திங்கள், 30 டிசம்பர், 2019

வெளிக்காத்து,,,,



திருமண மண்டபம் இருக்கிற இடம் பிடிபடவில்லை சரியாக,,,/ அருப்புக் கோட்டைக்கு செல்லும் சாலைக்கு அருகாமை காட்டி இருப்பதாய் அழைக்க வந்தவர் சொன்னதாய் ஞாபகம்,

போய் விட்டார்கள் இவனும் மனைவியுமாய் இரு சக்கர வாகனத்தில்/ சென்ற வாரம் பழுது பட்டு நின்ற இரு சக்கர வாகனத்தை சரி செய்து ஓட்டிக்கொண்டு வந்தான்,

ஒர்க்‌ஷாப்க்காரர் கூடசொல்லிவிட்டார்,”என்ன சார் இது,நானும் ஒங்க கிட்ட சொல்லிச்சொல்லிஅலுத்துப்போயிட்டேன்.வண்டியமாத்துங்கசார்,வண்டிய மாத்துங்கசார்ன்னு,,,நீங்களும் மாத்துற வழியக்காணம் ,இதுக்கு ரிப்பேருக்கு செலவழிக்கிற பணத்துக்கு நீங்க புது வண்டியில போட்டாலாவது பிரயோ ஜனம், இப்ப ஒரு தொகைய ஆத்தமாட்டாம ரிப்பேருக்குன்னு செலவழிக் கிறீங்க, அது செலவை இழுத்து வாங்கிக்கிட்டு திரும்பவும் ரெண்டு இல்ல மூணு மாசத்துல ஏதாவது மேஜரான செலவக்கொண்டு வந்து காமிக்கும் அப்பப்போட்டு மனசு சங்கடப்பட்டு இதுக்கு அழுவுறதுக்கு பேசாம புது வண்டிய வாங்கிட்டுப்போயிலாமுல்ல,,,,,,?

நீங்களும் அப்பப்ப நடு ரோட்டுல நின்னுக்கிட்டு எனக்கு போன் பண்ணி வண்டி நடு ரோட்டுல நிக்குது ரிப்பேராகி வாங்கன்னு கூப்புடுறீங்க,நானும் வர்றேன், ரிப்பேர் பண்ணித்தர்றேன்,இதுல பஞ்சர் தவிர்த்து ஒங்கள தர்ம சங்கடமான நெலையில தர்மசங்கடமான யெடத்துல நிக்க வச்சிருக்குது இந்த வண்டி. இல்லையா,”

ஒரு தடவை கே ஜி ஏ ஸூகூல் கிட்ட வந்துக்கிட்டு இருக்கும் போது ஆக்ஸி லேட்டர் வயர் கட்டாகிருச்சின்னு கூப்புடீங்களே ஞாபகம் இருக்கா,அப்ப மணி என்னன்னு தெரியுமா,ராத்திரி பதினோரு மணி,பையன்க எல்லாம் கடிஅய மூடிக்கிட்டு போயிட்டாங்க,நனும் வீட்டுக்குப்போயி அப்பத்தான் கையக்காலக் கழுவீட்டு இருக்கேன்,கூட்டூட்டீங்க, நல்லபசி, அன்னைக்கி மதியம் வேற சாப்புடல,நாலு ஒர்க ஷாப்புல வேலைக்கி இருந்தப்பத்தான் நேரத்துக்கு சாப்புட முடியாமப்போச்சின்னா,ஒருவொர்க்‌ஷாப்புக்கு ஓனரான ப்பொறகும் சாப்புட முடியாமப்போறதுஅதவிடகொடுமையிலும்கொடுமைதான் போன்னு நெனைச்சிக்கிட்டு கூட வேலை பாக்குற பையனையும் கூட்டிக்கிட்டு வேகு வேகுன்னு வந்தா நீங்க பாவம் அந்த அத்துவான வேளையில வண்டிய உருட்டிக்கிட்டு அந்துக்கிட்டு இருக்கீங்க பாவம்,,,,,

வண்டிய டோ பண்ணிட்டிட்டு வரும்போது திக்குதிக்குன்னுதான் நடந்து வந்தேன்னுசொன்னீங்க,எதுக்குப்பாவம் அப்பிடியெல்லாம கஷ்டப்பட்டுக் கிட்டு,பாம்பு நெளிய பயப்படுற நேரத்துல ஒத்தையா அந்த அத்துவான ரோட்டுலயெல்லாம் வந்துக்கிட்டு,,,,

அது போல இன்னொரு தடவை நடந்துரக்கூடாதுன்னுதான் சொல்றேன் சார்,புது வண்டி வாங்குங்கன்னு,இனி இந்த வண்டியில தாங்குறதுக்கு இதுக்கு மேல பெரிசா ஒண்ணும் யெசக்கு இல்ல,

இவ்வளவு சொன்னதுக்கு அப்புறமும் கூடசரிசரின்னு தலையத்தலைய ஆடிக் கிட்டு பேசாம போனிங்கன்னு வையிங்க ,திரும்பவும் ஒருக்க ஆக்ஸிலேட்டர் வயர் கட்டாகி எங்காவது நடு காட்டுல நின்னுக்கிட்டு இருப்பீங்க பாத்துக்கங்க ஆமாம்எனஅன்று சொன்னஒர்க்க்ஷாப்க்காரரின் பேச்சு இன்றும் மனம் கொண்டு நிற்பதாக,,/

சின்னமகளுக்குஸூகூட்டிவாங்க வேண்டும் என ஆசை,பெரிய வண்டிதான் தனக்கு ஏற்றது என இவன் நினைக்கிறான்,

பெரிவயவனும் ஸ்கூட்டியே வாங்கிக்கொள்ளுங்கள் அதுதான் உங்களுக்கு ஏற்றது,இனிமேல்பெரியவண்டிஓட்டுகிறவயதில்லை உங்களுக்கு என்கிறான், அப்படி என்ன வயதாகிவிட்டது இவனுக்கு எனத்தெரியவில் லை.ஐம்பத்தி ஆறு ஒரு வயதா,,அறுபது வயதிற்கு மேலானாவர்கள் காற்றில் இருசக்கர வாகனம்ஓட்டிச்செல்பவர்களைநிறையதடவைபார்த்திருக்கிறான்,பார்த்திருக்கிறான் என்ன பார்த்து வியந்திருக்கிறான்.

அந்த வியப்பு பொய்யில்லை நிஜமே,அதைச்செய்ய நம்மால் என்ன இயலா தா என்கிற எண்ணம் மேலோங்க பழைய மாடல் இரு சக்கர வாகனம் ஒன்றை வாங்கி ஓட்டிக்கொண்டு திரிந்தான் சிறிது நாள்,சரிவரவில்லை அது என அதை விற்ற தினத்திலிருந்து இன்று வரை பெரிய வண்டியை ஓட்டிப் பார்த்ததில்லை.

சொந்தமாக வாங்கு பொழுது ஒட்டிக்கொள்ளலாம் என இருந்துவிட்டான்.

ஒயின் ஷாப்பிற்கு எதிர்த்தாற் போல் இருக்கிற திருமண மண்டபத்தின் பின்னால் என்றார்கள்,

இப்பொழுது வேறு எதையும் விட ஒயின் ஷாப் நல்ல அடையாளமாக ஆகித்தெரிகிறது,

பின்னால் இருந்த மூன்று மண்டபங்களில் எது எனச் சரியாகச் சொல்ல வில்லை,ஒரு வேளை அவர்கள் சொல்லி இவன் கவனிக்கவில்லையோ என்னவோ,,,?

வேறு வழி ஒவ்வொரு மண்டபமாய் ஏறி இறங்க வேண்டியதுதான்,

அருப்புக்கோட்டைரோடு இவனது வீட்டிலிருந்து மூன்றுகிலோமீட்டர்கள் இருக்கலாம்,

இருசக்கரவாகனம் இருந்தால் போய் வருவது ஈஸி,பஸ்ஸிற்காய்க் காத்திருந் தால் காலம் போய் விடும்.

இங்கிருந்துபஸ்டாண்ட் சென்று அங்கிருந்து அருப்புக்கோட்டை ரோடு வழியாக செல்கிற பஸ்ஸாய் பார்த்து விழி கழண்டு விழ காத்துக் கிடக்க வேண்டும்.கழண்டவிழிதற்செயலாய் எங்காவதுபார்த்துக்கொண்டிருந்தால் வந்த பஸ் விருட்டென காணாமல் போய் விடும் வந்த வேகத்தில் /

இங்கிருந்து கால் மணி நேரம் பஸ்டாண்ட் செல்ல,அங்கிருந்து கால் மணி அருப்புக்கோட்டைசாலைசெல்ல,,,,இவைஇரண்டிற்குமாய்செல்லபஸ்ஸிற்காய் காத்திருக்கிற நேரம் பத்தும் பத்துமாய் இருபது நிமிடங்கள் வைத்தால் கூட ஐம்பதுநிமிடம்,ஆகிப்போகிறதுதான்,அதில்ஐந்துநிமிடம்குறைத்தால் முக்கால் மணி நேரம்,அந்த முக்கால் மணியின் பாதியை கையில்பிடித்துக் கொண்டு இரு சக்கர வாகனத்தில் சென்று வந்து விடலாம்,

அதிலும் பஜார் வழியாக போய் வந்தால் தேவையானதை வாங்கிக் கொள்ள லாம்.

தேவையானது என பஜாரில் இவன் வாங்குவது காய்கறிகள் மட்டுமே,,/ பேஜார் இல்லாத பஜாராய் அதை பார்க்க முடிந்ததால் அங்கு காய்கறி வாங்கிக்கொள்ள இவனுக்குப்பிடிக்கிறது,

நேற்றைக்கு முன் தினம் அந்த அக்காதான் அழைப்புச்சொல்ல வந்திருந்தார் கள் வீட்டிற்கு, அவர்கள் வரும் போது காலையில் மணி ஏழு இருக்கும்,

ஏழு மணியைஎட்டிப்பிடிக்க இன்னும் ஐந்துநிமிடம் இருந்தது, ஒரு ஞாபக த்திற்காய் அப்படி வைத்துக் கொள்ளலாம்.என்றாள், கடிகாரத்தைப்பார்த்து விட்டும் மனக் கணக்காயும்.,,/

ஏன் வாசலோட நின்னுட்டீங்க,உள்ள வரவேண்டியதுதான இதுக்கு எதுக்கு அனுமதியெல்லாம் கேட்டுக்கிட்டு,ஒங்க வீடு போல இல்லையா இது என்ற இவனது பேச்சிற்க்கு பலமெடுத்துசிரித்தவள் ”சும்மா கெடடா கிறுக்கா,,, கிறுக்கன்மாதிரிபேசிக்கிட்டு,,,வாடா,போடான்னுகூப்புடலாமுல்லாப்பா,,அதுக்கு அனுமதி உண்டா இல்லை அதுவும் கெடையாதா சொல்லீரு என அவள் கேட்ட நேரம் கொஞ்சம் அமைதியானவன் சுதாரித்து அட போங்கக்கா, நீங்க கூப்புடாமயாருஎன்னய,கூப்புடப்போறா,,,எங்கஅம்மாவுக்கு அடுத்து நீங்கதான அப்பிடி கூப்புட வாய்ச்ச மனுசியா தென்படுறீங்க,இந்த விஷயத்துல நான் குடுத்துவச்சிருக்கணுமுக்கா,இது போல உரிமையோட கூப்புட, பேச, கோவிச்சிக்கிற, மனசுக்குள்ள இல்ல,வெளிபடையா வையிற துக்கு யாரு இருக்கா சொல்லுங்க,,,என்றவனாய் சரி வாங்க வீட்டுக்குள்ள வாசல்லயே நின்னுபேசிக்கிட்டுஇருந்தாஎப்பிடி,,,?பாக்குறவுங்கஎன்னையதப்பாநெனைக்கப் போறாங்க, என்னடா இவன் வீட்டுக் வந்தவுங்கள வாசல்லயே நிக்கவச்சி பேசிக் கிட்டுஇருக்கான்னு,,,,/”

”எதுக்குடா அப்பிடியெல்லாம் பேசப் போறாங்க,நீ என்ன எனக்கு அந்நியமான ஆளா,இல்ல நான் என்ன ஒனக்கு அந்நியமான ஆளா சொல்லு,,,,,,எனக்கு ஒரு டம்பளர் பச்சை தண்ணி குடுத்து இப்பிடியே வாசலோட அனுப்புனாக் கூட சந்தோசம்தான்,

“தெரியும்இந்நேரம்வந்தாபுள்ளைங்கஎந்திரிச்சிருக்கக்கூடமாட்டாங்காங்குற சந்தேகத்துலதான் வந்தேன், நீயே இன்னைக்கு என்னமோ அதிசியமா எந்திரிச்சி வந்து வாசல்ல நிக்கிற/ இந்த அக்காவ கூப்புட,,

“கேள்விப்பட்டேன், ராத்திரிக்கி சீக்கிரம் தூங்குறதில்லையாம், காலையில லேட்டாத்தான்எந்திக்கிறயாம்,சொல்றாங்க,,,அப்பிடிஎன்ன தேவை இருக்கு ஒனக்கு,ராத்திரிக்கு முழிக்கிற அளவுக்கு பகல்ல தூங்கிப்போற அளவுக்கு, ஒடம்பத்துக்க,அத விட்டுறாத ,சொவரு இருந்தாத்தானன்னு சொல்லாட்டிக் கூட நம்ம தெம்பா இருந்தாத்தான மத்தவுங்கள இழுக்க முடியும், ஊருக்கா கவும், பொதுவுக்காவும் ஓடிக்கிட்டுத்திரியிறது கொஞ்சம் இனிக்கும்தான், கொஞ்சம் சந்தோஷமாகூட இருக்கும்தான். ஒன்னைய யாரும் அதெல்லாம் செய்ய வேணாமுன்னு சொல்லல,செஞ்சிக்க ஒனக்கு சந்தோஷமாவும் ஞாயமுன்னு படுறத தவிர்த்து நீ ஒண்ணும் தப்ப பண்ணீறப்போறதில்ல, என்ன பொதுவுங்குறது நாலுபேரு சேந்ததுதான,நாலுல ஒருத்தரு கொஞ்சம் யெசக்கேட்டுக்குஉட்பட்டுட்டருன்னாக்கூட அதுக்கு நீயும் ஒரு ஆளா சப்போடபண்ணிநிக்கணும்.போயிமனசாட்சிஉறுத்தித்திங்கும் போதுகூட,,,/

“எப்பயும் நிக்கிற தரை முக்கியமில்லையா, காலுக்குக்கீழ நழுவிக்கிட்டு இருந்தா அது தரை கெடையாதுதான,அலித்தரைதான,அத நம்பி இருந்துறக் கூடாதுன்னுதான்சொல்றேன்,ஆனாநீஅப்பியெல்லாம்போறஆளு கெடையாது தெரியும்,இருந்தாலும் சொன்னேன் என்றவள் ஆனா நீ இது போல ஊரு பொதுவுன்னு ஓடிக்கிட்டு திரியிறதுன்னு ஆனதுக்கு அப்புறம்தான் நெறைய கத்துவச்சிருக்குற ,அது சரி அனுபவமும்,காலமும் கத்துக்குடுக்குற அளவுக்கு இங்கயாருசொல்லிக்குடுக்கப்போறா,காலம்ஒருசிறந்தஆசிரியன்,கணக்கீட்டாளன், நல்ல மருந்துன்னு ,,இன்னும் இன்னும் நெறைய சொல்வாங்கப்பா,,,,இந்த அக்காசொல்றதவிடகாலம்ஒனக்குநெறைய சொல்லித்தரும்,நீயும் காலத்தின் நூலப்புடிச்சிமேலஏறிவந்துகத்துக்குருவ,ஒன்னையபுனரமைச்சிக்கிறுவன்னுதா இவ்வளவும் பேசுறேன்,புனரமைச்சிக்கிறுவ நீ,கண்டிப்பா,,,/,

”இவ்வளவுதூரம்ஓங்கிட்டபேசுறதுக்குவிஷயம்இருந்தாலும்கூடஒன்னையப் பாக்குறதுக்குக்கொஞ்சம் பொறாமையா இருக்குடா,குடியிருக்க சின்னதா ஒரு வீடு, அளவான குடும்பம்,பெரிய அளவுலான சண்ட சச்சரவுன்னு இது நா வரைக்கும்ஒங்களுக்குள்ள பெரிசா விரிசல் விழுந்துறாத தாம்பத்தியம். சின்ன சின்ன சச்சரவுகளத்தவிர்த்து,,,,அது இல்லைன்னா குடும்பம் இனிப்பு இல்லையில்ல,,,,வாசல்ல போடுற கோலத்துக்கு வைக்கிற புள்ளிகளப் போல அதெல்லாம்இருக்கும்தான்.என்னவச்சபுள்ளிகளோட அர்த்தமும் அடர்த்தியும் கொளஞ்சிறாம பாத்துக்கிட்டு வர்ற பாத்தியா அதுக்கும் சேத்து இந்த அக்கா தலை வணங்குறேன்டா,,,,/,

”என்னயப்பாக்குறவுங்களெல்லாம்கேக்குறாங்கடா,ஏங்கிட்டபேசுறபத்துலஎட்டுப் பேராவது ஒங் கல்யாணம் ல்வ் மேராஜான்னு கேக்குறாங்க, அவங்க கிட்டயெ ல்லாம் சொல்றேன் அவுங்களது லவ் மேரேஜ் இல்லை,மேரேஜ் லவ்வுன்னு, கல்யாணத்துக்கு அப்புறமும் அன்பு கொறையாம காதலிக்க வாச்சிருக்குற அன்பு ஜோடிக அவுங்கன்னு சொல்வேன்,,,,,” என்றவாறு வீட்டுக்குள் நுழைந்தவள் இவன் மனைவி கொண்டு வந்த டீ டம்ப்ளரை வாங்கியவாறே ”என்னதிது டீயா,டீன்னா எனக்குப்பிடிக்கும்,ஆனா எங்க வீட்டுல காபிதான் போடுவோம்,

“காபி,காபி,,காபி,,,ஒரே காபிதான்,நின்னா காபி,உக்காந்தா காபி படுத்தா காபின்னுஆகிப்போனகாபி ஒலகம்,,வீட்டுக்காரருக்குப் புடிக்கும்ங்குறதால நானும் காபி குடிக்க பழகிக்கிட்டேன், கட்டாயத்துக்குட்பட்டுதான்னாலும் கூட அப்பிடித்தான் பழகிக்கிற வேண்டியதாகிப் போனேன்,

”கல்யாணம் ஆன மறு நாளையில இருந்து எங்களோட ஆசை பாசங்கள மூட்டகட்டிவச்சோகுழிதோண்டிபொதைச்சோதான் ஆக வேண்டியதிருக்கு. இல்லை அது முடியாதுன்னு மல்லுக்கு நின்னா குடும்பம்பத்துகாக இது கூடவாகாம்ப்ரமைஸ்பண்ணிக்கிறகூடாதுன்னுஒரு அசரீரி கனமா ஒலிக்குது ஆண்கள் ஒலகத்துல இருந்து,என்ன செய்ய சரின்னு அடங்கிப் போயிருறவு ங்களா ஆகிப்போறம், அதுல நானும் ஒருத்தியா இப்ப ஓங் முன்னாடி நிக்கிறேன்,,,,” என்றவள் இன்னும் கொஞ்சம் டீக்கெடைக்குமா என்கிற உரிமையுடன் சமையலறைக்குள் நுழைந்தாள்,,,,,,/

”யப்பா எதுன்னா வித்தை எதும் கத்து வச்சிருக்கையாப்பா,”என்றாள் இவன் மனைவியைப் பார்த்து,,,,,எடுத்தது எடுத்த எடுத்துல,வச்சது வச்ச எடுத்துல அப்பிடியேஅச்சுப்பெசகாமஇருக்கேப்பா,.,,,,பாத்திரமெல்லாம்இப்பத்தான் வாங்குனபுதுப்பாத்திரம் போல இருக்கேப்பா, எப்பிடியும் காலையில எந்திரிச்சி அடுப்பப்பத்தவச்சிருப்ப,இந்தாடீப்போட்டுஎனக்குகுடுத்துருக்குற, நீங்களும் குடிச்சிருப்பீங்க,ஏங் தம்பி வழக்கம் போல ரெண்டு டம்ப்ளர் டீ வாங்கிக் குடிச்சிருப்பான்.அவன்கடைக்கிப்போனாலேடீக்கிடிக்கிறதுக்கு முன்னாடி ஒரு டீ, டீக்குடிக்கும் போது ஒரு டீ,டீக்குடிச்சப் பின்னாடி ஒரு டீன்னு குடிக்கிற ஆளு,,,கேட்டாஅதுக்குஒருவிளக்கம்சொல்லுவான்,நாவோடசுவைறும்புகள்ல பட்டு ஒவ்வொரு மிடறா உள்ள போற டீ ஒடம்பையும் மனசையும் இணைக்கிற பாலம்ன்னுவான்.அப்படியாப்பட்ட ஆளு அவனுக்கு டீபோடும் போது  நீங்க ரெண்டு பேருக்கும் புள்ளைங் களுக்காவும் டீ ஆத்தும் போது சிந்தி செதறி அடுக்கள மேடை முழுசுமா அடையாளம் காத்துக்கெடக்காம இப்பிடி நீட்டா தொடச்சி வச்சிட்டு ஏதோ அந்தரத்துல இருந்து எல்லாம் வந்தது போலவும் மந்துரத்துல பழுத்த மாங்கா போலவுமா இருக்கே,,இதுக்கே ஒன்னையப்பாராட்டணுப்பா,,,,,,மனசாரவும்வயாரவுமா,,,,,,” எனச் சொல்லியள் அடுத்துக்குடுத்த டீயை க்குடித்து விட்டு டப்ளரை கீழே வைத்தாள்,

அப்புறம் காலையில என்ன டிபனா வழக்கம் போல சாப்பாடா எனக் கேட்டவள் புள்ளைங்க இன்னும் தூங்குதுக போல,,,/

”காலகாலத்துலஎழுப்பிவிடுங்க,நம்மஇன்னும் சோம்பிப்போகலாம் ,ஆனா புள்ளைங்க சோம்பி திரியக்கூடாது, மொட்டா இருக்குறதுங்க பூவா மலர காத்துக்கிட்டுஇருக்காங்க,அவுங்களமலரவிடுவோம்,தாராளமா,,,”என்றவள் பிசைந்து வைத்திந்த மாவைப்பார்த்து விட்டு என்ன பூரிக்குப் போடப் போறீங்களா,,,,,என்றவளாய் மருமகளுக்கு வலைகாப்பு வச்சிருக்கேன்,என தேதி, இடம்,நேரம் எனச் சொல்லி விட்டு பூரி சுட்டு முடிச்சவுடனேயே அக்காவுக்கு ரெண்டு பூரிகொண்டாடா என்றவளாய் வெளியேறினாள். வீட்டை விட்டு/

கண்களில் நிறைகொண்ட நீருடன் அவள் சென்றதையே பார்த்துக் கொண்டி ருக்கிறான் இவன்,,,/