திங்கள், 13 ஜூலை, 2020

மண்ணிசைந்து,,,,,

இரு சக்கர வாகனத்தை எடுக்கையில் மணி மாலை ஐந்து முப்பதிலிருந்து ஆறு மணிக்குள்ளாக இருக்கலாம்.

உத்தேசம்தாம்தான், உத்தேசங்கள் உலகை ஆள்வதில்லை என்பது எவ்வளவு உண்மையோ அது போல் எதுவும் அறுதியிட்டுச்சொல்வதில்லை,

கைக்கடிகாரத்தைப்பார்த்து மணியை உறுதி செய்து கொள்ளலாம் என்றாலும் கையில் கடிகாரம் கட்டி பல வருடங்கள் பலவாகிவிட்டது,

எப்பொழுதிலிருந்து இந்த எளிமை என்பது இவனுக்கு அரிதாகக் கூட ஞாபகம் இல்லை.,இப்படி இருப்பதே பிடித்துப்போக அப்படியே விட்டும் விட்டான்,

அது ஒன்றும் பெரும் உறுத்தலாய் தெரியவில்லை,”ஊருக்குள்ள அதது எப்பிடி எப்பிடி திரியுது?கஞ்சிக்குச்செத்தது கூட வெளுப்பு மாறாம தேய்ப்பு மடங்காம போட்டுக்கிட்டுத்திரியுதுங்க,இவரு என்னமோ எளிமையா இருக்கு றேன்,,,,,,,,,( நல்லா வந்துறப்போகுது வாயில,) அது இதுன்னு கஞ்சிக்குச் செத்தவரு போல அலையுறாரு.

“முன்னயெல்லாம் ஒரு கல்யாணம் காய்ச்சி,நல்லது பொல்லதுன்னா வலது கையில பிரேஸ்லெட்டும், யெடது கையில தங்கக்கலர் செயின் போட்ட வாட்சுமாமடிப்புகலையாத லக்கி பேண்ட்டும் ,சட்டையுமாத்தான் இருப்பாரு, எப்ப யாரு கண்ணுபட்டுச்சுச்சோ,இல்ல யாரும் அவரு மனசக் கெடுத்து விட்டுட்டாங்களான்னு தெரியல. பழைய பழக்கமெல்லாம் சின்னப் புள்ளைங்க ஒழப்பி விட்ட மண்ணு வீடாட்டம் சரிஞ்சி போச்சி/,

”சரிஞ்சது அதல பாதாளம் காட்டி நிக்காட்டிக்கூட லேசா பள்ளம் பறிச்சிப் போட்டுருச்சி இவரு மனசுல. அன்னையிலயிருந்து இன்னைக்கு வரைக்கும் இப்பிடி விட்டேத்தியா நேந்துவிட்ட சாமியாரு போலத் திரியிறாரு”என இவன் மனைவி அன்றாடங்களில் புலம்புவது இப்பொழுது எப்பொழுதுதாவதான வாடிக்கையாகிப் போனது,

“என்ன சார் வண்டி எடுக்க உதவி பண்ணணுமா,,,? அருகில் வருகிறார் வாசு அண்ணன், இந்த வயசான காலத்துல ஓங்களுக்கு தக்கன வண்டி வாங்காம இவ்வளவு பெரிய வண்டிய வாங்கி வச்சிருக்கீங்களே என்றார்,

அலுவலத்தின் வெளி வாசல் தாண்டி இடதுபக்கமாய் கடை வைத்திருப்பவர், சேவு மிக்சர்,பக்கோடா,நிலக் கடலைப் பருப்பு,ஊறுகாய் மற்றும் சிகரெட், பீடி, வெற்றிலை,,, இவைகள்தான் அவரது வியாபாரமாய் இருந்தது,என்ன வாசுண்ணேநல்லாயிருக்கீங்களா,நான் தள்ளிக்கிர்றேன் வண்டிய ,என்றதும்  ”நல்லாயிருக்கேம்பா” என்றார்,

அது என்னவெனத் தெரியவில்லை,சிறிது காலமாய் அப்படித்தான் அழைக்கி றார் அல்லது சொல்கிறார்,

சென்ற மாதத்தின் ஒரு நாளின் மதியமாய் அலுவலகத்திற்கு வேலையாய் வந்த பெண்ணுக்கு இவனது இரண்டாவது மகளின் வயதிருக்கும், வேலையெ ல்லாம்முடித்துப்போகும்போது”போயிட்டுவர்றேன்ப்பா”எனச்சொல்லிவிட்டுப் போனாள்.அது போல் இப்பொழுது இவரும்,

”அப்புறம் வாசுண்ணே யேவாரம் எப்பிடி இருக்கு ,வீட்ல புள்ளைங்க என்ன செய்யிறாங்க என்கிற கேள்விக்கு சின்னவ ரெண்டாவது போறா,பெரிவன் மூணாம் வகுப்பு படிக்கிறான்,அந்த வகையில பரவாயில்லை சார்,ஆணு ஒண்ணு பொண்ணு ஒண்ணு,ரெண்டும் ஆணாவும், பொறக்கல,ரெண்டும் பொண்ணாவும் பொறக்கல,செலவு ஒருபக்கம் இருந்தாலும் கூட ஆண் பெண் புரிதல் வீட்ல இருந்தே ஆரம்பிக்க ஒரு வாய்ப்புக் கெடச்சிருதுள்ள பையனுக்கு .இல்லைன்னா ஆணப்பத்தி பொண்ணு என்னமோன்னு நெனை க்க, பொண்ணப்பத்தி ஆணு என்னமோன்னு நெனைக்க.அது கட்டாகிருதுல்ல சார், அது வரைக்கும் நான் குடுத்துவச்ச ஆளு என்ற வாசு அண்ணன் மத்தபடி எனக்கும் ஏங் வீட்டம்மாவுக்கும் இந்த கடையேவாரம் போதும்ண்ணே, புள்ளைங்கள வளர வளர இது போதாதுன்னு தோணுது,வேற ஏதாவது ஒண்ணு செஞ்சுதான் ஆகணும் சார்,”என்கிறார்,

மழைபெய்து முடித்திருந்ததில் மண் கொஞ்சம் மகிழ்ந்திருந்தது, சமீபத்தில் ரோட்டை அகலப்படுத்துவதற்காய் தோண்டப்பட்ட மண்ணை சாலையின் இரு புறமுமாய் விரித்து விட்டிருந்தார்கள்.பரப்பப்பட்டிருந்த மண் சமமாய் இல்லாமல் மேடு பள்ளமாய் இருந்தது,

அலுவலகத்தில் வண்டி நிறுத்த இடமில்லை,அலுவலகத்தின் முன் ஒரு செட் கூடப்போட்டுக் கொடுத்திருக்கலாம்.கட்டிடத்தின் உரிமையாளர்., இப்பொ ழுது ரோட்டியில்தான் நிறுத்தவேண்டியதிருக்கிறது வண்டியை. மழைக்கும் வெயிலுக் கும் காற்றுக்கும் தூசிக்குமான அனைத்தையும் தன்னில் தாங்கி நின்று கொண் டிருக்கிறது.

”போடுமண்ணாய்இருந்தாலும்மண்நல்ல வண்டலாய்த் தெரிந்தது, கொஞ்சம் சிரத்தையெடுத்து சிரமப்பட்டால் இம்மண்ணில் எதையும் விளைய வைக்கலாம் தானே? கொஞ்சம் உரமும், கொஞ்சம் உழைப்பும்,கூடவே சிறிது ஆட்டாம் புழுக்கையும்,நம்பிக் கையும் இருந்தால் போதும்.எல்லாம் சாத்தியமே/”

காலடிகளை நின்ற இடத்திலிருந்து சற்று மாற்றி வைத்துக்  கொள்கிறான், நின்ற இடத்திலேயே நின்றால் பாதத்தின் அடியில் வேர் விட்டுவிடக்கூடாது,

விடாதுதான்,அப்படியெல்லாம் நமது மண் நமது மண் ,நமது மனிதர்கள்,நமது வீடு நமது அலுவலகம்,நமது சாலை மற்றும் நமது ,மனிதர்கள் எல்லாம் சேர்ந்து வேர்விட்டு விட விட மாட்டார்கள்,

மண் மீது நம் கவனம் இருப்பது போல் மண்ணும் நம் மீது கவனம் வைக்கும்,என நம்பிக்கை சொன்னாலும் கூட பாதங்கள் கேட்கிற வழியைக் காணோம்,

காலை மாற்றி வைக்கிற போது வேப்ப மரத்தின் அடியில் ஊர்ந்த எறும்புகள் ஒன்றன் பின் ஒன்றாக வரிசை கட்டியும் இரை தேடியுமாய்/

தேடிய வையும் தேடிச் சென்றவையுமாய் செல்கிறது வாழ்க்கை, எனச் சொன்ன எறும்பு ஓன்று வரிசை உடைத்து விலகி வந்து சொல்கிறதாய்/

நானும் எனது நட்புகளும் ஒட்டிய வயிறுடன் தேவைக்காய் இரை தேடிச் செல்கிற வழியில்தான் தாங்கள் இரு சக்கர வாகனத்தை நிறுத்தி வைத்திருக் கிறீர்கள், ஒன்று அதன் பாகங்களின் மீதேறி நாங்கள் பயணிக்க வேண்டிய திருக்கிறது, இல்லை அதன் அடியில் பாதை அமைத்து ஊர்ந்து செல்ல வேண்டியதாகிப் போகிறது,

அவ்வாறு செல்கிற பல சமயங்களில் இடைஞ்சலாகிப்போகிறது,அல்லது பாதையில் சென்ற திருப்தி இல்லாமல் எங்கோ கண்ணை கட்டிவிட்ட நிலையில் தட்டுத்தடுமாறி செல்கிறது போல் இருக்கிறது.அதில் எங்களுக்கு திருப்தி இல்லை,

”நாங்கள் ஒன்றும் இழிவாய் கிடக்கிற இனம் இல்லை,எங்களுக்கென ஒரு கூட்டம் இருக்கிறது, வசிப்பிடம் உண்டு,எங்களுக்கானப் பொறுப்புகள் தனி,அன்றாடம் உணவு தேடி எவ்வளவு தூரம் சென்று மிகவும் கஷ்டப்பட்டு சேகரித்து வருகி றோமோ அவ்வளவு தூரம் அதை பாதுகாத்தும் வருகிறோம், உங்களைப் போல் சாக்கிலும் பாத்திரங்களிலும் இன்ன பிறவற்றிலுமாய் உணவை போட்டு வைத்து பாதுகாக்கிற பழக்கம் எங்களில் இல்லை. அதற்கென மண்ணில் அடியில் நாங்கள் தோண்டி சீராககட்டி வைத்துள்ள புற்றுக்குள்ளாய்இருக்கிறஅறைகளில் பாதுகாக்கிறோம் எந்த மழையாலும் ,வெயிலிலாலும்,இயற்கை சேதத்தாலும் உணவு பறிபோய் விடுமோ என்கிற பயமில்லை எங்களுக்கு,மாறாக மனிதர்கள் வேட்டையாட வருகிற சமயங் களில் எங்களது வசிப்பிடத்தை தோண்டி நாங்கள் சேகரித்து வைத்துள்ள உணவை எடுத்துச்சென்று விடுகிறார்கள், காக்க வேண்டியகைகள் களவு செய்யும் போது நாங்கள் விதியை நோவது தவிர்த்து வேறென்ன செய்து விட முடியும் பெரிதாய்,,,?

அதற்காகத்தான் கேட்கிறோம்,எங்களுக்கென நாங்கள் தனியாய் வசிப்பிடம் அமைத்துக்கொண்டதைப்போல நாங்கள் உணவு தேடி போய் வர தனி ஒரு பாதை வேண்டும் ,எங்களுக்கென ஒரு சிக்னலும் அதை ஒழுங்கு செய்ய காவலர்களும் இருக்க ஆசைப்படலாம்தானே,,?என எறும்பு பேசிச்சென்ற நேரத்தில் வேப்பமரத்தின் உச்சியிலிருந்து குரலொன்று கிளம்பி வந்து இவன் கவனம் கிளறுவதாய்/

”கத்துவதும், கீதமிசைப்பதுமாய் மாறி மாறி தென்படுகிறதான எங்களது அடையாளம் குயிலாயும்,காக்கையாயும் அடைகொண்டு கூடு கட்டு குஞ்சு பொரித்து வாழ்க்கை நடத்தி அன்பும் காதலும் மிக வாழ்கிறதாய் இருக்கிறது தான். விளைச் சலற்ற வெற்று நிலங்களின் மீது அத்துவானம் காட்டிப் பறக்கையில் கண்ணுக்கு எட்டிய தூரத்தில் தென்படாத இரையை அரிதாக காண்கிற போது கொத்திக் கொண்டு வந்து நாங்கள் தின்றது போக எங்களை எதிர்பார்த்து காத்திருக்கிற குஞ்சுகளுக்காய் கொடுத்து விட்டு மிச்சமிருந்தால் நாங்கள் உண்டு ஜீவிக்கிற பாக்கியம் மட்டுமே கிடைத்திருக்கிறது/”

அதைக் கொண்டு வாழ்கிறோம் திருப்தியாய் அவ்வளவே எனச் சொல்லிய பறவையின் பேச்சு மீறி தெரிந்த வேப்ப மரத்தின் வளர்ச்சியும் ஆகுருதியும் பார்க்க பிரமிப்பாய் தெரிந்தது,

ஐம்பது வருடத்திற்கு மேலான சரித்திரம் இருக்கலாம் இந்த மரத்திற்கு என்றவாறே சாப்பிடச்சென்ற திருமூர்த்தி கடையில் அமர்ந்திருந்தவர் சொல்கி றார்,

“சார் நீங்க சொல்றது போல இல்ல,இந்த மரத்துக்கு வயசு ஐம்பதுக்கும் கூடவே இருக்கும் என்கிறார்.

எனக்குத் தெரிய ஏங் பிராயத்துல இந்தப்பக்கம் போகையில சின்னதா இதப்பாத் துருக்கேன்,இப்ப முண்டும் முடிச்சும் யெலையும், காயும், கனியுமா நிக்குது என்றார்,

”இப்ப ஒரு கனிப்புல அந்த மரத்துல எத்தனை கொப்புக எத்தனை முடிச்சுக, எவ்வளவு காய்க காய்ச்சிருக்கும் ,அதுல எவ்வளவு பழுத்து நிக்குமுன்னு சொல் லீற முடியும்,மரம் நிக்கிற மண்ணு ,அதோட தன்மை,பரப்பு மரத்தோட உறுதி ,அதோட வயசு எல்லாம் வச்சி அது இன்னும் எத்தனை நாளைக்கு தாங்குமுன்னு என்னால சொல்லீற முடியும்.ஆனா ஒங்கள் மாதிரி ஆள்களால அது வெறும் வேப்ப மரம்ன்னு மட்டும் சொல்லீற முடியும் அவ்வளவுதான், வித்தியாசம் ஒங்க பார்வைக்கும் ஏங் பார்வைக்கும்,

“அதுக்குத்தான் எந்த ஒண்ணுக்கும் பெரிய ஆள்கள கலந்தாலோசனை பண்ணுங்கண்ணு சொல்றாங்க,இப்ப தலை முறை என்ன பண்ணுறீங்கன்னா கையகலம் இருக்குற செல்போன்ல சமைச்சி சாப்புடுறது தவிர்த்து மத்த தெல்லாம் பண்ணீக்கிறீங்க,வாழ்க்கையே அதுதான்னு ஆகிப்போச்சி, பெத்த வுங்கள்ல இருந்து மத்தவுங்க வரைக்கும் அவுங்க கிட்ட பேசுறத மறந்து ட்டு செல்போன பாக்குறது மட்டுமே வாழ்க்கையின்னு நெனைச்சிக்கிட்டு இருக்குறீங்க,எங்க காலங்கள்லயெல்லாம் புதுசா கல்யாணம் ஆன ஜோடிக பஸ்ஸீல போனா பஸ்ஸே குலுங்கும்,கூட பிரயாணம் பண்ணுறவுங்கள்ல இருந்து டிரைவர், கண்டக்டர் வரைக்கும் ஒரே வெக்கமாகிப்போகும்,ஆனா இப்ப அப்பிடியா புருசனும் ,பொண்டாட்டியும் பக்கத்துல பக்கத்துல ஒக்காந் துருந்தாலும் கூட ஆளுக்கு ஒரு செல்போன கையில வச்சிக்கிட்டு ஊர் வந்து சேர்ற ஐம்பது கிலோ மீட்டர் தூரமும் ஒண்ணுமே பேசிக்கிறாம வர்றாங்களே, சரி பஸ்ஸீலதான் அப்பிடின்னா வீடு போயி சேர்ற வரைக்கும் கூடவும் இப்பிடித்தான் பேசாம போறாங்க,

”இப்பிடித்தான் புதுசா கல்யாணம் ஆன ஜோடிக ஒரு ஊருக்கு விருந்துக்கு போயிருக்குறாங்க,அது கிராமம், வழக்கம் போல ரெண்டு மூணு மணி நேரத்துக்குஒருபஸ்ஸீதான்,பஸ்ஸீக்காக காத்திருக்குறநேரத்துலசெல்போன பாப்பமுன்னு பாத்துக்கிட்டே இருந்துருக்காக, அந்த நேரத்துல பஸ்ஸீ போயிருச்சி, அதக்கவனிக்காத அவுங்க பஸ்டாண்டு ஹோட்டல்லேயே சாப்பு ட்டுட்டு சொந்த ஊருக்கு திரும்பி வந்துட்டாங்க,மறு நாளு பாத்தா இவுங்கள விருந்துக் குக் கூப்புட்ட சொந்தக்காரங்க வீட்டுக்கு வந்து சண்டை போட ஆரம்பிச் சிட்டாங்க,அப்புறம் பெரியவங்க பேசி சமாதானம் பண்ணி நடந்த ச்சொல்ல ஒரே சிரிப்பு,நல்ல வேளை திரும்பி வந்ததாவது சொந்த ஊருக்கு வந்தாங்க, செல்போனபாத்துக்கிட்டே வேற எந்த ஊரு பஸ்ஸீலயாவது ஏறாம போனா ங்கன்னு,

“இப்ப அது போலதான் ஆகிப்போச்சி எல்லாம்,பெரியவங்க அருமை தெரியி றதில்ல, பெரியவுங்கள மதிக்கிறதில்ல,பெரியவுங்கள முன்னாடி விட்டு பின்னாடி பேசுறதுன்னு எல்லாம் நடக்குது,சொல்லுல பேச்சுல நடத்தை யில நிதானம் இல்லை,படக்கு படக்குன்னு என்னத்தையாவது ஒண்ண பேசீற்றா ங்க,படக்கு படக்குன்னு நிதானமிழந்து நடந்துக்குறாங்க,படக்கு அதுஏதாவது ஒரு நேரத்துல வந்து கசந்து நின்னுக்கிருது. அந்தக் கசப்புக பின்னாள்ல விரிசல் கண்டு பெரிய சுவரா தடிச்சி நிக்குது, என்ற பெரியவர் தான் சாப்பிட்ட இரண்டு பூரிக்கும் வடைக்குமாய் காசு கொடுத்து விட்டு நகர்கிறார்,

பெரியவர் எழுந்து சென்ற சீட்டுக்கு எதிர் சீட்டில் அமர்ந்தவன் இரண்டு பூரிகளும் ஒரு வடையும் கொண்டு வரச்சொல்கிறான்,

நினைவுகளில் கிளறலில் மனம்வழியாய் இறங்கி பாதங்களில் வேர் விட ஆரம்பி த்திருந்தது,

படர்ந்தடர்ந்த மர இலைகளின் ஊடறுத்து மாலை நேர மஞ்சள் நிற சூரிய வெளிச்சம்.

மரத்திலிருந்து எழும்பிப்பறந்த பறவைகள் கத்தலுடனும்,கீதமிசைத்துமாய்,,,/

திங்கள், 6 ஜூலை, 2020

காற்றுக்கென்ன,,,,




நல்ல இசையும்,நல்ல காற்றும் எத்திசையிலிருந்து வந்த போதிலும் உவப்பா னதாயும் ஏற்புடையதாயும்/

வேலி போட்டு நிறுத்தவும்,கை கொண்டு மறைக்கவும் சுவர் எழுப்பி தடுக்கவும் காற்று ஒன்றும் கட்டுக்குள்ளாய் இருக்கிற பொருள் அல்லவே?

அது போல்தானே தண்ணீரும் பரந்து பட்ட வெளியில் உறை கொண்ட நீர் பரப்பை எது கொண்டும் மூடி விட முடியாதுதான் என்பார் இவனுடன் பணிபுரிந்த வர்,

அவரை அங்கு வைத்து பார்ப்பான் என இவன் எதிர்பார்க்கவில்லை,மாதம் பிறந்த ஒரு வாரத்திற்குள்ளாய் வீட்டுக்கு பலசரக்கு வாங்கி விடுவது இவன் வழக்கம்,

அது போலான நாட்களில் அலுவலகத்திலிருந்து வருகிற சாயங்காலங்களில் நேரம் ஒதுக்கி விடுவான், வீட்டிற்கு வந்ததுமாய் தோள்பட்டையிலிருந்து பையை இறக்கி வைப்பதுதான் தாமதம் ,பலசரக்கு பையை எடுத்துக் கொண்டு மனைவி யுடன் கிளம்பி விடுவான்,

மனைவியுடன் கிளம்ப அரசாங்க உத்தியோகஸ்தர்களுக்கென தனியாய் விடுப்பே தரலாமே,,,,?

பெரியவள் கூட கேலி பண்ணுவாள்,அம்மாவும் அப்பாவும் ஊர் சுத்த கெளம்பீ ட்டாங்க என /அவள் சொல்வதில் பெரிதான தப்பொன்றும் இருப்பதாய் தெரிய வில்லை,

“கடைக்கிப்போகிறேன்”,,,எனச்சொல்லி விட்டு இரு சக்கர வாகனத்தில் மனைவியின் இருப்பு அருகில் இருக்க இருபது அல்லது முப்பது கிலோ மீட்டர் வேகத்திற்கு மீறாமல் வண்டியை ஓட்டிக்கொண்டு போவதும் அதனூடாய் பரஸ் பரம் பேச்சையும் வீட்டின் தேவைகளையும் அவசியத்தையுமாய் பரிமாறிக் கொள்வதும் ஒரு வித அழகாயும்,மனமிதப்பாயும்தான்,

அன்று அவள் வரவில்லை வீட்டில் வேலை இருக்கிறது என இருந்து விட்டாள், சின்னவளைத்தான் கூட்டிக்கொண்டு போயிருந்தான், அவள் கொஞ்சம் கவனமாய் கவனம் வைப்பவள்,செய்கிற வேலையிலிருந்து தப்பித்தவறி கூட கவனம் திசை திரும்ப அனுமதிக்க மாட்டாள்.இரு படித்து விட்டு வருகிறேன் எனச்சொல்கிறவளை டீவி நிகழ்ச்சியோ,சமையல் வாசனையோ கவனம் கலைத்து விட முடிந்ததில்லை இது நாள் வரை/

படிப்பில் மட்டும் என இல்லை ,அவள் பார்க்கிற வேலைகள் எல்லாவற்றிலும் அப்படித்தான்நிலையூன்றுவாள், கவனம் வைப்பாள்,கண்விரிப்பாள், படபடக் கிற இமைகளைப்போல்மனதையும்,வைத்திருப்பாள்.

அவள்தான் கடையில் சிட்டை வாசித்து எழுதச்சொல்லி சரி பார்த்துக் கொடுத் தாள். எழுதுன சிட்டையை எல்லாரும் காசு குடுக்கும் போதுதான் வாங்கி சரி பாப்பாங்க, யெடையில வாங்கி சரி பாக்குறது நீ ஒருத்திதான் தாயி,ஒரு வகையில ஒங்க அம்மா அப்பா குடுத்து வச்சவுங்க தாயி,என்பார் கடைக்காரர் சிரித்துக் கொண்டே/

“அவுங்க எங்க குடுத்து வச்சிருக்காங்க,நாங்கதான் மாசா மாசம் ஒங்ககிட்ட குடுத்து வைக்க வேண்டியதாகிப்போச்சி என்பாள் பதிலுக்கு/

சரக்கு வாங்கி முடிக்கும் போதுதான் அவரைப்பார்க்கிறான்,முதலில் புடிபட வில்லை, எங்கோ பார்த்த முகம், எப்பொழுதோ பேசி உறவாடிய மனிதர், அன்பையும்,வாஞ்சையுயையும்,அதற்குமேலானஒட்டுதலையும்தனதுபேச்சின் மூலமும் செய்கையின் மூலமுமாய் இவனில் விதைத்த அருமையா ன மனிதர். அவர் போல் எவரிங்கு என சொல்லி விட முடியா விட்டாலும் கூட இதுவரை பார்த் தறிந்ததாய் ஞாபகமில்லை,

பக்க வாட்டில் பார்க்கும் போது உறுதியாய் அவராய்த்தான் தெரிந்தார், ஆனால் நேர் படப்போய் பார்க்கிற தைரியம் இல்லை,அவருக்கும் இவனுக்கு மான இடை வெளி ஐந்தடி இருக்கலாம்,

வாங்கிய பலசரக்குகளுக்கு காசு கொடுத்து விட்டு பையை மகளிடம் தந்துவிட்டு நகர்கிறான் அவரை நோக்கி,அவர் சரக்கு வாங்குவதிலும் வேறு ஒன்றிலுமாய் கவனமாய் இருந்தார்,

அவரது தோள் தொட்டு திரும்பிப் பார்க்க வைக்க இவனுக்குக்கொஞ்சம் தயக்கமாய் இருந்தது,சரி எப்படியாவது பார்க்க வைக்க வேண்டும்,அவருடன் பேச வேண்டும் என நினைத்தவனாய் தோள் தொட்டான்,

தொட்ட தோளை தோள்பட்டையாலேயே தட்டி விட்டுவிட்டு திரும்புகிறார், அவரேதான்,

“சார் தங்களை இங்கே எதிர் பார்க்கவில்லை,இவ்வளவு பழுத்த வயதில்” என்கிற அவனது பேச்சை எதிர் கொண்டவர் லேசாய் சிரித்து விட்டு இந்நேரம் நான் இறந்து போயிருப்பேன்னு எதிர்பாத்தவுங்கதான் அதிகம்,ஏங் காது படவே எத்தனையோ பேரு பேசிருக்காங்க,அவுங்க பேச்சு ஒண்ணும் தப்புன் னு சொல்ல முடியாது. என்றவர் போயிருப்பேன் எப்பொழுதோ, ஓங் போன் றவர்களை பாக்குற பாக்கியம் இன்னும் ஏங்கிட்ட நிலை கொண்டு இருக்கும் போது எப்பிடி போறது சொல்லு.எனப்பேசியவர் வாங்கிய இரண்டு மூன்று சரக்குகளுக்கு காசு கொடு க்கப் போன இவனைத் தடுத்து பணம் கொடுத்து விட்டு இன்னும் அந்த நெலைமைக்கு வரலை,தம்பி எனச்சிரித்தவாறே நகர்கிறார், இவனிடம் விடை பெற்றுக்கொண்டு/

விடை பெற்றவரை இடை நிறுத்தி “சார் எனக்காக ஒரு உதவி செய்வீங்களா, எங்க கூட வந்து ஹோட்டல்ல டிபன் சாப்புட்டுப்போகணும்” என்றான்.

என்ன நினைத்தாரோ மறுக்காமல் வந்து விட்டார்,ஹோட்டலில் திறந்த வாய் மூடாமல் பேசிக்கொண்டிருந்த இவன் மகளை அருகில் அழைத்து சாப்பிடும் போது பேசுனையின்னா ,ஒன்னு விக்கல் எடுக்கும் இல்ல வயித்துல காத்து அடைச்சிக்கிரும் என்றார்,ஆனாலும் அவள் பேசிக் கொண்டிருந்தாள் அவரிடமே/

ஆச்சரியமாக பார்த்த அவர் அம்மா பழக்கமா என்றார் இவனிடம்,அவளும் அப்படித்தான் பலசரக்கு வாங்க வருகிற நாட்களில் வழக்கமாய் போய் விடுகிற ஹோட்டலில் சாப்பிடுகிற பொழுது டிபன் பாதி,பேச்சு பாதி என அவளதுவயிற்றுக்குள்போய்க்கொண்டிருக்கும்,பரிமாறுபவர்கூடச்சொல்லுவார், பேசுறதுல தப்பில்ல, ஆனா சாப்புடறத மறந்து பேசிக்கிட்டு இருக்குறதுதான் தப்பு என்பார்,

வழக்கமாக செல்கிற ஹோட்டல் என்பதால் இவர்களைப் பார்த்ததும் ஹோட்டலுக்குள் எந்த டேபிளுக்கு பரிமாறிக்கொண்டிருந்தாலும் இவர்களது மேஜைக்கு வந்து விடுவார்,

இவனது மனைவி அவரை அப்பா என்றுதான் அழைப்பாள்,அவளது தந்தையின் வயதிருக்கும் அவரைப்பார்த்ததும் தந்தையின் ஞாபகம் வந்துவிடுகிறது என்பாள்,

அவருடன் சாப்பிடப்போன அன்றும் அவர்தான் பரிமாறினார்,”என்ன சார்,ஏங் மக வரலையா,சார் யாரு புதுசாத்தெரியுது இது நாள் வரைக்கும் ஹோட்டல் பக்கமே சாரைப்பாத்தில்லையே என்றவர் பரிமாறிவிட்டு நகர்கிறார்,

பழையதாய் தெரிந்த ஹோட்டலுக்கு கண்ணை உறுத்தாத வர்ணத்தில் பெயிண்ட் அடித்திருந்தார்கள், பார்க்க அழகாய் இருந்தது, அங்கங்கே ஒட்டி யிருந்த ஜிகினா பேப்பரும் டிசைன் பேப்பரும் ஹோட்டலுக்கு அழகு சேர்த்தது, வேகமெடுத்துச் சுற்றிய நான்கைந்து காற்றாடிகளில் ஒன்று கிரிச்சான் கிரிச்சான் என சப்தமெழுப்பியது,பளிச்சிட ட்யூப் லைட்டுகள் சிலவற்றில் சுற்றியிருந்த கலர் பேப்பர் கடையின் டைல்ஸ் தரையில் பட்டுப் பளிச்சிட்டது,

பேசிக்கொண்டே சாப்பிட்டுக்கொண்டிருந்த இவர்களுக்கு முன்னாய் சாப்பி ட்டு விட்டவர் கையை கழுவி விட்டு வந்தார்,

அப்பொழுது போல் அதே ரேமண்ட் பேண்ட்,அதே முழுக்கை சட்டை,இன் பண்ணி டக் விட்டிருந்தார், சட்டைப்பையில் இரண்டு விரல் தடிமன் கொண்ட மரக்கட்டைப் பேனாவை சொருகியிருந்தார்,

வேலையிருக்கிறது என சொல்லி விட்டுக்கிளம்பியவரை ஆச்சரிமாய் பார்த்தவன், வீட்டுவரை கொண்டு வந்து விடட்டுமா சார் என்றான், வேண் டாம் என மறுத்தவராய் கடையின் நடையை தாண்டி போய்க் கொண்டிருந் தார்,வேகமாக/

இவனுக்கு சீனியர், அவர் பணிபுரிந்த அலுவகத்தின் கிளைக்கு இவன் பணி மாறுதல் செய்யப்பட்டிருக்கிறான் என அறிந்த நாளில் சந்தோஷப்பட்டதும் விரைந்து வா உடனே எனச் சொல்லி அகமகிழ்வு கொண்டதும் அ வரே/

அப்பொழுதெல்லாம் இது போல செல்போன் இல்லை,அலுவலகத்தின் லேண்ட் லைன் போன்தான்.அதில்தான் எல்லாம்,அலுவலகப்பயன் பாடு தவிர்த்து சொந்த பயன் பாட்டிற்கும் அதுவெனவே ஆகிப்போகிற சாஸ்வதம். வேறென்ன செய்ய இருக்கிற இடத்தில் தானே பயன் படுத்திக்கொள்ள முடியும்,,,,?

ஒரு பணிநாளின் மும்பரத்தில் இருந்த மத்தியான வேளையில் போன் வருகிறது,ரெஸ்டாக இருப்பான் போலும் என நினைத்திருப்பாராய் இருக்கும், ஆனால் நிலைமை தலைகீழாய் இருந்தது,ஆளை அமுக்கிற வேலையிலிரு ந்து தன்னை பிய்த்தெடுத்துக்கொண்டுதான் வந்தான் வேண்டா வெறுப்பா யும், போன் பேசவுமாய் /

அது அப்படித்தான் ஆகிப்போகிறது,பணி மிகுதியாய் இருக்கிற தினங்களில் வீட்டிலிருந்து அம்மா அழைத்த போதும் கூட எரிச்சலாகி விடுவான். அது எப்படி அவனில் முளைக்கிறது,எப்படி கட்டுப் படுத்த ,, ,? இன்று வரை அதற்கு விடை தேடி அலைகிறான் கிடைக்கவில்லைதான், சிலரானால் போன் வந்து விட்டால் போதும்,எந்தக்கவலையுமற்று அந்த உலகத்திற்குள் போய் விடுகிறார்கள் ”அக்கம்பக்கம் அலுவலகம்,பப்ளிக்,கூட்டம் வரிசை,”,,ம்ஹீம் அது பற்றியெல்லாம் கிஞ்சித்தும் கவலைகொள்ளாமல் அடித்து நகட்டிக் கொண்டிருப்பார்கள்,

இவன் அது போல் எப்பொழுது ஆவான் என கடவுளிடம்தான் கேட்க வேண்டு ம், அல்லது கடவுளிடம் சொல்லி இவனை அப்படி மாற்றி விடச் சொல்ல வேண்டும்அதுஆகாதுபோலிருக்கிறது,இப்போதைக்கு,,/என நினைத்தவனாய் போனை எடுத்த போது எதிர் முனையில் அவர்,

“என்ன தம்பி நல்லாயிருக்கையா என்பதுதான் அவரது முதல் பேச்சாய் இருந்தது.இவன் பணிக்குச் சேர்ந்த நாள் முதல் இவ்வளவு ஒட்டுதலாய் யாரும் இவனிடம் பேசிக் கேட்டதில்லைஅவ்வளவு ஒட்டுதலான பேச்சு,அவ்வளவு வாஞ்சையான விசாரிப்பு, அவ்வளவு தொடுதலான உணர்வு,எல்லாம் சேர்ந்து இவனைக்கொஞ்சம்கிரங்கடித்ததுதான்,சுதாரித்து நின்றுஅவசரஅவசரமாய் பேசிவிட்டுஅன்று மாலையே அங்கிருந்து ரிலீவாகி பணிமாறுதலான கிளைக்குச் சென்ற போதுதான் தெரிந்தது பேசியவரின் பேச்சு மட்டுமில் லை, செய்கைகளும் அப்படித்தான் என/.

வார்த்தைகளுக்கும்,செய்கைகளுக்கும் இடையே சுவர் எழுப்பிக் கொள்ளாத நிஜம் அவரில் தென்பட்டது,அவரது வயது அவரது அனுபவம், எல்லாமும் சேர்ந்து அவரை எங்களிடமும்,இல்லை எங்களை அவரிடமுமாய் நெருங்கி பழகிவிட்டி ருக்கவில்லை.ஆனாலும் கூட மிகவும் விலகி நிற்க மாட்டார், தூரத்தில் நின்றாலு ம் கூட எங்கள் மனம் படித்து அருகாமையில் வைத்திருப் பார்.

காத்துக்கும் தண்ணீக்கும் பேதமில்லப்பா,நல்லதா கெடைக்கும் போது ஏத்துக்கக்கத்துக்கணும் என்பார்.

”ஏத்துக்க கத்துக்கிடணுன்னு சொல்ற நீங்க அன்னைக்கி ஒரு நா ராத்திரி வேலை பாக்குற கிராமத்துல தங்குனப்ப நீலப்படம் ஓடுது ஒரு யெடத்துல , நாங்கள்லாம் போயி பாத்துட்டு வந்துர்றமுன்னு வேலை பாக்குற அத்தன பேரும் கேட்டப்ப எல்லாரும் போனா நீயும் அவுங்க கூடப் போவையா, அவுங்க பாதை வேற ,ஓங் பாதை வேறைன்னு,, எனக்கு தடுப்பு வேலி போட்டவ றில்லையா நீங்க”,,,,எனச் சொன்ன இவனை ஏறிட்டுப்பார்த்தவர் ”ஆமாம் இப்பயும் சொல்லுறேன் அவுங்கள்லாம் வேற,நீ வேற,ஓங் ஒயரம் வேற, நீ எட்டித் தொடப்போற எல்லை வேற, ஒன்னோட ஆகுருதி வேற,,, இப்பிடி எல்லாமே உன்னில்ல வேற,வேற தம்பி ,அதுனாலத்தான் அப்பிடிச் சொன்னேன், நல்லது கெடைக்கும் போது ஏத்துக்குற கத்துக்கணு முன்னு சொன்னேனே ஒழிய இது போல நீலப்படம் பாக்குற வாய்ப்பு கெடைச்சா விடாதன்னு சொல்ல வரலையே, தம்பி,ரெண்டாவது அதெல்லாம் ஒரு வாய்ப்புன்னு நெனைக்காத,நரகல மிதிச்சிட்டு காலக்கழிவிக்கிறது வாய்ப்புன்னு நெனைப்பையா தம்பி என கேள்விக்குறியிடுவார்,

போற போக்குல ரோட்டுல கெட்டது ரெண்ட பாக்க வாய்ச்சது போலன்னு நெனைச்சுக்கயே என்பார்,கூடவே/

”கெட்டத பாக்காததுனால பெரிசா நஷ்டமாகிறப்போயிற்றதில்ல,ஆனா நல்லத பாக்காம தவற விடும் போது பலத்த நஷ்டம் ஏற்பட்டுப்போகுதான் நமக்கு, இதுல நீலப்படம் பாக்கலைன்னு பெரிசா வருத்தம் எதுக்கு,,? நீலப்படம், தலை கிறுகிறுக்குற போதை ,சிகரெட்டுப் பொகை, எல்லாம் இந்த வயசுல நல்லாத் தான் இருக்கும் ,ஆனா இதெல்லாம் சேர்ந்து ஒன்னைய ஒக்குட்டுருமே ஒழிய பாதுகாக்காது, பாலும் வெள்ளைதான்,பாலோட கலந்த தண்ணியும் வெள்ளை தான்.நாமதான் அதை பிரிச்சரியிறபக்குவம் கத்துக்கணும்” என்றார்,

அவர் அன்று சொன்னது போது உதாசிக்காமல் பாலையும் தண்ணீரையும் பிரித்தரியும் பக்குவம் கற்றுக் கொண்டான், ”பால் பருக வேண்டிய நேரம் எது? தண்ணீர் பருக வேண்டிய நேரம் எது”,,,? என பிரித்து வரிந்து கொண்டான்,அதி முக்கியமாய் பாலை,பாலாகவும் தண்ணீரை,தண்ணீராக மட்டுமே பார்க்கப் பழகிக் கொண்டான், கூடவே வெண்மை நிறத்திலான கள்ளையும்/

’ஓங் வயசு ஏங் அனுபவம் தம்பி,ஏனோ ஓங்கிட்ட சொல்லத்தோணுது சொல்றேன், சும்மா சொல்லுவான் அவனவன்,நீ அதெல்லாம் கணக்குல எடுத்துக்காத ,நாந்தான் உலத்துலயே நல்லவன்,அவன் கெட்டவன், மோசமா னவன், ஒரு மாதிரியான ஆளுன்னு பேசுவான்,அப்பிடிச் சொல்றவனை நெருங்கிப்போயி பாக்கும் போதுதான் தெரியும், அவனோட கேடு கெட்டத் தனத்த மறைக்கிறதுக்காக பக்கத்துல இருக்குற ஆளு மேல சேறு அள்ளி பூசுவான் ஈஸியாங்குறது,,/ அவன் கிட்ட இருக்குற நாத்தத மறைக்கிறதுக் காக அடுத்தவன் மேல மலம் அள்ளி வீசுவான், நம்ம அந்த மாதிரி நேரத்துல சேறையும்,மலத்தையும் ஒதறி விட்டுட்டு போயிக்கிட்டு இருக்கணுமே ஒழிய ஒறைஞ்சி நின்னுறக்கூடாது,பன்னி ஒரசுறதுங்குறதுக் காக பதிலுக்கு நாம போயி ஒரச முடியுமா சொல்லு”என்பார்,

சரி சார் பன்னி ஆளக்கொல்ல வந்தா என்கிற இவனது கேள்விக்கு தயங்காமல் சொல்லுவார்,கதம்,கதம்,,,தான் என/

அவருக்கு தீராத முழங்கால்வலி இருந்தது,என்னனென்னமோ வைத்தியம் செய்த பார்த்தவர் கடைசியில் ஹோமியோபதி மருத்துவம்தான் பார்த்து வந்தார்,

அலுவலகம் முடிந்தஒரு மழை நாளின் மாலையில் அர வேண்டிய பேருந்து வரவில்லை,ரிப்பேர் என்றார்கள்,பக்கத்து ஊரில் பீ,டியாகிக்கிடக்கிறது என்றார்கள்,

அது போக்குவரத்து மொழி,பீ,டி என்றால் இவனுக்கு நீண்ட நாட்களாய் தெரிய வில்லை,ஒரு நாள் ஜன்னலோர இருக்கையில் ஓய்வாய் அமர்ந்திருந்த கண்டக்டரிடம் கேட்ட பொழுது பிரேக் டவுனின் சுருக்கம் அது என்றார், ஆகா,,இது தெரியாமல்தானா இத்தனை நாள்,,,,,?இவனின் முகக்குறிப்பு அறிந்தவராய் சார் எல்லாருக்கும் எல்லாமும் தெரிஞ்சி இருக்காது,அதே போல யாருக்கும் எதுவும் தெரியாம இருக்காது தெரியுதா என்றார்,கொஞ்சம் உரிமை எடுத்து பேசுபவர் ,சமயத்தில் ஒட்டுதலாயும், கூட/ஒரே பேருந்தில் பயணிப்பதால் வேர் விட்ட பழக்கம்,

பேருந்தில் பயணிக்கிற அனைவரிடமும் மிகை மீறாத நட்பும்,பேச்சும், சிரிப்பும் அவரிடம் இருந்தது இவனுக்கு மிகவும் பிடித்திருந்தது,

இன்று காலையில் பயணித்த பொழுது அவர் இடத்தில் வேறு ஒரு நடத்துனர் ,சிரிப்பும் பேச்சும் கலகலப்பும் என்றால் கிலோ என்ன விலை என்று கேட்டார்,

சரி வேணாம் வம்பு என அவரிடம் தூரமாய் இருந்து டிக்கெட் மட்டும் வாங்கிக் கொண்டு அமைதியாய் உட்கார்ந்து கொண்டான்,

இப்பொழுது அந்த பேருந்து வராததது ஓரு வகையில் ஆறுதல்.அவரது முகத்தில் முழிக்க வேண்டிய வேலை கட்டாகி விடும்தானே,,,,,?

இப்பொழுது வர வேண்டிய பஸ் வராவிட்டால் இரவு ஒன்பது முப்பதுக்குத் தான் பஸ்,ஆனால் அதுவும் உறுதியில்லை,வந்தால் ஏறிக்கொள்ளலாம்,

என்ன செய்ய,,?இது போலான பேச்சிலும் யோசனையிலுமாய் ஒரு மணி நேரம் ஓடிப்போனது,

உள்ளூரில் இருக்கிற ஒரு லோடு வேனை பேசினார்கள்,வருகிறேன் எனச் சொன்னார், சம்மதித்த டிரைவர் பஸ் டிக்கெட்டை விட ஐந்து ரூபாய்க் கூடக் கேட்டார் டிரைவர்.

அதற்கே சில பேர் முக்கலும் முனகலுமாய் இருந்தார்கள்,முடிவு பண்ணிச் சொல்லுங்க என டிரைவர் வேனைக்கொண்டு வந்து நிறுத்திவிட்டு சாப்பிட்டு வருகிறேன் எனப்போய் விட்டார்,

பஸ்ஸீற்காய் நின்றிருந்தவர்கள் ஏறி அமர வேனில் தாராளமாய் இடம் இருந்தது, வேன் ஊர் போய் சேர எப்படியும் ஒரு மணி நேரம் ஆகும்,வண்டி ஓடுகிற ஓட்டதில் நேரம் போவது தெரியாது,ஆனால் முட்டிக்கொண்டு வருகிற ஒண்ணுக்கு அது தெரியாது,போக வேண்டிய நேரத்தில் போய்த்தான் ஆக வேண்டும், அப்பொழுதுதான் பஸ்ஸீற்காய் காத்திருந்த ஒரு பெண் சொன்னாள்.ஐம்பதுவயதைநெருங்கியதோற்றம்,கட்டியிருந்த புடவையிலும், தலைக்கு வாரி நெற்றிக்கு இட்டிருந்ததிலும் நேர்த்தியாய் தெரிந்தாள்.
 
ஐயா,ஆம்பளைங்கெல்லாம் ஒவ்வொருத்தரா தனித்தனியா போகா மொத்த மா போயிட்டு வந்துட்டீங்கன்னா,நாங்க நிக்கிற அஞ்சாறு பொம்பளைங்க அப்பிடியே போயிட்டு வந்துருவம் என்றதும் இவரது சீனியர் ஸ்டாப்புடன் இவனும் சென்றான்,வரும் போதே காலை தாங்கித்தாங்கிதான் நடந்தார், இவன் தோளில் கை போட்டுக்கொண்டு,ஒண்ணுக்கும் முட்டிக்கிட்டு வருது, பசிக்கவும் ஆரம்பிச்சிருச்சி, வயசான ஒடம்பில்லையா தாங்கல, கையில பிஸ்கட்டு வச்சிருக்கேன்,ஒன்னுக்கிருந்துட்டி போய் வேனுகெளம்புறங்குள்ள ரெண்டு பிஸ்கட்ட சாப்புட்டு தண்ணியக் குடிச்சிட்டா வீடு போற வரைக்கும் வயிறு கொஞ்சம் தாங்கும்,என்ன மழை நேரம்ங்குறதுனால தண்ணி குடிச்ச ஒண்ணுக்கு வந்துருமோன்னு யோசனை யா இருக்கு,உள்ள படி ஆகுது என்றவராய் அவர் ஒண்ணுக்கு போய் விட்டு வந்து அவர் சொன்ன படி செய்தார்,

வேன் செல்கிற வழியில் இருந்த ஊர்களிலெல்லாம் ஆட்களை ஏற்றிக் கொண்டு முழுவதுமாய் சென்று கொண்டிருந்தது.

ஊரை நெருங்க ஐந்து கிலோ மீட்டர் இருக்கும் போது வே டயர் வெடித்து நின்று விடுகிறது,

பசிய கிராமங்களின் வயல்வெளிகளும்,காடு கரைகளும்,பயிர் பச்சைகளு மாய் கண்னை குளிவிக்க இறங்கி நடந்தார்கள்,

இவனது சீனியர் சிறிது தூரம் தெம்பாய் நடந்தவர் வர வர தவங்க ஆரம்பித்தார், இவந்தான் சொன்னான் ,சார் ஏங் தோள்ல கை போட்டுக் கிருங்க, பேசிக்கிட்டே போயிரலாம் அப்பிடியே என்றவனாய் அவரை தோளில் சாய்த்துக்கொண்டு நடந்தார்,

“இந்த மாதிரி தோள்ல சாய்ச்சிக்கிற ஒரு மனசு வீட்டுல இருந்தா நாந்தான் இந்த உலகத்தின் முழுபாக்கியவானாயிப்போவேன் என பேசிக்கொண்டு வந்தவர் சிறிது மௌனமானார்..

அவரது பேச்சில் எப்பொழுதும் மிதமிஞ்சி இருக்கிற அருகாமையும், அரவணைப் பும் மௌனத்தில் கரைந்து போகிறது,

மற்றபடி அவரது பேச்சில் இருந்த உயிர்ப்பின் அளவு எப்பொழுதும் இருந்தது தான்,

அந்த அளவை அலுவலகத்திற்கு டீக் கொண்டு வருகிற பையனிலிருந்து ,ஊர் பெரியவர் வரை அப்படியே நீட்டித்துக் காப்பாற்றுவார், அதுதான் அவரை பணி ஓய்வு பெற்றுச் செல்லும் வரை மதிப்புடன் வைத்திருந்தது,

டீக்கடையிலிந்துதான் பாடல் வந்தது.

பாடலில் பொழிந்த அந்தி மழை காற்றுடன் கலந்து வந்ததாய்,/

நல்ல இசையும் நல்ல காற்றும் எத்திசையிலிருந்து வந்த போதிலும் உவப்பா னதாயும், ஏற்றுக்கொள்ளக்கூடியதாயும்,,,,/