சனி, 12 அக்டோபர், 2019

கடலைத்தோலு,,,


 சமையலறையிலிருந்து வேர்க்கடலை அவிக்கும் வாசனை வருகிறது,நாசி நிறைந்த வாசனையாகவும், நன்றாகவும் இருக்கிறது.

”யப்பா நல்லாயிருக்குப்பா,வாசனை மட்டும் இல்லை,வாசனையை கொண்டு வந்தவளையும் பாராட்டனுந்தான் இந்நேரம்.”என்கிற இவனது பேச்சிற்கு செவி மடுத்துச் சிரித்தவள் சமையலறையை குலுக்கித்தான் போட்டாள் கொ ஞ்சமாக/

”ஏன் எதுக்கு இந்த அதிர் சிரிப்பு,என்ன சொல்லிப்புட்டேன் இப்ப,ஓடோடி வந்து ஒட்டிக்கொண்ட வாசனையும்,அதை செய்வித்த ரசவாத வித்தைக்காரிக்கும் பாராட்டின்னுதானே சொன்னேன்,எப்பவும் சொல்ற வார்த்தைதான அது , அது க்குப் போயி இப்பிடி சமையலறை வெடிச்சிப்போற அளவுக்கு சிரிக்காட்டி என்னவாம்,”,?என்கிற இவனது கேள்வி சுமந்த பேச்சிற்கு,,,,,,,,

இன்னொரு அதிர் சிரிப்பை உதிர்த்து விட்டவள் அதன் நீட்சியாய் “இருக்கட்டு மே சிரிப்புத்தான என்ன கொறைஞ்சி போச்சி இப்ப,நீங்க என்ன கொறையா வா சிரிக்கிறீங்க,எதையும்உள்ளடக்கமாவச்சிபொறுமிக்கிட்டுஇருக்காம,சிறுமைத் தனம் காட்டிக்கிட்டு இருக்காம வெள்ளந்தியா வெறும் மனசோட நின்னா இந்த சிரிப்பு என்ன,எதுவேணுமுன்னாலும் வரும்,

”அதுவும் நம்ம மனசுக்குப்புடிச்சவுங்க நாலு நல்ல வார்த்தை பேசும் போது தன்னியல்பாவே பூரிச்சிப்போகுதான மனசு,அப்ப இந்த சிரிப்பு என்ன எல்லாம் சாத்தியமாகிப் போகுது நல்லபடியா” என்றவள் ”பொண்டாட்டி சமைச்சிப் போட்டசாப்பாட்டக்கூட பாரட்டத்தோணாம சும்மா வெறுமனே மண்ணு போல உக்காந்துட்டுசாப்புட்டுப்போறஆம்பளைங்கஎத்தனைபேருஇருக்குறாங்க, அவுங்களுக்கு மத்தியில ஒங்களப்போல ஒருத்தரு கெடச்சது நான் செஞ்ச பாக்கியந்தான” என்றாள்.

”வாஸ்தவம்தான் நீ சொல்லுறது,அதுக்காக நான் வாச்சது நீ செஞ்ச பாக்கியம் அதுஇதுன்னு கதை வுட்டுக்கிட்டும், பொய்யா நம்பிக்கிட்டும் இருக்காத ஆமா, எனக்கு மேலயெல்லாம் வீட்ட அட்ஜஸ்ட் பண்ணிக்கிட்டுப்பாத்துக்கிர்ற ஆம்ப ளைங்க இருக்காங்க,வீட்டு வேலைகள்ல கையையும் ,மனசையும் கலந்து விடுறதுல இருந்து அந்த வீட்டுக்கே பாரம் தாங்கியா நிப்பாங்க,,,/ நானு அதுல பாதி அல்லது கால்வாசின்னு வச்சிக்கவேன்/

பழுப்புக்கலரில்பூப்போட்ட டிசைன் போட்ட சேலை அவளுக்கு நன்றாகத்தான் இருந்தது,கண்ணுக்கு உறுத்தலாக மிகை காட்டியும் இல்லாமல்,டல்லாக அமுங்கிப்போய் இல்லாமலும் பூக்களுடன் சிரித்தது.

பூக்களின்ஊடாக நீளமாகவும் சற்றே சின்னதாயும் ஓடிய கோடுகள் இரண்டை உருவி எடுத்து அப்படியே பின்னி வளைத்து ஜடை போட்டு புடவைலிருந்து கழண்டுவிழுந்தபூவை எடுத்து பின்னல் வைத்த ஜடையில் சொருகி விடலாம் போலிருந்தது.

எட்டி மணியைப் பார்க்கிறான்.சின்னதும் பெரியதுமான முட்கள் விநாடி முள் ளுடன் கைகோர்த்துக்கொண்டு ஆறாகப்போகிறேன் என்றவித்தது.

இரவு கொஞ்சம் தாமதமாகத்தான் தூங்கினான்,

”தாமதமுங்குறது சரி,அதுக்காக இவ்வளவு தாமதமா,காலையில ஆறுமணி வரைக்குமாதாமதத்தஇழுத்து நீட்டிக்கிறது.அப்பறம்ஒடம்புஅப்பிடிப் பண்ணுது இப்பிடிப் பண்ணுதுன்னுகத்திகூப்பாடு போட்டுக்கிட்டு ஆஸ்பத்திரி மருந்து மாத்திரன்னு அலைய வேண்டியது,

“இதுலசெலவு மட்டுமா,எவ்வளவு மன ஒளைச்சலு எவ்வளவு சங்கடம் எவ்வ ளவு மெனக்கெடலு,,”என்பவளை ஏறிடுகிறவன்”,சரிதான் நீசொல்றது, ஆனா நேரத்துக்கு எந்திரிச்சிநேரத்துக்குப்படுத்து நேரத்துக்குச்சாப்புட்டுங்குற நேர் கோடான விஷயத்துல இருந்து கொஞ்சம் வெலகி நிக்கத்தான் வேண்டி இருக்கு சமயங்கள்ல,,,,/

”சமயங்கள்ல இருந்த அது உருப்பெருகி கொஞ்சம்,கொஞ்சமா சமயா சமயங் கள்லன்னு ஆகிப் போச்சி. அன்னைக்கி உள்ளபடிக்கும் என்னாச்சின்னா நீங்க ளெல்லாம் படுத்து தூங்கீட்டீங்க,நான் கொஞ்ச நேரம் லேப்டாப்புல டைப் அடிச்சிக்கிட்டு இருந்தவன் அது முடிஞ்சதும் தூக்கம் வராம டீவிய போட் டேன், லோக்கல் சேனல்ல அடுத்தடுத்து ரெண்டு படம்,ரெண்டும் நல்ல படம். நல்ல படம் பாத்து நாளாச்சி.அப்பிடியே ஒக்காந்துட்டேன்.

“படம் பாக்க ஆரம்பிக்கும் போது மணி பணிரெண்டரை இருக்கும்,ரெண்டு படத்தையும் பாத்து முடிக்கும் போது அது ஆகிப்போச்சி அஞ்சரை மணி, சரின்னு எந்திரிச்சிப்போயி மொகத்தக்கழுவீட்டு வந்து படுத்து தூங்கும் போது மணி ஆறாகிப்போச்சி,அதுதான் விஷயமே தவிர்த்து வேறொன்னுமில்லை, ஆமா” என்றவனை எறிட்டவள் ”என்னமோ போங்க,பதினோரு மணி பண்ணெ ண்டு மணி ஒரு மணின்னு இருந்தது மாறி ஆறு மணிவரைக்கும் நீண்டிருக் குன்னாகொஞ்சம்ஆபத்துஇல்லையா,நீங்க என்ன இன்னும் எளந்தாரிப் புள்ளை யா,ஒங்களநம்பி குடும்பம் இருக்கு,புள்ளகுட்டிக நாங்க இருக்கம் பாத்துக்கங்க, என்றவளின் வார்த்தையில் தெரிந்தஅக்கறை அவ்விடம் பட்டுத் தெரித்ததாய்,,,/

வெந்து கொண்டிருக்கிறதா,இல்லை அவித்து அடுப்பிலிருந்து எடுத்தவுடன் வந்த வாசனையா,,,,?பிடிபடவில்லை,

நேற்றைக்கு முன் தினம் பஜார் போகும் போது வாங்கியது,வீட்டில் சுத்தமாக மளிகை இல்லை,வாங்க வேண்டும் என்றாள்,

மாதம் முதல் மூன்று தேதிக்குள்ளாய் போய் விட்டால் கொஞ்சம் கூட்டம் மத்துவமாய் இருக்கும் பலசரக்குக்கடைகளில்,

பலசரக்கு வாங்கிக்கொண்டு அப்படியே தவணைப்பணம் கொடுக்க வேண்டிய ஜவுளிக்கடைக்கும்பர்னிச்சர்மார்ட்டுக்கும்தவணைகட்டிவிட்டுவந்துவிட்டால்  வீட்டில் மற்ற செலவுகளை பிளான் பண்ண தோதாய் இருக்கும்.

மனைவியை கொண்டு போய் பலசரக்குக்கடையில் விட்டு விட்டு ஜவுளிக் கடைக்கும் பர்னிச்சர் மார்ட்டுக்கும் போய் விட்டான்.

போய் விட்டுத்திரும்புகையில் பஜார் முக்கில் தள்ளு வண்டியில் வைத்து விற்றுக்கொண்டிருந்தார் கடலை வியாபாரி,

எப்பொழுதும் விற்பவர்தான்,”கடலை கடலை, கடலை கடலை”,,என கட்டைக் குரலில் அவர் போடுகிற சப்தம் பஜாரின் மறு முனை வரை கேட்கும் மைக் இல்லாமலேயே/

அதிலும்இவன் அவரைக்கடந்து போவதைப்பார்த்ததும் சப்தம் கூட்டிவிடுவார். அவரை இவனுக்கு நன்றாகத் தெரிந்திருந்தது, கடலை வாங்கப்போகும் போது ஏற்பட்ட பழக்கம்தான்,

அவர்களுக்கும் இவன் போன்றவர்களின் பழக்கம் தேவைப்படுகிறதுதான், கீரைக்காரம்மாவைப் போன்று/

அவரும் இவர் போல்தான்,இன்னொரு தெருவில் வரும் போது போதே இந்தத் தெருவில் இருக்கிற வீடுகள் கீரை வாங்க ரெடியாகி விடும்.

அன்றாடங்களில் அவர்கள் வியாபாரத்திற்காய் வருகிற நேரத்தை சரியாய் சொல்லிவிடமுடியாது,ஒரு நாளைக்கு காலை ஆறு,ஆறரை மணிக்கு வந்தா ரென்றால் மறு நாள் அல்லது எட்டு மணி மூன்றாம் நாளில் ஒன்பது மணி யாகிப் போகும்,

”வாங்கம்மா என்ன இந்நேரம் வர்றீங்க” என்பான் இவன் ஆபீஸ் கிளம்பி பஸ்ஸீற்காய் வேகமெடுத்துப் போய்க் கொண்டிருக்கிற பொழுது/

இல்லதம்பி நேரமாகிப் போச்சி,கரெக்டா நூல் புடிச்சாப்புலசரியானடயத்துக்கு வர்றதுக்கு இதென்ன ஆபீஸ் வேலையா தம்பி, இப்பிடித்தான் ஒரு தெருவுக் குள்ளபோனா கொஞ்சம் சீக்கிரம் வரலாம்,இன்னோரு தெருவுக்குள்ள போகும் போது அது போல ரெண்டு மடங்கு டயம் ஆகிப்போகுது,இதுல ஆகாத போகாத வுங்க பேசுற மோசமான பேரம்,பத்து ரூவா கீரக்கட்ட வாய் கூசாம அஞ்சி ரூவாயிக்கிக் கேப்பாங்க, இதேது பஜார் போயி வாங்குனாங்கன்னா அங்க இருபதுரூபாய்கேட்டாலும்குடுத்துட்டுத்தான்வருவாங்க,எப்பவுமேஎளியவுங்க கிட்டதான நம்ம சமூகம் அதிகாரம் பண்ணி பழகீருக்கு, குனிஞ்ச வன் மேல தான குதிரை ஏறப் பழகீட்டோம் நாமளும்,கொஞ்சம் நிமிந்து நிக்கிறவன் கிட்ட நம்ம அதிகாரம் செல்லாது இல்லையா,அதுமாதிரித்தான் ஆகிப்போகுது தம்பி,

“இன்னைக்கி ஒங்க தெருவுக்கு முந்துன தெருவுல பாத்தா ஒரு அம்மா கீரை வாங்குறோமுன்னு பேரம் பேசுறாங்க,பேசுறாங்க அவ்வளவு தூரத்துக்கு பேசு றாங்க, மூனு கட்டு வாங்கிர்றேன்,பதினைஞ்சி ரூவாக்கு தர முடியுமான்னு கேக்குறாங்க,எனக்குன்னா கோவமுன்னா கோவம்,சரியான கோவம்,ஏம்மா இப்பிடி பேசுறீங்க,நீங்க வியாபாரம் வாங்காட்டிக்கூட பரவாயில்லை, இப்பிடி யெல்லாம் அடிதண்டமா வெலைப் பேசாதீங்கம்மா,நீங்க இப்பிடி கேக்க ஆரம் பிச்சிங்கின்னா இனி நான் யேவாரதுக்கு போற தெருவுல எல்லாம் இப்படியே கேக்கஆரம்பிச்சிருவாங்க,ஏங்யேவாரம்கெட்டுப்போகும்மா,இப்பிடியெல்லாம் பேசாதீங்க,ஏங்கிட்ட மட்டும் இல்லை,என்னையப்போல தெருவுல வியாபாரம் பண்ணவர்றவுங்ககிட்டயார்கிட்டயும்இப்பிடியெல்லாம்பேசாதீங்கம்மான்னதும் அந்தம்மாவுக்கு கோபம் வந்துருச்சி,”ஏய் போடி அந்த மானிக்கி பெரியஇவ நீயின்னு கண்டமானிக்கி பேச ஆரம்பிச்சிட்டாங்க,நானும் எவ்வளவுதான் பொறுமையா இருக்குறது,சரி வயசுல பெரியவுங்க,ஏதோ பேசுறாங்கன்னு விட்டுருவோமுன்னு நெனைச்சா ரொம்பத்தான் ஓவரா பேசுற மாதிரி தெரிஞ் சிச்சி எனக்கு.

”தவிரஅஞ்சி வருஷத்துக்கு மேல யேவாரம்பண்ணிக்கிட்டு இருக்கேன். இப்படி யாரும் பேசுனதில்லை.

”வயசுல பெரியவுங்க இப்பிடியெல்லாம் பேசாதீங்கம்மான்னு சொல்லிப் பாக்கு றேன், அந்தம்மா கேக்குற வழியக் காணோம்.ரொம்ப எல்லையில்லாம பேசுற மாதிரி தெரிஞ்சதும் நான் தெருவுல இருக்குற கல்ல எடுத்து ஓங்க ஆரம்பிச் சிட்டேன்,ஒடனே அந்தம்மா உள்ள போயிருச்சி,நாயே வெளியில வந்த ஒன்னைய கல்லால அடிச்சிக்கொன்னுருவேன்னு சத்தம் போட்டுட்டுத் தான் வந்தேன்.,

”தெருவே வேடிக்கை பாக்க அந்தம்மா அவமானப்பட்டுதான் வீட்டுக்குள்ள போச்சி,இனிமே அது என்னைக்கண்டா பத்தடி தள்ளித்தான் போகும்,

இப்பிடி பிரச்சனையெல்லாம் தாண்டி வரும்போது லேட்டாயிச்சிதான் கொஞ் சம்,என்றார்,

”சரிங்கம்மாஎன்ன செய்யிறது,இது போலஇருக்குறவுங்கலயெல்லாம் சகிச்சிக் கிட்டுதான் யேவாரம் பண்ண வேண்டியதிருக்கு எனக் கூறியவாறே ரெண்டு கட்டு குடுத்துட்டுப் போங்க எனச் சொன்னவனாய் மனைவியிடமும் கீரைக் காரம்மாவிடமும் சொல்லிவிட்டுக் கிளம்பினான்,

மீதிக்கதையை கீரைக்காரம்மா இவனது மனைவியிடம் பேசியிருக்க வேண் டும் கண்டிப்பாக/ஏனென்றால் இவனது தெருதான் கீரைகாரம்மா கடைசியாக வரும் தெரு,

அதனால் கொஞ்சம் ஆசுவாசமாய் இருந்து விட்டுப்போகலாம் என்கிற நினைப் பில் கீரைக்காரம்மா இருந்து பேசிவிட்டுப் போவார்கள்.

ஏன் இப்பிடி தள்ளாத காலத்துல வீதி வீதியா அலைஞ்சி வியாபாரம் பண்ணு றீங்க,சிவனேன்னு உள்ள வேலையப்பாத்துட்டு இருக்குறத சாப்புட்டுக்கிட்டு விட்டுல இருக்குறத விட்டுப்புட்டு எதுக்குப்போயி தட்டலைஞ்சிக்கிட்டு இருக் குறீங்குறீங்க,,,,,,என்கிற மனைவியின் பேச்சிற்கு எங்கம்மா நிம்மதியா ஒக்கா ந்து சாப்புடுறது, இத்துப்போன பொழப்புமா எங்க பொழப்பு,ஒருபக்கம் குடும்பம் ,ஒரு பக்கம் யேவாராம் ,ஒருபக்கம் ஒங்களப்போல இருக்குற வீட்டுக்காரங்க, இதுக்குயெடையிலகீரைபயிர்பண்ணியிருக்குறதோட்டத்துக்காரவுங்க,பஸ்ஸீ, கண்டக்டர்,டிரைவரு,லக்கேஜீன்னு இதுதான் சுத்துச்சுத்தி வருமே தவிர்த்து வேற ஒரு நெனைப்பும் வர்றதில்லம்மா,பொழப்ப நெனைக்கும் போது/

“எனக்கு இத விட்டா பொழப்பு ஏது தாயி,அதான் மேடான்னாலும் பள்ளமா னாலும் வந்துர்றது/ இருக்குறது இருக்கட்டும்,ஆகுறது ஆகட்டுமுன்னு..,,,,/என அன்றாடங்களை எடுத்து வைக்கிற கீரைக்காரம்மாவின் பேச்சு.

”என்ன கடலைக்காரண்ணே நல்லாயிருக்கீங்களா என்கிற பேச்சுடன்தான் பையை நீட்டினான் அவரிடம்.

”நல்லாயிருக்கேன் தம்பி,ஒங்களப்போல ஆட்க இருக்குற வரைக்கும் என்னை யப் போலானவுங்க நல்லா இருப்போம் தம்பி,அட மெய்யாலுமேதான் சொல் றேன் தம்பி,நீங்க ஏங்கிட்ட வாங்குற யேவாரத்த வச்சி மட்டும் சொல்லல, ஒங்க மனச வச்சி சொல்றேன்,கேள்விப்பட்டுருக்கேன் ஒங்களப்பத்தி,ஒங்க நல்ல மனசுக்கு நீங்க நல்லாயிருக்கணும் தம்பி,இந்த சின்ன வயசுல இந்த மனசு வாய்க்கிறது ரொம்பவே அபூர்வம் ,தனக்கு ஒரு கண்ணு போனாலும் பரவாயில்லை எதிராளிக்கு ரெண்டு கண்ணும் போகனுமுன்னு நெனைக்கிற வுங்க இருக்குற இந்தக்காலத்துல தனக்கு ஒரு சுகக்கேடு ஏற்பட்டாலும் பரவாயில்ல,அடுத்தவுங்க நல்லாயிருக்கணுமுன்னு நெனைக்கிற கொணம் ரொம்பவேஅபூர்வம்தம்பி.”என்றவரைஇடைமறித்து”போதும்போதும்என்னையப் பத்தி மட்டுமே பேசுனது,யேவாரம் எப்பிடி இருக்குன்னு சொல்லுங்க, மத்ததப் பத்தி அப்புறம் பேசலாம்,”

”என்ன தம்பீ யேவாரம் ,பெரிசா யேவாரம்,கௌரவதுக்காக பீ தின்ன பொழப்பு”

”என்னதான் புள்ளைங்க உக்கார வச்சி சோறு போடுறேன்னு சொன்னாலும் கூட ஒடம்புல தெம்பு இருக்குற வரைக்கும் நம்ம கைய ஊனி நாமதான் கர்ணம் பாயணுமுன்னு நெனைச்சி தேனிப்பக்கம் இருந்து கடலை மூடை யெறக்கி வித்துக்கிட்டு இருக்கேன்,

“ஒரு நாளைக்கு அழிவு செலவு போக கையப்புடிக்காம ஏதோ கெடைக்கும், கெடைக்கிறது கைக்கும் வாய்க்கும் பத்தாது தான், புள்ளைங்க வீட்டுல சாப்பு ட்டுக்கிட்டு இருக்குறதுனால ஓடிக்கிருது வண்டி எனச்சொன்னவரை ஏறிட்டவ னாய் கடலை வாங்கிக் கொண்டு வந்தான்.

சமையலறையிலிருந்து வேர்க்கடலை அவிக்கும் வாசனை வருகிறது,நாசி நிறைந்த வாசனை. நன்றாக இருந்தது,

வாசனையின்வசம் இவனும் வாசனை கொண்டுவந்தவளின் பக்கம் இவனது மனமும்/