர்னிச்சர்மார்ட்டுக்கும்தவணைகட்டிவிட்டுவந்துவிட்டால்  வீட்டில் மற்ற செலவுகளை பிளான் பண்ண தோதாய் இருக்கும்.

மனைவியை கொண்டு போய் பலசரக்குக்கடையில் விட்டு விட்டு ஜவுளிக் கடைக்கும் பர்னிச்சர் மார்ட்டுக்கும் போய் விட்டான்.

போய் விட்டுத்திரும்புகையில் பஜார் முக்கில் தள்ளு வண்டியில் வைத்து விற்றுக்கொண்டிருந்தார் கடலை வியாபாரி,

எப்பொழுதும் விற்பவர்தான்,”கடலை கடலை, கடலை கடலை”,,என கட்டைக் குரலில் அவர் போடுகிற சப்தம் பஜாரின் மறு முனை வரை கேட்கும் மைக் இல்லாமலேயே/

அதிலும்இவன் அவரைக்கடந்து போவதைப்பார்த்ததும் சப்தம் கூட்டிவிடுவார். அவரை இவனுக்கு நன்றாகத் தெரிந்திருந்தது, கடலை வாங்கப்போகும் போது ஏற்பட்ட பழக்கம்தான்,

அவர்களுக்கும் இவன் போன்றவர்களின் பழக்கம் தேவைப்படுகிறதுதான், கீரைக்காரம்மாவைப் போன்று/

அவரும் இவர் போல்தான்,இன்னொரு தெருவில் வரும் போது போதே இந்தத் தெருவில் இருக்கிற வீடுகள் கீரை வாங்க ரெடியாகி விடும்.

அன்றாடங்களில் அவர்கள் வியாபாரத்திற்காய் வருகிற நேரத்தை சரியாய் சொல்லிவிடமுடியாது,ஒரு நாளைக்கு காலை ஆறு,ஆறரை மணிக்கு வந்தா ரென்றால் மறு நாள் அல்லது எட்டு மணி மூன்றாம் நாளில் ஒன்பது மணி யாகிப் போகும்,

”வாங்கம்மா என்ன இந்நேரம் வர்றீங்க” என்பான் இவன் ஆபீஸ் கிளம்பி பஸ்ஸீற்காய் வேகமெடுத்துப் போய்க் கொண்டிருக்கிற பொழுது/

இல்லதம்பி நேரமாகிப் போச்சி,கரெக்டா நூல் புடிச்சாப்புலசரியானடயத்துக்கு வர்றதுக்கு இதென்ன ஆபீஸ் வேலையா தம்பி, இப்பிடித்தான் ஒரு தெருவுக் குள்ளபோனா கொஞ்சம் சீக்கிரம் வரலாம்,இன்னோரு தெருவுக்குள்ள போகும் போது அது போல ரெண்டு மடங்கு டயம் ஆகிப்போகுது,இதுல ஆகாத போகாத வுங்க பேசுற மோசமான பேரம்,பத்து ரூவா கீரக்கட்ட வாய் கூசாம அஞ்சி ரூவாயிக்கிக் கேப்பாங்க, இதேது பஜார் போயி வாங்குனாங்கன்னா அங்க இருபதுரூபாய்கேட்டாலும்குடுத்துட்டுத்தான்வருவாங்க,எப்பவுமேஎளியவுங்க கிட்டதான நம்ம சமூகம் அதிகாரம் பண்ணி பழகீருக்கு, குனிஞ்ச வன் மேல தான குதிரை ஏறப் பழகீட்டோம் நாமளும்,கொஞ்சம் நிமிந்து நிக்கிறவன் கிட்ட நம்ம அதிகாரம் செல்லாது இல்லையா,அதுமாதிரித்தான் ஆகிப்போகுது தம்பி,

“இன்னைக்கி ஒங்க தெருவுக்கு முந்துன தெருவுல பாத்தா ஒரு அம்மா கீரை வாங்குறோமுன்னு பேரம் பேசுறாங்க,பேசுறாங்க அவ்வளவு தூரத்துக்கு பேசு றாங்க, மூனு கட்டு வாங்கிர்றேன்,பதினைஞ்சி ரூவாக்கு தர முடியுமான்னு கேக்குறாங்க,எனக்குன்னா கோவமுன்னா கோவம்,சரியான கோவம்,ஏம்மா இப்பிடி பேசுறீங்க,நீங்க வியாபாரம் வாங்காட்டிக்கூட பரவாயில்லை, இப்பிடி யெல்லாம் அடிதண்டமா வெலைப் பேசாதீங்கம்மா,நீங்க இப்பிடி கேக்க ஆரம் பிச்சிங்கின்னா இனி நான் யேவாரதுக்கு போற தெருவுல எல்லாம் இப்படியே கேக்கஆரம்பிச்சிருவாங்க,ஏங்யேவாரம்கெட்டுப்போகும்மா,இப்பிடியெல்லாம் பேசாதீங்க,ஏங்கிட்ட மட்டும் இல்லை,என்னையப்போல தெருவுல வியாபாரம் பண்ணவர்றவுங்ககிட்டயார்கிட்டயும்இப்பிடியெல்லாம்பேசாதீங்கம்மான்னதும் அந்தம்மாவுக்கு கோபம் வந்துருச்சி,”ஏய் போடி அந்த மானிக்கி பெரியஇவ நீயின்னு கண்டமானிக்கி பேச ஆரம்பிச்சிட்டாங்க,நானும் எவ்வளவுதான் பொறுமையா இருக்குறது,சரி வயசுல பெரியவுங்க,ஏதோ பேசுறாங்கன்னு விட்டுருவோமுன்னு நெனைச்சா ரொம்பத்தான் ஓவரா பேசுற மாதிரி தெரிஞ் சிச்சி எனக்கு.

”தவிரஅஞ்சி வருஷத்துக்கு மேல யேவாரம்பண்ணிக்கிட்டு இருக்கேன். இப்படி யாரும் பேசுனதில்லை.

”வயசுல பெரியவுங்க இப்பிடியெல்லாம் பேசாதீங்கம்மான்னு சொல்லிப் பாக்கு றேன், அந்தம்மா கேக்குற வழியக் காணோம்.ரொம்ப எல்லையில்லாம பேசுற மாதிரி தெரிஞ்சதும் நான் தெருவுல இருக்குற கல்ல எடுத்து ஓங்க ஆரம்பிச் சிட்டேன்,ஒடனே அந்தம்மா உள்ள போயிருச்சி,நாயே வெளியில வந்த ஒன்னைய கல்லால அடிச்சிக்கொன்னுருவேன்னு சத்தம் போட்டுட்டுத் தான் வந்தேன்.,

”தெருவே வேடிக்கை பாக்க அந்தம்மா அவமானப்பட்டுதான் வீட்டுக்குள்ள போச்சி,இனிமே அது என்னைக்கண்டா பத்தடி தள்ளித்தான் போகும்,

இப்பிடி பிரச்சனையெல்லாம் தாண்டி வரும்போது லேட்டாயிச்சிதான் கொஞ் சம்,என்றார்,

”சரிங்கம்மாஎன்ன செய்யிறது,இது போலஇருக்குறவுங்கலயெல்லாம் சகிச்சிக் கிட்டுதான் யேவாரம் பண்ண வேண்டியதிருக்கு எனக் கூறியவாறே ரெண்டு கட்டு குடுத்துட்டுப் போங்க எனச் சொன்னவனாய் மனைவியிடமும் கீரைக் காரம்மாவிடமும் சொல்லிவிட்டுக் கிளம்பினான்,

மீதிக்கதையை கீரைக்காரம்மா இவனது மனைவியிடம் பேசியிருக்க வேண் டும் கண்டிப்பாக/ஏனென்றால் இவனது தெருதான் கீரைகாரம்மா கடைசியாக வரும் தெரு,

அதனால் கொஞ்சம் ஆசுவாசமாய் இருந்து விட்டுப்போகலாம் என்கிற நினைப் பில் கீரைக்காரம்மா இருந்து பேசிவிட்டுப் போவார்கள்.

ஏன் இப்பிடி தள்ளாத காலத்துல வீதி வீதியா அலைஞ்சி வியாபாரம் பண்ணு றீங்க,சிவனேன்னு உள்ள வேலையப்பாத்துட்டு இருக்குறத சாப்புட்டுக்கிட்டு விட்டுல இருக்குறத விட்டுப்புட்டு எதுக்குப்போயி தட்டலைஞ்சிக்கிட்டு இருக் குறீங்குறீங்க,,,,,,என்கிற மனைவியின் பேச்சிற்கு எங்கம்மா நிம்மதியா ஒக்கா ந்து சாப்புடுறது, இத்துப்போன பொழப்புமா எங்க பொழப்பு,ஒருபக்கம் குடும்பம் ,ஒரு பக்கம் யேவாராம் ,ஒருபக்கம் ஒங்களப்போல இருக்குற வீட்டுக்காரங்க, இதுக்குயெடையிலகீரைபயிர்பண்ணியிருக்குறதோட்டத்துக்காரவுங்க,பஸ்ஸீ, கண்டக்டர்,டிரைவரு,லக்கேஜீன்னு இதுதான் சுத்துச்சுத்தி வருமே தவிர்த்து வேற ஒரு நெனைப்பும் வர்றதில்லம்மா,பொழப்ப நெனைக்கும் போது/

“எனக்கு இத விட்டா பொழப்பு ஏது தாயி,அதான் மேடான்னாலும் பள்ளமா னாலும் வந்துர்றது/ இருக்குறது இருக்கட்டும்,ஆகுறது ஆகட்டுமுன்னு..,,,,/என அன்றாடங்களை எடுத்து வைக்கிற கீரைக்காரம்மாவின் பேச்சு.

”என்ன கடலைக்காரண்ணே நல்லாயிருக்கீங்களா என்கிற பேச்சுடன்தான் பையை நீட்டினான் அவரிடம்.

”நல்லாயிருக்கேன் தம்பி,ஒங்களப்போல ஆட்க இருக்குற வரைக்கும் என்னை யப் போலானவுங்க நல்லா இருப்போம் தம்பி,அட மெய்யாலுமேதான் சொல் றேன் தம்பி,நீங்க ஏங்கிட்ட வாங்குற யேவாரத்த வச்சி மட்டும் சொல்லல, ஒங்க மனச வச்சி சொல்றேன்,கேள்விப்பட்டுருக்கேன் ஒங்களப்பத்தி,ஒங்க நல்ல மனசுக்கு நீங்க நல்லாயிருக்கணும் தம்பி,இந்த சின்ன வயசுல இந்த மனசு வாய்க்கிறது ரொம்பவே அபூர்வம் ,தனக்கு ஒரு கண்ணு போனாலும் பரவாயில்லை எதிராளிக்கு ரெண்டு கண்ணும் போகனுமுன்னு நெனைக்கிற வுங்க இருக்குற இந்தக்காலத்துல தனக்கு ஒரு சுகக்கேடு ஏற்பட்டாலும் பரவாயில்ல,அடுத்தவுங்க நல்லாயிருக்கணுமுன்னு நெனைக்கிற கொணம் ரொம்பவேஅபூர்வம்தம்பி.”என்றவரைஇடைமறித்து”போதும்போதும்என்னையப் பத்தி மட்டுமே பேசுனது,யேவாரம் எப்பிடி இருக்குன்னு சொல்லுங்க, மத்ததப் பத்தி அப்புறம் பேசலாம்,”

”என்ன தம்பீ யேவாரம் ,பெரிசா யேவாரம்,கௌரவதுக்காக பீ தின்ன பொழப்பு”

”என்னதான் புள்ளைங்க உக்கார வச்சி சோறு போடுறேன்னு சொன்னாலும் கூட ஒடம்புல தெம்பு இருக்குற வரைக்கும் நம்ம கைய ஊனி நாமதான் கர்ணம் பாயணுமுன்னு நெனைச்சி தேனிப்பக்கம் இருந்து கடலை மூடை யெறக்கி வித்துக்கிட்டு இருக்கேன்,

“ஒரு நாளைக்கு அழிவு செலவு போக கையப்புடிக்காம ஏதோ கெடைக்கும், கெடைக்கிறது கைக்கும் வாய்க்கும் பத்தாது தான், புள்ளைங்க வீட்டுல சாப்பு ட்டுக்கிட்டு இருக்குறதுனால ஓடிக்கிருது வண்டி எனச்சொன்னவரை ஏறிட்டவ னாய் கடலை வாங்கிக் கொண்டு வந்தான்.

சமையலறையிலிருந்து வேர்க்கடலை அவிக்கும் வாசனை வருகிறது,நாசி நிறைந்த வாசனை. நன்றாக இருந்தது,

வாசனையின்வசம் இவனும் வாசனை கொண்டுவந்தவளின் பக்கம் இவனது மனமும்/