கடிதம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கடிதம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 18 மார்ச், 2020

வெங்காயத்தோலு,,,,,

வெங்காயம் விற்ற வண்டிகளிலெல்லாம் வெள்ளைப்பூண்டு விற்க ஆரம்பித் திருந்தார்கள்.

கிலோரூபாய் நூறு என்றார்கள்.பரவாயில்லை.பார்ப்பதற்கு நன்றாக தெரிந் தது, இன்னும் புழக்கத்தின் போது எப்படி இருக்கும்,எத்தனை நாள் தாங் கும் என்பது உறுதிபடத் தெரியவில்லை,

கடைகளில் பொதுவாக இவ்வளவு வெள்ளையாக வாங்கியதாய் ஞாபகம் இல்லை,பளீரெனச்சிரிக்கிற மனம் பிடித்த காதலியின் முகம் நினைவுக்குள் வந்து போவது தவிர்க்க இயலாமலேயே/

நினைவில் நிற்கிற நாட்களில் மட்டுமல்லாது மற்ற நாட்களிலும் கூட சந்திக்கப் போவதுண்டு,

சுகாவை இவனுக்கு மிகவும் பிடித்திருந்தது.

சுகா என்றால் இவனுக்கு இஷ்டம்,சுகா என்றால் இவனுக்கு அன்பு,சுகா என்றால் மனதில் அலை பாயும் உணர்வு,சுகா என்றால் காற்றில் கலந்து வந்த மிகை,,,சுகா என்றால் இவனின் உயிர்,சுகா என்றால் இவனின் உணர்வு, அவள் இன்றி இவனா,இவனன்றி அவளா நினைத்துப்பார்க்கக் கூட அச்சமாய் இருக் கிறது,,,,என இன்னும் இன்னுமாய் யோசிக்கிற இவனின் உணர்வுகளுக்கு ஈடாய் தெரிந்த அவளை உளமாற நேசித்தான்,

இங்கிருந்து என் ஜி ஓ காலனி போக வேண்டும்,அத்தை வீட்டுக்குப் பக்கத்தில் அவர்கள் குடியிருந்த போது ஏற்பட்ட பழக்கம்,

ப்ரௌசிங்க் சென்டருக்கு வருவாள்.இவன் எப்போதுமே கைதேர்ந்த பைத் தியக் காரனைப்போல பேப்பரும் கையுமாக ஜெராக்ஸ் பிரிண்ட் அவுட், பென் டிரைவ்,,,,என மேட்டரும் கையுமாக அலைபவன்.

பெரும்பாலுமாய் கதைகள் கருக்கொண்டிருக்கும் பென் டிரைவை பிரௌவ் சிங் சென்டரில் கொடுத்து விட்டுப்போய் விடுவான்,பிரிண்ட் அவுட் எடுத்து வைக்கச்சொல்லிவிட்டு ஒரு மணி கழித்தோ அல்லது மறுநாளோ வாங்கிக் கொள்வதுண்டு.

அப்படியான ஒரு நாளில்தான் பழக்கமானாள் அவள்.பிரிண்ட் அவுட் எடுத்த பேப்பரை கையில் வைத்துக்கொண்டு பிரௌசிங்க் சென்டர் வாசலில் நின்ற பொழுது,

நன்கு வளர்ந்து பருத்த மரம்,எப்பொழுது முளைகொண்டது என யாருக்கும் தெரியவில்லை,யாரும் அறியவில்லை.

மூன்றாவது கதையின் நான்காவது பக்கத்தில் அத்தை மகள் என்பதற்குப் பதில் ”அத்தைத்தையின் மகள் என டைப் அடித்து வைத்திருந்தான்,அது இப்போதுதான் புடிபடுகிறது,திருத்தம் வேண்டி உள்ளே கொண்டு போக திரும்பிய பொழுது எதிர்பட்ட அவள் சில்லிட்டு இதம் தந்த வேப்பமர இலைகளின் பூம்பிஞ்சி வாசனையுடனும் மென்மை சுமந்துமாய் காணப் பட்டாள், அப்படி தலைக்குக் குளித்திருந்திருப்பாள் போலும், முடியை அள்ளி முடியாமல் விரித்து விட்டு முடியின் நுனியில் முடிச்சுப் போட்டிருந்தாள், விரிந்து பறந்திருந்த முடி காற்றில் அலைந்து ஒற்றை ஒற்றை யாய் பிரிந்தா டியது பார்க்க நன்றாக இருந்தது,பெரிதாகவும் இல்லாமல் சிறியதாகவும் இல்லாமல் சிவப்புக்கலரில் அவள் வைத்திருந்த பொட்டு நன்றாக இருந்தது, கழுத்தில்தொங்கியஒற்றைச்செயின்அவளது நிறத்திற்கே,,,/வெளிர் மஞ்சளில் அங்கங்கே எம்ராய்டரிங்க் வைத்த டாப்ஸீம், காக்கிகலர் பேண்டும் பார்க்க நன்றாக இருந்தது,ஆ,,,,சூப்பர் அப்படியே தூக்கி ஒரு சுற்று சுற்றி விடலாம் போலிருந்தது,கண் இமைக்காமல் இப்படியாய் ஒரு வயசுப்பிள்ளையை பார்ப்பதும் தவறுதான் என எண்ணியவனாய் பார்வையை திருப்பிக்கொண்டு பிரௌசிங்க் சென்டருக்குள்ளாய் நுழையப்போனவனை தடுத்தாட் கொண்ட குரலாய் அவளது பேச்சு,

கதையெல்லாம் எழுதுவீங்களா நீங்க,நேத்து பிரிண்ட் அவுட் எடுத்து வைச்சி ருந்த பேப்பர்லயிருந்து ஒண்ணு பறந்து வந்து சென்டருக்குள்ள நெழையப் போன ஏங் முன்னாடி விழுந்துச்சி,நான் கூட மொத்தல்ல எதாவது ஜெராக்ஸ் எடுத்த பேப்பரா இருக்குமுன்னு கடந்து போக நெனைச்சப்ப எதுக்கும்  எடுப்போமுன்னு எடுத்துப்பாத்த நல்ல கதையோட ஒரு பக்கம்,ஆகா அப்ப மிச்சம் உள்ள இருக்கான்னு அவரு தரமாட்டேன்னு சொன்னத அவருகிட்ட யிருந்து கேட்டு வாங்கி படிச்சிட்டு இன்னைக்கி ஒங்கள பாக்கலாமுன்னு இருந்தேன்,நல்லவேளையா நீங்களே கண்ணு முன்னாடி வந்து நிக்கிறீங்க, பொதுவா கும்பிடப்போனாலும் சரி குறுக்க போனாலும் சரி தெய்வங்கள் இப்பிடி குறுக்க வந்து நிக்குறது தவிர்க்க இயலாம போயிறது உண்டு தானே,,,, அது போல நீங்க,என்றாள்,

இவனுக்கென்றால் ஜிவ்வும் சிரிப்புமாய் ஒரு சேர்ந்து வர எதை முதலில் வெளிபடுத்துவது என கலங்கி நிற்கிறான்,

இதில் முதலிடம் பெற்றது ஜிவ்வுதான்,மனம் கொஞ்சம் லேசாகியும் குஞ்சரம் கட்டியது போலவுமாய் ஆகித் தெரிந்தது,

ஊலா,லா,லா,,,,,,,,,,ஆகா மேலே மேலே பறக்க ஏதுவாய் றெக்கைகட்டிக் கொள்கிறதுதான் மனம்.

இதற்குத்தானே காத்திருந்தாய் இத்தனை நாட்களாய் என்பது போல் இல்லாமல் இயல்பாகவே அவளில் ஈடு கொள்கிறவனாய்,,,/

அப்பிடியெல்லாம் இல்லை ,நான் தெய்வமும் இல்லை நீங்க பக்தையும் இல்ல,என்கிறஇவனின் சொல்லுக்கு சிரித்தவள் அப்பிடிச்சொல்லல நானு, தெய்வங்கள திடீர்ன்னுதான் பாக்கமுடியும் ,அது போல காத்திருந்துதான் ஒங்கள பாக்கமுடியுது ,அதத்தான் சொல்றேன் என்றாள்.

இவன் எழுதிய கதைகள் பற்றி பேசினான்.அவள் படித்த கதைகள் பற்றி பேசினாள்.பேச்சு பேச்சாகவே இருந்த நேரத்தில் அரும்பிய காதலுக்கு ஏது முன்னுரை,,,,,

அன்றைய முன்னுரையின் முடிச்சு சிறிது நாட்கள் வரை புள்ளியிட்டு கோலம் போடப்பட்டு தொடர்ந்ததாய்,,,,,/

ப்ரௌசிங் சென்டர்க்காரர் கூடச்சொன்னார்.சார் வேணாம் அதெல்லாம் ஒத்து வராது ஒங்களுக்கு,,,உள்ளுக்குள்ள ஏதாவது ஆசைய வளத்து அத பூவும் பிஞ்சுமா காய்க்க விட்டுக்கிறாதீங்க,பின்ன அது வேரோட அறு பட்டு சாயும் போது சங்கடபட்டும் காயப்பட்டும் போவீங்க, பாத்துக்கங்க, நாங்க மூணாவது மனுசன்,அவ்வளவுக்குள்ளதான் பட்டும் படாம சொல்ல முடியும், ஒங்களுக் கென்ன தங்கத்துக்கு நல்லா படிக்கிறீங்க,நல்லா எழுது றீங்க, நல்ல பேரு இருக்கு ,அத விட என்ன வேணும் இந்த வயசுல, எனக்குத் தெரிஞ்சி ஒங்க வயசுக்கு இவ்வளவு யோசிச்சி பேசி,கதை எழுதி அத புத்தகமா போட்ட ஆள நான் பாத்ததே இல்ல,ஒரு பக்கம் காலேஜீ படிப்பு,ஒருபக்கம் மனசுக்குப்பிடிச்ச எழுத்து படிப்பு,,,நாளைக்கு கையில கெடைக்கப்போற நல்ல உத்தியோகம்,,,, இப்பிடியெல்லாம் இருக்கும் போது எதுக்குப்போயி நீங்க,,,,,,,என்றார்,

அவரது பேச்சு பேச்சாக இருந்த நேரத்தில் எ ன் ஜி ஓ காலனி வரை இவனும், டவுனுக்குள் ஏதாவது வேலையை சுமந்தவளாய் அவளுமாய் வந்து போய்க் கொண்டிருந்த நாட்களில் இவன் மனம் ஈர்த்தவளின் தந்தைக்கு டிபார்ட் மெண்டில் இடமாறுதல் என வெளியூருக்குச் சென்று விட்டார் கள்.

அவர்கள் ஊரை விட்டு செல்வதற்கு முதல் தினமாய் பார்த்தது அவளை,,,/ கோயிலில் நின்றவள் குங்குமம்,திருநீருடன் கண்ணீர் கலந்து நின்றாள், வெளியூரின் வரைபடத்தை கையில் வைத்துக்கொண்டு,,/

அன்று பறந்தவள் இன்றுவரை எந்த திசையில் இருக்கிறாள் எனத் தெரிந் திருக்கவில்லை இவனுக்கு,,/

பஸ்ஸை விட்டு இறங்கியவனுக்கு டீக்குடிக்க வேண்டும் போல இருந்தது, ஒரு மணி நேர பிரயாணம்,

தனியார் பஸ் கிடைக்கும் நாட்களில் இளையராஜாவின் இசை மனதையும் செவியை நிறைத்து விடும் என்பது உறுதி,

அது அல்லாது டவுன் பஸ்ஸில் ஏறுகிற நாட்களில் மனமும் இசைக்கு உத்திரவாதமில்லை.

அன்று டவுன் பஸ்ஸில்தான் வந்திருந்தான்,

அலுத்துப் போயிருந்த உடலுக்கும் மனதுக்குமாய் டீ கொஞ்சம் உற்சாகம் ஊட்டலாம்தான்.

டீக்கும் வடைக்குமாய் ரூபாயைக் கொடுக்கும் போதுதான் ஞாபகம் வருகிறது, வெங்காயம் வாங்கிப்போக வேண்டும் எனவும் அதற்காய் கூடுதலாய் பணம் கொண்டு வந்ததும்.

முக்கு ரோட்டில் இறங்கியதும் வழக்கமாய் கேட்கிற ”நாலுகிலோ நூறு ரூபாய்,,,,அஞ்சி கிலோ நூறு ரூபா,” என்கிற குரல் கேட்கவில்லை.

கடையை விட்டு இறங்கியதும் ரோட்டோரமாய் நின்றிருந்த வேனை பார்க்க முடிந்தது.

வேனை நெருங்கும் போதுதான் தெரிகிறது வெங்காயம் இல்லை என.

சாலையின் இடது ஓரமாய் பரந்து விரிந்து குடை போல் நின்றிருந்த வேப்ப மரத்தின் அருகில் நின்றிருந்த மினி வேனில் அடுக்கப்பட்டிருந்த மூடை களின் ஓரமாய் நின்றிருந்தாள்,

வேனின் பின்புறகதவு லேசாய் திறந்திருந்தது,அதன் இடது ஓரத்தில் அமர்ந் திருந்த அவளது அருகில் அவிழ்க்கப்பட்டு வாய்திறந்த நிலையில் இருந்த வெள்ளைப்பூண்டு மூடையின் அருகில் தராசு இருந்தது,

மினி வேன் அது.

”மொத்தமா வாடைகைக்கு பேசிருவோம்.யேவாரத்துக்கு போற வார ஊர்கள்ல பூரா யெடம் கெடைக்காதுல்ல. அதான் இப்பிடி ஒரு ஏற்பாடு, என்ன இங்க யிருந்து நாலைஞ்சி ஊர்களுக்குப்போவம்,நெரந்தரமா எங்களு க்குனு இந்த யெடம்தான்.

”பொறந்தது வளந்தது ஒரு யெடமா இருந்தாலும் எங்களுக்கு சாப்பாடு போடுறது இந்த யெடமாத்தான் இருக்கு”,

ஐம்பது வயதிற்குற்குள்ளாக இருக்கலாம் அவளுக்கு.உடல் தடித்துப்பாரித்தி ருந்தாள்.அழுந்தப்படிய வாரியிருந்த தலையில் நடு வகிடு எடுத்திருந்தாள். நெற்றிக்கு இட்டிருந்த குங்குமத்தை கொஞ்சம் நடு வகிடின் ஆரம்பத்திற்கும் இழுத்திருந்தாள்,வெளிர்க்கலரில் பொடிப்பூக்கள் தூவியிருந்த புடவை பார்ப்ப தற்கு நன்றாக இருந்தது.அதே கலரில் சட்டையின் கை வலது கைநுனி ஓரம் பிரிந்து தொங்கிய நூல் வெள்ளைக்கலராய் இருந்தது,

சிவப்பு சட்டைக்கு வெள்ளைக்கலர் நூல்,காலடியில் சேலைக்கு கீழாக தெரிந்த பாவாடை மஞ்சள் கலராயும் நைந்து கிழிந்துமாய் தெரிந்தது.

”எப்போஎதுகிடைக்குதோ அதக்கொண்டாந்து விப்போம்.மத்தபடி இதுதான்னு” இல்ல,அனேகமா இன்னும் ஒரு வாரம் கழிச்சி வெங்காயம் திரும்ப வந்துரு முன்னு நெனைக்கறோம்.

”எங்களால உறுதியா எதுவும் சொல்ல முடியல,வெங்காயம் இப்பத்தான் முக்கா வெளைச்சல நிக்குதுன்னு சொல்றாங்க,இத்தன நாளா பெரிய வெங் காயம் வித்துக்கிட்டு இருந்தோம்,இப்ப சின்னது வருத்து வருதுன்னு சொல்றா ங்க,அந்த இடைவேளை வரைக்கும் நாங்க எப்பிடி சும்மா இருக்க முடியும்,,,? அதான் சந்தையில் சலுசா கெடைச்சத போட்டு கொண்டாரம், இதுன்னா அன்றாடம் குடும்பத்துக்கும் கடைகளுக்கும் தேவைப்படுற பொருளு, ரெண்டு மூணு நாளு கழிச்சினாலும் பொருள் அழிஞ்சி போகும், ஆனா மத்தது அப்பிடியில்ல,அந்தா கொஞ்சம் தள்ளி ஒரு வண்டியில பழம் விக்கிறாருல்ல. இதுபோலவாரக்கணக்குலயெல்லாம் வச்சிக்கிற முடியாது, ஒரு ரெண்டு நாளைக்கு வேணுமுண்ணா தாங்கும்,அதுக்கு மேல நம்ம கை நட்டமாகிப் போகும்,அதுக்குதான் இந்த மாதிரி யேவாரமா பாத்து எடுக்கு றது என்றாள் வெங்காயம் விற்றவள்.

பஜாரில் வாங்கலாம் என நினைக்கிற நாட்களில் முடியாமல் போகிறது, அது. வேலை முடிந்து அலுப்பையும், சுமையையும் தூக்கிக்கொண்டு பேருந்து ஏறினால் ஊர் வந்து சேர ஒரு மணி நேரமாகிப்போகிறது,

சமயத்தில் இரவு ஒன்பது மணிவரை கூட ஆகிப் போவதுண்டு.

அதற்குப் பின் ஞாயிற்றுக்கிழமை மட்டுமே சாத்தியம்,அன்றும் கூட என்ன விலை விற்கிறதோ அதைப்பொறுத்தே வெங்காயம் வாங்கத்தோன்றும்,

சாலையின் இடது ஓரமாய் பரந்து விரிந்து குடை போல் நின்றிருந்த வேப்ப மரத்தின் அருகில் நின்றிருந்த மினி வேனில் அடுக்கப்பட்டிருந்த மூடைகளின் ஓரமாய் நின்றிருந்தாள்,

வேனின் பின்புறகதவு லேசாய் திறந்திருந்தது,அதன் இடது ஓரத்தில் அமர்ந் திருந்த அவளது அருகில் அவிழ்க்கப்பட்டு வாய்திறந்த நிலையில் இருந்த வெள்ளைப்பூண்டு மூடையின் அருகில் தராசு இருந்தது,

கடைசியாய் வாங்கிய போது நாலு கிலோ நூறு ரூபாய் என வாங்கியதாய் ஞாபகம், அலுவலகம் முடிந்து போகிற மாலை வேளைகளில் வாங்கிக் கொள்ளலாம்என்றால் காலையில் விற்ற விலை மாலையில் மாறிப்போகிற து, அதனால்தான் இப்பொழுதே வாங்கிகொள்ளலாம் என வேனின் முன்னால் போய் நின்ற போது அதுவரை வெங்காயம் புடைத்துக்கொண்டிருந்தவள் தனியாய் குவிக்கப்பட்டிருந்த வெங்காயத்தை அள்ளி தராசில் போட்டாள்.

இவனுக்கு முன்பாய் பெண்ணொருத்தி நின்று கொண்டிருந்தாள்,”ஏங் அவுங்களுக்கு போட்டுட்டு எனக்கு போட வேண்டியதுதானம்மா” என இவன் சொன்ன போது ”இருக்கட்டும் சார் நீங்க பல வேலையா போற வுங்க, அந்தம்மா அப்பிடியில்ல,இனி மதியத்துக்குப்போயி வீட்டுல சோறு பொங்குற வேலை மட்டுந்தான் அவுங்களுக்கு,,,”சாங்காலம் அவுங்க புள்ளைங்க காலேஜ் விட்டு வர்ற வரைக்கும் அவுங்களுக்கு பொழுது இங்கதான் என சுட்டிக் காட்டியவளை ஏறிட்டவன் வெங்காயம் வாங்கிக் கொண்டு வருகிறான் மௌனம் காத்த மனதுடன்,,,,/

அவள் சுட்டிக்காட்டிய பெண்ணிடம் வெங்காயம் வாங்கிக்கொண்டு திரும்பி வரும் போதாவது விசாரித்திருக்கலாம் ”என்ன சுகா நல்லாயிருக்கையா” என,/

சனி, 12 அக்டோபர், 2019

கடலைத்தோலு,,,


 சமையலறையிலிருந்து வேர்க்கடலை அவிக்கும் வாசனை வருகிறது,நாசி நிறைந்த வாசனையாகவும், நன்றாகவும் இருக்கிறது.

”யப்பா நல்லாயிருக்குப்பா,வாசனை மட்டும் இல்லை,வாசனையை கொண்டு வந்தவளையும் பாராட்டனுந்தான் இந்நேரம்.”என்கிற இவனது பேச்சிற்கு செவி மடுத்துச் சிரித்தவள் சமையலறையை குலுக்கித்தான் போட்டாள் கொ ஞ்சமாக/

”ஏன் எதுக்கு இந்த அதிர் சிரிப்பு,என்ன சொல்லிப்புட்டேன் இப்ப,ஓடோடி வந்து ஒட்டிக்கொண்ட வாசனையும்,அதை செய்வித்த ரசவாத வித்தைக்காரிக்கும் பாராட்டின்னுதானே சொன்னேன்,எப்பவும் சொல்ற வார்த்தைதான அது , அது க்குப் போயி இப்பிடி சமையலறை வெடிச்சிப்போற அளவுக்கு சிரிக்காட்டி என்னவாம்,”,?என்கிற இவனது கேள்வி சுமந்த பேச்சிற்கு,,,,,,,,

இன்னொரு அதிர் சிரிப்பை உதிர்த்து விட்டவள் அதன் நீட்சியாய் “இருக்கட்டு மே சிரிப்புத்தான என்ன கொறைஞ்சி போச்சி இப்ப,நீங்க என்ன கொறையா வா சிரிக்கிறீங்க,எதையும்உள்ளடக்கமாவச்சிபொறுமிக்கிட்டுஇருக்காம,சிறுமைத் தனம் காட்டிக்கிட்டு இருக்காம வெள்ளந்தியா வெறும் மனசோட நின்னா இந்த சிரிப்பு என்ன,எதுவேணுமுன்னாலும் வரும்,

”அதுவும் நம்ம மனசுக்குப்புடிச்சவுங்க நாலு நல்ல வார்த்தை பேசும் போது தன்னியல்பாவே பூரிச்சிப்போகுதான மனசு,அப்ப இந்த சிரிப்பு என்ன எல்லாம் சாத்தியமாகிப் போகுது நல்லபடியா” என்றவள் ”பொண்டாட்டி சமைச்சிப் போட்டசாப்பாட்டக்கூட பாரட்டத்தோணாம சும்மா வெறுமனே மண்ணு போல உக்காந்துட்டுசாப்புட்டுப்போறஆம்பளைங்கஎத்தனைபேருஇருக்குறாங்க, அவுங்களுக்கு மத்தியில ஒங்களப்போல ஒருத்தரு கெடச்சது நான் செஞ்ச பாக்கியந்தான” என்றாள்.

”வாஸ்தவம்தான் நீ சொல்லுறது,அதுக்காக நான் வாச்சது நீ செஞ்ச பாக்கியம் அதுஇதுன்னு கதை வுட்டுக்கிட்டும், பொய்யா நம்பிக்கிட்டும் இருக்காத ஆமா, எனக்கு மேலயெல்லாம் வீட்ட அட்ஜஸ்ட் பண்ணிக்கிட்டுப்பாத்துக்கிர்ற ஆம்ப ளைங்க இருக்காங்க,வீட்டு வேலைகள்ல கையையும் ,மனசையும் கலந்து விடுறதுல இருந்து அந்த வீட்டுக்கே பாரம் தாங்கியா நிப்பாங்க,,,/ நானு அதுல பாதி அல்லது கால்வாசின்னு வச்சிக்கவேன்/

பழுப்புக்கலரில்பூப்போட்ட டிசைன் போட்ட சேலை அவளுக்கு நன்றாகத்தான் இருந்தது,கண்ணுக்கு உறுத்தலாக மிகை காட்டியும் இல்லாமல்,டல்லாக அமுங்கிப்போய் இல்லாமலும் பூக்களுடன் சிரித்தது.

பூக்களின்ஊடாக நீளமாகவும் சற்றே சின்னதாயும் ஓடிய கோடுகள் இரண்டை உருவி எடுத்து அப்படியே பின்னி வளைத்து ஜடை போட்டு புடவைலிருந்து கழண்டுவிழுந்தபூவை எடுத்து பின்னல் வைத்த ஜடையில் சொருகி விடலாம் போலிருந்தது.

எட்டி மணியைப் பார்க்கிறான்.சின்னதும் பெரியதுமான முட்கள் விநாடி முள் ளுடன் கைகோர்த்துக்கொண்டு ஆறாகப்போகிறேன் என்றவித்தது.

இரவு கொஞ்சம் தாமதமாகத்தான் தூங்கினான்,

”தாமதமுங்குறது சரி,அதுக்காக இவ்வளவு தாமதமா,காலையில ஆறுமணி வரைக்குமாதாமதத்தஇழுத்து நீட்டிக்கிறது.அப்பறம்ஒடம்புஅப்பிடிப் பண்ணுது இப்பிடிப் பண்ணுதுன்னுகத்திகூப்பாடு போட்டுக்கிட்டு ஆஸ்பத்திரி மருந்து மாத்திரன்னு அலைய வேண்டியது,

“இதுலசெலவு மட்டுமா,எவ்வளவு மன ஒளைச்சலு எவ்வளவு சங்கடம் எவ்வ ளவு மெனக்கெடலு,,”என்பவளை ஏறிடுகிறவன்”,சரிதான் நீசொல்றது, ஆனா நேரத்துக்கு எந்திரிச்சிநேரத்துக்குப்படுத்து நேரத்துக்குச்சாப்புட்டுங்குற நேர் கோடான விஷயத்துல இருந்து கொஞ்சம் வெலகி நிக்கத்தான் வேண்டி இருக்கு சமயங்கள்ல,,,,/

”சமயங்கள்ல இருந்த அது உருப்பெருகி கொஞ்சம்,கொஞ்சமா சமயா சமயங் கள்லன்னு ஆகிப் போச்சி. அன்னைக்கி உள்ளபடிக்கும் என்னாச்சின்னா நீங்க ளெல்லாம் படுத்து தூங்கீட்டீங்க,நான் கொஞ்ச நேரம் லேப்டாப்புல டைப் அடிச்சிக்கிட்டு இருந்தவன் அது முடிஞ்சதும் தூக்கம் வராம டீவிய போட் டேன், லோக்கல் சேனல்ல அடுத்தடுத்து ரெண்டு படம்,ரெண்டும் நல்ல படம். நல்ல படம் பாத்து நாளாச்சி.அப்பிடியே ஒக்காந்துட்டேன்.

“படம் பாக்க ஆரம்பிக்கும் போது மணி பணிரெண்டரை இருக்கும்,ரெண்டு படத்தையும் பாத்து முடிக்கும் போது அது ஆகிப்போச்சி அஞ்சரை மணி, சரின்னு எந்திரிச்சிப்போயி மொகத்தக்கழுவீட்டு வந்து படுத்து தூங்கும் போது மணி ஆறாகிப்போச்சி,அதுதான் விஷயமே தவிர்த்து வேறொன்னுமில்லை, ஆமா” என்றவனை எறிட்டவள் ”என்னமோ போங்க,பதினோரு மணி பண்ணெ ண்டு மணி ஒரு மணின்னு இருந்தது மாறி ஆறு மணிவரைக்கும் நீண்டிருக் குன்னாகொஞ்சம்ஆபத்துஇல்லையா,நீங்க என்ன இன்னும் எளந்தாரிப் புள்ளை யா,ஒங்களநம்பி குடும்பம் இருக்கு,புள்ளகுட்டிக நாங்க இருக்கம் பாத்துக்கங்க, என்றவளின் வார்த்தையில் தெரிந்தஅக்கறை அவ்விடம் பட்டுத் தெரித்ததாய்,,,/

வெந்து கொண்டிருக்கிறதா,இல்லை அவித்து அடுப்பிலிருந்து எடுத்தவுடன் வந்த வாசனையா,,,,?பிடிபடவில்லை,

நேற்றைக்கு முன் தினம் பஜார் போகும் போது வாங்கியது,வீட்டில் சுத்தமாக மளிகை இல்லை,வாங்க வேண்டும் என்றாள்,

மாதம் முதல் மூன்று தேதிக்குள்ளாய் போய் விட்டால் கொஞ்சம் கூட்டம் மத்துவமாய் இருக்கும் பலசரக்குக்கடைகளில்,

பலசரக்கு வாங்கிக்கொண்டு அப்படியே தவணைப்பணம் கொடுக்க வேண்டிய ஜவுளிக்கடைக்கும்பர்னிச்சர்மார்ட்டுக்கும்தவணைகட்டிவிட்டுவந்துவிட்டால்  வீட்டில் மற்ற செலவுகளை பிளான் பண்ண தோதாய் இருக்கும்.

மனைவியை கொண்டு போய் பலசரக்குக்கடையில் விட்டு விட்டு ஜவுளிக் கடைக்கும் பர்னிச்சர் மார்ட்டுக்கும் போய் விட்டான்.

போய் விட்டுத்திரும்புகையில் பஜார் முக்கில் தள்ளு வண்டியில் வைத்து விற்றுக்கொண்டிருந்தார் கடலை வியாபாரி,

எப்பொழுதும் விற்பவர்தான்,”கடலை கடலை, கடலை கடலை”,,என கட்டைக் குரலில் அவர் போடுகிற சப்தம் பஜாரின் மறு முனை வரை கேட்கும் மைக் இல்லாமலேயே/

அதிலும்இவன் அவரைக்கடந்து போவதைப்பார்த்ததும் சப்தம் கூட்டிவிடுவார். அவரை இவனுக்கு நன்றாகத் தெரிந்திருந்தது, கடலை வாங்கப்போகும் போது ஏற்பட்ட பழக்கம்தான்,

அவர்களுக்கும் இவன் போன்றவர்களின் பழக்கம் தேவைப்படுகிறதுதான், கீரைக்காரம்மாவைப் போன்று/

அவரும் இவர் போல்தான்,இன்னொரு தெருவில் வரும் போது போதே இந்தத் தெருவில் இருக்கிற வீடுகள் கீரை வாங்க ரெடியாகி விடும்.

அன்றாடங்களில் அவர்கள் வியாபாரத்திற்காய் வருகிற நேரத்தை சரியாய் சொல்லிவிடமுடியாது,ஒரு நாளைக்கு காலை ஆறு,ஆறரை மணிக்கு வந்தா ரென்றால் மறு நாள் அல்லது எட்டு மணி மூன்றாம் நாளில் ஒன்பது மணி யாகிப் போகும்,

”வாங்கம்மா என்ன இந்நேரம் வர்றீங்க” என்பான் இவன் ஆபீஸ் கிளம்பி பஸ்ஸீற்காய் வேகமெடுத்துப் போய்க் கொண்டிருக்கிற பொழுது/

இல்லதம்பி நேரமாகிப் போச்சி,கரெக்டா நூல் புடிச்சாப்புலசரியானடயத்துக்கு வர்றதுக்கு இதென்ன ஆபீஸ் வேலையா தம்பி, இப்பிடித்தான் ஒரு தெருவுக் குள்ளபோனா கொஞ்சம் சீக்கிரம் வரலாம்,இன்னோரு தெருவுக்குள்ள போகும் போது அது போல ரெண்டு மடங்கு டயம் ஆகிப்போகுது,இதுல ஆகாத போகாத வுங்க பேசுற மோசமான பேரம்,பத்து ரூவா கீரக்கட்ட வாய் கூசாம அஞ்சி ரூவாயிக்கிக் கேப்பாங்க, இதேது பஜார் போயி வாங்குனாங்கன்னா அங்க இருபதுரூபாய்கேட்டாலும்குடுத்துட்டுத்தான்வருவாங்க,எப்பவுமேஎளியவுங்க கிட்டதான நம்ம சமூகம் அதிகாரம் பண்ணி பழகீருக்கு, குனிஞ்ச வன் மேல தான குதிரை ஏறப் பழகீட்டோம் நாமளும்,கொஞ்சம் நிமிந்து நிக்கிறவன் கிட்ட நம்ம அதிகாரம் செல்லாது இல்லையா,அதுமாதிரித்தான் ஆகிப்போகுது தம்பி,

“இன்னைக்கி ஒங்க தெருவுக்கு முந்துன தெருவுல பாத்தா ஒரு அம்மா கீரை வாங்குறோமுன்னு பேரம் பேசுறாங்க,பேசுறாங்க அவ்வளவு தூரத்துக்கு பேசு றாங்க, மூனு கட்டு வாங்கிர்றேன்,பதினைஞ்சி ரூவாக்கு தர முடியுமான்னு கேக்குறாங்க,எனக்குன்னா கோவமுன்னா கோவம்,சரியான கோவம்,ஏம்மா இப்பிடி பேசுறீங்க,நீங்க வியாபாரம் வாங்காட்டிக்கூட பரவாயில்லை, இப்பிடி யெல்லாம் அடிதண்டமா வெலைப் பேசாதீங்கம்மா,நீங்க இப்பிடி கேக்க ஆரம் பிச்சிங்கின்னா இனி நான் யேவாரதுக்கு போற தெருவுல எல்லாம் இப்படியே கேக்கஆரம்பிச்சிருவாங்க,ஏங்யேவாரம்கெட்டுப்போகும்மா,இப்பிடியெல்லாம் பேசாதீங்க,ஏங்கிட்ட மட்டும் இல்லை,என்னையப்போல தெருவுல வியாபாரம் பண்ணவர்றவுங்ககிட்டயார்கிட்டயும்இப்பிடியெல்லாம்பேசாதீங்கம்மான்னதும் அந்தம்மாவுக்கு கோபம் வந்துருச்சி,”ஏய் போடி அந்த மானிக்கி பெரியஇவ நீயின்னு கண்டமானிக்கி பேச ஆரம்பிச்சிட்டாங்க,நானும் எவ்வளவுதான் பொறுமையா இருக்குறது,சரி வயசுல பெரியவுங்க,ஏதோ பேசுறாங்கன்னு விட்டுருவோமுன்னு நெனைச்சா ரொம்பத்தான் ஓவரா பேசுற மாதிரி தெரிஞ் சிச்சி எனக்கு.

”தவிரஅஞ்சி வருஷத்துக்கு மேல யேவாரம்பண்ணிக்கிட்டு இருக்கேன். இப்படி யாரும் பேசுனதில்லை.

”வயசுல பெரியவுங்க இப்பிடியெல்லாம் பேசாதீங்கம்மான்னு சொல்லிப் பாக்கு றேன், அந்தம்மா கேக்குற வழியக் காணோம்.ரொம்ப எல்லையில்லாம பேசுற மாதிரி தெரிஞ்சதும் நான் தெருவுல இருக்குற கல்ல எடுத்து ஓங்க ஆரம்பிச் சிட்டேன்,ஒடனே அந்தம்மா உள்ள போயிருச்சி,நாயே வெளியில வந்த ஒன்னைய கல்லால அடிச்சிக்கொன்னுருவேன்னு சத்தம் போட்டுட்டுத் தான் வந்தேன்.,

”தெருவே வேடிக்கை பாக்க அந்தம்மா அவமானப்பட்டுதான் வீட்டுக்குள்ள போச்சி,இனிமே அது என்னைக்கண்டா பத்தடி தள்ளித்தான் போகும்,

இப்பிடி பிரச்சனையெல்லாம் தாண்டி வரும்போது லேட்டாயிச்சிதான் கொஞ் சம்,என்றார்,

”சரிங்கம்மாஎன்ன செய்யிறது,இது போலஇருக்குறவுங்கலயெல்லாம் சகிச்சிக் கிட்டுதான் யேவாரம் பண்ண வேண்டியதிருக்கு எனக் கூறியவாறே ரெண்டு கட்டு குடுத்துட்டுப் போங்க எனச் சொன்னவனாய் மனைவியிடமும் கீரைக் காரம்மாவிடமும் சொல்லிவிட்டுக் கிளம்பினான்,

மீதிக்கதையை கீரைக்காரம்மா இவனது மனைவியிடம் பேசியிருக்க வேண் டும் கண்டிப்பாக/ஏனென்றால் இவனது தெருதான் கீரைகாரம்மா கடைசியாக வரும் தெரு,

அதனால் கொஞ்சம் ஆசுவாசமாய் இருந்து விட்டுப்போகலாம் என்கிற நினைப் பில் கீரைக்காரம்மா இருந்து பேசிவிட்டுப் போவார்கள்.

ஏன் இப்பிடி தள்ளாத காலத்துல வீதி வீதியா அலைஞ்சி வியாபாரம் பண்ணு றீங்க,சிவனேன்னு உள்ள வேலையப்பாத்துட்டு இருக்குறத சாப்புட்டுக்கிட்டு விட்டுல இருக்குறத விட்டுப்புட்டு எதுக்குப்போயி தட்டலைஞ்சிக்கிட்டு இருக் குறீங்குறீங்க,,,,,,என்கிற மனைவியின் பேச்சிற்கு எங்கம்மா நிம்மதியா ஒக்கா ந்து சாப்புடுறது, இத்துப்போன பொழப்புமா எங்க பொழப்பு,ஒருபக்கம் குடும்பம் ,ஒரு பக்கம் யேவாராம் ,ஒருபக்கம் ஒங்களப்போல இருக்குற வீட்டுக்காரங்க, இதுக்குயெடையிலகீரைபயிர்பண்ணியிருக்குறதோட்டத்துக்காரவுங்க,பஸ்ஸீ, கண்டக்டர்,டிரைவரு,லக்கேஜீன்னு இதுதான் சுத்துச்சுத்தி வருமே தவிர்த்து வேற ஒரு நெனைப்பும் வர்றதில்லம்மா,பொழப்ப நெனைக்கும் போது/

“எனக்கு இத விட்டா பொழப்பு ஏது தாயி,அதான் மேடான்னாலும் பள்ளமா னாலும் வந்துர்றது/ இருக்குறது இருக்கட்டும்,ஆகுறது ஆகட்டுமுன்னு..,,,,/என அன்றாடங்களை எடுத்து வைக்கிற கீரைக்காரம்மாவின் பேச்சு.

”என்ன கடலைக்காரண்ணே நல்லாயிருக்கீங்களா என்கிற பேச்சுடன்தான் பையை நீட்டினான் அவரிடம்.

”நல்லாயிருக்கேன் தம்பி,ஒங்களப்போல ஆட்க இருக்குற வரைக்கும் என்னை யப் போலானவுங்க நல்லா இருப்போம் தம்பி,அட மெய்யாலுமேதான் சொல் றேன் தம்பி,நீங்க ஏங்கிட்ட வாங்குற யேவாரத்த வச்சி மட்டும் சொல்லல, ஒங்க மனச வச்சி சொல்றேன்,கேள்விப்பட்டுருக்கேன் ஒங்களப்பத்தி,ஒங்க நல்ல மனசுக்கு நீங்க நல்லாயிருக்கணும் தம்பி,இந்த சின்ன வயசுல இந்த மனசு வாய்க்கிறது ரொம்பவே அபூர்வம் ,தனக்கு ஒரு கண்ணு போனாலும் பரவாயில்லை எதிராளிக்கு ரெண்டு கண்ணும் போகனுமுன்னு நெனைக்கிற வுங்க இருக்குற இந்தக்காலத்துல தனக்கு ஒரு சுகக்கேடு ஏற்பட்டாலும் பரவாயில்ல,அடுத்தவுங்க நல்லாயிருக்கணுமுன்னு நெனைக்கிற கொணம் ரொம்பவேஅபூர்வம்தம்பி.”என்றவரைஇடைமறித்து”போதும்போதும்என்னையப் பத்தி மட்டுமே பேசுனது,யேவாரம் எப்பிடி இருக்குன்னு சொல்லுங்க, மத்ததப் பத்தி அப்புறம் பேசலாம்,”

”என்ன தம்பீ யேவாரம் ,பெரிசா யேவாரம்,கௌரவதுக்காக பீ தின்ன பொழப்பு”

”என்னதான் புள்ளைங்க உக்கார வச்சி சோறு போடுறேன்னு சொன்னாலும் கூட ஒடம்புல தெம்பு இருக்குற வரைக்கும் நம்ம கைய ஊனி நாமதான் கர்ணம் பாயணுமுன்னு நெனைச்சி தேனிப்பக்கம் இருந்து கடலை மூடை யெறக்கி வித்துக்கிட்டு இருக்கேன்,

“ஒரு நாளைக்கு அழிவு செலவு போக கையப்புடிக்காம ஏதோ கெடைக்கும், கெடைக்கிறது கைக்கும் வாய்க்கும் பத்தாது தான், புள்ளைங்க வீட்டுல சாப்பு ட்டுக்கிட்டு இருக்குறதுனால ஓடிக்கிருது வண்டி எனச்சொன்னவரை ஏறிட்டவ னாய் கடலை வாங்கிக் கொண்டு வந்தான்.

சமையலறையிலிருந்து வேர்க்கடலை அவிக்கும் வாசனை வருகிறது,நாசி நிறைந்த வாசனை. நன்றாக இருந்தது,

வாசனையின்வசம் இவனும் வாசனை கொண்டுவந்தவளின் பக்கம் இவனது மனமும்/