புதன், 25 டிசம்பர், 2019

தாமதங்களின் முன்னறிவிப்பாய்,,,,,

கொஞ்சம்தாமதமாகிப்போகிறதுமன்னிக்கவும்.மன்னிப்புக்கேட்கவும்மன்னிப்புக் கொடுக்கவும் ஒரு தனி மனது வேண்டும் போலும்,அது தேவையான அளவி ற்கு இருப்பு இருக்கிறதுதான்,

சடுதி எடுத்த மனதுடன் காலை நேரம் சிறிதே அவசரம் காட்டி எழுகிற போது செய்துவைக்கப்பட்டிருந்தசின்னமுள்ளும்,பெரியமுள்ளும்கூடவே ஸ்நேகிதச் சிரிப்புடனாய் இணை சேர்ந்துக்கொண்ட விநாடி முள்ளும்,மணி ஏழே கால் என முன்னறிவிக்கிறது,

ஒரு கூட்டு பறவையின் குஞ்சுகள் அடைகொண்டதை போல இப்படி ஒரு கடிகாரத்த எங்க வாங்குனீங்க,என்ன வெலைக்கு வாங்குனீங்க,இது போலான கடிகாரத்த வாங்க ஒங்களாலத்தான் முடியும்,எதுக்கெடுத்தாலும் எங்க போனா லும் மாடர்ன் மாடர்ன் மாடர்ன்தான்,என கடிகாரம் வாங்கி வந்த தினத்தன்று முன் மொழிந்தாள் மனைவி/

கடிகாரத்தை பார்த்துக்கொண்டே மனமில்லாமல் எழுந்து முகம் கழுவுகிற போது கண்கள் எறிந்து சோம்பல் அகலா தூக்கம் பிடித்த முகம் முன் நிழலா டியதாய்,,,,,/

ஆடியநிழலுக்கு அர்த்தம்ஏதாகினும்உண்டா என்றால் இப்போதைக்கு இல்லை என்றே சொல்லலாம். நிறையவற்றிக்கு அப்படித்தானே இருக்கிறது.

நாலுபுள்ளியும் ,எட்டுப் புள்ளியும் போய் இப்பொழுது வந்து விட்ட வரை கோலங்கள் வாசலை அலங்கரிப்பதை பார்க்க முடியவில்லைதான் இன்று/

இட்டுவைக்கப்பட்டபுள்ளிகளும்,இழுத்துவரையப்பட்டகோடுகளுமாய்அலங்க ரிக்கப்படுகிற வாசல்கள் எப்பொழுதும் கண்ணுக்கு இதமாகவே,,,,/

ஊர்ந்து திரிந்த எறும்புகளும்,பறந்து திரிந்த பறவைகளும் கோலம் வரைந்த வாசல் தாண்டிச் செல்கையில் சில விநாடி நின்று கண்ணுற்றுச்செல்வதாய் அறிந்து கொள்கிறான் தினங்களில் அவளிடமிருந்து.

இருக்கட்டும் இருக்கட்டும் என்னதான் வரைந்தாலும் என்னதான் இட்டாலும் கோலம்தானே,,,,என்கிற இவனது வம்பிழுப்பிற்கு,,என்ன அப்படிச்சொல்லி விட்டீர்கள்,,?இதுவும் ஒரு வரை கலைதானே,,,.கண்ணுற்றுப்பார்ப்பதற்கும் காதுற்று விமர்சனம் செய்வதற்கும் ஏற்ற ஒன்றாய் இருந்தால் மட்டும்தானா அது வரைகலை,பின் இதெல்லாம் எந்த விதத்தில் சேர்த்தி கூறுங்கள் மறுக் காமலும் மனம் திறந்துமாய்,,,/ என்கிற அவளது பேச்சிற்கு என்ன சொல்லி மனச்சமாதானம் செய்வது அப்போதைக்கு என்பது தெரியாமல் சொல்லற்று நின்ற போது சரி சிரமம் கொள்ளவேண்டாம் என அவளே பின் வாங்கிக் கொள்கிறாள்,சொல்லிலும் பேச்சிலிருந்துமாய்,,,/

ஆகா சரியான செயல் உன்னது,இப்படித்தான் இருக்க வேண்டும்,ஏதாவது ஒன்றிற்கு ஏதாவது ஒன்றை ஈடு கொடுக்கும் விதமாய் பேச்சும்,சமாதானமும் அமைந்து போவதுதான் நல்லது என்ற போது வாய் கொள்ளாது சிரித்தாள்,

சமாதானம்ஆகாமல் எங்கு போய்விடப்போகிறேன்,போனாலும்விட்டு விடவா போகிறீர்கள்,,?எப்பொழுதும் இறங்கி வந்து சமாதானமாகிப் போகிறவர்களும், சமரசம்பேசுகிறவர்களுமாய்குடும்பத்தில்பெண்களாகத் தானே இருக்கி றோம் என்றபடி போய் விடுகிறாள் பேசிக்கொண்டிருந்த பேச்சிற்கு முற்றுப் புள்ளி வைத்துவிட்டும் கோலப்பொடிடப்பாவைஓரம் கட்டிவைத்து விட்டுமாய்,,,/

முன் காலையில் யாரும் எழுப்பாமல் எழுந்து வீட்டில் முகம் கழுவி விட்டு கடையில் போய் டீ சாப்பிட்டு விட்டு செல்கிற வழியில் மாட்ட விடுபட்டுப் போன சட்டை பட்டனை மாட்டிக்கொண்டு வாக்கிங் செல்லலாம் எனவாய் அன்றாடங்களில் மனம் முளைக்கிற எண்ணம் முளையிலேயே கருகி விடுகிறதாக அல்லது கிள்ளி எறியப்படுகிறதாக/

கருகி விட்ட எண்ணமும் கிள்ளி எறியப்பட்ட துண்டுகளின் சிதறல்களும் நடையின் பாதையெங்கும் அங்கங்கே சிதறிக்கிடப்பதாய் ,,,,,/

நல்லதுதான் ,தினமும் வாக்கிங்க் இல்லை ரன்னிங்,இல்லை சைக்கிளிங்,, இப்படி ஏதாவது ஒன்று,,,,,,ஆசை பூண்ட மனம் செயல் என வரும் போது கொஞ்சம் பின் வாங்கித்தெரிவதாய்,,,/

காரணம் என்ன சொன்ன போதிலும் சமாதானப் பட்டுக் கொள்ள முடியாது தான். முதல் நாள் இரவு படுப்பதற்கு கொஞ்சம் தாமதம் ஏற்பட்டுப்போகிறது வாஸ்தவம்தான்.

தாமதப்படுகிற செயலைச்செய்து விட்டு தாமத்தின் மீது பழி போட்டால்,,,,,,,,,?

மூன்று சினிமாக்கள் மூன்று சேனல்களில்,,,,இடைவெளி விட்டும் பின் தொடர் ச்சியாயும் பார்த்தான்.

மூன்றும் மூணு மாதிரியாய் கதை சொன்ன படங்கள்,முதலாவது ஆறு மாதங்களுக்கு முன்னாய் ரிலீஸ் ஆன படம்,மற்றொன்று மூன்று வருடங்க ளுக்குமுன்னானபடம்,மூன்றாவதுஇருபத்தைந்துவருடங்களுக்குமுந்தையது,

மூன்று படங்களின் கதைகள்,படத்தின் நாயக நாயகிகள்,அவர்களொஇன் நடிப்பு,படத்தின்இசை,பாடல்டைரக்‌ஷன்,எனஇதரஇதரவாய்எல்லாவற்றையும் அசை போட்டு விட வாய்க்கிறது.

மூன்றும் மூன்று விதமான தளங்களில் கதை சொன்ன படங்கள் என்கிற திருப்தியுடன் படுக்கப்போன இரவு தாமதம் காட்டியதில் என்ன தவறு இருந்து விட முடியும் பெரிதாக,,/

தாமதப்பட்டுப்படுக்கிற போது வர மறுக்கிற தூக்கத்தை இமைகள் திரை கட்டி இழுத்து மூடுகிற போது படுக்கிற வேளைக்கும் தூங்கிப் போகிற வேளைக்கு மான கால இடைவெளி சற்று அதிகமாகவே ஆகித் தெரிகிறதுதான்.

படுத்தவுடனாய்தூங்கிப்போகிறவர்கள்வெகு பாக்கியவான்களே,,,/

எத்தனையோ முறை பார்த்திருக்கிறான்,கடை வீதியின் நெரிசல் மிகுந்த ஜன நடமாட்டத்திற்கும் பெருங்கொண்ட இரைச்சலுக்கும் நடுவில் பூட்டப்பட்ட கடையின்வாசலில்துண்டைவிரித்துப்படுத்திருக்கிறமூட்டைதூக்கும்தொழிலாளி யையும், கடினம் காட்டுகிற உடல் உழைப்பாளியையும்/

அதில் உள்ளடக்கம் கொண்ட காளியப்பண்ணனை இவனுக்குத்தெரியும்,என்ன தம்பி நல்லாயிருகையா என்பார் பார்க்கும் ஒவ்வொரு தடவையும்,,,,/

நல்லாயிருக்கேண்ணே என்கிற என் பதிலுக்கு இடிசிரிப்பு ஒன்றை உதிர்ப்பவர் சரி போ,காய்கறி மார்க்கெட்டுக்குத்தான வந்த அந்த வேலைய கவனி,என மார்கெட்டுக்குள்ளாய் இருக்கிற குறிப்பிட்ட கடையின் பெயர் சொல்லி அனுப் புவார்,

காளியப்பண்ணன் சொல்லிவிட்டார் என்றால் அவர்கள் கடையையே எழுதி வைத்து விடுவார்கள் போலும்.

வழக்கமாய் காய்கறி லோடுகளை மார்க்கெட்டின் அனைத்துக்கடைகளுக்கும் இறக்குபவர் காளியப்பண்ணன்,

சென்றமாதத்தின் ஒரு நாளில் காலைவேளையாய் காளியப்பண்ணன் காய்கறி லோடு இறக்கிக் கொண்டிருக்கும்போதுமுதல்மூடையைஇறக்கிக் கொண்டிருக்கையில்கொஞ்சம்சுணங்கிஇருந்தவர்மறு மூட்டை இறக்கையில் நெஞ்சைப் பிடித்துக் கொண்டு உட்கார்ந்து விட்டார்,

இறக்க வந்த மூட்டையை நின்ற நிலையிலிருந்தே அப்படியே போட்டவர் ஐயா என அவரை இருகைகளால் அள்ளி அப்படியே மூட்டையை தூக்குவது போல் தூக்கிகொண்டு இடைஞ்சலான மார்க்கெட்டின் வாசல் வரை சென்று அங்கு நின்ற ஆட்டோவில் ஏற்றி ஆஸ்பத்திரிக்கு கொண்டு போயிருக்கிறார்.

பின்னாளில் பேசிக்கொண்டிருந்த ஒரு நாளில் கடைக்காரர் சொன்னார், அன் னைக்கி ஆஸ்பத்திரிக்கு கூட்டிக்கிட்டு ஓடுன அன்னைக்கி நான் பொழைச் சதே மறு பொழப்புன்னு டாக்டர் சொன்னாரு என்றார்,

ஒங்களுக்கு அது மறு பொழப்போ என்னவோ தெரியாது மொதலாளி,எனக்கு ஒரு உபகாரம் செய்ய வாச்சிருக்கு அவ்வளவுதான்,

அப்பிடியே சாவு வந்தாலும் நாம என்ன அணைகட்டியா தடுக்க முடியு மொதலாளி,என்ன கோடி வருசத்துக்கு வரம் வாங்கியா வந்துருக்கம்,இருக்குர வரைக்கும் இருக்க வேண்டியதுதான்,நேரம் காலம் வந்தா போயி சேர வேண்டியதுதா மொதலாளி,,,,படுத்துக்கிட்டு இழுத்துக்கிட்டு பாக்குறதுக்கு ஆள் இல்லாம நாறிப்போயி படுத்த படுக்கையா கெடக்குறதுக்கு பொட்டுன்னு போய்ட்டா அது நல்ல சாவு லிஸ்ட்டுல சேந்துரும் மொதலாளி என்பவர் இப்ப என்ன மொதலாளி கொற ஒங்களுக்கு,பேரன் பேத்தி எடுத்துடீங்க,வயசும் எழுபதஎட்டப்போக்குது,இனிஎன்ன மொதலாளி,என்னயக்கேட்டா அன்னைக்கி நீங்க செத்துப்போயிருந்தாக்கூட பாக்கியந்தான்,என்பார் காளியப்பண்ணன்,

காளியப்பண்ணனைப்போன்ற உடல் உழைப்பாளிகள்,,,,,அவர்கள் வாழ்க்கை ,அவர்கள் உழைப்பு,அவர்கள் சாப்பாடு,,எல்லாமேதனிதான்,

ஜவுளிக்கடையில் கூட அவர்களுக்கென தனியாக துண்டு வைத்திருந்தார்கள் கொஞ்சம் முரடு காட்டியும் பெரியதாகவும்/ போர்வையின் நீளத்திலும் அகலத் திலும் பாதியளவாவது இருக்கும்.

காளியப்பண்ணன் துண்டு எடுக்கப்போனால் ஜவுளிக்கடைக்குப்போன அடுத்த நிமிடம் அவர் கையில் அந்தத்துண்டு இருக்கும்.

இவனைப் போலானவர்கள் போய் துண்டெடுக்கும் போது வேண்டாம் இது அதெல்லாம்காளியண்ணன்களுக்கானது.சரிப்பட்டுவராதுஉங்களுக்கு,,,என்கிற சொல் உத்திரவாதத்துடன் வேறு விதமான துண்டைஎடுத்துப் போடுவார்கள், கொஞ்சம் மிருதுவாகவும் ரகங்களில் நிறைந்து போயுமாய் இருக்கும் துண்டு களில் ஏதாவது ஒன்றை எடுத்து வருவான்.ஆனால் விலை என்னவோ அந்தத் துண்டின் விலையை அனுசரித்துத்தான் இருக்கும்,துண்டு மட்டும்தான் அப்படியா, மற்ற மற்ற விஷயங்கள் எல்லாம் அப்படித்தானா என்பது தெரிய வில்லைஎனகாளியப்பண்ணனிடம்கேட்கிறபோது,,மத்தவிஷயங்கள்ல,,, எங்க சாப்பாடு இங்க ரொம்ப முக்கியம் காட்டுது என்பார்,

இவனைப் போலவோ இல்லை இன்னும் சிலரைப்போலவோ கொஞ்சம் சிறுத்துச் சாப்பிட்டு விட இயலாது.காளியண்ணன் போன்றவர்களால், அவர்க ளுக்கு அது காணாது, சொளப்பொரியாகிப்போகும்,

வேலை செய்கிற உடல் மூளை இடுகிற கட்டளையை உடலின் சகல பாகங்களுக்குமாய் அனுப்பி உடலின் சகல பாகங்களையும் கூட்டிணைத்து வேலை செய்ய வைப்பதை உறுதி செய்யும் போதும்,ரத்தத்தை வியர்வை யாக்கி உடலெங்குமாய் வரி காட்டி வடிய வைக்கிற போதிலும் தேவைப் படுகிற உடலின் தேவைக்கு சாதாரண சாப்பாடெல்லாம் அவர்களுக்கு காணாமல் போய் விடுகிறதுதான்,

அதற்காய் அவர்கள் தினமுமாய் சிக்கன் மட்டன் என எடுத்துச்சாப்பிட்டு விட முடியாது,வேறு என்னதான் செய்வது உடலுக்கு உறமூட்ட சத்தாய் ஏதாவது உணவு சாப்பிடத்தான் வேண்டும்,இழந்துபோன கலோரிகளை ஈடு செய்ய அவர்களுக்குக்கிடைத்த எளிய சத்தான உணவு மொச்சைதான்,

மொச்சை மற்றும் சுண்டல் பாசிப்பயறு மற்றும் பூரி வடை எனவரிசைகட்டி அடுக்கிவைக்கப்பட்டிருக்கும்உணவுவகைகளைதேர்ந்தெடுத்துதினசரி மாலை வேளைகளில் சாப்பிட்டுக்கொள்கிறார்கள்.

இவனுக்குத் தெரிந்து மதுரை ரோட்டின் இறக்கத்தில்தான் அந்தக்கடை இருந்தது,

இறக்கத்தின்வலது பக்கம் காட்டி வீற்றிருக்கிறகடையில்தான்இவை எல்லாம் கிடைக்கும். அந்தக் கடைக்கும் அவர்களுக்கு எப்பொழுதும் மிகப்பெரிய பந்தம் இருந்தது.

தினசரி மாலை குறிப்பிட்ட நேரத்திற்கு அந்த இடத்தில் ட்ராபிக் ஜாம் ஆகி விடுகிற அளவிற்காய் மூடை தூக்கும் தொழிலாளர்களின் கூட்டம் இருக்கும், காளியப்பண்ணனை உள்ளடக்கி,,,/

கையகலதட்டு ஒன்றில் ஆளுக்கு இரண்டு மொச்சையை வாங்கி உடன் பருப்பு வடை ஒன்றை எடுத்து பிச்சிப்போடுவார்கள்,போட்ட கணத்தில் பின்னாடியே அவற்றின் தலை நனைக்கிற சட்னியையும் சாம்பாரையும் சேர்த்துப் பிசைத்து சாப்பிட்ட பின் ஆளுக்கு இரண்டு அல்லது நான்கு பூரிகள் கூடவே துணைக்கு இன்னொரு மொச்சை அல்லது தட்டாம் பயறு,அதற்கும் இருக்கவே இருக்கிற சட்னியும் சாம்பாரும்/ இதுதான் அவர்களது மாலை நேரத்து டிபன்.இரவு வீடு போவது வரை தாங்கும் அது.

அவர்களது அன்றாடங்களின் கடுமையான உடல் உழைப்பிற்கும், அவர்களு க்குக் கிடைக்கிற கூலிக்கும் தினம் அவர்கள் மட்டனும் சிக்கனுமா சாப்பிட்டு உடம்பை தேற்றிக்கொள்ள முடியும்,

அதற்கான மாற்று வழியாய் அம்புக்குறியிடப்பட்ட அது போலான மூன்று கடைகள் நகரின் வேறுவேறான இடங்களில் இருந்தன, அந்த மூன்றிலுமாய் குறைந்த விலைக்கு கிடைத்த புரதச்சத்தை தேடிப்போய் வாங்கி உண்டது அவர்களாய்த்தான் இருந்தார்கள்.

அவர்கள் தவிர்த்து வாங்கி உண்டவர்கள் மிகவும் குறைவுதான் காளியப்பண் ணனை சேர்த்து./

அது போலான ஓர் நாளில் இவனும் அந்தக்கடையின் எதிர் திசையில் இருக்கிற டீக்கடையில் டீக்குடித்துக் கொண்டே கடையை உற்று நோக்கி விட்டு அவர்களது வாடிக்கையாளர்கள் சென்றவுடன் இவன் சென்று கடைக் காரரிடம் கேட்கிறான்.

அவர்களுக்கு யாருக்காவது கொடுத்த பண்டத்தை அப்படியே எனக்கும் பார்சல் கட்டிக் கொடுங்கள். வீட்டில்போய் சாப்பிட்டுக்கொள்கிறேன் என்ற போது கடைக்காரர் சொல்கிறார்.

“அண்ணே இது நீங்க நெனைக்கிறது போல செரிக்காது. அவுங்க சாப்புட்டது போல சாப்புடணுமுன்னா ஒண்ணு கனமான வேலை செய்யணும்,இல்ல கொஞ்சம் ஓடியாடியாவது திரியணும்,ஒங்க வயசுக்கு சும்மா ஒக்காந்துக் கிட்டு சாப்புடணுமுன்னு நெனைச்சா ஒடம்புல ஏதாவது ஒரு பக்கம் வீங்கிப் போயி நிக்கும்ண்ணே பாத்துக்கங்க,

அது தவிர தின்னது செரிக்காம வயித்துக்கும் நெஞ்சிக்கும் ஒரு பஸ்ஸீ போல ஒடிக்கிட்டு இருக்கும் பாத்துக்கங்க,ஆட்களே இல்லாத வெத்து பஸ்ஸா ஓடிக்கிட்டு இருக்குறதுல என்ன பெருமை இருந்துற முடியும்,தவிர அப்பிடி ஓடுறதுல வர்ற உடல் யெடைஞ்சல் எவ்வளவு சொல்லுங்க,,,,,?என அவர் கேட்ட ஐந்து வருடங்களின் கடைசியில் இப்பொழுதுமொச்சையும் வடையும் வாங்கிச்சாப்பிட்ட காளியப்பண்ணன்கள் அரிதாகிப் போனார்கள், மொச்சை யும் வடையும் விற்ற கடையும் இப்பொழுது காணக் கிடைக்கவில்லை, இன்று போய் பார்க்க வேண்டும்.