காலை
மற்றும் மாலை வேளைகளிலும்
அலுவலகப்பணிக்குச்செல்கிற
இதரப் பொழுதுகளிலும்
ஏதாவது
வேலையாய் நகருக்குள் செல்கிற போதும்
சாலையோரக்கடையில் தேநீர் அருந்துவது
தவிர்க்க
இயலாமல் போய் விடுவதாகவே/
அது
தேநீரின் மீதுள்ள பிரியமா இல்லை
அதற்கு
அடிமையாகிப் போன
மனோநிலையா பிடிபடவில்லை.
அன்றும்
அப்படித்தான் அலுவலகம் செல்கிற
காலை
வேளையாய் நாற்கரச்சாலையோரமாய்
இருந்த
கடையில் டீ சாப்பிட்டுக் கொண்டிருந்தேன்,
கடையின்
முன் விரைந்த சாலையில் அமர்ந்து
சாலையோரமாய்
முளைத்துத்தெரிந்த புற்களையும்
இதரச்செடிகளையுமாய்
பிடுங்கக் கொண்டிருக்கிறாள் அவள்.
கிழிந்து
தொங்கிய ஆடைகளும்,
அழுக்கு படிந்த தோற்றமும்
அவளை
மனோ நிலை பிறன்றவள் என
அங்கீரத்துச்சொல்கிறது.
அவளது
எதிரில் இருந்த கண்ணாடிகிளாஸில்
நிறைந்த
டீ இருந்தது,
டீக்
கிளாஸின் மீது வடையோ,
பன்னோ மடித்து வைக்கப்பட்டிருக்கிறது,
எவ்வளவு
நேரமாய் அது அப்படி இருக்கிறது
எனத்தெரியவில்லை,
அதை
எடுப்பதை விடுத்து செய்கிற
வேலையிலேயே
மும்பரமாய் இருந்தாள்,
தரையிலிருந்து
பிடுங்கிய புற்களையும் செடிகளையும்
ஓரமாய்
குவித்து வைத்திருந்தாள்,
குவித்து
வைக்கப்பட்டிருந்த புற்களையும்
அதைபிடுங்கிக்கொண்டிருந்தவளையும்
கடை முன் காட்சிப்பட்டவர்களும்,கடைக்காரருமாய்
பார்த்துக்கொண்டிருக்கின்றனர்,
டீயைக்குடித்து விட்டு காசைத்தருகிற போது
டீக்கடைக்காரர் சொல்கிறார்,
அன்றாடங்களில்
நாம் டீக்குடிக்கிற கடைகள்
வெறும் டீயை மட்டும் தந்து
விடுவதில்லைதான்,
அன்றாடங்களில் நாம் டீக்குடிக்கிற கடைகள்
பதிலளிநீக்குவெறும் டீயை மட்டும் தந்து
விடுவதில்லைதான்,
அருமை
அருமை
அன்பும்,பிரியமும்!
நீக்கு