புதன், 15 ஜனவரி, 2020

எறும்பூர,,,,,



எறும்பு ஒன்று ஊர்ந்து சென்று கொண்டிருக்கிறது தனிமைகாட்டியும் அப்பாவி -யாகவும்,,,/ 

எங்கு செல்கிறது அது,?எங்கிருந்து அதன் வருகை,?அதற்கிட்ட பணிகள் என்ன எதுவுமறிந்திருக்கவில்லைஅவன்,வாசல்விட்டுஇறங்கியவன் அப்பாவியுடன் அப்பாவியாய்எறும்பிடம்நலம்விசாரித்துவிட்டு,,,,என்னஅவலம்இது,,?தனியாகவும் கவலை சுமந்தும் செல்கிறாயே என்கிறான்,

தனியாகச் செல்கிறேன் என்பது வாஸ்தவம்தான் ,ஆனால் கவலை சுமந்தெல் லாம்செல்லவில்லை,தனியாகச்செல்கிறேன்,வெயில்வேளை,வயதாகிப்போன உடல்,இரைதேடிச்செல்கிறபதட்டம்,இரை கிடைக்குமோ கிடைக்காதோ என மனம் சுமந்த எண்ணமெல்லாம் ஒரு சேரவும் எனது குழுவில் வந்து விடுகிற அவ்வப்பொழுதான மனப்பிணக்கின் காரணமாகவும் தனித்துச்சென்று கொண் -டிருக்கிற என் குறுக்கே வந்து மூடப்பட்ட ரயில்வே கேட்டாய் கேள்வி யை இடைநிறுத்தினால் எப்படி,,,,,,?எனச் சொன்ன எறும்பு மேற்க் கூறிய இத்தனை யையும் மனமும் உடலும்தாங்கி சென்று கொண்டிருக்கிற நான் கொஞ்சம் சோர்வுற்றும் தளர்ந்துமாய் போவதில் ஆச்சரியமென்ன இருந்து விடமுடியும் சொல்லுங்கள்,போக உங்களுக்கென ஊராட்சிகளிலிருந்து நகராட்சிகள், மாநகராட்சிகள் அமைத்து தருகிற ஒற்றைச்சாலையிலிருந்து நாற்கரச்சாலை வரை வசதி இருக்கிறது, அதற்கென பாதுகாப்பு வசதியும் போக்குவரத்து சிக்னலும் அமைத்துக்கொடுக்கப்பட்டிருக்கிறது, மீறி நடக்கிற விபத்துக்கள் விதிவசத்துக்குள்ளும் கவனக் குறைபாடுக்குள்ளுமாய்/

எங்களுக்குஅப்படி என்ன இருக்கிறது சொல்லுங்கள், நீங்கள் நடந்து செல்கிற சாலையில்தான் நாங்களும் நடந்து செல்லவேண்டும்,அதுவும் உங்களிடமி ருந்து தப்பியும் பாதுகாப்பாகவுமாய்,கரணம் தப்பினால்மரணம் என்பது தானே எங்களது வாழ்க்கைக்கு விதிக்கபட்டிருக்கிற சாபமாயும் மெய்ப் பிக்கப்படாத வாக்காயும் ஆகித்தெரிகிறது இல்லையா,,,,?

இதோஇன்றுகாலைஎங்களது கூட்டிலிருந்து வெளியேறியஅத்தனை பேரில் எத்தனை பேர் திரும்பி உயிருடன் போய் சேருவோம் என்பது உறுதியில்லை _தானே,நீங்கள் நடக்கிற இடம், நீங்கள்புழகுங்குகிறவெளி,நீங்கள் உறை கொள்கிற வீடு இன்னும் இன்னுமாய் நீங்கள் குடிகொண்டிருக்கிற இடங்களி லும்அதற்கு இடையிலும் தானே எங்களது இருப்பும்,பயணமும் இல்லையா,,,?

“அப்படிருக்கிற போது எப்படி தப்பி உறை கொள்வது நாங்கள் ,நீங்கள் எடுத்து வைக்கிற காலடி ஒவ்வொன்றுக்கும்,நீங்கள் காறி உமிழ்கிற எச்சில்த் துளிகளு க்கும் தப்பித்,தப்பி தற்காத்து,தற்காத்து,,,,,,எங்கே நீங்கள் எடுத்து வைக்கிற ஒவ்வொருஎட்டுக்குள்ளும்மிதிபட்டுமரித்துப்போய்விடுவோமோ,அல்லதுநீங்கள் காறி உமிழும் எச்சிலில் நாங்கள் காணாமல் போய் விடுவோமோ என்கிற பயத்துடன் ஜாக்கிரதையுடனுமாய் பயணித்தும் வாழ்க்கையை கொண்டு சென்றுமாய் இருக்கிறோம்,

“இதில் நாளெல்லாம் உணவு தேடி அலைய விதிக்கப்பட்டிருக்கிற வாழ்க் கை வேறு,பயிர்கள் விளைந்த நிலமெ ல்லாம் இப்பொழுது கட்டாந் தரைகளாயும் கட்டங்களாயும் ஆகிப்போன பிறகு எங்களுக்கென உணவு தரவும் தேடி உறை கொள்ளவும் இடமில்லாமால் போனது,

“தன் மார்மீது விளைந்தவைகளை ஒரு தாயின் உயர் வாஞ்சையுடன் எங்க ளுக்குத்தந்துமகிழ்ந்தவிளைச்சல்கொண்டநிலங்கள்காணாமலும் களவாடப் பட்டுமாய் ஆகிப்போன பின்னாய்பஞ்சடைந்த கண்களுடனும் பசித்து ஒட்டிய வயிறுகளுடனுமாய் பரந்து விரிந்த நிலத்தின் வெளியெங்கும் ஊர்ந்து திரிந்து அலுத்துக்களைத்துஉணவெனஏதோதேடிக்கொண்டுவருகிறோம்,

நாங்கள் பரவாயில்லை, நிலங்களில் இல்லா விட்டால் கூட உங்களைப் போல் வீட்டுக்கார்கள் கழுவி ஊற்றுகிறவற்றிலிருந்து என்களுக்குத் தேவை யானதைஎடுத்துக்கொள்கிறோம்,

ஆனால்விளைச்சலற்ற வெற்று நிலங்களின் மேல் பறந்து திரிந்து தின்ன ஏதும் கிடைக்காமல் ஒட்டிய வயிறும் பஞ்சடைந்த கண்களுமாய் ஊருக்குள் பறந்து திரிந்து கரண்ட் கம்ப வயர்கள் மீதும், வீடுகளின் மொட்டைமாடி மீதுமாய் பறந்து திரிகிற அவலத்தை எந்த வரையறைக்குள்ளாய் அடைத்து விட முடியும் சொல்லுங்கள்.,,,,,?

ஒரு காலத்தில் இதோ நீங்களும் நானுமாய் நின்று பேசிக்கொண்டிருக்கி றோமே அந்த நிலம் நிறை கொண்ட விளைச்சல்க்காடாய் இருந்துக்கக் கூடும், அதிலிருந்து எங்களது மூதாதயர்களும் இதர பறவை இனங்களும் வயிறாறிக் கொண்டிருந்தன,

இப்பொழுது அவைகளை பறித்து தூர எறிந்து விட்டு அதை காணாமல் போய் விட்டுச்செய்துவிட்ட பின் நாங்கள் இப்படித்தான் உணவு தேடி பயணம் மேற் கொள்ள வேண்டியிருக்கிறது சோர்ந்து போன உடலுடனும் மனதுடனுமாய்/

“மனதும் உடலும் சோர்ந்து போனால் வாழ்க்கையே அஸ்தமித்துப்போய் விட்டது என அர்த்தமா என்ன,,,?ஏதோ கொஞ்சம் சோர்ந்து போனோம் அவ்வளவுதானே தவிர்த்து வேறொன்றுமில்லை என அறுதியிட்டுச்சொல்லிக் கொள்கிறேன்”எனச் சொன்ன எறும்பை ஏறிட்டவன் வாஸ்தவம்தான் மறுப் பதற்கில்லை. ஆனால் நீங்கள் இரை தேடச்செல்வதும்,இரைகளை கைக் கொண்டு எடுத்துச் செல்வதும் அதை சேமிப்பதும் நீங்கள் குழுவாய் ஒன்றி ணைந்தும் தோளோடு தோள் நின்றுமாய் செய்கிற வேலையாயிற்றே,பின் ஏன் விடுத்துதனியாகபோய்க்கொண்டிருக்கிறாய்,,,?எனக்கேட்டவனிடம்சுரத்தற்றுச் சொல்லிச் செல்கிறது எறும்பு,

“வேறொன்றுமில்லை,பெரிதாய்,வேகம் கொண்ட நாட்களின் நகர்வின் ஊடாய் என்னைப் பார்ப்பதையும் என்னிடம் பேசுவதையும் எனக்கு தூது அனுப்புவ -தையும் மறந்து போகிறாள் எனது அருமைக் காதலி,

நேற்றைக்கு முன் தினம்தான் பத்து பக்கத்துக்குக்குறையாமல் உயிரை உருக்கி கடிதம் ஒன்றை எழுதி அனுப்பினேன் அவளுக்கு,சென்ற வேகத் தில் கடிதத்தை கொண்டு சென்றவன் திரும்பக்கொண்டு வந்து விட்டான், ஏன் எனக்கேட்டபோது,,”அவளுக்கு தாங்கள் கடிதம் கொடுத்து விடுவது விடுத்து நேரில் வந்து பேசினால் நன்றாக இருக்கும் என்கிறாள்,ஆகவே நீங்கள் போய் நேரடியாகபேசுங்கள்”, என்கிறான் அவன்,

நான் நேரில் போய் பேசச்சென்றால் அதை நடக்க விடாமல் செய்வதற்காய் அங்கே கால் கடுக்கக் காத்திருக்கிற கூட்டம் தனியாய் தவமிருக்கிறது, அவர்களை தாண்டிப் போய் ஒன்றும் செய்து விட முடியவில்லை, சரி நடப்பது நடக்கட்டும் என அவளிடம் கொஞ்சம் கவனமாயிருக்கச் சொல்லி விட்டும், நமது காதலுக்கு தடைச்சுவாராய் எழும்பி நிற்பவர்கள் யாரும் நாளை நம்மை சேர்த்து வைக்கப்போவதில்லை கவனம் கொள் என எச்சரிக்கை செய்து விட்டுமாய் வந்தேன்,

அவளென்றால் எனக்கு உயிர், அவளென்றால் எனது உடலின் சரி பாதி, அவளென்றால் நான்,நானென்றால் அவள்.அது தவிர்த்து அவள் மீது எனக்கு ”சாலப்பிரேமம்”.

இது தெரியாமல் எப்பொழுதும் எங்கும் இயங்குற வில்லன்கூட்டம் போல அங்கும்இயங்கியவர்கள் குயுக்தியுடனும்,குறுக்குப் புத்தியடனுமாய் எங்களை பிரிக்க முனைகிறார்கள்,

நானும் சொல்லிப் பார்த்து விட்டேன் ,கெஞ்சிப்பார்த்து விட்டேன்,காலில் விழாக்குறையாய் முறையிட்டும் பார்த்துவிட்டேன்.

நான் முறையிடும் போது மட்டும் அவர்களது காது கேளாக்காதுகளாகிப் போகிறது, அல்லது காதுகளை கழட்டி வேறெங்காவது வைத்து விட்டு பூட்டி சாவியை தொலைத்தும் விடுகிறார்கள்.காதுகளை வைத்த இடத்தையும் சாவிகளை தொலைத்த திசையையும் கேட்டால் மறந்து போனது என மரத்துப்போய் சொல்கிறார்கள்,

எங்களுக்குள் பல்வேறு வகைகள் உண்டே தவிர இனங்களோ ,இனக் குழுக்க ளோ கிடையாது,எங்களுக்குள் வேறுபாடென்ற ஒன்று முளைத்ததில்லை, எட்டுக் கூடப்பார்த்ததில்லை இதுநாள் வரை,

உங்களைப் போல பாகுபாடு பர்ப்பது,இருப்பவன் இல்லாதவன் என்கிற தார தரமெல்லாம் இருந்ததில்லை எங்களுள்/பின் எப்படி வந்தது இந்தப் பிளவு,,,,? என்றெண்ணிய போது துப்பாய் வந்தது ஒரு செய்தி.

துப்பு சொல்வதற்கும் பற்றவைப்பதற்கும் ஆட்களா குறை இவ்வுலகில்/ உங்களில் அப்படியெல்லாம் நடக்கும் சரி,அது சர்வ சாதாரணம்,ஆனால் எங்களில் இப்படி ஒரு விஷவித்து எங்களுடனே இருந்து வாழ்ந்து உண்டு உறங்கி திரிந்து கொண்டிருந்திருந்திருக்கிறது,

உழைப்பின் முக்கியத்துவத்தில்,தேடலின் தெரிவில் அதை மறந்தோம். மறந்தால்தான்என்ன இப்பொழுது குறைந்து போனது.மறப்பது ஒரு பெரும் குற்றமா, அல்லது குறையா,,?இல்லையே எங்களுள் இருக்கும் மற்ற குணங் களைப் போல மறப்பதும் ஒன்றுதான்,அதற்காகப்போய் இல்லாத ஒன்றை இருந்ததாய் சித்தரித்தது எப்படி சரியாகும்,,,?

அவளை சரியான நேரத்தில் சரியாகக் கண்டு கொண்டு கூட்டத் தலைவனி டத்தில் கொண்டு போய் நிறுத்திய போது கூட்டத்தின் தலைவன் சொன்னது தான் மிகவும் ஆச்சரியமாய் இருந்தது அந்த நேரத்தில்,,,/

அவள் இவ்வாறு செய்யக்காரணம் அவள் உன்னை காதலிக்கிறாளாம்,நீ எங்கே அவள் பக்கம் சாய்ந்து விடுவாயோ என்றெண்ணியும்,அவளிடமிருந்து உன்னைப்பிரித்துதன்வயப்படுத்திக்கொள்ளவும்உன்னைப்பற்றியாய் உனது காதலி அறிவதை தடுத்திருக்கிறாள், நீயும் உனது காதலியுமாய் சந்திப்பதை எந்த வகையிலாவது தடுத்திருக்கிறாள்.உன் மீது அவள் கொண்ட ஆவல் உனது காதலியின் மீதும்,உனது காதலின் மீதுமாய் அவளை பொறாமை கொள்ளச்செய்திருக்கிறது சத்தியமாக, அதனால்தான் அப்படிச்செய்தேன் என மானசீகமாகவும் வெளிப் படையாகவும் ஒத்துக்கொண்டாள்.

பின்என்ன செய்யசொல்,எந்த இ.பி.கோ வில் அவளுக்கு தண்டனை வழங்கச் சொல்,நாங்கள் எல்லோரும் கூடி ஒன்று செய்கிறோம்,அது தலைவனான என்னால் மட்டும் தனித்துச்செய்யக்கூடிய காரியமில்லை,எல்லோரும் கை யும் மனதும் கலந்து கொடுத்தீர்களானால் நான் அறிவிக்கிறேன், உனக்கும் உனது காதலிக்கும் திருமணம் நடக்கும் உறுதியாக,அதை நமது குழு ஒரு சேர இங்கேயே நடத்தி வைக்கும்.என்ன அதற்கு சிறிது காலம் ஆகும் ,அது வரை நீ கொஞ்சம் பொறுமை காக்க வேண்டும்.நம்பிக்கையுடன் இருக்க வேண்டும், கடுகளவு பொறுமையும் ,மலையளவு நம்பிக்கையும் உன்னை உயர்த்தி கண்டிப்பாக வாழ்கையில் ஒன்று சேர வைக்கும்,எனதலைவன் அறிவித்த போது என்னுடனிருந்து எனக்கு துரோகம் இழைத்தவன் ஒப்புக் கொண்டாள்,

என்னதான் உடனிருந்த போதும் கூட்டத்தில் ஒருவளாய் நடமாடித் திரிந்த போதும் கூட அவள் என்னை விரோதியாகவே நினைத்தாள், விரோ தியாகவே பாவித்தாள்,என்னதான் அவள் என்மீது தூசனை அள்ளி வீசிய போதும் கூட எனது நட்பு வட்டம் என்னை சரியாகவே புரிந்து கொண்டது,

புரிதலின் வரைபடத்தை எடுத்துக்கொண்டு ஓடோடிப் போய் எனது காதலி -யிடம் போட்டுக்காட்ட நட்பு வட்டம் நெருங்கிய கணம் அவள் எனது காதலியிடம் என்னைப்பற்றியாய் வாரி வீசியிருந்த விஷ விதைகள் கொஞ்சமாய் அரும்பு காட்ட ஆரம்பித்திருந்ததாய்,,/

அரும்பிய விதைகள் வேறெதையும் விட வேகம் கொண்டு முளைக்கிற தாய்,,/

உண்மையை விடபொய்க்கு அதிகம் வலுதானே,,,? ஆழ ஊன்றப்பட்ட பொய் திரும்பத் திருப்ப பதியனிடப்படுகிற போது எனது காதலியும்தான் என்ன செய்வாள் பாவம்,,,? நம்பி விட்டாள்,நம்பி விட்டவள் என் மீது கோபமும் கொண்டு விட்டாள்.

இனி நீயின்றி நானுண்டு,ஆனால் நானின்றி நீயிருப்பாயோ என்னவோ,அது உனது சாமர்த்தியம் என முன்னறிவித்து விட்டாள்.எனக்கு துரோகித்தவளை முன் வைத்தே,,/

பொய்மைக்கு எவ்வளவு சக்தியிருக்கிறது என அன்றைக்குத்தான் புரிந்து கொண்டேன்.

ஆழகாலுன்றிய பொய்மையின் விதைகள் வீரியம் கொண்டு வேறெதையும் விட பன்மடங்கு வேகம் காட்டி வளர்ந்து புதர்க் காடாய் மண்டி கீறிச்செல்ல வழியில்லாமலுமாய் செய்து விடுகிறது.

இது தெரியாத எனது காதலி ஊரெல்லாம் புலம்பிக்கொண்டும் உன்மத்தம் கொண்டும் அலைகிறாள்,அவள் எந்த அளவிற்கு என் மீது பிரியம் வைத்தி ருந்தால் இந்தளவிற்கு புலம்பியிருப்பாள்,,,?என என்னை எண்ண வைத்த அன்று வேண்டாம் இது ஆகாது,வேண்டாம் இது அடுக்காது,நம்மின் நேசம் நம்மை பிரிவு கொள்வதற்கா நம்மை அறிமுகம் செய்து வைத்தது,,,,? வேண்டாம் அன்பே வந்து விடு என் திசைக்கு ,அம்புக்குறியிட்டு விடு என் பாதைக்கு,,,நீ காலால் சொல்வதை நான் தலையால் ஏற்கிறேன்,என எத்தனை சொன்ன போதும் ஏற்காத அவள் அங்கு அப்படியே,நான் இங்கு இப்படியே எனச்சொன்ன எறும்பை ஏறிட்டவன் அதுசொன்ன சுயபச்சாதாப வார்த்தைக ளை தாங்காதவனாய் எறும்பை உள்ளைங்கையில் அள்ளி ஊற விட்டுக் கொண்டு அதன் காதலியிடம் கொண்டு போய் சேர்க்கிறான் ,

ஜீ பூம்பா வித்தை ஏதும் செய்யாமல்/