திங்கள், 13 ஜூலை, 2020

மண்ணிசைந்து,,,,,

இரு சக்கர வாகனத்தை எடுக்கையில் மணி மாலை ஐந்து முப்பதிலிருந்து ஆறு மணிக்குள்ளாக இருக்கலாம்.

உத்தேசம்தாம்தான், உத்தேசங்கள் உலகை ஆள்வதில்லை என்பது எவ்வளவு உண்மையோ அது போல் எதுவும் அறுதியிட்டுச்சொல்வதில்லை,

கைக்கடிகாரத்தைப்பார்த்து மணியை உறுதி செய்து கொள்ளலாம் என்றாலும் கையில் கடிகாரம் கட்டி பல வருடங்கள் பலவாகிவிட்டது,

எப்பொழுதிலிருந்து இந்த எளிமை என்பது இவனுக்கு அரிதாகக் கூட ஞாபகம் இல்லை.,இப்படி இருப்பதே பிடித்துப்போக அப்படியே விட்டும் விட்டான்,

அது ஒன்றும் பெரும் உறுத்தலாய் தெரியவில்லை,”ஊருக்குள்ள அதது எப்பிடி எப்பிடி திரியுது?கஞ்சிக்குச்செத்தது கூட வெளுப்பு மாறாம தேய்ப்பு மடங்காம போட்டுக்கிட்டுத்திரியுதுங்க,இவரு என்னமோ எளிமையா இருக்கு றேன்,,,,,,,,,( நல்லா வந்துறப்போகுது வாயில,) அது இதுன்னு கஞ்சிக்குச் செத்தவரு போல அலையுறாரு.

“முன்னயெல்லாம் ஒரு கல்யாணம் காய்ச்சி,நல்லது பொல்லதுன்னா வலது கையில பிரேஸ்லெட்டும், யெடது கையில தங்கக்கலர் செயின் போட்ட வாட்சுமாமடிப்புகலையாத லக்கி பேண்ட்டும் ,சட்டையுமாத்தான் இருப்பாரு, எப்ப யாரு கண்ணுபட்டுச்சுச்சோ,இல்ல யாரும் அவரு மனசக் கெடுத்து விட்டுட்டாங்களான்னு தெரியல. பழைய பழக்கமெல்லாம் சின்னப் புள்ளைங்க ஒழப்பி விட்ட மண்ணு வீடாட்டம் சரிஞ்சி போச்சி/,

”சரிஞ்சது அதல பாதாளம் காட்டி நிக்காட்டிக்கூட லேசா பள்ளம் பறிச்சிப் போட்டுருச்சி இவரு மனசுல. அன்னையிலயிருந்து இன்னைக்கு வரைக்கும் இப்பிடி விட்டேத்தியா நேந்துவிட்ட சாமியாரு போலத் திரியிறாரு”என இவன் மனைவி அன்றாடங்களில் புலம்புவது இப்பொழுது எப்பொழுதுதாவதான வாடிக்கையாகிப் போனது,

“என்ன சார் வண்டி எடுக்க உதவி பண்ணணுமா,,,? அருகில் வருகிறார் வாசு அண்ணன், இந்த வயசான காலத்துல ஓங்களுக்கு தக்கன வண்டி வாங்காம இவ்வளவு பெரிய வண்டிய வாங்கி வச்சிருக்கீங்களே என்றார்,

அலுவலத்தின் வெளி வாசல் தாண்டி இடதுபக்கமாய் கடை வைத்திருப்பவர், சேவு மிக்சர்,பக்கோடா,நிலக் கடலைப் பருப்பு,ஊறுகாய் மற்றும் சிகரெட், பீடி, வெற்றிலை,,, இவைகள்தான் அவரது வியாபாரமாய் இருந்தது,என்ன வாசுண்ணேநல்லாயிருக்கீங்களா,நான் தள்ளிக்கிர்றேன் வண்டிய ,என்றதும்  ”நல்லாயிருக்கேம்பா” என்றார்,

அது என்னவெனத் தெரியவில்லை,சிறிது காலமாய் அப்படித்தான் அழைக்கி றார் அல்லது சொல்கிறார்,

சென்ற மாதத்தின் ஒரு நாளின் மதியமாய் அலுவலகத்திற்கு வேலையாய் வந்த பெண்ணுக்கு இவனது இரண்டாவது மகளின் வயதிருக்கும், வேலையெ ல்லாம்முடித்துப்போகும்போது”போயிட்டுவர்றேன்ப்பா”எனச்சொல்லிவிட்டுப் போனாள்.அது போல் இப்பொழுது இவரும்,

”அப்புறம் வாசுண்ணே யேவாரம் எப்பிடி இருக்கு ,வீட்ல புள்ளைங்க என்ன செய்யிறாங்க என்கிற கேள்விக்கு சின்னவ ரெண்டாவது போறா,பெரிவன் மூணாம் வகுப்பு படிக்கிறான்,அந்த வகையில பரவாயில்லை சார்,ஆணு ஒண்ணு பொண்ணு ஒண்ணு,ரெண்டும் ஆணாவும், பொறக்கல,ரெண்டும் பொண்ணாவும் பொறக்கல,செலவு ஒருபக்கம் இருந்தாலும் கூட ஆண் பெண் புரிதல் வீட்ல இருந்தே ஆரம்பிக்க ஒரு வாய்ப்புக் கெடச்சிருதுள்ள பையனுக்கு .இல்லைன்னா ஆணப்பத்தி பொண்ணு என்னமோன்னு நெனை க்க, பொண்ணப்பத்தி ஆணு என்னமோன்னு நெனைக்க.அது கட்டாகிருதுல்ல சார், அது வரைக்கும் நான் குடுத்துவச்ச ஆளு என்ற வாசு அண்ணன் மத்தபடி எனக்கும் ஏங் வீட்டம்மாவுக்கும் இந்த கடையேவாரம் போதும்ண்ணே, புள்ளைங்கள வளர வளர இது போதாதுன்னு தோணுது,வேற ஏதாவது ஒண்ணு செஞ்சுதான் ஆகணும் சார்,”என்கிறார்,

மழைபெய்து முடித்திருந்ததில் மண் கொஞ்சம் மகிழ்ந்திருந்தது, சமீபத்தில் ரோட்டை அகலப்படுத்துவதற்காய் தோண்டப்பட்ட மண்ணை சாலையின் இரு புறமுமாய் விரித்து விட்டிருந்தார்கள்.பரப்பப்பட்டிருந்த மண் சமமாய் இல்லாமல் மேடு பள்ளமாய் இருந்தது,

அலுவலகத்தில் வண்டி நிறுத்த இடமில்லை,அலுவலகத்தின் முன் ஒரு செட் கூடப்போட்டுக் கொடுத்திருக்கலாம்.கட்டிடத்தின் உரிமையாளர்., இப்பொ ழுது ரோட்டியில்தான் நிறுத்தவேண்டியதிருக்கிறது வண்டியை. மழைக்கும் வெயிலுக் கும் காற்றுக்கும் தூசிக்குமான அனைத்தையும் தன்னில் தாங்கி நின்று கொண் டிருக்கிறது.

”போடுமண்ணாய்இருந்தாலும்மண்நல்ல வண்டலாய்த் தெரிந்தது, கொஞ்சம் சிரத்தையெடுத்து சிரமப்பட்டால் இம்மண்ணில் எதையும் விளைய வைக்கலாம் தானே? கொஞ்சம் உரமும், கொஞ்சம் உழைப்பும்,கூடவே சிறிது ஆட்டாம் புழுக்கையும்,நம்பிக் கையும் இருந்தால் போதும்.எல்லாம் சாத்தியமே/”

காலடிகளை நின்ற இடத்திலிருந்து சற்று மாற்றி வைத்துக்  கொள்கிறான், நின்ற இடத்திலேயே நின்றால் பாதத்தின் அடியில் வேர் விட்டுவிடக்கூடாது,

விடாதுதான்,அப்படியெல்லாம் நமது மண் நமது மண் ,நமது மனிதர்கள்,நமது வீடு நமது அலுவலகம்,நமது சாலை மற்றும் நமது ,மனிதர்கள் எல்லாம் சேர்ந்து வேர்விட்டு விட விட மாட்டார்கள்,

மண் மீது நம் கவனம் இருப்பது போல் மண்ணும் நம் மீது கவனம் வைக்கும்,என நம்பிக்கை சொன்னாலும் கூட பாதங்கள் கேட்கிற வழியைக் காணோம்,

காலை மாற்றி வைக்கிற போது வேப்ப மரத்தின் அடியில் ஊர்ந்த எறும்புகள் ஒன்றன் பின் ஒன்றாக வரிசை கட்டியும் இரை தேடியுமாய்/

தேடிய வையும் தேடிச் சென்றவையுமாய் செல்கிறது வாழ்க்கை, எனச் சொன்ன எறும்பு ஓன்று வரிசை உடைத்து விலகி வந்து சொல்கிறதாய்/

நானும் எனது நட்புகளும் ஒட்டிய வயிறுடன் தேவைக்காய் இரை தேடிச் செல்கிற வழியில்தான் தாங்கள் இரு சக்கர வாகனத்தை நிறுத்தி வைத்திருக் கிறீர்கள், ஒன்று அதன் பாகங்களின் மீதேறி நாங்கள் பயணிக்க வேண்டிய திருக்கிறது, இல்லை அதன் அடியில் பாதை அமைத்து ஊர்ந்து செல்ல வேண்டியதாகிப் போகிறது,

அவ்வாறு செல்கிற பல சமயங்களில் இடைஞ்சலாகிப்போகிறது,அல்லது பாதையில் சென்ற திருப்தி இல்லாமல் எங்கோ கண்ணை கட்டிவிட்ட நிலையில் தட்டுத்தடுமாறி செல்கிறது போல் இருக்கிறது.அதில் எங்களுக்கு திருப்தி இல்லை,

”நாங்கள் ஒன்றும் இழிவாய் கிடக்கிற இனம் இல்லை,எங்களுக்கென ஒரு கூட்டம் இருக்கிறது, வசிப்பிடம் உண்டு,எங்களுக்கானப் பொறுப்புகள் தனி,அன்றாடம் உணவு தேடி எவ்வளவு தூரம் சென்று மிகவும் கஷ்டப்பட்டு சேகரித்து வருகி றோமோ அவ்வளவு தூரம் அதை பாதுகாத்தும் வருகிறோம், உங்களைப் போல் சாக்கிலும் பாத்திரங்களிலும் இன்ன பிறவற்றிலுமாய் உணவை போட்டு வைத்து பாதுகாக்கிற பழக்கம் எங்களில் இல்லை. அதற்கென மண்ணில் அடியில் நாங்கள் தோண்டி சீராககட்டி வைத்துள்ள புற்றுக்குள்ளாய்இருக்கிறஅறைகளில் பாதுகாக்கிறோம் எந்த மழையாலும் ,வெயிலிலாலும்,இயற்கை சேதத்தாலும் உணவு பறிபோய் விடுமோ என்கிற பயமில்லை எங்களுக்கு,மாறாக மனிதர்கள் வேட்டையாட வருகிற சமயங் களில் எங்களது வசிப்பிடத்தை தோண்டி நாங்கள் சேகரித்து வைத்துள்ள உணவை எடுத்துச்சென்று விடுகிறார்கள், காக்க வேண்டியகைகள் களவு செய்யும் போது நாங்கள் விதியை நோவது தவிர்த்து வேறென்ன செய்து விட முடியும் பெரிதாய்,,,?

அதற்காகத்தான் கேட்கிறோம்,எங்களுக்கென நாங்கள் தனியாய் வசிப்பிடம் அமைத்துக்கொண்டதைப்போல நாங்கள் உணவு தேடி போய் வர தனி ஒரு பாதை வேண்டும் ,எங்களுக்கென ஒரு சிக்னலும் அதை ஒழுங்கு செய்ய காவலர்களும் இருக்க ஆசைப்படலாம்தானே,,?என எறும்பு பேசிச்சென்ற நேரத்தில் வேப்பமரத்தின் உச்சியிலிருந்து குரலொன்று கிளம்பி வந்து இவன் கவனம் கிளறுவதாய்/

”கத்துவதும், கீதமிசைப்பதுமாய் மாறி மாறி தென்படுகிறதான எங்களது அடையாளம் குயிலாயும்,காக்கையாயும் அடைகொண்டு கூடு கட்டு குஞ்சு பொரித்து வாழ்க்கை நடத்தி அன்பும் காதலும் மிக வாழ்கிறதாய் இருக்கிறது தான். விளைச் சலற்ற வெற்று நிலங்களின் மீது அத்துவானம் காட்டிப் பறக்கையில் கண்ணுக்கு எட்டிய தூரத்தில் தென்படாத இரையை அரிதாக காண்கிற போது கொத்திக் கொண்டு வந்து நாங்கள் தின்றது போக எங்களை எதிர்பார்த்து காத்திருக்கிற குஞ்சுகளுக்காய் கொடுத்து விட்டு மிச்சமிருந்தால் நாங்கள் உண்டு ஜீவிக்கிற பாக்கியம் மட்டுமே கிடைத்திருக்கிறது/”

அதைக் கொண்டு வாழ்கிறோம் திருப்தியாய் அவ்வளவே எனச் சொல்லிய பறவையின் பேச்சு மீறி தெரிந்த வேப்ப மரத்தின் வளர்ச்சியும் ஆகுருதியும் பார்க்க பிரமிப்பாய் தெரிந்தது,

ஐம்பது வருடத்திற்கு மேலான சரித்திரம் இருக்கலாம் இந்த மரத்திற்கு என்றவாறே சாப்பிடச்சென்ற திருமூர்த்தி கடையில் அமர்ந்திருந்தவர் சொல்கி றார்,

“சார் நீங்க சொல்றது போல இல்ல,இந்த மரத்துக்கு வயசு ஐம்பதுக்கும் கூடவே இருக்கும் என்கிறார்.

எனக்குத் தெரிய ஏங் பிராயத்துல இந்தப்பக்கம் போகையில சின்னதா இதப்பாத் துருக்கேன்,இப்ப முண்டும் முடிச்சும் யெலையும், காயும், கனியுமா நிக்குது என்றார்,

”இப்ப ஒரு கனிப்புல அந்த மரத்துல எத்தனை கொப்புக எத்தனை முடிச்சுக, எவ்வளவு காய்க காய்ச்சிருக்கும் ,அதுல எவ்வளவு பழுத்து நிக்குமுன்னு சொல் லீற முடியும்,மரம் நிக்கிற மண்ணு ,அதோட தன்மை,பரப்பு மரத்தோட உறுதி ,அதோட வயசு எல்லாம் வச்சி அது இன்னும் எத்தனை நாளைக்கு தாங்குமுன்னு என்னால சொல்லீற முடியும்.ஆனா ஒங்கள் மாதிரி ஆள்களால அது வெறும் வேப்ப மரம்ன்னு மட்டும் சொல்லீற முடியும் அவ்வளவுதான், வித்தியாசம் ஒங்க பார்வைக்கும் ஏங் பார்வைக்கும்,

“அதுக்குத்தான் எந்த ஒண்ணுக்கும் பெரிய ஆள்கள கலந்தாலோசனை பண்ணுங்கண்ணு சொல்றாங்க,இப்ப தலை முறை என்ன பண்ணுறீங்கன்னா கையகலம் இருக்குற செல்போன்ல சமைச்சி சாப்புடுறது தவிர்த்து மத்த தெல்லாம் பண்ணீக்கிறீங்க,வாழ்க்கையே அதுதான்னு ஆகிப்போச்சி, பெத்த வுங்கள்ல இருந்து மத்தவுங்க வரைக்கும் அவுங்க கிட்ட பேசுறத மறந்து ட்டு செல்போன பாக்குறது மட்டுமே வாழ்க்கையின்னு நெனைச்சிக்கிட்டு இருக்குறீங்க,எங்க காலங்கள்லயெல்லாம் புதுசா கல்யாணம் ஆன ஜோடிக பஸ்ஸீல போனா பஸ்ஸே குலுங்கும்,கூட பிரயாணம் பண்ணுறவுங்கள்ல இருந்து டிரைவர், கண்டக்டர் வரைக்கும் ஒரே வெக்கமாகிப்போகும்,ஆனா இப்ப அப்பிடியா புருசனும் ,பொண்டாட்டியும் பக்கத்துல பக்கத்துல ஒக்காந் துருந்தாலும் கூட ஆளுக்கு ஒரு செல்போன கையில வச்சிக்கிட்டு ஊர் வந்து சேர்ற ஐம்பது கிலோ மீட்டர் தூரமும் ஒண்ணுமே பேசிக்கிறாம வர்றாங்களே, சரி பஸ்ஸீலதான் அப்பிடின்னா வீடு போயி சேர்ற வரைக்கும் கூடவும் இப்பிடித்தான் பேசாம போறாங்க,

”இப்பிடித்தான் புதுசா கல்யாணம் ஆன ஜோடிக ஒரு ஊருக்கு விருந்துக்கு போயிருக்குறாங்க,அது கிராமம், வழக்கம் போல ரெண்டு மூணு மணி நேரத்துக்குஒருபஸ்ஸீதான்,பஸ்ஸீக்காக காத்திருக்குறநேரத்துலசெல்போன பாப்பமுன்னு பாத்துக்கிட்டே இருந்துருக்காக, அந்த நேரத்துல பஸ்ஸீ போயிருச்சி, அதக்கவனிக்காத அவுங்க பஸ்டாண்டு ஹோட்டல்லேயே சாப்பு ட்டுட்டு சொந்த ஊருக்கு திரும்பி வந்துட்டாங்க,மறு நாளு பாத்தா இவுங்கள விருந்துக் குக் கூப்புட்ட சொந்தக்காரங்க வீட்டுக்கு வந்து சண்டை போட ஆரம்பிச் சிட்டாங்க,அப்புறம் பெரியவங்க பேசி சமாதானம் பண்ணி நடந்த ச்சொல்ல ஒரே சிரிப்பு,நல்ல வேளை திரும்பி வந்ததாவது சொந்த ஊருக்கு வந்தாங்க, செல்போனபாத்துக்கிட்டே வேற எந்த ஊரு பஸ்ஸீலயாவது ஏறாம போனா ங்கன்னு,

“இப்ப அது போலதான் ஆகிப்போச்சி எல்லாம்,பெரியவங்க அருமை தெரியி றதில்ல, பெரியவுங்கள மதிக்கிறதில்ல,பெரியவுங்கள முன்னாடி விட்டு பின்னாடி பேசுறதுன்னு எல்லாம் நடக்குது,சொல்லுல பேச்சுல நடத்தை யில நிதானம் இல்லை,படக்கு படக்குன்னு என்னத்தையாவது ஒண்ண பேசீற்றா ங்க,படக்கு படக்குன்னு நிதானமிழந்து நடந்துக்குறாங்க,படக்கு அதுஏதாவது ஒரு நேரத்துல வந்து கசந்து நின்னுக்கிருது. அந்தக் கசப்புக பின்னாள்ல விரிசல் கண்டு பெரிய சுவரா தடிச்சி நிக்குது, என்ற பெரியவர் தான் சாப்பிட்ட இரண்டு பூரிக்கும் வடைக்குமாய் காசு கொடுத்து விட்டு நகர்கிறார்,

பெரியவர் எழுந்து சென்ற சீட்டுக்கு எதிர் சீட்டில் அமர்ந்தவன் இரண்டு பூரிகளும் ஒரு வடையும் கொண்டு வரச்சொல்கிறான்,

நினைவுகளில் கிளறலில் மனம்வழியாய் இறங்கி பாதங்களில் வேர் விட ஆரம்பி த்திருந்தது,

படர்ந்தடர்ந்த மர இலைகளின் ஊடறுத்து மாலை நேர மஞ்சள் நிற சூரிய வெளிச்சம்.

மரத்திலிருந்து எழும்பிப்பறந்த பறவைகள் கத்தலுடனும்,கீதமிசைத்துமாய்,,,/

திங்கள், 6 ஜூலை, 2020

காற்றுக்கென்ன,,,,




நல்ல இசையும்,நல்ல காற்றும் எத்திசையிலிருந்து வந்த போதிலும் உவப்பா னதாயும் ஏற்புடையதாயும்/

வேலி போட்டு நிறுத்தவும்,கை கொண்டு மறைக்கவும் சுவர் எழுப்பி தடுக்கவும் காற்று ஒன்றும் கட்டுக்குள்ளாய் இருக்கிற பொருள் அல்லவே?

அது போல்தானே தண்ணீரும் பரந்து பட்ட வெளியில் உறை கொண்ட நீர் பரப்பை எது கொண்டும் மூடி விட முடியாதுதான் என்பார் இவனுடன் பணிபுரிந்த வர்,

அவரை அங்கு வைத்து பார்ப்பான் என இவன் எதிர்பார்க்கவில்லை,மாதம் பிறந்த ஒரு வாரத்திற்குள்ளாய் வீட்டுக்கு பலசரக்கு வாங்கி விடுவது இவன் வழக்கம்,

அது போலான நாட்களில் அலுவலகத்திலிருந்து வருகிற சாயங்காலங்களில் நேரம் ஒதுக்கி விடுவான், வீட்டிற்கு வந்ததுமாய் தோள்பட்டையிலிருந்து பையை இறக்கி வைப்பதுதான் தாமதம் ,பலசரக்கு பையை எடுத்துக் கொண்டு மனைவி யுடன் கிளம்பி விடுவான்,

மனைவியுடன் கிளம்ப அரசாங்க உத்தியோகஸ்தர்களுக்கென தனியாய் விடுப்பே தரலாமே,,,,?

பெரியவள் கூட கேலி பண்ணுவாள்,அம்மாவும் அப்பாவும் ஊர் சுத்த கெளம்பீ ட்டாங்க என /அவள் சொல்வதில் பெரிதான தப்பொன்றும் இருப்பதாய் தெரிய வில்லை,

“கடைக்கிப்போகிறேன்”,,,எனச்சொல்லி விட்டு இரு சக்கர வாகனத்தில் மனைவியின் இருப்பு அருகில் இருக்க இருபது அல்லது முப்பது கிலோ மீட்டர் வேகத்திற்கு மீறாமல் வண்டியை ஓட்டிக்கொண்டு போவதும் அதனூடாய் பரஸ் பரம் பேச்சையும் வீட்டின் தேவைகளையும் அவசியத்தையுமாய் பரிமாறிக் கொள்வதும் ஒரு வித அழகாயும்,மனமிதப்பாயும்தான்,

அன்று அவள் வரவில்லை வீட்டில் வேலை இருக்கிறது என இருந்து விட்டாள், சின்னவளைத்தான் கூட்டிக்கொண்டு போயிருந்தான், அவள் கொஞ்சம் கவனமாய் கவனம் வைப்பவள்,செய்கிற வேலையிலிருந்து தப்பித்தவறி கூட கவனம் திசை திரும்ப அனுமதிக்க மாட்டாள்.இரு படித்து விட்டு வருகிறேன் எனச்சொல்கிறவளை டீவி நிகழ்ச்சியோ,சமையல் வாசனையோ கவனம் கலைத்து விட முடிந்ததில்லை இது நாள் வரை/

படிப்பில் மட்டும் என இல்லை ,அவள் பார்க்கிற வேலைகள் எல்லாவற்றிலும் அப்படித்தான்நிலையூன்றுவாள், கவனம் வைப்பாள்,கண்விரிப்பாள், படபடக் கிற இமைகளைப்போல்மனதையும்,வைத்திருப்பாள்.

அவள்தான் கடையில் சிட்டை வாசித்து எழுதச்சொல்லி சரி பார்த்துக் கொடுத் தாள். எழுதுன சிட்டையை எல்லாரும் காசு குடுக்கும் போதுதான் வாங்கி சரி பாப்பாங்க, யெடையில வாங்கி சரி பாக்குறது நீ ஒருத்திதான் தாயி,ஒரு வகையில ஒங்க அம்மா அப்பா குடுத்து வச்சவுங்க தாயி,என்பார் கடைக்காரர் சிரித்துக் கொண்டே/

“அவுங்க எங்க குடுத்து வச்சிருக்காங்க,நாங்கதான் மாசா மாசம் ஒங்ககிட்ட குடுத்து வைக்க வேண்டியதாகிப்போச்சி என்பாள் பதிலுக்கு/

சரக்கு வாங்கி முடிக்கும் போதுதான் அவரைப்பார்க்கிறான்,முதலில் புடிபட வில்லை, எங்கோ பார்த்த முகம், எப்பொழுதோ பேசி உறவாடிய மனிதர், அன்பையும்,வாஞ்சையுயையும்,அதற்குமேலானஒட்டுதலையும்தனதுபேச்சின் மூலமும் செய்கையின் மூலமுமாய் இவனில் விதைத்த அருமையா ன மனிதர். அவர் போல் எவரிங்கு என சொல்லி விட முடியா விட்டாலும் கூட இதுவரை பார்த் தறிந்ததாய் ஞாபகமில்லை,

பக்க வாட்டில் பார்க்கும் போது உறுதியாய் அவராய்த்தான் தெரிந்தார், ஆனால் நேர் படப்போய் பார்க்கிற தைரியம் இல்லை,அவருக்கும் இவனுக்கு மான இடை வெளி ஐந்தடி இருக்கலாம்,

வாங்கிய பலசரக்குகளுக்கு காசு கொடுத்து விட்டு பையை மகளிடம் தந்துவிட்டு நகர்கிறான் அவரை நோக்கி,அவர் சரக்கு வாங்குவதிலும் வேறு ஒன்றிலுமாய் கவனமாய் இருந்தார்,

அவரது தோள் தொட்டு திரும்பிப் பார்க்க வைக்க இவனுக்குக்கொஞ்சம் தயக்கமாய் இருந்தது,சரி எப்படியாவது பார்க்க வைக்க வேண்டும்,அவருடன் பேச வேண்டும் என நினைத்தவனாய் தோள் தொட்டான்,

தொட்ட தோளை தோள்பட்டையாலேயே தட்டி விட்டுவிட்டு திரும்புகிறார், அவரேதான்,

“சார் தங்களை இங்கே எதிர் பார்க்கவில்லை,இவ்வளவு பழுத்த வயதில்” என்கிற அவனது பேச்சை எதிர் கொண்டவர் லேசாய் சிரித்து விட்டு இந்நேரம் நான் இறந்து போயிருப்பேன்னு எதிர்பாத்தவுங்கதான் அதிகம்,ஏங் காது படவே எத்தனையோ பேரு பேசிருக்காங்க,அவுங்க பேச்சு ஒண்ணும் தப்புன் னு சொல்ல முடியாது. என்றவர் போயிருப்பேன் எப்பொழுதோ, ஓங் போன் றவர்களை பாக்குற பாக்கியம் இன்னும் ஏங்கிட்ட நிலை கொண்டு இருக்கும் போது எப்பிடி போறது சொல்லு.எனப்பேசியவர் வாங்கிய இரண்டு மூன்று சரக்குகளுக்கு காசு கொடு க்கப் போன இவனைத் தடுத்து பணம் கொடுத்து விட்டு இன்னும் அந்த நெலைமைக்கு வரலை,தம்பி எனச்சிரித்தவாறே நகர்கிறார், இவனிடம் விடை பெற்றுக்கொண்டு/

விடை பெற்றவரை இடை நிறுத்தி “சார் எனக்காக ஒரு உதவி செய்வீங்களா, எங்க கூட வந்து ஹோட்டல்ல டிபன் சாப்புட்டுப்போகணும்” என்றான்.

என்ன நினைத்தாரோ மறுக்காமல் வந்து விட்டார்,ஹோட்டலில் திறந்த வாய் மூடாமல் பேசிக்கொண்டிருந்த இவன் மகளை அருகில் அழைத்து சாப்பிடும் போது பேசுனையின்னா ,ஒன்னு விக்கல் எடுக்கும் இல்ல வயித்துல காத்து அடைச்சிக்கிரும் என்றார்,ஆனாலும் அவள் பேசிக் கொண்டிருந்தாள் அவரிடமே/

ஆச்சரியமாக பார்த்த அவர் அம்மா பழக்கமா என்றார் இவனிடம்,அவளும் அப்படித்தான் பலசரக்கு வாங்க வருகிற நாட்களில் வழக்கமாய் போய் விடுகிற ஹோட்டலில் சாப்பிடுகிற பொழுது டிபன் பாதி,பேச்சு பாதி என அவளதுவயிற்றுக்குள்போய்க்கொண்டிருக்கும்,பரிமாறுபவர்கூடச்சொல்லுவார், பேசுறதுல தப்பில்ல, ஆனா சாப்புடறத மறந்து பேசிக்கிட்டு இருக்குறதுதான் தப்பு என்பார்,

வழக்கமாக செல்கிற ஹோட்டல் என்பதால் இவர்களைப் பார்த்ததும் ஹோட்டலுக்குள் எந்த டேபிளுக்கு பரிமாறிக்கொண்டிருந்தாலும் இவர்களது மேஜைக்கு வந்து விடுவார்,

இவனது மனைவி அவரை அப்பா என்றுதான் அழைப்பாள்,அவளது தந்தையின் வயதிருக்கும் அவரைப்பார்த்ததும் தந்தையின் ஞாபகம் வந்துவிடுகிறது என்பாள்,

அவருடன் சாப்பிடப்போன அன்றும் அவர்தான் பரிமாறினார்,”என்ன சார்,ஏங் மக வரலையா,சார் யாரு புதுசாத்தெரியுது இது நாள் வரைக்கும் ஹோட்டல் பக்கமே சாரைப்பாத்தில்லையே என்றவர் பரிமாறிவிட்டு நகர்கிறார்,

பழையதாய் தெரிந்த ஹோட்டலுக்கு கண்ணை உறுத்தாத வர்ணத்தில் பெயிண்ட் அடித்திருந்தார்கள், பார்க்க அழகாய் இருந்தது, அங்கங்கே ஒட்டி யிருந்த ஜிகினா பேப்பரும் டிசைன் பேப்பரும் ஹோட்டலுக்கு அழகு சேர்த்தது, வேகமெடுத்துச் சுற்றிய நான்கைந்து காற்றாடிகளில் ஒன்று கிரிச்சான் கிரிச்சான் என சப்தமெழுப்பியது,பளிச்சிட ட்யூப் லைட்டுகள் சிலவற்றில் சுற்றியிருந்த கலர் பேப்பர் கடையின் டைல்ஸ் தரையில் பட்டுப் பளிச்சிட்டது,

பேசிக்கொண்டே சாப்பிட்டுக்கொண்டிருந்த இவர்களுக்கு முன்னாய் சாப்பி ட்டு விட்டவர் கையை கழுவி விட்டு வந்தார்,

அப்பொழுது போல் அதே ரேமண்ட் பேண்ட்,அதே முழுக்கை சட்டை,இன் பண்ணி டக் விட்டிருந்தார், சட்டைப்பையில் இரண்டு விரல் தடிமன் கொண்ட மரக்கட்டைப் பேனாவை சொருகியிருந்தார்,

வேலையிருக்கிறது என சொல்லி விட்டுக்கிளம்பியவரை ஆச்சரிமாய் பார்த்தவன், வீட்டுவரை கொண்டு வந்து விடட்டுமா சார் என்றான், வேண் டாம் என மறுத்தவராய் கடையின் நடையை தாண்டி போய்க் கொண்டிருந் தார்,வேகமாக/

இவனுக்கு சீனியர், அவர் பணிபுரிந்த அலுவகத்தின் கிளைக்கு இவன் பணி மாறுதல் செய்யப்பட்டிருக்கிறான் என அறிந்த நாளில் சந்தோஷப்பட்டதும் விரைந்து வா உடனே எனச் சொல்லி அகமகிழ்வு கொண்டதும் அ வரே/

அப்பொழுதெல்லாம் இது போல செல்போன் இல்லை,அலுவலகத்தின் லேண்ட் லைன் போன்தான்.அதில்தான் எல்லாம்,அலுவலகப்பயன் பாடு தவிர்த்து சொந்த பயன் பாட்டிற்கும் அதுவெனவே ஆகிப்போகிற சாஸ்வதம். வேறென்ன செய்ய இருக்கிற இடத்தில் தானே பயன் படுத்திக்கொள்ள முடியும்,,,,?

ஒரு பணிநாளின் மும்பரத்தில் இருந்த மத்தியான வேளையில் போன் வருகிறது,ரெஸ்டாக இருப்பான் போலும் என நினைத்திருப்பாராய் இருக்கும், ஆனால் நிலைமை தலைகீழாய் இருந்தது,ஆளை அமுக்கிற வேலையிலிரு ந்து தன்னை பிய்த்தெடுத்துக்கொண்டுதான் வந்தான் வேண்டா வெறுப்பா யும், போன் பேசவுமாய் /

அது அப்படித்தான் ஆகிப்போகிறது,பணி மிகுதியாய் இருக்கிற தினங்களில் வீட்டிலிருந்து அம்மா அழைத்த போதும் கூட எரிச்சலாகி விடுவான். அது எப்படி அவனில் முளைக்கிறது,எப்படி கட்டுப் படுத்த ,, ,? இன்று வரை அதற்கு விடை தேடி அலைகிறான் கிடைக்கவில்லைதான், சிலரானால் போன் வந்து விட்டால் போதும்,எந்தக்கவலையுமற்று அந்த உலகத்திற்குள் போய் விடுகிறார்கள் ”அக்கம்பக்கம் அலுவலகம்,பப்ளிக்,கூட்டம் வரிசை,”,,ம்ஹீம் அது பற்றியெல்லாம் கிஞ்சித்தும் கவலைகொள்ளாமல் அடித்து நகட்டிக் கொண்டிருப்பார்கள்,

இவன் அது போல் எப்பொழுது ஆவான் என கடவுளிடம்தான் கேட்க வேண்டு ம், அல்லது கடவுளிடம் சொல்லி இவனை அப்படி மாற்றி விடச் சொல்ல வேண்டும்அதுஆகாதுபோலிருக்கிறது,இப்போதைக்கு,,/என நினைத்தவனாய் போனை எடுத்த போது எதிர் முனையில் அவர்,

“என்ன தம்பி நல்லாயிருக்கையா என்பதுதான் அவரது முதல் பேச்சாய் இருந்தது.இவன் பணிக்குச் சேர்ந்த நாள் முதல் இவ்வளவு ஒட்டுதலாய் யாரும் இவனிடம் பேசிக் கேட்டதில்லைஅவ்வளவு ஒட்டுதலான பேச்சு,அவ்வளவு வாஞ்சையான விசாரிப்பு, அவ்வளவு தொடுதலான உணர்வு,எல்லாம் சேர்ந்து இவனைக்கொஞ்சம்கிரங்கடித்ததுதான்,சுதாரித்து நின்றுஅவசரஅவசரமாய் பேசிவிட்டுஅன்று மாலையே அங்கிருந்து ரிலீவாகி பணிமாறுதலான கிளைக்குச் சென்ற போதுதான் தெரிந்தது பேசியவரின் பேச்சு மட்டுமில் லை, செய்கைகளும் அப்படித்தான் என/.

வார்த்தைகளுக்கும்,செய்கைகளுக்கும் இடையே சுவர் எழுப்பிக் கொள்ளாத நிஜம் அவரில் தென்பட்டது,அவரது வயது அவரது அனுபவம், எல்லாமும் சேர்ந்து அவரை எங்களிடமும்,இல்லை எங்களை அவரிடமுமாய் நெருங்கி பழகிவிட்டி ருக்கவில்லை.ஆனாலும் கூட மிகவும் விலகி நிற்க மாட்டார், தூரத்தில் நின்றாலு ம் கூட எங்கள் மனம் படித்து அருகாமையில் வைத்திருப் பார்.

காத்துக்கும் தண்ணீக்கும் பேதமில்லப்பா,நல்லதா கெடைக்கும் போது ஏத்துக்கக்கத்துக்கணும் என்பார்.

”ஏத்துக்க கத்துக்கிடணுன்னு சொல்ற நீங்க அன்னைக்கி ஒரு நா ராத்திரி வேலை பாக்குற கிராமத்துல தங்குனப்ப நீலப்படம் ஓடுது ஒரு யெடத்துல , நாங்கள்லாம் போயி பாத்துட்டு வந்துர்றமுன்னு வேலை பாக்குற அத்தன பேரும் கேட்டப்ப எல்லாரும் போனா நீயும் அவுங்க கூடப் போவையா, அவுங்க பாதை வேற ,ஓங் பாதை வேறைன்னு,, எனக்கு தடுப்பு வேலி போட்டவ றில்லையா நீங்க”,,,,எனச் சொன்ன இவனை ஏறிட்டுப்பார்த்தவர் ”ஆமாம் இப்பயும் சொல்லுறேன் அவுங்கள்லாம் வேற,நீ வேற,ஓங் ஒயரம் வேற, நீ எட்டித் தொடப்போற எல்லை வேற, ஒன்னோட ஆகுருதி வேற,,, இப்பிடி எல்லாமே உன்னில்ல வேற,வேற தம்பி ,அதுனாலத்தான் அப்பிடிச் சொன்னேன், நல்லது கெடைக்கும் போது ஏத்துக்குற கத்துக்கணு முன்னு சொன்னேனே ஒழிய இது போல நீலப்படம் பாக்குற வாய்ப்பு கெடைச்சா விடாதன்னு சொல்ல வரலையே, தம்பி,ரெண்டாவது அதெல்லாம் ஒரு வாய்ப்புன்னு நெனைக்காத,நரகல மிதிச்சிட்டு காலக்கழிவிக்கிறது வாய்ப்புன்னு நெனைப்பையா தம்பி என கேள்விக்குறியிடுவார்,

போற போக்குல ரோட்டுல கெட்டது ரெண்ட பாக்க வாய்ச்சது போலன்னு நெனைச்சுக்கயே என்பார்,கூடவே/

”கெட்டத பாக்காததுனால பெரிசா நஷ்டமாகிறப்போயிற்றதில்ல,ஆனா நல்லத பாக்காம தவற விடும் போது பலத்த நஷ்டம் ஏற்பட்டுப்போகுதான் நமக்கு, இதுல நீலப்படம் பாக்கலைன்னு பெரிசா வருத்தம் எதுக்கு,,? நீலப்படம், தலை கிறுகிறுக்குற போதை ,சிகரெட்டுப் பொகை, எல்லாம் இந்த வயசுல நல்லாத் தான் இருக்கும் ,ஆனா இதெல்லாம் சேர்ந்து ஒன்னைய ஒக்குட்டுருமே ஒழிய பாதுகாக்காது, பாலும் வெள்ளைதான்,பாலோட கலந்த தண்ணியும் வெள்ளை தான்.நாமதான் அதை பிரிச்சரியிறபக்குவம் கத்துக்கணும்” என்றார்,

அவர் அன்று சொன்னது போது உதாசிக்காமல் பாலையும் தண்ணீரையும் பிரித்தரியும் பக்குவம் கற்றுக் கொண்டான், ”பால் பருக வேண்டிய நேரம் எது? தண்ணீர் பருக வேண்டிய நேரம் எது”,,,? என பிரித்து வரிந்து கொண்டான்,அதி முக்கியமாய் பாலை,பாலாகவும் தண்ணீரை,தண்ணீராக மட்டுமே பார்க்கப் பழகிக் கொண்டான், கூடவே வெண்மை நிறத்திலான கள்ளையும்/

’ஓங் வயசு ஏங் அனுபவம் தம்பி,ஏனோ ஓங்கிட்ட சொல்லத்தோணுது சொல்றேன், சும்மா சொல்லுவான் அவனவன்,நீ அதெல்லாம் கணக்குல எடுத்துக்காத ,நாந்தான் உலத்துலயே நல்லவன்,அவன் கெட்டவன், மோசமா னவன், ஒரு மாதிரியான ஆளுன்னு பேசுவான்,அப்பிடிச் சொல்றவனை நெருங்கிப்போயி பாக்கும் போதுதான் தெரியும், அவனோட கேடு கெட்டத் தனத்த மறைக்கிறதுக்காக பக்கத்துல இருக்குற ஆளு மேல சேறு அள்ளி பூசுவான் ஈஸியாங்குறது,,/ அவன் கிட்ட இருக்குற நாத்தத மறைக்கிறதுக் காக அடுத்தவன் மேல மலம் அள்ளி வீசுவான், நம்ம அந்த மாதிரி நேரத்துல சேறையும்,மலத்தையும் ஒதறி விட்டுட்டு போயிக்கிட்டு இருக்கணுமே ஒழிய ஒறைஞ்சி நின்னுறக்கூடாது,பன்னி ஒரசுறதுங்குறதுக் காக பதிலுக்கு நாம போயி ஒரச முடியுமா சொல்லு”என்பார்,

சரி சார் பன்னி ஆளக்கொல்ல வந்தா என்கிற இவனது கேள்விக்கு தயங்காமல் சொல்லுவார்,கதம்,கதம்,,,தான் என/

அவருக்கு தீராத முழங்கால்வலி இருந்தது,என்னனென்னமோ வைத்தியம் செய்த பார்த்தவர் கடைசியில் ஹோமியோபதி மருத்துவம்தான் பார்த்து வந்தார்,

அலுவலகம் முடிந்தஒரு மழை நாளின் மாலையில் அர வேண்டிய பேருந்து வரவில்லை,ரிப்பேர் என்றார்கள்,பக்கத்து ஊரில் பீ,டியாகிக்கிடக்கிறது என்றார்கள்,

அது போக்குவரத்து மொழி,பீ,டி என்றால் இவனுக்கு நீண்ட நாட்களாய் தெரிய வில்லை,ஒரு நாள் ஜன்னலோர இருக்கையில் ஓய்வாய் அமர்ந்திருந்த கண்டக்டரிடம் கேட்ட பொழுது பிரேக் டவுனின் சுருக்கம் அது என்றார், ஆகா,,இது தெரியாமல்தானா இத்தனை நாள்,,,,,?இவனின் முகக்குறிப்பு அறிந்தவராய் சார் எல்லாருக்கும் எல்லாமும் தெரிஞ்சி இருக்காது,அதே போல யாருக்கும் எதுவும் தெரியாம இருக்காது தெரியுதா என்றார்,கொஞ்சம் உரிமை எடுத்து பேசுபவர் ,சமயத்தில் ஒட்டுதலாயும், கூட/ஒரே பேருந்தில் பயணிப்பதால் வேர் விட்ட பழக்கம்,

பேருந்தில் பயணிக்கிற அனைவரிடமும் மிகை மீறாத நட்பும்,பேச்சும், சிரிப்பும் அவரிடம் இருந்தது இவனுக்கு மிகவும் பிடித்திருந்தது,

இன்று காலையில் பயணித்த பொழுது அவர் இடத்தில் வேறு ஒரு நடத்துனர் ,சிரிப்பும் பேச்சும் கலகலப்பும் என்றால் கிலோ என்ன விலை என்று கேட்டார்,

சரி வேணாம் வம்பு என அவரிடம் தூரமாய் இருந்து டிக்கெட் மட்டும் வாங்கிக் கொண்டு அமைதியாய் உட்கார்ந்து கொண்டான்,

இப்பொழுது அந்த பேருந்து வராததது ஓரு வகையில் ஆறுதல்.அவரது முகத்தில் முழிக்க வேண்டிய வேலை கட்டாகி விடும்தானே,,,,,?

இப்பொழுது வர வேண்டிய பஸ் வராவிட்டால் இரவு ஒன்பது முப்பதுக்குத் தான் பஸ்,ஆனால் அதுவும் உறுதியில்லை,வந்தால் ஏறிக்கொள்ளலாம்,

என்ன செய்ய,,?இது போலான பேச்சிலும் யோசனையிலுமாய் ஒரு மணி நேரம் ஓடிப்போனது,

உள்ளூரில் இருக்கிற ஒரு லோடு வேனை பேசினார்கள்,வருகிறேன் எனச் சொன்னார், சம்மதித்த டிரைவர் பஸ் டிக்கெட்டை விட ஐந்து ரூபாய்க் கூடக் கேட்டார் டிரைவர்.

அதற்கே சில பேர் முக்கலும் முனகலுமாய் இருந்தார்கள்,முடிவு பண்ணிச் சொல்லுங்க என டிரைவர் வேனைக்கொண்டு வந்து நிறுத்திவிட்டு சாப்பிட்டு வருகிறேன் எனப்போய் விட்டார்,

பஸ்ஸீற்காய் நின்றிருந்தவர்கள் ஏறி அமர வேனில் தாராளமாய் இடம் இருந்தது, வேன் ஊர் போய் சேர எப்படியும் ஒரு மணி நேரம் ஆகும்,வண்டி ஓடுகிற ஓட்டதில் நேரம் போவது தெரியாது,ஆனால் முட்டிக்கொண்டு வருகிற ஒண்ணுக்கு அது தெரியாது,போக வேண்டிய நேரத்தில் போய்த்தான் ஆக வேண்டும், அப்பொழுதுதான் பஸ்ஸீற்காய் காத்திருந்த ஒரு பெண் சொன்னாள்.ஐம்பதுவயதைநெருங்கியதோற்றம்,கட்டியிருந்த புடவையிலும், தலைக்கு வாரி நெற்றிக்கு இட்டிருந்ததிலும் நேர்த்தியாய் தெரிந்தாள்.
 
ஐயா,ஆம்பளைங்கெல்லாம் ஒவ்வொருத்தரா தனித்தனியா போகா மொத்த மா போயிட்டு வந்துட்டீங்கன்னா,நாங்க நிக்கிற அஞ்சாறு பொம்பளைங்க அப்பிடியே போயிட்டு வந்துருவம் என்றதும் இவரது சீனியர் ஸ்டாப்புடன் இவனும் சென்றான்,வரும் போதே காலை தாங்கித்தாங்கிதான் நடந்தார், இவன் தோளில் கை போட்டுக்கொண்டு,ஒண்ணுக்கும் முட்டிக்கிட்டு வருது, பசிக்கவும் ஆரம்பிச்சிருச்சி, வயசான ஒடம்பில்லையா தாங்கல, கையில பிஸ்கட்டு வச்சிருக்கேன்,ஒன்னுக்கிருந்துட்டி போய் வேனுகெளம்புறங்குள்ள ரெண்டு பிஸ்கட்ட சாப்புட்டு தண்ணியக் குடிச்சிட்டா வீடு போற வரைக்கும் வயிறு கொஞ்சம் தாங்கும்,என்ன மழை நேரம்ங்குறதுனால தண்ணி குடிச்ச ஒண்ணுக்கு வந்துருமோன்னு யோசனை யா இருக்கு,உள்ள படி ஆகுது என்றவராய் அவர் ஒண்ணுக்கு போய் விட்டு வந்து அவர் சொன்ன படி செய்தார்,

வேன் செல்கிற வழியில் இருந்த ஊர்களிலெல்லாம் ஆட்களை ஏற்றிக் கொண்டு முழுவதுமாய் சென்று கொண்டிருந்தது.

ஊரை நெருங்க ஐந்து கிலோ மீட்டர் இருக்கும் போது வே டயர் வெடித்து நின்று விடுகிறது,

பசிய கிராமங்களின் வயல்வெளிகளும்,காடு கரைகளும்,பயிர் பச்சைகளு மாய் கண்னை குளிவிக்க இறங்கி நடந்தார்கள்,

இவனது சீனியர் சிறிது தூரம் தெம்பாய் நடந்தவர் வர வர தவங்க ஆரம்பித்தார், இவந்தான் சொன்னான் ,சார் ஏங் தோள்ல கை போட்டுக் கிருங்க, பேசிக்கிட்டே போயிரலாம் அப்பிடியே என்றவனாய் அவரை தோளில் சாய்த்துக்கொண்டு நடந்தார்,

“இந்த மாதிரி தோள்ல சாய்ச்சிக்கிற ஒரு மனசு வீட்டுல இருந்தா நாந்தான் இந்த உலகத்தின் முழுபாக்கியவானாயிப்போவேன் என பேசிக்கொண்டு வந்தவர் சிறிது மௌனமானார்..

அவரது பேச்சில் எப்பொழுதும் மிதமிஞ்சி இருக்கிற அருகாமையும், அரவணைப் பும் மௌனத்தில் கரைந்து போகிறது,

மற்றபடி அவரது பேச்சில் இருந்த உயிர்ப்பின் அளவு எப்பொழுதும் இருந்தது தான்,

அந்த அளவை அலுவலகத்திற்கு டீக் கொண்டு வருகிற பையனிலிருந்து ,ஊர் பெரியவர் வரை அப்படியே நீட்டித்துக் காப்பாற்றுவார், அதுதான் அவரை பணி ஓய்வு பெற்றுச் செல்லும் வரை மதிப்புடன் வைத்திருந்தது,

டீக்கடையிலிந்துதான் பாடல் வந்தது.

பாடலில் பொழிந்த அந்தி மழை காற்றுடன் கலந்து வந்ததாய்,/

நல்ல இசையும் நல்ல காற்றும் எத்திசையிலிருந்து வந்த போதிலும் உவப்பா னதாயும், ஏற்றுக்கொள்ளக்கூடியதாயும்,,,,/

சனி, 27 ஜூன், 2020

தரை தட்டி,,,,,

வருகிறேன் எனச்சொன்ன கொத்தனார் வரவில்லை இன்னும்.

எதிர்பார்ப்புகள் பொய்த்துப்போகும் போது கையறு நிலையும்,சுய பச்சாதா பமும் ஏற்றுபட்டு விடுவது இயல்பாகிப் போகிறதுதான்,

வேலை ஏதாயினும் வந்து விட்டுருக்குமா,,,?அல்லது இருக்கிற வேலை பிஸியில் இவன் குரலுக்கும்,கூப்பிடலுக்கும் செவி சாய்ப்பது அனாவசியம் என விட்டு விட்டாரா,,,,?நாட்களின் நகர்வில் பார்த்தால் கேட்க வேண்டும்,

”சரி விடுங்க,அதான் வரலையில்ல,ஏங் கெடந்து தவதாயப்படுறீங்க, நீங்க ளும் நிம்மதியா இருக்க மாட்டீங்க,அடுத்தவுங்களையும் நிம்மதியா இருக்க விட மாட்டீங்க,

”இப்ப, என்ன வரட்டும் அவசரப்படாதீங்க, இன்னும் ஒரு வாரம் பத்து நாள் கூட பாப்போம்,வரலையின்னா அப்புறம் முடிவெடுப்போம்,சரியா”என்றாள் மனைவி, அவளது பேச்சிற்கு எதிர் பேச்சு ஏது,,,,?

அதை அவளிடம் சொன்ன போது,,,ஆமாம் இப்ப எல்லாம் ஏங்கிட்ட கேட்டுக் கிட்டு தான செய்யிறீங்க,இல்ல ஏங் சம்மதம் வாங்கித்தான செய்யிறீங்க, என்னமோ போங்க, என்னையப்போல ஒரு அப்புராணி கெடைக்கப்போயி ஒங்க வண்டி ஓடுது, இல்லையின்னா ஐயாவுக்கு டப்பா டான்ஸ் ஆடீருக்கும் இந்நேரம்,

ஆமா ,ஆடும் ஆடும் ஆடமாட்டாம, என பதிலுக்குச்சிரிக்கிற இவனின் முகத்தில் கையைமடக்கிக்குத்துகிறவள் பார்க்கிற பார்வை ஆளை அளந்து விடும், கூடவே அசத்தியும் கூட விடும்.

அவளது ஒவ்வொரு பார்வைக்கும் பனித்துளி ஆயிரம் பெய்தது.,அவளது ஒவ்வொரு நடைக்கும் அவள் கட்டியிருந்த புடவையிலிருந்து பூக்கள் ஆயிரம் உதிர்ந்தன,

பெய்கிறவைகளை பொறுக்கவும்,பூக்கிறவைகளை எடுத்துக்கோர்கவும் தனி ஆட்களே நியமிக்க வேண்டும் போலும்.

அதை அவளிடம் சொன்ன போது போங்க நீங்க என முகம் மூடி சிரிக்கிறாள், அந்த ஐம்பது வயது வானவில்,

டீக்கடையில்வைத்துதான்கொத்தனாரைப்பார்த்தான்,இரண்டுவருடங்களுக்கு முன்பு பார்த்ததைப்போலத்தான் இப்பொழுதும் இருந்தார், கொஞ்சம் பூசினார் போல் பட்டாலும் கூட முகத்தில் கன்னத்து எலும்புகள் கொஞ்சம் துருத்தித் தெரிந்ததுதான்.

எப்பொழுதும் போல் முழுக்கை சட்டையும்,கட்டம் போட்ட கைலியும் கட்டி யிருந்தார், கையிலிருக்கிற வாட்சை கழட்டி வைக்க இன்னும் நேரம் கிடைக்க வில்லை போலும்,

மிகவும் மரியாதையான மனிதர்,யாரிடம் வளைய வேண்டும் யாரிடம் நிமிர வேண்டும் என தெள்ளற தெரிந்து வைத்திருப்பவர், இவனை விடவும் ஐந்து வயதாவது மூப்பிருக்கும்,

பார்க்க நேர்கிற போதெல்லாம் வணக்கம் சொல்லுவார்,இவனும் பதிலுக்கு வணக்கம் சொல்லி விட்டு நல்லாயிருக்கீங்களா என்பான்,அது தேவையின் நிமித்தமா அல்லது மரியாதையின் காரணமாகவா தெரியவில்லை,

வெம்மை வெயிலில் கடையின் கூரையில் அமர்ந்திருந்த காகம் காகம் தெரிகி றது நிழலாய்,இவன் பிய்த்துத் தின்ற வடை காகத்தின் திறந்திந்த வாயருகே சென்று பின் இவன் வாய்க்குச் செல்கிறது,

பிய்த்த துண்டை டீக்கடை கூரையில் எறிந்தார், வடையை தூக்கிக்கொண்டு காகம் பறந்து சென்றது நிழலாய்த்தெரிகிறது இப்பொழுது.

கடைக்காரர் சொல்லுகிறார்,”சார் காக்காய்க்கி வடை போட ஒங்கள மாதிரி ஆட்கள் இருக்குறீங்க,ஆனா என்னைய மாதிரி கடைக்காரங்களுக்கு உதவி பண்ண யாரு இருக்கா சொல்லுங்க,ரெண்டு மாசம் கடையத்தெறக்காம எத்தன செரமம்,எத்தன புடுங்கு ,எத்தனை கருமாயம்,எத்தன அவமானம், எத்தன கெட்ட பேரு,,,,எவ்வளவு தலை குனிவு,,,/எல்லாம் சமாளிச்சோம், சாப்புடுற சாப்பாட்டுல இருந்து புள்ளைகளுக்கு ஒரு திண்பண்டம் வாங்குக் குறது வரைக்கும் எல்லாத்துக் கும் செரமம்,ஒரு மாசச்சீட்டு கட்ட முடியல, ஜவுளிக்கடை தவணை கட்ட முடியல, பலசரக்குக்கடை பாக்கி அப்பிடியே நின்னுச்சி, அது போக வீட்ட விட்டு வெளியில வர்றதுக்கே ஒரு மாதிரி மனசு கூசிப்போச்சி,கட்டுன பொண்டாட்டிகிட்டக்கூட சிரிச்சிப்பேச மனசு வரல. மனசளலவுல அப்பிடி உக்கிப்போயிட்டோம்.

”அக்கம் பக்கத்துல சிரிச்சி பேசுறதுக்குக் கூட முடியல,நல்லாப்பழகுறவுங்க கூட எங்க கடன் கேட்டுருவானோன்னு பேச்சக்கொறச்சிக்கிட்டாங்க, பாத்தா லும் பாக்காத மாதிரி போக ஆரம்பிச்சிட்டாங்க,அடுத்துபாக்கும் போது வேற வேலை கவனமா போயிக்கிட்டு இருந்தேன்னு சொல்லுவாங்க,அவுங்க சொல்லுறது பொய்யின்னு நல்லா தெரியும்,அந்த மாதிரி நேரத்துல அவுங்க பாத்துட்டும் பாக்காதது போல போனது கூட பெரிசாத் தெரியாது,இப்பிடி வந்து சொல்றது தான் மனச போட்டு வாதிக்கும்,சரி நம்ம போதாத நேரம், கேட்டுத்தான் ஆகணும் ன்னு அதுக்கும் ஒரு சிரிப்பு சிரிச்சி வைக்கத்தான் வேண்டி இருந்துச்சி,

எனக்கு மட்டும் இல்ல இந்த நெலம,என்னயப்போல இருந்த எல்லாரும் இப்பிடித்தான் செரமப்பட்டாங்க,

ஒருத்தன்னா துன்பம் தாங்காம வீட்டுல பேன்ல தொங்கப் போயிட்டான், இத்தனைக்கும்என்னையக்காட்டிலும் தைரியமானவன் அவன்.,,,என நிறைய நிறைய பேசியவரிடம் இன்னொரு டீ வாங்கிக்குடித்து விட்டுக் கிளம்பினான்.

டீக் கடையிலிருந்து வீடு திரும்புகிற பொழுது இவனுடன் கூடவே நடந்து வந்த இவனின் நிழல் தரையின் மேடு பள்ளங்களிலும் சாலையின் மீதுமாய் ஊர்ந்து போய்க் கொண்டிருந்த எறும்பு மற்றும் இன்னும் பல ஊர்வனவற்றின் மீது படர்ந்து சென்றவாறு இருந்தது,

அப்படியாய் ஊர்ந்து சென்று கொண்டிருந்த எறும்பு ஓன்று இவனை திரும்பிப் பார்த்துக் கேட்கிறது,எல்லாம் சரி,எங்களுக்கென பாதுகாப்பாய் செல்ல ஒரு வழியோ, ட்ராபிக் சிக்னலோ,இன்னும் இன்னும் இன்னுமான ஏதுமே இல்லை யே,,,? எங்களுக்கும் உங்களைப்போல குடும்பம்,வாரிசுகள்,ஆண் பெண், வீடு வாழ்க்கை,சேமிப்பு,என்னது இன்னது என இருக்கிறது தானே, அப்புறம் ஏன் நாங்கள் புறந்தள்ளப்படுகிறோம் தங்களைப்போன்றவர் களால்,,,? என கேட்ட கேள்விக்கு பதில் இல்லை இவனிடம்,

சாலையோரமாய் நின்ற வேப்பமரத்திலிருந்து பறந்த சிட்டுக்குருவி ஒன்று தின்று முடித்த வேப்பம் பழத்தின் கொட்டையை எச்சமிட்டுச் சென்றதாய்.

அகலபரந்து விரிந்திருந்த வேப்பமரம் தன் கிளைகளாலும் ,இலைகளாலும், உயரத்தாலும் அகலத்தாலும் வலிமையாலும் தன் வயதை சொல்லி விட்டுச் சென்றது,.

ஓங்கி வீசிய காற்றுக்கும் மெல்லென வீசிய தென்றலுக்கும்,அடித்து பெய்த மழைக்கும் வருத்தெடுத்த வெயிலுக்கும்,தண்ணீராய் ஊற்றிய பனி மற்றும் இயற்கை சூழல்களுக்கும் அடம் கொண்டு நின்றதாய்,,,/

சிட்டுக் குருவிகள் அரிதான நேரத்தில் அது இடுகிற எச்சங்களும் அரிதாகவே/ கொஞ்சம் நகன்று கடந்து விட்டான்.இல்லையேல் இந்நேரம்இவன் மீது கொட் டை விழுந்திருக்கும், விழுந்தால் கூட ஏற்றுகொள்கிற பக்குவம் இவனில் இருக்கிறது தான்,

பக்குவங்களின் பண்புகள் விளைகிற நிலமாய் ஆகிப்போன மனது எதையும் ஏற்றுக் கொள்ளவும் கையாளவும் தயங்குவதில்லை,

ஞாயிற்றுக்கிழமை வீட்டிற்கு வந்து என்ன வேலை செய்ய வேண்டும் எனப் பார்த்துக் கொள்கிறேன் எனச் சொன்னவர் திரும்பவுமாய் வணக்கம் சொல் லி விட்டு இவனை அனுப்பி வைத்தார்.

மணி பத்தாகப் போகிறது, அதிகாலை ஆறு மணிக்கெல்லாம் எழுந்து அமர் ந்து விடுகிறான் அமுக்குகிற உடல் அசதியை அருகில் வைத்துக் கொண்டு படுக்கையை விட்டு எழுந்திருக்க மனமில்லாமல்.

ஒருவிதத்தில் இதுவும் நன்றாகவே இருக்கிறது. சிறகு விரித்த எண்ணங்க ளுடனும், மனம் பதித்த நினைவுகளுடனுமாய் அத்து வானத்தில் அவிழ்ந்து பறக்கிற மனதை அள்ளிக்கட்ட மனமில்லாமல் அப்படியே விட்டு விடுவதும் இப்ப டியே சமைந்து அமர்ந்திருப்பதும் நன்றாகவே இருக்கிறது.

ஒண்ணுக்குமுட்டிக் கொண்டு வந்தது,இன்னும் முகம் கூட கழுவவில்லை, இது இவனுக்கு இரண்டாவது விழிப்பு எனலாம்,அதிகாலை நான்கு மணிக்கெல்லா ம் விழிப்பு வந்து விட்டிருந்தது,என்னவெனத் தெரியவில்லை,

இப்பொழுதுதெல்லாம் அப்படித்தான் ஆகிப்போகிறது,ஏதாவது ஒரு சாக்கை வைத்துக் கொண்டு நான்கு அல்லது நான்கரை மணிக்கு வந்து விடுகிற விழிப்பு அப்புறமாய் தூக்கத்திற்கு சுழியிடுவதில்லை,விழித்துக் கொண்டே தான் படுத்துக் கிடக்க வேண்டியதிருக்கிறது.

அந்நேரம் மட்டும் என இல்லை,இரவு வேளைகளில் ஒண்ணுக்கிருக்கவோ அல்லது தற்செயலான விழிப்புக்காய் எழுந்திருக்கிற போதெல்லாம் பாத்ரூம் போய்விட்டு உடம்பை கழுவிவிட்டு வந்துதான் படுக்க வேண்டியிருக்கிறது காக்காக்குளிப்பு போல.அப்படிப்படுத்தால் தான் புழுங்குற புழுக்கத்திற்கும், வேகிற வெக்கைக்கும்கொஞ்சமாவது உடல் வெக்கை கக்காமல் இருக்கிறது,

சில நாட்களில் நான்கைந்து தடவை உடலைக் கழுவ வேண்டி ஆகிப் போகிறது, அப்பிடியான நாட்களில் தூக்கம் போய் விடுவதுண்டுதான் சுத்தமாக.ஏதோ தூங்கியதாய் பேர் பண்ணிக்கொள்ள வேண்டி இருக்கும்,

பாத்ரூம் போய் விட்டு உடலைக் கழுவிக்கொண்டு படுத்தவனுக்கு தூக்கம் வரவில்லை. புரண்டு புரண்டு படுத்துக்கொண்டிருந்தான், எவ்வளவு நேரம் அப்படிப் படுப்பது,போரடித்துப் போகிறது, அல்லது எரிச்சல் வந்து விடுகிறது, எழுந்தமரவும் இயலவில்லை, இருட்டில் எழுந்தமர்ந்து என்ன செய்ய,,,,? லைட்டைப் போட்டால் அல்லது டீ.வி யை போட்டு பார்த்தால் மனைவி, பிள் ளைகள் கோபம் தாங்காது,

அதிலும் சின்ன மகள் இருக்கிறாளே அவளது பேச்சு அப்படியே அறுத்துப் போடும் பேச்சு, உடல் இருக்க உயிரை அறுத்து விடுவாள்,

ஆழமான பார்வையும்,தீர்க்கமும் கொண்டவள்.அனாவசியமான பேச்சிற்கும் தேவைற்ற உளரலுக்கும் இடம் தந்ர்து விட மாட்டாள் அவ்வளவு எளிதாக/

ஆச்சரியம்தான் இது, இந்த வயதில் எப்படி அவளிடம்,,,,? எனக்கேட்டால் எல்லாம் தாய் தந்தையான தங்களிடமிருந்து வந்ததே என்கிறாள்,

இவர்கள் எப்பொழுதாவதான் தருணங்களில் அவளுக்கு எதுவும் சொல்லித் தந்ததாய் நினைவுகளோ, பதிவுகளே இவனிடமோ இவன் மனவியிடமோ இல் லாத பொழுது எப்படி இது சாத்தியப்பட்டது,

மனமேற்றவர்களை ஆசிரியராய் பாவித்து தூரத்திலிருந்து வித்தை கற்றுக் கொள்கிற ஏகலைவத்தனம். அவளிடம் குடிகொண்டிருந்திருக்கலாம் ஒரு வேளை.

தன் கல்லூரிப் பாடத்திலிருந்து தனது உடல் உபாதை வரை எதையும் சொல் லி விட மாட்டாள் அவ்வளவு எளிதாக,,,,பத்து தடவைக்கு மேல் கேட்டால் ஒரு தடவை சொல்லுவாள் அதுவும் பிய்த்துப்பிய்த்து,,/

மாதந்தோறுமாய் வருகிற பீரியட் டைம் ஒரு மாசம் கொஞ்சம் பின் தள்ளிப் போயிருக்கிறது,அவளுக்கு அது ஒன்றும் பெரிதாய் இடர் பட்டு தெரியவில் லை, எதுவானாலும் அம்மாவிடம் சொல்லி விடுகிற இவள் இதை சொல்ல வில்லை, அம்மாவுக்கு தெரிந்து போய் வீடு இரண்டு பட்டு விடுகிறது,

“ஏய் என்னாடீ ,ஒரு மாசமா பீரியட் டைம் தள்ளிப் போயிருக்கு ,அதக்கூட ஏங்கிட்ட சொல்லாம இருக்கிற அளவுக்கு என்ன பெரிய வேலை ஒனக்கு என கோபமாக பேசியவளை ஏம்மா, வயசுக்கு வந்த பொண்ணுக்கு ஏதாவது உடல் உபாதையின்னா ஏதாவது தப்பாத்தான் நடந்திருக்குமுன்னு சந்தேகப் பட்டுக்கிறீங்க, இதுல வயித்துல நெருப்பக் கட்டிக்கிறோங்குறதுல ஆரம்பி ச்சி சேலை மேல முள்ளு பட்டாலும் முள்ளு மேல சேலை பட்டாலும்,,,ங்குற வரைக்கும் டயாலக் வேற,,,என அழுது விட்டாள்,

”ஒங்க நெனைப்பு படியே அப்பிடியே இருந்தாலும் கூட நான் வளந்த விதம் சரியில்லையாஇல்லை என்னைய வளத்தவிதம் சரியில்லையா,சொல்லுங்க,

”காலம்கால்ல சக்கரத்தக்கட்டிக்கிட்டு எங்கயோ போயிக்கிட்டு இருக்குற சூழல்ல புள்ளைங்க வளர்ற விதமும் அவுங்கள வளக்குற விதமும் மாறு பட்டுக் கிட்டே இருக்குது,

”தவிர ஒங்க காலங்கள்ல புள்ளைங்கள வீடு வளத்துச்சி,இப்ப எங்களை சூழ்நில வளக்குது,அதான ஒங்க பயத்துக்கும்,எங்க மேல இல்லாமப்போற நம்பிக்கைக் கும் காரணம்.

தவிர ஒங்க காலங்கள்ல அஞ்சி பைசாவுக்கு மேல பள்ளிக் கூடத்துக்கு கொண்டு போற பழக்கமில்லாம இருந்துச்சி, கடைக்கி பத்து ரூபா கொண்டு போனா வாங் குறதுக்கு எட்டு ரூவாயிக்கி அல்லது ஆறு ரூவாக்கிதான் சாமான்க இருந்துச்சி, ஆனா இப்ப ஆயிரம் ரூவா கொண்டு போனா அதுவும் காணாமா கூடுதால ஐநூறு ரூவாயிக்கு வாங்குறதுக்கு சாமான் இருக்கு, கையில கொண்டு போனது காணாம ஏதாவது ஒரு பேங்க் கார்ட மிசின்ல சொருகி இழுத்துக்கிட்டு வர்றீங்க,

”அப்பயெல்லாம் தீபாவளி,பொங்கலுக்கு மட்டுந்தான புதுச்சட்டை சேலை துணி மணி,ஆனா இப்ப ஒடம்புல ரெண்டாயிரம் ரூவாயிக்கும் கொறையாம ட்ரெஸ் பண்ணிட்டுதான் வெளியில நடமாடுறம், அப்பா சொல்லீயிருக்குறா ங்க,

”முன்னயெல்லாம் கிழிஞ்சி ஒட்டுப்போடாத ட்ரவுசர் சட்ட போடாதா பள்ளிக் கூடத்துப் புள்ளைங்கள பாக்க முடியாது அப்ப வாழ்க்கை வறுமைக்கி வாக்கப் பட்டதா இருந்துச்சி, ஆனா இப்ப வறுமைக்கி ஆட்பட்டிருந்தாக்கூட அத ஒட்டுப் போட்டு மறைக்கிறதுக்கு ஆயிரம் வேலை செஞ்சிக்கிட்டு நாகரீ கம்ங்குற பேர்ல ஓட்டிக்கிட்டு இருக்குற வாழ்க்கையில இதெல்லாம் நடக்காதுங்குறதுக்கு ஏதுவும் உத்திரவாதமில்லதான்,

ஆனா என்னைய நீங்களோ அப்பாவோ அப்பிடி வளக்கலம்மா என்றவளை வாசலில் நின்ற அப்பாவின் நிழல் தலை தடவிக்கொடுத்தது,

வருகிறேன் எனச்சொன்ன கொத்தனார் வரவில்லை இன்னும்,ஒரு வேளிஅ அவருக்கும் இது போல் கல்லூரி இளங்கலை பயிலும் மகள் இருந்து அவர் வாசலில் நின்று தலை தடவிக் கொடுத்துக் கொண்டிருக்கலாம்.

ஞாயிறு, 24 மே, 2020

இறகசைவு,,,,,

இறகு போல லேசாகவும் பூப்போல மிருதுவாகவும் இருந்தால்தான் இப்படியாய் பேசவும் சிரித்து விடவுமாய் முடியும் போலிருக்கிறது,

இறகு என்பது ஒரு உயிர்,உயிர் என்பது உடலின் மையம்,மையமாய் உருக் கொண்ட உடல் உயரப் பறக்கிறது,தாழ்கிறது,அமர்கிறது,கைகோர்க்கிறது, கோர்த்த கைகளும், மனமுமாய் சேர்ந்து செய்விக்கிற வித்தை ஒன்றாய் பத்தாய் நூறாய் முளைத்துக் கிளைத்து பூவும் பிஞ்சும் காயும் கனியுமாய் காட்சிகொண்டு படர்கிறதுதான்.

பூ என்பது மொட்டு,விரிவு,மலர்வு,மணம்,,,என எல்லாம் தாங்கியதுதான் , என்கிற நண்பனிடம் இவனால் ஒன்றும் பேசி விட முடியவில்லை,

சிரிப்பு வாய்க்கப் பெறுகிற வரம் தான், தினங்களின் வழக்கத்தில் காலை யில் டீக்குடிக்கச்செல்கிற கடைக்கு வருகிறவர்களில் அவர் மட்டுமே சற்று வித்தி யாசம் காட்டி சிரிக்கிறார், பேசுகிறார், பழகுகிறார், ஓரு வார்த்தை பேசும் முன்னதாய் ஓராயிரம் தடவைகள் சிரிக்கிறார், வேண்டுமென்றோ வலியப் புனைந்ததாகவோ, ஒட்டவைக்கப்பட்டதாகவோ, பட்டுத்தெரிந்து விடவில்லை அவரது சிரிப்பு, உண்மையும் யதார்த்தமுமாய் பட்டு பிரதி பலிக்கிற பெருஞ் சிரிப்பாய் அது.அவர் சிரிக்கச்சிரிக்க சிரிப்பு வருகிறது, அவர் பேசப் பேச பேச்சும் கூடவே நெய்த சிரிப்பும் கலந்து வருகிறது,

இதில் பேச்சிற்கு தனி ட்ராக், சிரிப்பிற்கு தனி ட்ராக் என்பதெல்லாம் இல்லை, இரண்டும் கலந்து விட்ட மகாத்மியமாய் இருக்கும்,அவர் கடைக்கு வந்து விட்டாலே அவரைச் சுற்றி இறகு முளைக்காது பறந்து வந்தமர்கிற கூட்டமாய் மனிதங்கள், அவரது பேச்சிற்கோ இல்லை சிரிப்பிற்கோ மட்டும் கூடுகிற கூட்டமாய் இருக்காது அது, மாறாக அவரிடமிருக்கிற உண்மைக்காய் கூடுகிற கூட்டமாய் இருக்குமேயன்றி வேறில்லை,

பாய் கடைக்கு போவோம் என்பது இவன் எதிர்பாராத ஒன்று.பாய் கடை இவனுக்கு பல் முளைத்த காலத்திலுருந்து பழக்கம்,வாடகைக்கு சைக்கிள் இத்தனை மணி,இந்த இடம் எனச் சொல்லி விட்டுப்போவான் லீவு நாட்களில்,

ஒரு மணி அல்லது இரண்டு மணி நேரம் என்பது இவனுக்கு விடுமுறை தினங்களில் வாடிக்கை,பாய் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு நேரமும் கடை திறந்திருக்கும்,

அவரது கடை இருக்கிற ரோடே காலியாகிக்கிடக்கிற இரவு வேளைகளில் ஏழு அல்லது எட்டு மணிவரை கூட இவரது சைக்கிள் கடை பள்ளிப்பிள்ளைகளால் நிரம்பியிருக்கும்,

ஞாயிறுகளில் நடமாட்டம் குறைவாக இருக்கிற சாலையில் சைக்கிள் கற்றுக் கொள்வது ஈஸியாக இருக்கும் என்பது சைக்கிளை வாடகைக்கு எடுக்கிற பிள்ளைகளின் நம்பிக்கை,

அவரது கடையிலேயே எடுத்து அருகில் இருக்கிற ரயில்வே ஸ்டேஷன் சாலை யில் சைக்கிள் பழகிக்கொள்வது ஈஸியாக இருக்கும் உடன் வந்து பழகிக் கொடுப்பவருக்கும் தொந்தரவு இல்லாமல் இருக்கும்.இதற்காகவே பள்ளிப் பிள்ளைகள் சனி ஞாயிறின் விடுமுறைக்கு ,பாய் கடையில் வாடகை சைக்கி ளையும் ரயில்வே பீடர் ரோட்டையும் குத்தகைக்கு எடுத்துக்கொள்வது ண்டு,  அதற்காக அவர்கள் வீடுகளில் பிடிக்கிற அடம் கண் கூடு,

பாய் கடை யாரை நம்பி ஓடியது என்கிற வாதம் இங்கு தேவயற்றது என்ற போதிலும் கூட சனி ஞாயிறின் விடுமுறை தினங்களில் அவரது சைக்கிள் கடை யின் ஓட்டம் பள்ளிப்பிள்ளை களை நம்பியே என தெளிவுறச் சொல்லி விடலாம்,

இதில் நம்மாழ்வாரின் பிள்ளைகளுக்கு பாய் சைக்கிளை தனியே எடுத்து வைத்து விடுவார்,

அந்தப் பிள்ளைகள் மற்ற பிள்ளைகளைப்போல என்னா பாய் சைக்கிள் இருக்கா என காசை எடுத்து கையில் வைத்து நீட்டுக் கொண்டு அதிகாரம் பண்ணுவதில்லை.அந்தப் பிள்ளைகளுக்கு அந்தப் பழக்கம் சுட்டுப்போட்டா லும் வராது,

தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும்.நல்ல வேளை நம்மாழ்வாரின் பிள்ளைக ளுக்கு அது வாய்க்கவில்லை,வாய்க்கவும் வாய்க்காது என நினைக்கிறார், தொட்டில் பழக்கத்தை இப்பொழுதெல்லாம் சூழலும் கொஞ்சம் மாற்றி விடுகிறதுதானே?

வளர்ப்பு, படிப்பு, குடும்பம், பழக்கம், சூழல், எல்லாவற்றின் கூட்டிசைவில் பிள்ளைகள் பிசைந்து உருவாக்கப்பட்ட உருவம் நடப்பு சாட்சியாய் நிற்கிற போது நம்மாழ்வாரின் பிள்ளைகள் மட்டும் சற்று விலகியே,,,/

அண்ணனும் தங்கையுமாய்த்தான் வருவார்கள்,காலை பதினோரு மணி தாண்டி வருகிறவர்கள் சைக்கிள் கடையின் ஓரமாக கைகட்டிக்கொண்டு நின்று கொள்வார்கள், பாய் பார்த்து சைக்கிள் ஒதுக்கிக்கொடுக்கும் வரை அவர்களது பள்ளிப்பாடங்கள்,வீட்டு வேலைகள் பற்றி பேசிக்கொண்டிருப் பார்கள்,

“அம்மாவுக்கு மருந்து வாங்கிக்கொண்டு போக வேண்டும் போகும் பொழுது” என்பது அவர்களது பேச்சின் முடிவாய் இருக்கும்,ரெண்டு பேரும் வந்து இப்பிடி கையக் கட்டிக்கிட்டு செவத்தோரமா நின்னுக்கிட்டா எங்களுக்கு எப்பிடித் தெரியும்நீங்க வந்துருக்கீங்கன்னு,சொல்ல வேணாமா,என கடைக் காரர் கேட்கிற கேள்விக்கு மௌனமே அவர்களது பதிலாய் இருக்கும்,அல்லது ஒரு மென் சிரிப்பு,

“இப்பிடியே சிரிப்பையும் மௌனத்தையும் மட்டுமே வச்சிக்கிட்டு வண்டிய ஓட்டீற முடியாது தெரிஞ்சிக்கங்க,,,,,” என சொல்கிற பாய் ”கொஞ்சம் சீக்கிர மா வரக்கூடாது ,இந்நேரம் வந்தீங்கன்னா இப்பிடித்தான் ஆகிப் போகும், சைக்கிள் வெளியில போயிரும்,காத்துக்கிட்டில்ல கெடக்கணும்,

”அம்மாவுக்கு மருந்து வாங்கணுமுன்னு சொன்னீங்கல்ல,போயி வாங்கிக் குடுத்துட்டுக்கூட வாங்க, சைக்கிள் வந்தா நிறுத்தி வைக்கிறேன்,என்பவர் பாவம் இந்த வயசுல ஒங்கம்மாவுக்கு வந்த சுர நோயி வேற யாருக்கும் வரக்கூடாது , அவ பண்ணுன பாவமோ ,ஒங்கப்பாவும் நீங்களும் செஞ்ச புண் ணியமோ அவள இன்னும் கொண்டு போகாம உசுரோட வச்சிருக்கு, ஒங்கம் மாவ காப்பாத்த ஒங்கப்பன் கொஞ்ச நஞ்ச பாடா பட்டான், கௌவர் மெண்டு ஆஸ்பத்திரியே கதின்னு கெடந்தான்,இங்க இருக்க ஆஸ்பத்திரியில இதுக்கு மருந்து இல்லைன்னு மதுரை ஆஸ்பத்திரிக்கு கொண்டு போகச் சொல்லீ ட்டாங்க,

“இப்ப இருக்குற மாதிரி அப்பயெல்லாம் மதுரைக்கு நெனைச்ச ஒடனே போயிட்டு வந்துர்ற வசதியெல்லாம் கெடையாது,ரெண்டாவது இத்தனை பஸ்ஸீ ங்களும், நால்வழிச் சாலையும் கெடையாது,இருந்துகூட எல்லாம் ரெடி பண்ணி யாச்சி, மதுரை ஆஸ்பத்திரிக்கி போறதுக்கு /

ஒங்கப்பன் ஏங்கூட படிச்சவங்குறது ஓங்களுக்கு நல்லாத்தெரியும்,அது போல இன்னும் பத்துப்பேரு இந்த ஊர்லதான்இருக்கோம்.

நாங்களெல்லாம் பெரிசா ஆகா,ஓகோன்னு பொழச்சிறல, நான் எப்பிடி சைக் கிள் கடை வச்சிருக்கேனோ அது போல அவுங்கெல்லாம் ஒவ்வொரு வேலை யில இருக்காங்க,ஒரு தொழில் பண்றாங்க,,,,நாங்க எல்லாம் ஏதாவது குடும்ப விஷேங் களப்ப மட்டும் இல்ல,ஏதாவது அவசரம் ஆத்திரம், ஆஸ்பத்திரின்னா ஒண்ணு கூடிருவோம்,

எங்கள்ல நல்ல காரியங்கள்ல ஒண்ணு சேராம போனவுங்க கூட ஏதாவது துக்க நிகழ்வுகன்னா,இல்ல ஏதாவது நாங்க வந்தாத்தான் ஆகணுமுன்னு ஒரு சூழ்நிலை இருந்தா வந்து கைகோர்த்துருவோம்.

அப்பிடித்தான் ஒங்க அம்மாவ ஆஸ்பத்திரிக்கு கூட்டிக்கிட்டு கூட்டிக்கிட்டுப் போகும் போது நடந்துச்சி,ஒங்க அம்மா விஷயத்துல மட்டும் இல்ல,நாங்க பத்துப் பேரும் பத்து பேரு வீட்டுல ஏதாவது நல்லது கெட்டது நடந்தாலும் ஒண்ணுக் கொண்ணு கைதூக்கி விட்டுக்குருவம்.பண விஷயத்துல இருந்து மத்த எல்லாத்துலயுமா ஒண்ணுக்கொண்ணு கைதூக்கி விட்டுக்கிட்டது போல அன்னைக்கும் எல்லாருமா சேந்துதான் ஒங்க அம்மாவை மதுரை ஆஸ்பத் திரிக்கு அனுப்பி வைச்சோம்,

“அப்ப ஏறிட்டுப்பாத்த ஒங்கப்பனோட பார்வைய புரிஞ்சிக்கிட்ட நானு இப்ப என்ன கொழந்தைகளப்பத்திதான யோசிக்கிற ,அதுக ரெண்டையும் ஏங் கிட்ட விட்டுப்போ,ஏங்புள்ளைகளோட புள்ளைங்களா அதுகளும் இருந்துட்டு ப் போகட்டும். இருக்குறப்ப அள்ளித்திங்கட்டும்,இல்லாதப்ப கரைச்சிக் குடிக் கட்டும், அவ்வ ளவுதான,விடு கவலைப்பாடாம போயிட்டு வா, கூடிருக்கு தாங்கிக்கிற,வீடிருக்கு பொங்கிக்கிற,பள்ளிக்கூடம் இருக்கு படிச்சிக்கிற நாங்கெல்லாம் அப்புறம் எதுக்கு இருக்கோமுன்னு நெனைக்கிற,இந்த மாதிரி பொழுதுகள்ல கூட ஒருத்தருக்கொருத்தரு தோள்குடுக்காட்டி அப்பறம் நம்ம பழகுன பழக்கத்துல சூத்த விழுந்துரும்டான்னு,,,” சொன்ன மறு நாளே ஒங்கள கூப்பிட்டுக்கிட்டு வந்து எங்க வீட்ல விட்டுட்டு மதுரை ஆஸ்பத்தி ரிக்கி கெளம்பீட்டாங்க,அன்னைக்கி ஒங்க அம்மா அழுத அழுகைக்கும், வடிச்ச கண்ணீருக்கும் அளவில்லைப்பா, விட்டா வீதியில ஆறா ஓடிருக்கும் கண்ணீரு,

”நான் என்ன புண்ணியம் பண்ணுனேன்னு தெரியல,இது போல நண்பர்கள கொண்ட புருசன் அமைஞ்சதுக்குன்னு சொல்லி கண்ண கசக்கீட்டே நின்னது இன்னைக்கி வரைக்கும் கண்ணுலநிக்குதுப்பா” என்றார்.

அன்னைக்கி போயிட்டு பத்து நா கழிச்சித் தான் வந்தாங்க ,அப்பிடி வரும் போது ஒங்கம்மா ஓரளவுக்கு கொஞ்சம் கொணமாகி வந்தாங்க,அப்பிடி வந்தவுங்க இன்னைக்கி வரைக்கும் மருந்து மாத்திரைகதான் தாங்கிப் புடிச் சிக்கிட்டு இருக்கு,என்றவர் வீட்டிற்கு போய் வந்த பிள்ளை களுக்கு சைக்கிள் கொடுத்தார்.

இரு சக்கர வாகனத்தின் முன் சக்கரத்தில் சற்று காற்று குறைந்திருந்தது, வண்டி ஓடுகிற ஓட்டத்திலேயே வண்டியின் உலட்டல் தெரிந்தது.சரி சமாளித் துக் கொள்ளலாம்,

ஐந்து கிலோ மீட்டர் தூரம்தானே ஓட்டுக்கொண்டு போவோம் இடையில் ஏதாவது ஒர்க் ஷாப் அல்லது காற்று அடிக்கும் கடை திறந்திருந்தால் செக் பண்ணிக்கொண்டு போவோம் என நினைத்தவனாய் வண்டியை ஸ்டார்ட் செய்தான்,

தெரு முனையில் திரும்பும் போது மூட்டப்பட்டுக்கிடந்த காம்ப்ளக்ஸ் கடை வாசலில் நான்கைந்து பேர் அமர்ந்திருந்தார்கள்,அறிமுகமற்ற நபர்கள்,இந்த நெருக்கடி கால வேளையில் நிறையப்பேரை இப்படியெல்லாம் பார்த்து விட முடிகிறது, அறிமுகமற்றமுகங்கள், அறிமுகமற்றவர்களின் பேச்சுக்கள் அறிமுகமற்றவர்களின் உரையாடல்கள் என கேட்டு விடவும் பார்த்து விடவு மாய் முடிகிறது,

செல்கிற வழியில் சிறிது நின்று பையில் இருக்கிற தண்ணீர் பாட்டிலை எடுத்து தண்ணீர் குடிக்கவோ இல்லை வேறேதற்கோ நின்றால் பரிதாபம் காட்டிய பார்வையுடன் யாராவது வந்து உதவி என கைநீட்டுகிறார்,

சங்கடமாய் இருக்கிறது,நேற்று வரை அவர் நிச்சமாய் கை நிறைய சம்பாதித் தவராய் இருக்கவேண்டும்,சூழல் இன்று அவரை கையேந்த வைத்திருக் கிறது, இவர் ஒருவருக்கு இவன் செய்கிற உதவி போதலாம் ,அல்லது காணா மல் போகலாம், வீட்டில் இருக்கிற அவரது பெண்டாட்டி பிள்ளைகளுக்கு,,,?

இப்படி உதவி கேட்பவர்களில் உண்மையில் கேட்பவர்கள் யார், பொய் சொல்லி வாங்கியவர் யார் எனத்தெரியவில்லை,நேற்றைக்கு முந்தினம் புது பஸ்டாண்டு க்கு சமீபமாய் போய்க்கொண்டிருந்த வேளையாய் வண்டியை மறித்த பெரியவர் ”ஐயா வீட்டுல அரிசி பருப்பு ஒண்ணும் இல்லையா உதவுங் கய்யா,,” என்றவரிடம் ”அரிசி வாங்கித்தர்றேன் கொண்டு போறீங்களா,, ” எனக்கேட்க இல்லை பணமாக் குடுங்க என்றார்,

இவனும் இறக்கம் பார்த்து குடுத்து விட்டு வர மாலை அலுவலகம் முடிந்து திரும்பும் போது போதையில் தள்ளாடிக்கொண்டிருந்தார் தன் நிலையற்று,

உதவி எனக்கேட்டு வருகிறவர்களில் நல்லவர் யார் கெட்டவர் யார் என பிரித்துப் பார்க்கமுடியவில்லை.

அது போல் காம்ப்ளெக்ஸ் கடைகளின் வாசலில்களிலும், இன்னபிற இடங்க ளிலுமாய் அமர்ந்திருப்பவர்களை பார்க்கிற பொழுது சிறிதளவில் மனக் கிலேசம் ஏற்பட்டு விடுகிறதுதான்,

இது அப்படியே வளர்வது சமூகத்திற்கும் நமக்கும் நல்லதில்லைதான். கெஞ் சிக் கேட்டவைகள் எத்தனை நாள்வரை கையை ஏந்திக் கொண்டிருப்பார் கள், பிழைக்க ஏதும் கதியற்ற போது ,ஏந்திய கைகள் ஓங்க ஆரம்பித்தால்,,,,? அல்லது தட்டிப்பறிக்க ஆரம்பித்தால் ,,,,,,நிலைமை மிகவும் மோசமாகி கரடு தட்டிப் போகும் சமூகம்,வலுத்தவன் கை ஓங்கும், இளைத்தவனின் கை இறங்கும், என்கிற நினைப்பூடே சென்று கொண்டிருந்தவன் இப்பொழுதெல் லாம் அலுவலகத்தில் உடன் பணிபுரிகிற எல்லோரிடமும் சொல்கிறான், தனியா வண்டியில போகும் போது செயின், மோதிரம்,பிரேஸ்லெட்டுன் னு போட்டுக் கிட்டு வராதீங்க,ஓத்தையில் டூ வீலர்ல வர்றீங்க அம்பது அறுபது கிலோ மீட்டர்ன்னு,,கொஞ்சம் நாம தான் பாதுகாப்பா இருந்துக்கிறனும்” என்றான்,

காலை நேரத்திற்கு இந்த வெயில் அதிகம்தான்,சுள்ளிட்டுச்சுட்டது. அலுவல கத்தின் முன்னால் நின்ற வேப்ப,மர நிழலில்தான் வண்டியை நிறுத்தினான், வேப்பமர நிழலும் அதிலிருந்து வீசிய காற்றும் இதமளிப்பதாகவே/

இசைவாகிப் போகிற இதங்கள் சற்று ஆறுதலாகவே/ரோட்டில் பட்டுச்சுட்ட வெயில் மர நிழலில் நின்று கொண்டிருந்தவனுக்கு தெரியவில்லை.

அண்ணாந்து பார்க்கிறான் மரத்தை.கூடு கட்டி குஞ்சு பொரித்த பறவைகள் இரண்டு காதல் பாஷை பரிமாறிக்கொண்டதாய்.பேசிக்கொண்ட பாஷை யின் தேவபாவங்கள் இழைந் தோடிய மென் ராகங்களாய்/

கிளை படர்ந்த இலைகளினூடாய் பூவும் பிஞ்சும் காயும் கனியுமாய் கட்டித் தெரிந்தவைகளினூடே நாங்களும் இருக்கிறோம்தானே உயிர்ப்புடன் ஒன்று சேர்ந்து என்பதாய் சேதி சொன்ன பறவைகள் காதல் ஜோடி என அறியப் பட்டது,

மர நிழலிலிருந்து வெளி வருகிறான்,எதிர்பட்ட காற்று முகத்தில் மோதி இதமளிக்கிறதாய்,,/

லேசாகிப்போகிறதுதான் மனமும்,உடலும்,,,,/

புதன், 20 மே, 2020

தேநீர் சுமந்து,,,,,


        
காலை மற்றும் மாலை வேளைகளிலும்
அலுவலகப்பணிக்குச்செல்கிற
இதரப் பொழுதுகளிலும்
ஏதாவது வேலையாய் நகருக்குள் செல்கிற போதும்
சாலையோரக்கடையில்  தேநீர் அருந்துவது
தவிர்க்க இயலாமல் போய் விடுவதாகவே/

அது தேநீரின் மீதுள்ள பிரியமா இல்லை
அதற்கு அடிமையாகிப் போன 
மனோநிலையா பிடிபடவில்லை.

அன்றும் அப்படித்தான் அலுவலகம் செல்கிற
காலை வேளையாய் நாற்கரச்சாலையோரமாய்  
இருந்த கடையில் டீ சாப்பிட்டுக் கொண்டிருந்தேன்,

கடையின் முன் விரைந்த சாலையில் அமர்ந்து
சாலையோரமாய் முளைத்துத்தெரிந்த புற்களையும்
இதரச்செடிகளையுமாய் பிடுங்கக் கொண்டிருக்கிறாள் அவள்.

கிழிந்து தொங்கிய ஆடைகளும்,
அழுக்கு படிந்த தோற்றமும்
அவளை மனோ நிலை பிறன்றவள் என 
அங்கீரத்துச்சொல்கிறது.
அவளது எதிரில் இருந்த கண்ணாடிகிளாஸில்
நிறைந்த டீ இருந்தது,
டீக் கிளாஸின் மீது வடையோ,
பன்னோ மடித்து வைக்கப்பட்டிருக்கிறது,

எவ்வளவு நேரமாய்  அது அப்படி இருக்கிறது
எனத்தெரியவில்லை,
அதை எடுப்பதை விடுத்து செய்கிற
வேலையிலேயே மும்பரமாய் இருந்தாள்,
தரையிலிருந்து பிடுங்கிய புற்களையும் செடிகளையும்
ஓரமாய் குவித்து வைத்திருந்தாள், 

குவித்து வைக்கப்பட்டிருந்த புற்களையும்
அதைபிடுங்கிக்கொண்டிருந்தவளையும்
கடை முன் காட்சிப்பட்டவர்களும்,கடைக்காரருமாய்
பார்த்துக்கொண்டிருக்கின்றனர்,

டீயைக்குடித்து விட்டு காசைத்தருகிற போது
டீக்கடைக்காரர் சொல்கிறார்,

அன்றாடங்களில் நாம் டீக்குடிக்கிற கடைகள்
வெறும் டீயை மட்டும் தந்து
விடுவதில்லைதான்,                                                                                                                                                 

சனி, 16 மே, 2020

பொய்யற்று,,,,,,,



மணியைப்பார்க்கிறான் சற்றே எட்டி,

சடுதியாய் யாரோ சட்டையைப்பிடித்திழுத்த பாவனையாய் அவரசமாய் பார்த்த வன் உள் நுழைந்து கொள்கிறான் திரும்பவுமாய்/

”கிட்டக் கிட்டவச்சி பக்குவமாப்பாத்தாலும் எட்ட எட்ட வெலகிப்போயி திருட்டுத் தனம் காண்பிக்கிறதுதான ஒங்க ஆம்பள மனசுபாக்க பதவிசா காமிச்சிக்கிட்டு அங்கிட்டுப்போயி திமிருத்தனம் காட்டி வெளையாடுறதும், தாண்டித்தாவுறதும் நடக்கலைன்னா சொல்றீங்க,

“கொழஞ்ச சாதமும்,மெளகு ரசமும் போதும் ,கறி காய் ஆகாது ,ஒத்துப் போறதுல ஒடம்புக்கு சிக்கல் வருமுன்னு சொன்னத ஏத்து பதனமாப்பாத்து வடிச்சி இது வேணும்,இது வேணாம், இது போதும்,இது போதாது,இவ்வளவு வேக்காட்டுக்கு இந்தக்காயி,இவ்வளவு வேக்காட்டுக்கு இந்தக்கறி, இதுக்கு இதுதான் பக்குவம், அதுக்கு அந்தப்பக்குவந்தான் ஏத்தது குக்கர்ல ரெண்டு விசிலு,ஸ்டவ்வ சிம்முல வையி,மிக்சி அரவை வேண்டா முன்னுருவாரு,நான் கை அரைவையே அரைச்சி க்கிறேன்னு பாத்துப்பாத்து பண்ணிப்பண்ணி செஞ்சி வச்சாலும் கூட எந்தக் கடையில எது நல்லாயிருக்கு,இன்னிக்கி ஸ்பெசல் எங்க என்னன்னு தேடித் திரியிற ஒங்களத் தெரியாதா எனக்கு என்றவள் சொன்ன போது பகீரென்று சிரித்தவன் அலையுற மனசுக்கு வெந்தது ஏது,வேகாதது ஏது, பக்குவம் ஏது,? அது அல்லாததது எது,,?ன்னு தெரிய ஞாயமில்ல,“மலை, மலையா கொட்டி வச்சி சாப்புடச்சொன்னாலும் எச்சச் சோத்துக்கு அலையிற கொணம் இருக்குதுதான அப்ப தொட்டு,,,, சூழ்நிலையும் தைரியமும் கை கோர்க்கும் போது அது ஒரு தனி உலகமாத் தெரியுது, என்றவனின் பேச்சிற்கு இல்லை இல்லை அப்படியெல்லாம் என உறுதி குடுத்து விட்டாலும் கூட போகிற போக்கில் எட்ட இருப்பதை படம் பிடித்துப் பார்ப்பதுதானே மனது,என்பது உறுதியாகிப்போகிறது,

எத்தனைதான் திரை போட்ட போதும் கூட விலக்கிப்பார்க்கிற சூட்சுமம் லேசாய் வாய்க்கப் பெற்றிருக்கிறதுதானே சிறுவயதிலிருந்து,இது மாதா பிதாவிடமிருந்து வந்ததா இல்லை குருவிடமிருந்தா அதுவுமில்லையெனில் கற்றுக் கொடுக்கிற சமூகத்திலிருந்தா,,? கற்றுக் கொள்வதும் கற்றுக் கொடு ப்பதும் நம் தேவையை யும் அவசரத்தையும் பொறுத்ததுதானே இல்லையா என்றவளின் முன் நின்றவன் சமையலறையில் இருந்தான்,

வீட்டுக்குள் எத்தனை ரூம்கள் இருந்த போதும் இவனுக்கு உடை மாற்ற வாய்த்தது சமையலறைதான் என ஆகிப்போகிறது,

வீட்டில் இவனுக்குப் பிடித்தஇடங்களில் சமையலறை மிக முக்கியமாகிப்  படுகிறது / வெறும் சமையல், அரிசி பருப்பு பண்டம், பாத்திரம், அரிசி, பருப்பு, அரசலவு அஞ்சறைப் பெட்டி மிக்ஸி,கிரைண்டர்,,,,,மட்டும் குடி கொண்டது சமையலறை இல்லை,

மாறாய் ஊன் உருக்குகிற உன் நினைவுகளும் உருவமும் ரத்தமும் சதையு மாய் அன்றாடம் உனது அர்த்தங்களை எழுதிச் செல்கிற சமையலின் உயர் அழுத்தமும் கொண்டதல்லவா அவ்விடம் ,ஆகவே அது பிடித்துப் போகிறது தான், எனக்கு என மனம் பிடித்தவளின் இளம் புன்னகையும், மெல்லிய பார்வையும் ஒரு சேர மனதிற்கு கிடைத்து விட்ட திருப்தியை சமையலறை கள் ஏற்படுத்தி விடுகிறதுதான், அதனால்தான் தஞ்சமாகிப் போகிறான் அடிக்கடி.அவளின் உள்ளர்த்தங் களை ஏற்றுக்கொண்டு/

மணி ஒன்பது தாண்டி ஒன்பது ஐந்தை எட்டித்தொட்டு விடப்போன வேளை வலது ,காலில் மாட்டிய பேண்ட்டை போட்டவாறே ஹாலுக்கு வந்தான்,

”கடைசி ரூமில் பெரியவள் படுத்திருந்தாள்,அடுத்த ரூமில் சின்னவள் படுத்திருந் தாள், ஹால்தான் எப்பொழுது இவனுக்கு வாய்த்தது,அதெல்லாம் இருக்கட்டும் கூட. இவ்வளவு பெரிய வீட்டை கட்டிப்போட்டு விட்டு ஆத்திர அவசரத்திற்கு உடை மாற்றக்கூட சமையலறையில் போய்த்தான் நிற்க வேண்டியிருக்கிறது எனும் போதுசங்கடமாய் இருக்கிறதுதான்” என்கிறான்

“இன்னும் புள்ளைங்க ரெண்டு பேரும் எந்திரிக்கலையா,,என்றவாறே, ராத்திரிக்கு சீக்கிரம் படுத்தாத்தானே காலையில சீக்கிரம் எந்திருப்பாங்க,/ எல்லாம் இங்க இருந்து வர்றது, ஒங்களச்சொல்லணும் மொதல்ல,அவுங்க ரெண்டு பேரும் கெட்டுப் போறதே ஒங்களாலத்தான் என்ற மனைவியை ஏறிட் டவன் சும்மா இரு நீ,ஒடனே ரொம்பத்தானா குத்தம் சொல்ல ஆரம்பிச் சுருவ, லேசுசுக்குள்ள குத்தம் சொல்ல மாட்ட,ஆனா ஆரம்பிச்சிட்டயின்னா விடமாட்ட ,ஊர விட்டு தள்ளி வைக்கிற அளவுக்கு போயிறுவ”,,,,,,,,என்பான் சிரித்துக்கொண்டே,,,/

கண்டிக்கிற இவனின் குழி விழுகிற கண்ணத்தில் லேசாய் கிள்ளி விட்டு எட்டப் போய் சொல்லுவாள் ஊர விட்டு தள்ளிப்போறப்ப என்னையும் கூட்டிக்கிட்டுப் போயிருங்க,அப்பிடியே கோயிச்சிட்டுப்போனது போல அங்கிட்டுப் போயி இருந்துட்டு வருவம், கொஞ்ச நாளைக்கி என்கிற அவளது சிரிப்பிற்கும், பேச்சிற் கும்,, செய்கைக்கும்,,, அட போங்கப்பா வாழ்க்கை மொத்தத்தையும் எழுதி வைத்தால் கூட காணாதுதான்,எழுதி வைக்கிற பேரேடு முடிந்து பரஸ்பரம் இருவரது மனங்களிலுமாய் மாறி மாறி எழுதி வைத்துக் கொள்ள வேண்டியது தான்,

வட்ட வடிவ கடிகாரத்திற்குள் சின்னதும் பெரியதுமாய் களைப்பு காட்டாமல் ஓடிய சின்னதும் பெரியதுமான முட்கள் விநாடி முள்ளை துணைக்கு அழைத்துக் கொண்டு காலனை கண்ணாடியாய் பிரதிபலித்துக் கொண்டி ருந்தது,

சுவர் கடிகாரம் வாங்க வேண்டும் என முடிவான நாட்களில் சற்று வித்தியா சமாய்,நல்லதொரு டிசைனில் இருக்குற கடிகாரமாய் வாங்க வேண்டும் என முடிவெடுத்தான்,

வாங்கி பத்து வருடங்களுக்கும் மேலாகி விட்டது,இன்னமும் பெரிய அளவிற் கானரிப்பேர்ஏதுமில்லாமல்ஓடிக்கொண்டிருக்கிறது,அவ்வப்பொழுதுபேட்டரி போடு வதை ரிப்பேர் கணக்கில் வைக்க முடியாது,பாவமாகிப்போகும்,பின் காலன் பஸ்ஸேறி வந்து கண்டனம் தெரிவித்து விட்டுப்போவான், இப்போ தைக்கு அதற்கும் வழியில்லை,பின்கண்டனத்தை ஆதரிப்பவர் எதிர்ப்பவர் இரு பிரிவுகள் உண்டாகி அவர்களுக்குள்ளான பெரும் பிளவிலும் சர்ச்சை யிலுமாய் காலமும் நேரமும் மறைந்து சர்ச்சை மட்டுமே மேலோங்கி நிற்பதாக ஆகிப்போகும். ஆகவே வேண்டாம் என சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டு சாகஸம் நிகழந்ததாய் மன நிமிர்வு கொண்டு திரிந்த நாட்களில் சத்தம் போட்டாள் மனைவி,

சப்தம் போடுவதற்கும் குறை சொல்வதற்கும் ஏற்றவளாகிப் போனவள்தான் மனைவி போலும்,

‘அப்பிடியெல்லாம் சுருக்கமா நெனைக்காதீங்க, நீங்க நெனைக்குறதான் வாஸ்தவமுன்னா இவ்வளவு பெரிய வீட்டை கட்டி இழுக்குறது யாரு,,? நீங்க ளா,,,,? ஒங்களுக்கு காலையில எந்திரிச்சி ஆபீஸ் கெளம்பவே நேரம் சரியாப் போகுது,,,,இதுல நீங்க குடும்பத்த இழுத்துட்டாலும்,,என்கிற அங்கலாய்ப்பு அவளைச்சார்ந்ததாய்.

அவளது சொல்லிலும் செயலிலும் வாஸ்தவம் தட்டுப் படாமலும், அடையாளப் பட்டுத் தெரியாமலும் இல்லை, காலையிலெழுந்து பிள்ளைகளுக்கு டீப் போடுறதுல இருந்து அவுங்க ரெண்டு பேரையும் ஸ்கூலுக்கு தயார் செய்வது வரை ஏங் வேலைதான,அதுக்கு என்ன தனியா சம்பளத்துக்கு ஆள்போட்டா வச்சிருக்குறீங்க, இல்லையே, ஓசியான வாசிங்க் மிஷினா, ஓசியான மிக்ஸி யா, ஓசியான கிரைண்டரா, இன்னும்,இன்னுமான ஓசியான வேலை செய்யிற மிஷினா இருக்கு றோமே தவிர்த்து,கட்டிக்கிட்டு வந்தவளா இல்லை,

ஒன்பது மணிக்கெல்லாம் பஜாரில் இருக்க வேண்டும் என நினைத்தான், போகிற வழியில் ஓரு டீ ,வடை சாப்பிட்டுப்போகலாம் என்கிறதான நினைப்பில்,

ரொம்ப நாட்களாகிப்போனது அப்படியாய் சாப்பிட்டு/

டீக் கடை அவசர ஆத்திரத்திரத்திற்கு சாப்புடுகிற ஹோட்டல் டிபன், சாப் பாடு எல்லாம் மறந்து போனது ,கண்முன் இருந்து மறைந்தும் போனது, நேர் கோட்டு நிகழ்வு போல் வீட்டிலிருந்து கிளம்பி அலுவலகம் செல்ல, அலுவல கத்திலிருந்து கிளம்பி வீடு வர என தினசரிகளிலான காலை மாலை நிகழ்வுகள் இதுவே என சாஸ்வதமாகிப்போகிறது,யாரையும் பார்த்து பேசி உறவாடி மனம் கலந்து நீண்ட நாட்கள் ஆகிப்போனது,உறைந்து கிடக்கிற வீட்டையும்,பிள்ளைகளையும்,அக்கம்பக்கத்தையும்தெருக்களையும்,ஊரையும் பார்க்க சற்று சங்கடமாய் இருக்கிறது

காலில் சக்கரம் கட்டிக் கொண்டு நகர்வு கொண்டிருந்த சமூகம் ஓரிடத்தில் நின்று கொண்டு அசைய மறுக்கிறதாய்,சமூகத்தின் காலில் எப்பொழுது சக்கரம் கட்டப்போகிறார்கள் எனத் தெரியவில்லை,

சமூகம் சடுதியெடுத்து ஓடுகிற ஓட்டத்தையும் இசைக்கிற கீதத்தையும் கேட்கஆசைதான்,கேட்ககாத்திருப்போம் என்கிறதான நினைப்புடன் சென்று கொண்டிருக்கிறான் இரு சக்கர வாகனத்தில்/

வாகனத்தை மாற்ற வேண்டும்,ஐந்து வருடங்கள் கூட ஆகியிருக்கவில்லை, வாங்கி, மூன்று வருடங்கள் கூட முழுமையாக எட்டி இருக்காது என்றே நினைக்கி றான், நான்கு சர்வீஸ் விட்டு விட்டான்,ஆனாலும் கூட வண்டியை ஓட்டுகிற திருப்தி இல்லை,சக்கட்டான், சக்கட்டான்,,,,என கட்டை வண்டியை தலையில் சும்மாடு கட்டிதூக்கிக்கொண்டு நடக்கிற கொடுமையாய் இருக்கி றதுதான்,

“கொடுமை கொடுமைன்னு கோயிலுக்குப் போனா அங்க ரெண்டு கொடுமை தங்கு தங்குன்னு ஆடுன கதையாய் ஆகிப் போகிறது இந்த வண்டியை ஓட்டுகையில்/

ஆனால் தினசரி தங்குதங்குதான்ம்,தினசரி கொடுமைதான்,விற்று விட்டு ஸ்கூட்டி அல்லது பெரிய வண்டி வாங்கலாம் என்கிற நினைப்பிலேயே சிறிது காலம் போயிற்று,

வீட்டில் பெரிய,பெரிய செலவுகள் இருக்க இதில் கொண்டுபோய் பணத்தை முடக்குவானேன் என்கிற எண்ணம் ஒரு பக்கம்,இல்லை ஆத்திர அவசரத் திற்கு ஒரு வண்டி அவசியம் என்கிற எண்ணம் மறுபக்கம்,வெவ்வேறாய் பரிணாமம்கொண்ட எண்ணங்கங்களின் துளிர்ப்பும் வேர்விடலுமாய் இருந்த சமயங்களில் பிள்ளைகளுக்கு இவன் பெரிய வண்டி வாங்குவதில் இஷ்டம் இருந்திருக்கவில்லை,ஏறிப்போனவயது,தப்பிப்போகிறநினைவுகள், தளர்ந்து போன உடல், எல்லாம் ஒன்று சேருகையில் வண்டியை கட்டுப்படுத்துவதற்கு மிகவும் சிரமம் கொள்வீர்கள், ஆதலால் வேண்டாம் பெரிய வண்டி,அதை வாங்குகிற எண்ணத்தை அடியுடன் கைவிட்டு விடுங்கள் என்றார்கள் ,சரி இருக்கட்டும் அவ்வாறே,,,/ என்கிற எண்ணத்துடன் ஸ்கூட்டி வாங்கி விடலாம் என்கிற நினைவுடன் இருந்த பொழுது நெருக்கடி வந்து விட பழையதையே ரிப்பேர் பார்த்து ஓட்டிக்கொண்டு இருக்கிறான்.

தெரு முக்கு திரும்புகையில்தான் அவரை கவனிக்கிறான்,

லோடு மேனாக அறிந்திருக்கிறான் அவரை.இவன் அறிந்து அவர் சோம்பி இருந்து பார்த்ததில்லை, எந்தப் பக்கமிருந்தாவது எந்தப்பக்கமாவது சென்று கொண்டி ருப்பார் அல்லது வந்து கொண்டிருப்பார்,அப்படி செல்கிற நேரங்களில் சைக்கி ளில் மூட்டை கட்டிக் கொண்டு போவார்,என்ன மூடை இது என்றால் அரிசி மூடை அல்லது பருப்பு மூடை என்பார் ,அரிசி மூடை என்றால் ஒரு கடையிலிருந்து இன்னொரு கடைக்கும், அதேது பருப்பு மூடை என்றால் ஒரு மில்லிருந்து இன்னொரு கடைக்குமாய் கொண்டு போகிறேன் என்பார்,

இப்படியாய் நாள்தோறும் உழைப்பு உழைப்பு உழைப்பிற்கு மட்டுமே உடலையும் மனதையும் ஒப்புக் கொடுத்து விட்டுப்பெரிய அளவிற்காய் வேறெந்த பிரதிபலனையும் எதிர்பாராமல் உழைப்பிற்கான ஊதியத்தை மட்டுமே பெரிதாக நினை த்து வாழ்பவர்,

அவரின் உழைப்பும் ஊதியமுமாய் நின்று போன இந்த நாட்களில் வேலை க்குப் போகாமல் இருக்கிறேன் வீட்டில் என்றார்,வேலையும் அதற்கேற்ற ஊதியமுமாய் இருந்த நாட்களில் சாலையில் செல்கிற வேலையும் ஊதிய மும் அற்ற பெரும்பாலோனரைப் போலத்தான் அவரும் இவனைப் பார்த்தார்,

ஒரு நாளின் பிற்பகல் வேளையாய் கடைக்குப் போய்க்கொண்டிருக்கும் பொழு தில் இவனைப்பார்த்து வண்டியை நிறுத்தி விட்டார்,”தம்பி தப்பா நெனைச்சிக்கி றாதீங்க,வேலைக்குன்னு போயி ஒரு மாசத்துக்கு மேல ஆகிப் போச்சி. கையில ஒரு நயாப்பைசா கெடையாது, செலவுக்கு ஏதாவது இருந்தா குடுத்துட்டுப்போ தம்பி” என இறைஞ்சலுடன் கேட்கிறார்,மனம் தொட்ட அவரது இறைஞ்சலுக்கு அன்று இறங்கியது இன்று தப்பு என நினைக்கத் தோனி விட்டது,

“ஒரு தடவை குடுத்தால் உதவி ,ஓயாமல் கேட்டால் அதற்கு பெயர் என்னவாய் இருக்கும் நீங்களே சொல்லுங்கண்ணே,,,,,” என மூன்றாவது தடவையாய் அவர் இவனிடம் கையேந்தி நின்ற நாளில் கேட்ட பொழுது இல்ல தம்பி திரும்பத்திரும்ப ஓங்கிட்டயே வர்றேன்னு தப்பா நெனைச்சிக்கிறாத தம்பி, எனக்கு ஒன்னைய விட்டா யாரு தம்பி இருக்கா சொல்லு,நீயும் ஒன்னையப் போல இருக்குற ரெண்டு மூணு பேரையும்தான் எனக்குத்தெரியும். சுருக்க மான ஒலகத்துக்குள்ளயே வாழ்ந்து பழகீட்டவன் தம்பி, அதுனாலத்தான் தம்பி ஒங்களயே சுத்திச்சுத்தி வர்றேன் ,எனக்கு ஒங்கள விட்டா யாரு தம்பி சொல்லுங்க என்றவரின் பேச்சில் பொய் தெரியவில்லை,