சனி, 16 மே, 2020

பொய்யற்று,,,,,,,



மணியைப்பார்க்கிறான் சற்றே எட்டி,

சடுதியாய் யாரோ சட்டையைப்பிடித்திழுத்த பாவனையாய் அவரசமாய் பார்த்த வன் உள் நுழைந்து கொள்கிறான் திரும்பவுமாய்/

”கிட்டக் கிட்டவச்சி பக்குவமாப்பாத்தாலும் எட்ட எட்ட வெலகிப்போயி திருட்டுத் தனம் காண்பிக்கிறதுதான ஒங்க ஆம்பள மனசுபாக்க பதவிசா காமிச்சிக்கிட்டு அங்கிட்டுப்போயி திமிருத்தனம் காட்டி வெளையாடுறதும், தாண்டித்தாவுறதும் நடக்கலைன்னா சொல்றீங்க,

“கொழஞ்ச சாதமும்,மெளகு ரசமும் போதும் ,கறி காய் ஆகாது ,ஒத்துப் போறதுல ஒடம்புக்கு சிக்கல் வருமுன்னு சொன்னத ஏத்து பதனமாப்பாத்து வடிச்சி இது வேணும்,இது வேணாம், இது போதும்,இது போதாது,இவ்வளவு வேக்காட்டுக்கு இந்தக்காயி,இவ்வளவு வேக்காட்டுக்கு இந்தக்கறி, இதுக்கு இதுதான் பக்குவம், அதுக்கு அந்தப்பக்குவந்தான் ஏத்தது குக்கர்ல ரெண்டு விசிலு,ஸ்டவ்வ சிம்முல வையி,மிக்சி அரவை வேண்டா முன்னுருவாரு,நான் கை அரைவையே அரைச்சி க்கிறேன்னு பாத்துப்பாத்து பண்ணிப்பண்ணி செஞ்சி வச்சாலும் கூட எந்தக் கடையில எது நல்லாயிருக்கு,இன்னிக்கி ஸ்பெசல் எங்க என்னன்னு தேடித் திரியிற ஒங்களத் தெரியாதா எனக்கு என்றவள் சொன்ன போது பகீரென்று சிரித்தவன் அலையுற மனசுக்கு வெந்தது ஏது,வேகாதது ஏது, பக்குவம் ஏது,? அது அல்லாததது எது,,?ன்னு தெரிய ஞாயமில்ல,“மலை, மலையா கொட்டி வச்சி சாப்புடச்சொன்னாலும் எச்சச் சோத்துக்கு அலையிற கொணம் இருக்குதுதான அப்ப தொட்டு,,,, சூழ்நிலையும் தைரியமும் கை கோர்க்கும் போது அது ஒரு தனி உலகமாத் தெரியுது, என்றவனின் பேச்சிற்கு இல்லை இல்லை அப்படியெல்லாம் என உறுதி குடுத்து விட்டாலும் கூட போகிற போக்கில் எட்ட இருப்பதை படம் பிடித்துப் பார்ப்பதுதானே மனது,என்பது உறுதியாகிப்போகிறது,

எத்தனைதான் திரை போட்ட போதும் கூட விலக்கிப்பார்க்கிற சூட்சுமம் லேசாய் வாய்க்கப் பெற்றிருக்கிறதுதானே சிறுவயதிலிருந்து,இது மாதா பிதாவிடமிருந்து வந்ததா இல்லை குருவிடமிருந்தா அதுவுமில்லையெனில் கற்றுக் கொடுக்கிற சமூகத்திலிருந்தா,,? கற்றுக் கொள்வதும் கற்றுக் கொடு ப்பதும் நம் தேவையை யும் அவசரத்தையும் பொறுத்ததுதானே இல்லையா என்றவளின் முன் நின்றவன் சமையலறையில் இருந்தான்,

வீட்டுக்குள் எத்தனை ரூம்கள் இருந்த போதும் இவனுக்கு உடை மாற்ற வாய்த்தது சமையலறைதான் என ஆகிப்போகிறது,

வீட்டில் இவனுக்குப் பிடித்தஇடங்களில் சமையலறை மிக முக்கியமாகிப்  படுகிறது / வெறும் சமையல், அரிசி பருப்பு பண்டம், பாத்திரம், அரிசி, பருப்பு, அரசலவு அஞ்சறைப் பெட்டி மிக்ஸி,கிரைண்டர்,,,,,மட்டும் குடி கொண்டது சமையலறை இல்லை,

மாறாய் ஊன் உருக்குகிற உன் நினைவுகளும் உருவமும் ரத்தமும் சதையு மாய் அன்றாடம் உனது அர்த்தங்களை எழுதிச் செல்கிற சமையலின் உயர் அழுத்தமும் கொண்டதல்லவா அவ்விடம் ,ஆகவே அது பிடித்துப் போகிறது தான், எனக்கு என மனம் பிடித்தவளின் இளம் புன்னகையும், மெல்லிய பார்வையும் ஒரு சேர மனதிற்கு கிடைத்து விட்ட திருப்தியை சமையலறை கள் ஏற்படுத்தி விடுகிறதுதான், அதனால்தான் தஞ்சமாகிப் போகிறான் அடிக்கடி.அவளின் உள்ளர்த்தங் களை ஏற்றுக்கொண்டு/

மணி ஒன்பது தாண்டி ஒன்பது ஐந்தை எட்டித்தொட்டு விடப்போன வேளை வலது ,காலில் மாட்டிய பேண்ட்டை போட்டவாறே ஹாலுக்கு வந்தான்,

”கடைசி ரூமில் பெரியவள் படுத்திருந்தாள்,அடுத்த ரூமில் சின்னவள் படுத்திருந் தாள், ஹால்தான் எப்பொழுது இவனுக்கு வாய்த்தது,அதெல்லாம் இருக்கட்டும் கூட. இவ்வளவு பெரிய வீட்டை கட்டிப்போட்டு விட்டு ஆத்திர அவசரத்திற்கு உடை மாற்றக்கூட சமையலறையில் போய்த்தான் நிற்க வேண்டியிருக்கிறது எனும் போதுசங்கடமாய் இருக்கிறதுதான்” என்கிறான்

“இன்னும் புள்ளைங்க ரெண்டு பேரும் எந்திரிக்கலையா,,என்றவாறே, ராத்திரிக்கு சீக்கிரம் படுத்தாத்தானே காலையில சீக்கிரம் எந்திருப்பாங்க,/ எல்லாம் இங்க இருந்து வர்றது, ஒங்களச்சொல்லணும் மொதல்ல,அவுங்க ரெண்டு பேரும் கெட்டுப் போறதே ஒங்களாலத்தான் என்ற மனைவியை ஏறிட் டவன் சும்மா இரு நீ,ஒடனே ரொம்பத்தானா குத்தம் சொல்ல ஆரம்பிச் சுருவ, லேசுசுக்குள்ள குத்தம் சொல்ல மாட்ட,ஆனா ஆரம்பிச்சிட்டயின்னா விடமாட்ட ,ஊர விட்டு தள்ளி வைக்கிற அளவுக்கு போயிறுவ”,,,,,,,,என்பான் சிரித்துக்கொண்டே,,,/

கண்டிக்கிற இவனின் குழி விழுகிற கண்ணத்தில் லேசாய் கிள்ளி விட்டு எட்டப் போய் சொல்லுவாள் ஊர விட்டு தள்ளிப்போறப்ப என்னையும் கூட்டிக்கிட்டுப் போயிருங்க,அப்பிடியே கோயிச்சிட்டுப்போனது போல அங்கிட்டுப் போயி இருந்துட்டு வருவம், கொஞ்ச நாளைக்கி என்கிற அவளது சிரிப்பிற்கும், பேச்சிற் கும்,, செய்கைக்கும்,,, அட போங்கப்பா வாழ்க்கை மொத்தத்தையும் எழுதி வைத்தால் கூட காணாதுதான்,எழுதி வைக்கிற பேரேடு முடிந்து பரஸ்பரம் இருவரது மனங்களிலுமாய் மாறி மாறி எழுதி வைத்துக் கொள்ள வேண்டியது தான்,

வட்ட வடிவ கடிகாரத்திற்குள் சின்னதும் பெரியதுமாய் களைப்பு காட்டாமல் ஓடிய சின்னதும் பெரியதுமான முட்கள் விநாடி முள்ளை துணைக்கு அழைத்துக் கொண்டு காலனை கண்ணாடியாய் பிரதிபலித்துக் கொண்டி ருந்தது,

சுவர் கடிகாரம் வாங்க வேண்டும் என முடிவான நாட்களில் சற்று வித்தியா சமாய்,நல்லதொரு டிசைனில் இருக்குற கடிகாரமாய் வாங்க வேண்டும் என முடிவெடுத்தான்,

வாங்கி பத்து வருடங்களுக்கும் மேலாகி விட்டது,இன்னமும் பெரிய அளவிற் கானரிப்பேர்ஏதுமில்லாமல்ஓடிக்கொண்டிருக்கிறது,அவ்வப்பொழுதுபேட்டரி போடு வதை ரிப்பேர் கணக்கில் வைக்க முடியாது,பாவமாகிப்போகும்,பின் காலன் பஸ்ஸேறி வந்து கண்டனம் தெரிவித்து விட்டுப்போவான், இப்போ தைக்கு அதற்கும் வழியில்லை,பின்கண்டனத்தை ஆதரிப்பவர் எதிர்ப்பவர் இரு பிரிவுகள் உண்டாகி அவர்களுக்குள்ளான பெரும் பிளவிலும் சர்ச்சை யிலுமாய் காலமும் நேரமும் மறைந்து சர்ச்சை மட்டுமே மேலோங்கி நிற்பதாக ஆகிப்போகும். ஆகவே வேண்டாம் என சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டு சாகஸம் நிகழந்ததாய் மன நிமிர்வு கொண்டு திரிந்த நாட்களில் சத்தம் போட்டாள் மனைவி,

சப்தம் போடுவதற்கும் குறை சொல்வதற்கும் ஏற்றவளாகிப் போனவள்தான் மனைவி போலும்,

‘அப்பிடியெல்லாம் சுருக்கமா நெனைக்காதீங்க, நீங்க நெனைக்குறதான் வாஸ்தவமுன்னா இவ்வளவு பெரிய வீட்டை கட்டி இழுக்குறது யாரு,,? நீங்க ளா,,,,? ஒங்களுக்கு காலையில எந்திரிச்சி ஆபீஸ் கெளம்பவே நேரம் சரியாப் போகுது,,,,இதுல நீங்க குடும்பத்த இழுத்துட்டாலும்,,என்கிற அங்கலாய்ப்பு அவளைச்சார்ந்ததாய்.

அவளது சொல்லிலும் செயலிலும் வாஸ்தவம் தட்டுப் படாமலும், அடையாளப் பட்டுத் தெரியாமலும் இல்லை, காலையிலெழுந்து பிள்ளைகளுக்கு டீப் போடுறதுல இருந்து அவுங்க ரெண்டு பேரையும் ஸ்கூலுக்கு தயார் செய்வது வரை ஏங் வேலைதான,அதுக்கு என்ன தனியா சம்பளத்துக்கு ஆள்போட்டா வச்சிருக்குறீங்க, இல்லையே, ஓசியான வாசிங்க் மிஷினா, ஓசியான மிக்ஸி யா, ஓசியான கிரைண்டரா, இன்னும்,இன்னுமான ஓசியான வேலை செய்யிற மிஷினா இருக்கு றோமே தவிர்த்து,கட்டிக்கிட்டு வந்தவளா இல்லை,

ஒன்பது மணிக்கெல்லாம் பஜாரில் இருக்க வேண்டும் என நினைத்தான், போகிற வழியில் ஓரு டீ ,வடை சாப்பிட்டுப்போகலாம் என்கிறதான நினைப்பில்,

ரொம்ப நாட்களாகிப்போனது அப்படியாய் சாப்பிட்டு/

டீக் கடை அவசர ஆத்திரத்திரத்திற்கு சாப்புடுகிற ஹோட்டல் டிபன், சாப் பாடு எல்லாம் மறந்து போனது ,கண்முன் இருந்து மறைந்தும் போனது, நேர் கோட்டு நிகழ்வு போல் வீட்டிலிருந்து கிளம்பி அலுவலகம் செல்ல, அலுவல கத்திலிருந்து கிளம்பி வீடு வர என தினசரிகளிலான காலை மாலை நிகழ்வுகள் இதுவே என சாஸ்வதமாகிப்போகிறது,யாரையும் பார்த்து பேசி உறவாடி மனம் கலந்து நீண்ட நாட்கள் ஆகிப்போனது,உறைந்து கிடக்கிற வீட்டையும்,பிள்ளைகளையும்,அக்கம்பக்கத்தையும்தெருக்களையும்,ஊரையும் பார்க்க சற்று சங்கடமாய் இருக்கிறது

காலில் சக்கரம் கட்டிக் கொண்டு நகர்வு கொண்டிருந்த சமூகம் ஓரிடத்தில் நின்று கொண்டு அசைய மறுக்கிறதாய்,சமூகத்தின் காலில் எப்பொழுது சக்கரம் கட்டப்போகிறார்கள் எனத் தெரியவில்லை,

சமூகம் சடுதியெடுத்து ஓடுகிற ஓட்டத்தையும் இசைக்கிற கீதத்தையும் கேட்கஆசைதான்,கேட்ககாத்திருப்போம் என்கிறதான நினைப்புடன் சென்று கொண்டிருக்கிறான் இரு சக்கர வாகனத்தில்/

வாகனத்தை மாற்ற வேண்டும்,ஐந்து வருடங்கள் கூட ஆகியிருக்கவில்லை, வாங்கி, மூன்று வருடங்கள் கூட முழுமையாக எட்டி இருக்காது என்றே நினைக்கி றான், நான்கு சர்வீஸ் விட்டு விட்டான்,ஆனாலும் கூட வண்டியை ஓட்டுகிற திருப்தி இல்லை,சக்கட்டான், சக்கட்டான்,,,,என கட்டை வண்டியை தலையில் சும்மாடு கட்டிதூக்கிக்கொண்டு நடக்கிற கொடுமையாய் இருக்கி றதுதான்,

“கொடுமை கொடுமைன்னு கோயிலுக்குப் போனா அங்க ரெண்டு கொடுமை தங்கு தங்குன்னு ஆடுன கதையாய் ஆகிப் போகிறது இந்த வண்டியை ஓட்டுகையில்/

ஆனால் தினசரி தங்குதங்குதான்ம்,தினசரி கொடுமைதான்,விற்று விட்டு ஸ்கூட்டி அல்லது பெரிய வண்டி வாங்கலாம் என்கிற நினைப்பிலேயே சிறிது காலம் போயிற்று,

வீட்டில் பெரிய,பெரிய செலவுகள் இருக்க இதில் கொண்டுபோய் பணத்தை முடக்குவானேன் என்கிற எண்ணம் ஒரு பக்கம்,இல்லை ஆத்திர அவசரத் திற்கு ஒரு வண்டி அவசியம் என்கிற எண்ணம் மறுபக்கம்,வெவ்வேறாய் பரிணாமம்கொண்ட எண்ணங்கங்களின் துளிர்ப்பும் வேர்விடலுமாய் இருந்த சமயங்களில் பிள்ளைகளுக்கு இவன் பெரிய வண்டி வாங்குவதில் இஷ்டம் இருந்திருக்கவில்லை,ஏறிப்போனவயது,தப்பிப்போகிறநினைவுகள், தளர்ந்து போன உடல், எல்லாம் ஒன்று சேருகையில் வண்டியை கட்டுப்படுத்துவதற்கு மிகவும் சிரமம் கொள்வீர்கள், ஆதலால் வேண்டாம் பெரிய வண்டி,அதை வாங்குகிற எண்ணத்தை அடியுடன் கைவிட்டு விடுங்கள் என்றார்கள் ,சரி இருக்கட்டும் அவ்வாறே,,,/ என்கிற எண்ணத்துடன் ஸ்கூட்டி வாங்கி விடலாம் என்கிற நினைவுடன் இருந்த பொழுது நெருக்கடி வந்து விட பழையதையே ரிப்பேர் பார்த்து ஓட்டிக்கொண்டு இருக்கிறான்.

தெரு முக்கு திரும்புகையில்தான் அவரை கவனிக்கிறான்,

லோடு மேனாக அறிந்திருக்கிறான் அவரை.இவன் அறிந்து அவர் சோம்பி இருந்து பார்த்ததில்லை, எந்தப் பக்கமிருந்தாவது எந்தப்பக்கமாவது சென்று கொண்டி ருப்பார் அல்லது வந்து கொண்டிருப்பார்,அப்படி செல்கிற நேரங்களில் சைக்கி ளில் மூட்டை கட்டிக் கொண்டு போவார்,என்ன மூடை இது என்றால் அரிசி மூடை அல்லது பருப்பு மூடை என்பார் ,அரிசி மூடை என்றால் ஒரு கடையிலிருந்து இன்னொரு கடைக்கும், அதேது பருப்பு மூடை என்றால் ஒரு மில்லிருந்து இன்னொரு கடைக்குமாய் கொண்டு போகிறேன் என்பார்,

இப்படியாய் நாள்தோறும் உழைப்பு உழைப்பு உழைப்பிற்கு மட்டுமே உடலையும் மனதையும் ஒப்புக் கொடுத்து விட்டுப்பெரிய அளவிற்காய் வேறெந்த பிரதிபலனையும் எதிர்பாராமல் உழைப்பிற்கான ஊதியத்தை மட்டுமே பெரிதாக நினை த்து வாழ்பவர்,

அவரின் உழைப்பும் ஊதியமுமாய் நின்று போன இந்த நாட்களில் வேலை க்குப் போகாமல் இருக்கிறேன் வீட்டில் என்றார்,வேலையும் அதற்கேற்ற ஊதியமுமாய் இருந்த நாட்களில் சாலையில் செல்கிற வேலையும் ஊதிய மும் அற்ற பெரும்பாலோனரைப் போலத்தான் அவரும் இவனைப் பார்த்தார்,

ஒரு நாளின் பிற்பகல் வேளையாய் கடைக்குப் போய்க்கொண்டிருக்கும் பொழு தில் இவனைப்பார்த்து வண்டியை நிறுத்தி விட்டார்,”தம்பி தப்பா நெனைச்சிக்கி றாதீங்க,வேலைக்குன்னு போயி ஒரு மாசத்துக்கு மேல ஆகிப் போச்சி. கையில ஒரு நயாப்பைசா கெடையாது, செலவுக்கு ஏதாவது இருந்தா குடுத்துட்டுப்போ தம்பி” என இறைஞ்சலுடன் கேட்கிறார்,மனம் தொட்ட அவரது இறைஞ்சலுக்கு அன்று இறங்கியது இன்று தப்பு என நினைக்கத் தோனி விட்டது,

“ஒரு தடவை குடுத்தால் உதவி ,ஓயாமல் கேட்டால் அதற்கு பெயர் என்னவாய் இருக்கும் நீங்களே சொல்லுங்கண்ணே,,,,,” என மூன்றாவது தடவையாய் அவர் இவனிடம் கையேந்தி நின்ற நாளில் கேட்ட பொழுது இல்ல தம்பி திரும்பத்திரும்ப ஓங்கிட்டயே வர்றேன்னு தப்பா நெனைச்சிக்கிறாத தம்பி, எனக்கு ஒன்னைய விட்டா யாரு தம்பி இருக்கா சொல்லு,நீயும் ஒன்னையப் போல இருக்குற ரெண்டு மூணு பேரையும்தான் எனக்குத்தெரியும். சுருக்க மான ஒலகத்துக்குள்ளயே வாழ்ந்து பழகீட்டவன் தம்பி, அதுனாலத்தான் தம்பி ஒங்களயே சுத்திச்சுத்தி வர்றேன் ,எனக்கு ஒங்கள விட்டா யாரு தம்பி சொல்லுங்க என்றவரின் பேச்சில் பொய் தெரியவில்லை,

2 கருத்துகள்:


  1. ஓயாமல் உழைத்தவர்களைக் கூட இக்காலம் முடக்கித்தான் போட்டுவிட்டது.
    சிறுகதை என்றாலும் உண்மை இதுதானே

    பதிலளிநீக்கு
  2. நன்றியும் பிரியமுமாக...!

    பதிலளிநீக்கு